SOME MEMORABLE PHOTOS OF GS VISIT TO RAMAKRISHNAN SON ARUN MARRIAGE......SWAMY SARANAM























GOOD MORNING DEAR FRIENDS .. CHITRA PAURNAMI IS THE TIME WHERE YOUR SINS CAN ALL BE CLEANSED BY OFFERING FOOD FOR THE POOR AND NEEDY PEOPLE .. MAY LORD CHITRAGUPTA PROTECT YOU FROM ALL BAD KARMA TOO .. " JAI CHITRAGUPTHAAYA NAMAHA " .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சித்ரா பௌர்ணமியாகிய இன்று சித்ரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் .. அது கடுகளவாக மாறும் .. அதுபோலவே இன்று நாம் செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி .. முக்கியமாக நோட்டுப்புத்தகம் .. பேனா .. பென்சில் .. முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு மென்மேலும் சிறக்கும் என்பது நம்பிக்கை .. சித்ரா பௌர்ணமியும் சித்ரகுப்தனும் - சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைத்திறமையால் அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தார் .. அந்த ஓவியம் சாதாரண ஓவியமாக இல்லாமல் நிஜகுழந்தைபோல் தத்ரூபமாக இருந்ததைக் கண்ட சிவபெருமான் பார்வதியிடம் நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறிக்கொண்டே தன்கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சுக்காற்றை அந்த ஓவியத்தின் மேல் பதிக்கவும் ஓவியக்குழந்தை உயிர்பெற்று சிரிக்க ஆரம்பித்தது .. தான் வரைந்த சித்திரக்குழந்தைக்கு சித்ரகுப்தன் என அன்னை பெயரிட்டாள் .. சித்திரத்திலிருந்து வந்தாலும் ரகசியத்தைக் காப்பவராக இருந்ததாலும் ( குப்தன் ரகசியத்தைக் காப்பவன் ) இப்பெயர் ஏற்பட்டது .. யமதர்ம ராஜன் இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும்போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும் தண்டனைகளையும் தரவேண்டும் என்பது ஈசனதும் விஷ்ணுபகவானதும் கட்டளை .. அதனை கண்டுபிடிப்பது சிரமம் என்பது யமதர்மராஜனின் கவலை .. அதனை நிவர்த்தி செய்தார் பிரம்மதேவன் .. சித்ரகுப்தனை அறிமுகப்படுத்தியதன் மூலம் .. சித்ரகுப்தனே நாம் செய்யும் பாவம் புண்ணியங்களது கணக்கு வழக்கை எழுதிவருகிறார் .. நாமும் பாவங்களைக் குறைத்து புண்ணியங்களை செய்து சித்ரகுப்தனை வணங்கி வர நாம் அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விமோசனம் பெறுவோமாக... “ ஓம் சித்ரகுப்தாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த
நாளுமாகும் .. “ ஓம் நமோ நாராயணாய “ என்ற மஹாமந்திரத்தை நாமும் ஜெபிப்போமாக .. வாழ்வில் துன்புறும் அனைவரும் அவரவர் துயர் நீங்கி தங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று சகலசௌபாக்கியங்களுடன் வாழ மனதார பிரார்த்திக்கின்றேன் ..
எந்நேரமும் நாராயணா ! நாராயணா ! என உச்சரிப்பதால் என்ன பயன்..? நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம் .. //
சதா சர்வகாலமும் “ ஓம் நமோ நாராயணாய “ என்று சொல்லிவரும் நாரத மஹரிஷிக்கு தனது சந்தேகத்தினை தீர்க்குமுகமாக வைகுண்டம் சென்று பரந்தாமனிடம் வினவ .. அவரும் இதனை அனுபவப்பூர்வமாகவே விளக்கவேண்டும் .. அதுவரை சொல்வதை தட்டாது கேட்கவேண்டும் என்றார் .. நாரதரும் ஒத்துக்கொள்ளவே மஹாவிஷ்ணுவும் நாரதரை பூலோகத்திற்குபோய் ஒரு சிறுபுல்லிடம் தன்நாமத்தை கூறும்படி சொன்னார் ..
