அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் சேர்ந்து வருகின்றது .. மாலையில் பிரதோஷ வேளையில் (4.30 மணிமுதல் 6.00 மணிவரை ) சிவாலயம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையே சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை தரிசிப்பது நம் அனைத்து துன்பங்களும் நீங்கி இன்பத்தை அடையும் வழியே .. தங்களுக்கும் அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! பிரதோஷ வரலாறும் .. மகிமையும் .. அகிலாண்டேஸ்வரி ஒருமுறை தேவலோக கன்னிகை ஒருத்திக்கு அவளது நடனத்தை மெச்சும் வண்ணம் தனது கழுத்தில் இருந்த மலர்மாலையை பரிசாகத் தர .. கன்னிகையோ அதனை எதிரில் வந்துகொண்டிருந்த துர்வாசமுனிவரிடம் கொடுத்துச் சென்றாள் .. தேவலோகம் சென்ற துர்வாசர் அம்மாலையை இந்திரனுக்கு பரிசளிக்க .. மாலையின் மகிமையை அறியாத இந்திரன் அம்மாலையை தனது யானையிடம் தர .. யானை மாலையை தனது கால்களால் மிதித்து சிதைத்தது .. கோபத்திற்கு பெயர் பெற்றவராயிற்றே துர்வாசர் .. இந்திரனையும் .. தேவர்களையும் .. ஒருசேர சபித்தார் .. சாபவிமோச்சனம் பெறவேண்டி தேவரும் ..இந்திரனும் ..பரந்தாமனை வேண்டினர் .. மனம் இளகிய பரந்தாமனும் திருப்பாற்கடலை கடைந்து அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்துமாறு கூறினார் .. மந்திரகிரி மலையை மத்தாகவும் .. வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாம்பின் தலைப்பகுதியை அசுரரும் .. வால்பகுதியை தேவர்களும் பிடித்து கடையத் தொடங்கினர் .. மலை சாய்ந்தது உடனே மஹாவிஷ்ணு ‘ கூர்ம அவதாரம்’ எடுத்து மலையைத் தாங்கிப்பிடித்தார் .. மேலும் கடையும்பொழுது வாசுகி வலிதாங்காமல் விஷம்கக்க அப்பொழுது கடலிலும் நஞ்சுதோன்ற இரண்டும் சேர்ந்து “ஆலகாலம்” என்ற கடுமையான விஷமானது .. இதைக்கண்ட வானவர் அஞ்சி நடுங்க திருமாலும் நான்முகனும் அவர்களை கயிலை சென்று பரமனிடம் தஞ்சமடையுமாறு சொன்னார்கள் வானவரும் அவ்வாறே செய்ய கயிலைநாதன் தனது தொண்டனான சுந்தரனை அழைத்து அந்த ஆலகால விஷத்தை எடுத்துவரச் சொன்னார் .. யாராலும் அணுகமுடியாத அந்த விஷத்தை சுந்தரன் நாவல்பழம்போல் உருட்டி எடுத்துவர முக்கண்ணன் அதனை எல்லோரையும் காக்கும் பொருட்டு தனது வாயில் இட .. பரமன் உண்டால் பெரும்கேடு விழையுமே என அஞ்சிய உமையாள் பரமனின் கண்டத்தில் தனது கைகொண்டு தடுக்க விஷமானது சிவனின் கண்டத்திலேயே தங்கி சிவனாரது கழுத்து நீலநிறமானது .. பெருமானும் “நீலகண்டரானார் “ .. இது நடந்தது ஏகாதசி அன்று மாலைபொழுதில் .. பின்னர் தேவர் சிவனின் கூற்றுப்படி பாற்கடலை மீண்டும் கடைந்தனர் .. மறுநாளான துவாதசி திதியன்று பாற்கடலில் அமிர்தம் தோன்ற தேவர்கள் அதனை உண்டு சாகாவரத்தை திரும்ப பெற்றனர் .. ஆனால் சிவனை மறந்தனர் .. பின்னர் பிரம்மதேவர் தேவர்களின் குற்றத்தை உணர்த்த தேவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கயிலை அடைந்து நாதனை மன்னித்தருள வேண்டினர் .. சிவபெருமானும் மனம்கனிந்து தனக்கு முன்னால் இருந்த ரிஷபவாகனத்தின் இருகொம்புகளுக்கு இடையில் அம்பிகை காண திருநடனம் புரிந்தார் .. அனைவரும் அதைக்கண்டு களித்து பெருமானை வணங்கினர் இதுநடந்தது திரயோதசி திதியன்று மாலைவேளையில் .. இதுவே பிரதோஷகாலம் என வழிபடப்படுகிறது .. (மாலை 4.30 - 6.00 மணிவரை ) பிரதோஷ பூஜை சிவபெருமானுக்கு மட்டுமே உரிய பூஜை .. சிவபெருமானை விஷ்ணு .. பிரம்மன் முதலிய அனைத்து தெய்வங்களும் வழிபடும் நேரம் .. எனவே இக்காலங்களில் வேறு எந்த கடவுளருக்கும் பூஜைகள் நடைபெறாது .. சிவாலயங்களில் உள்ள மற்ற கடவுளரின் நடைகள் சார்த்தப்பட்டிருக்கும் .. அல்லது திரையிடப்பட்டிருக்கும் .. சிவனைத் துதித்து அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BLESS YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஸர்வ ஏகாதசியும் வருவது சாலச்சிறந்தது .. மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! இந்துதர்ம சாஸ்திரங்கள் .. புராணங்களில் ஏகாதசி விரதமகிமை பற்றி சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது .. