PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGAR STARTS SABARI YATRA ...SWAMY SARANAM...GURUVE SARANAM...DEC 14, 2019

 




Swamiye Saranam Ayyappa. Guruswamy, Our Profound Namaskaram on the Auspicious occasion of Thirukarthigai. The Deepams around the Jothiswaroopar Panvel Balagar is Very Very Enlightening to all of us. We All are Blessed Guruswamy. Pray that the ThiruKarthigai Deepam remove all the Darkness crated by the Corona n all the hurdles be driven away with the Grace of Panvel Balagar and our Revered Guruswamy. Guruve Saranam Siva, Bhuvana n Sresht



ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருமங்கை ஆழ்வாரின் எளிய வழி.
இன்று கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்ரம். ஆழ்வார்களில் கடைசியான திருமங்கை ஆழ்வார் அவதரித்த திருநாள். திருமங்கை ஆழ்வாருக்கு கலிகன்றி என்று திருநாமம். அப்படி என்றால் கலியின் கடுமையை நீக்குபவர், துன்பத்தைப் போக்குபவர் என்று பொருள். ஆழ்வார் என்றோ அவதரித்தவர்; அவர் இன்று இருக்கும் கலியின் கொடுமையைப் போக்குகிறார் என்றால் என்ன பொருள். கலியின் ஆதிக்கத்தால் நமக்கு ஆன்மீக அறிவு குறையும், ரஜோ குணம் தமோ குணம் அதிகமாகும், பகவானை விட பிற விஷயங்களை அனுபவிப்பதில் ஈடுபாடு அதிகமாகும். இவற்றைத் தன்னருளாலும் பாசுரங்களாலும் என்றும் போக்குபவர் திருமங்கை ஆழ்வார். கலிகன்றி என்றதால் கலியுகத்தை அழித்து விடுவார் என்று பொருளல்ல, கலியுகத்தில் என்னென்ன தீமைகள் ஏற்படுமோ அவற்றை போக்குபவர் என்று பொருள். இதற்காக ஆழ்வார் ஒரு முக்கியமான யுக்தியைக் கையாண்டார். கலியில் நாம் கண்ணால் கண்டதையே நம்புவோம்.
அதனால் நம் கண்ணால் காண இயலாத வைகுந்த நாதன், பாற்கடல் வாசுதேவன், என்றோ பிறந்த ராமன் கண்ணன் முதலான அவதாரங்கள், நம் உள்ளத்தின் ஆழத்தில் உறையும் அந்தர்யாமி இவர்களையெல்லாம் தொழச் சொல்லாமல் நம் கண்ணுக்கு நேரே தரிசனம் கொடுக்கும் விக்ரஹ வடிவத்தில் கோயில்களில் எளிமையோடு இருக்கும் அர்ச்சாவதாரப் பெருமானையே இவ்வாழ்வார் தொழச் சொன்னார். பகவானின் மற்ற நிலைகளை விட கோயில்களில் எழுந்தருளி இருக்கும் அர்ச்சா நிலைக்கே தனிச்சிறப்பு. நாம் 108 திவ்ய தேசங்களை அறிவோம். அதில் 47 திவ்யதேசங்கள் திருமங்கையாழ்வாரால் மட்டுமே பாடப்பட்டவை. மற்ற ஆழ்வார்களோடு சேர்த்து 86 திருத்தலக் கோயில்களைப் பல்லாண்டு பாடினார். அதிலும் சிறப்பு, இந்த ஒவ்வொரு திருத்தலத்திற்கும் இவ்வாழ்வார் நேரே சென்று தரிசித்து பாடல்களை சமர்ப்பித்துள்ளார் ஆகவே ஆழ்வார் காட்டிய வழியில் திவ்யதேசங்களில் பக்தியோடு தொண்டு செய்ய வேண்டும். இதன் மூலம் கலியின் கடுமையைக் குறைக்கலாம். இதற்கு அருள் புரிந்த திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.




சபரிபமலையின் புகைப்படங்களும்..

 இன்று ..