அதன்படி நாரதரும் செய்ய .. அப்போதுதான் முளைத்திருந்த அப்புல் அடுத்தகணம் கருகி கீழே சாய்ந்துவிடுகிறது .. நாரதரும் பகவானிடம் சென்று இதுவா உன் மஹிமை என்று கேட்டார் .. பரந்தாமனும் அதுபோகட்டும் இம்முறை ஒரு புழுவிடம் போய் என் நாமத்தைச் சொல் என்றார் .. அதுபோலவே சொல்ல என்ன கொடுமை அந்தபுழு துடிதுடித்து இறந்தது .. மீண்டும் வைகுண்டம் சென்று புல்லைப்போலவே இதுவும் மரணித்துவிட்டது இதுதானா உன் நாமத்தின் பெருமை ..? எனக்கே சற்று சந்தேகமாக இருக்கிறது என்று குமுறுகிறார் ..
சரி இந்தமுறை வேறொரு ஜீவனிடம் முயற்சித்து பாரேன் என்றார் .. முட்டையிலிருந்து பொரிந்து அப்போதுதான் வெளியே வந்த குருவிக்குஞ்சிடம் சென்று நாமத்தைக் கூறுமாறு பணிக்க நாரதரும் அவ்வாறே செய்ய அதுவும் உயிரை விட்டுவிடுகிறது ..
அடுத்து ஒரு கன்றுகுட்டி .. அதற்கும் அதேகதிதான் .. இப்படியாக புல் .. புழு .. பறவை .. விலங்கு என்று தானே கொன்று குவிக்கிறோமே என்கிற பீதி ஏற்படுகிறது நாரதருக்கு .. கடைசியாக ஒரேஒருமுறை பூலோகத்திற்குச் சென்று விதர்ப்ப நாட்டு மன்னனுக்கு இன்று பிறந்திருக்கும் குழந்தையிடம் சொல்லிப்பாரேன் என்கிறார் பகவான் ..
நாரதரோ அலறியடித்துக்கொண்டு பிரபோ ! இதுவரை நான் கூறியதெல்லாம் உயிரினங்களுக்கு ..அதனால் பிரச்சினையில்லை .. இது ராஜகுமாரன் .. அக்குழந்தைக்கு ஏதாவதென்றால் மன்னன் என்னை சும்மாவிடமாட்டார் .. கொன்றேவிடுவார் .. இந்தவிளையாட்டு போதும் என்றார் .. நாரதா ! நிபந்தனையை மீறினால் எப்படி என்று பகவானும் வினவ 
என்னை காத்தருளவேண்டும் என்று கூறிவிட்டு சென்று அக்குழந்தையின் காதில் .. நாராயணா ! நாராயணா ! நாராயணா ! என்று கூற .. அங்கு அனைவரும் ஆச்சர்யப்படும்படி அந்தக்குழந்தை வாய்திறந்து நாரதருக்கு நன்றி கூறி நாராயணனின் பெருமையை பேச ஆரம்பித்தது ..
நாரத மஹரிஷியே ! நான் போன பலபிறவிகளில் புழுவாகவும் .. பூச்சியாகவும் .. மற்ற ஜந்துக்களாகவும் பிறந்து அல்லல்பட்டு கொண்டிருந்தேன் .. எனது அதிர்ஷ்டம் நீர் எனது போன எல்லா பிறவிகளிலும் உடனே வந்து நாராயணனின் நாமத்தைக் கூறியதால் இம்மனிதப் பிறவியை அடைந்தேன் .. அதுமட்டுமல்ல பிறந்தவுடன் பேசும் சக்தியையும் பெற்றுவிட்டேன் .. நாராயணா என்ற நாமம் இல்லை என்றால் ஒவ்வொரு பிறவியிலும் பலகாலம் உழன்று அல்லல்பட்டு அவஸ்தைப்பட்டிருப்பேன் .. எனக்கு ஸ்ரீமன் நாராயணனை
அடைய வழிகாட்டியதற்கு நன்றி என்று கூறியது ..
நாராயணா நாமத்தின் மஹிமையை தவறாக புரிந்துகொண்டமைக்காக வெட்கப்பட்ட நாரதர் இறைவனின் கருணையை பின்னர் எண்ணி கண்ணீர்வடித்தார் .. நாராயணா ! என்னே உன் நாமத்தின் மஹிமை ! எனவியந்து மகிழ்ந்தார் ..