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் ஒன்றும் .. தேய்பிறையில் ஒன்றும் என இரண்டு ஏகாதசிகள் வரும் .. ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும் ஒவ்வொரு பலன்கிட்டும் என்பது ஐதீகம் .. இன்றைய ஏகாதசியை ‘காமதா ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது .. இவ் ஏகாதசி விரதமானது அனுஷ்டிப்பவர்களின் சகலவிதமான பாவங்களையும் நீக்கி மோட்சப்பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது .. உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ அதேபோல் காமதா ஏகாதசி விரதத்தின் புண்ணியபலனின் பிரபாவம் சகலவிதமான பாபங்களையும் நீக்குவதோடு புத்ர ப்ராப்தியையும் அளிக்கிறது .. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கர்மவினையின் காரணமாக இழிநிலை பிறவி எடுத்தவர் அதிலிருந்து விடுதலை பெறுவதுடன் இறுதியில் ஸ்வர்கலோகப் பிராப்தியையும் பெறுவர் .. மஹாவிஷ்ணுவைப் போற்றி வணங்குவோம் ! சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக ! ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAA "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் .. தங்களனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த .. வெற்றிகள் தரும் புத்தாண்டாக மலர வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஆண்டுதோறும் ஆறுபருவங்கள் மாறி மாறி வருகின்றன .. அவற்றுள் வசந்தம் பொங்கும் சிறப்பைக் கொண்டது சித்திரை மாதம் .. இந்த மாதத்தில் இளவேனிற் காலம் இன்பமுடன் எழுகிறது .. “வந்தது வசந்தம் “ என்று அனைவரும் மங்களம் பொங்க குதூகலிக்கும் பொன்னான நாள் சித்திரைத் திங்களின் முதல்நாள் .. கரும்பு வில்லேந்தி மன்மதவருஷம் பிறந்தநாள் மாமரங்களும் .. வேப்பமரங்களும் பூத்துக்குலுங்கி நிற்கும் குதூகலப் பெருநாள் .. சித்திரை மாதத்தை ‘சைத்ரா ’ என்றும் .. ‘சைத்ரவிஷு ‘ என்றும் கூறுவர் .. சித்திரை வருஷபிறப்பன்று கோயில்களில் புதுவருஷப் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உண்டு .. சித்திர வருஷபிறப்பு தினத்தை கேரளமக்கள் “விஷுக்கனி காணல் “ என்று கொண்டாடுகின்றனர் .. தினம் வீட்டிற்கு வருவோர்களுக்கெல்லாம் பணம் கொடுப்பதனை கேரளமக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் .. மருத்துநீர் வைத்தல் என்பது முக்கியவிடயமாக புதுவருடதினத்தில் கருதப்படுகிறது தோஷநட்சத்திரக்காரர்களுக்கு முக்கியம் .. இம்மருத்துநீர் தாழம்பூ .. தாமரைப்பூ .. மாடுளம்பூ .. துளசி .. விஷ்ணுகிராந்தி .. சீதேவியார் செங்கழுநீர் .. வில்வம் .. அறுகு .. பீர்க்குபால் .. கோசலம் .. கோமயம் .. கோரோசனை .. மஞ்சள் .. திற்பிலி .. மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும் ..மருத்துநீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்லபலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை .. விஷு புண்ணியகாலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள் .. தாய் .. தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும் .. கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்நானம் செய்தல் சிறப்புத்தரும் .. சூரியபகவானை பிரார்த்தித்து ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்தபலனைத் தரும் .. தான தருமங்கள் செய்வது வழக்கம் .. அனைவரும் இனிதே மன்மத புத்தாண்டை வரவேற்போமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY NEW YEAR WITH THE BLESSINGS OF LORD KRISHNA .. MAY THIS YEAR BRING YOU HAPPINESS .. PROSPERITY AND GOOD FORTUNE ..