பழைய புத்தக கடையில் கிடைத்த சபரிமலை ஐயப்பன் வரலாற்று புத்தகத்தில்...
சிறிதும் எதிர்பார்க்கா ஆச்சர்யம்..
அதில்...
ஓவியங்களுடன் கூடிய ஐய்யனின் வரலாறு..
அத்துடன் சபரிபமலையின் புகைப்படங்களும்..
அதுவும்
1980களில் இருந்த சபரிமலையின் படங்கள்...
இன்றைய தலைமுறை பார்த்திராத சபரிமலை..(நானும்)
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பதன் நிஜ அர்த்தம் சொல்லும் கான்கிரீட் கானாத மலைப்பாதை..
கிராமத்து கோவிலைப்போன்று எளிமையான நாகரிக பூச்சு இல்லாத எரிமேலிக் கோவில்..
பிரம்மாண்டமில்லா அமைதியான வாவர் கோவிலும் மசூதியும்..
கூரை வெய்யப்பட்ட சால்கள் நிறைந்த பம்பா...
ஆள் ஆரவாரமற்ற பம்பா..
,யானைகள் நிறைந்த பம்பா..
சுப்ரமணிய பாதை பிரிவு...
பம்பை நதிக்கரை கணபதி கோவில்...
அப்பாச்சி மேடு,சபரி பீடம்,மரக்கூடம்,சரங்குத்தி..
தங்க தகடு வெய்யப்படாத ஐய்யன் சன்னிதானம்..
தென்னை மரங்கள் பின்னனியில் கன்னி மூல கனபதி....
அத்தனையும் அட்டகாசம்..
ஐயப்பனின் இந்த வரலாற்று புத்தகம் கார்த்திகை மாதத்தில் எனக்கு கிடைத்ததும் ஆச்சர்யமே...
இந்த புத்தகத்தை எழுதிய பி.டி.பாஸி அவர்களுக்கும்..
இந்த புத்தகத்தை பதிப்பித்த ஸ்ரீனிவாஸ் இண்டஸ்ட்ரீஸ். சிவகாசி நிறுவனத்திற்கும் நன்றிகள் பல..
சுவாமியே சரணம் ஐய்யப்பா...🙏🙏🙏🙏
(ஒவ்வொரு படங்களின் முதல் கமெண்டில் அதே இடத்தின் இப்போதைய படங்களும்)
எளிமையான எரிமேலி..

வாவர் சன்னதி
பம்பா..பழமை மாறா பம்பா.

குடிசை சால்கள்..மனதுக்கு நெருக்கமான எளிமை..
ஆள் ஆரவாரமற்ற பம்பா...
யானைகளின் சுதந்திர குளியல்..பம்பா
பம்பா கணபதி...
கணபதி கோவில்..
சுப்ரமனிய பாதை பிரிவு..
சுப்ரமணிய பிரிவு பாதையில்...
நீலி மலை... மரத்துண்டுகளே படிகளாய்
அப்பச்சி மேடு...இப்போதிருக்கும் பாதுகாப்பு வசதிகள்,கடைகள் எதுவுமில்லா அப்பாச்சி மேடு..
சபரி பீடம்
அப்பாச்சி மேடு கடந்ததும் வரும் பாதை.
சுப்ரமணிய பாதையும் நீலி மலைப்பாதையும் சந்திக்கும் மரக்கூடம்.
சரங்குத்தி
சரங்குத்தியிலிருந்து சன்னிதானம்..
மிகப்பிரம்மாண்டமான தங்குமிடம்..ஓலையால் வெய்யப்பட்ட சால்..
தங்கத்தகடு இல்லாத 18ஆம் படி..
இதை தொட்டு வனங்கி தேங்காய் முதல் படியில் உடைத்தது இன்னும் பசுமையாய் மனதில்..
நாகரீக மாறுதல்கள் இல்லா சன்னிதானம்..
கன்னிமூல கணபதி..தென்னைமரங்கள் சூழ..
மளிகைபுரத்தம்மன்,கடுத்த சாமி கோவில்..
இருமுடி இல்லாதவர்கள் ஏறும் வடக்குப்படி..