ஒருபுழுவே நாராயணனின் நாமம் கேட்டு இத்தனை மேன்மை அடைந்திருக்கிறது என்றால் மனிதப்பிறவியில் நாம் அந்த நாமம் மூலம் சாதித்துக் கொள்ளக்கூடியவைகளை எண்ணிப்பாருங்கள் .. இறைவனின் நாமத்தை எத்தனை முறை உச்சரித்தாலும் அத்ற்கு நிச்சயம் பலனுண்டு .. நமது பிரார்த்தனை என்றும் உதடுகள் மூலமல்லாமல் .. உள்ளத்தின்மூலம் இருக்கட்டும் .. தங்கள் பிரார்த்தனை என்றும் வீண்போகாது .. “ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER TODAY AND FOREVER MORE .. " OM NAMO NAARAAYANAAYA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. துன்பங்களை போக்கி .. இன்பங்களை அருளும் ஈசனை இப்புனித பிரதோஷ நாளாகிய இன்று வழிபாடு செய்து வாழ்வில் வளம்பெறுவோமாக .. தோஷம் என்றால் குற்றமுடையது என்று பொருள் .. அதேநேரம் பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள்படும் .. எனவே குற்றமற்ற இந்தபொழுதில் இறைவனை வழிபடுவதால் தோஷங்கள் அனைத்தும் நீங்கப்பெறும் .. ( மாலை 4.30 - 6.00 மணிவரை ) பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள் எல்லாவற்றையும் ஒடுக்கிக்கொள்கிறார் .. வளர்பிறையின் 13ம்நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்தல் நலம் .. நந்திதேவரின் இருகொம்புகளின் நடுவே ஈசனை தியானிப்பது சிறப்பாகும் .. பிரதோஷத்தின் சிறப்பையும் .. பயனையும் உரைக்கும் பாடல் --- பேரிடர் நீங்குமே ! பிணியாதாயினும் சாம்பலாகுமே ! மறைபோற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும் ! புவியுறை சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே ! பூதலத்தே நின்ற சிவனம்பலமெல்லாம் ஏகித் தொழுத பேறு பெற ப்ருஹந்நாயகியுறை தக்ஷிணமேரு தன்னை கைதொழுதக்கால் ! சிவனே! தரிசனம் தருவான் ! பொய்யல்ல ! தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க்கே !! .. சிவனைப் போற்றுவோம் ! சிவ அபசாரம் நீங்கி சகலமங்களங்களும் தங்களனைவருக்கும் பெருகுவதாக! “ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ! GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " PRADOSHAM " AND MAY LORD SHIVA FULFILL ALL YOUR WISHES AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE REMOVE ALL THE SINS AND OBSTACLES IN YOUR LIFE AND SHOWER YOU WITH PEACE AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அனைத்திற்கும் மூலமாக விளங்கும் சிவபெருமானின் உச்சம் பெற்றநாள் திங்கட்கிழமையாகும் .. திங்கள் எனில் சந்திரனைக் குறிக்கும் .. சந்திரனை தலையில் சூடிய சிவன் சோமசுந்தரர் என்றழைக்கப்படுகிறார் .. சிவனைத் துதித்து தங்களனைவரது மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறந்திடவும் .. இன்றையநாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! கணவனும் மனைவியும் ஒற்றுமையுடனும் .. தீர்க்காயுளுடனும் வாழவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் .. இந்நாளில் தம்பதி சமேதராக சிவாலயம் சென்று வழிபட்டு வரவேண்டும் .. வாழ்வில் தவறு செய்யாத மனிதர்கள் இல்லை .. இதற்காக மனம் வருந்துவோர் இந்த விரதத்தை அனுஷ்டித்து .. இனி அவ்வாறான தவறுசெய்யாமல் இருக்க உறுதிபூண்டால் அவர்களது பாவங்கள் அனைத்தும் களையப்படும் என்பது நம்பிக்கை .. சிவனைப் போற்றுவோம் ! பிரச்சினைகளை சமாளிக்கும் மனோதிடமும் .. செல்வச்செழிப்பும் பெற்றிடுவோமாக ! ” ஒம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..






GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED EKADASI AND MAY THE DIVINE BLESSINGS OF LORD VISHNU BRING YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES ..
" OM NAMO NAARAAYANAAYA NAMAHA "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மோட்சத்தை அளிக்கும் விரதமாகிய ஏகாதசி நன்னாளாகிய இன்று தங்களனைவரது விருப்பங்கள் யாவும் நிறைவேறவும் .. மனதில் மகிழ்ச்சி நிலவிடவும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
சித்திரைமாத வளர்பிறை ஏகாதசியை “ காமதா ஏகாதசி “ என்பர் .. இதனை அனுஷ்டிப்போர்க்கு தாம் விரும்பிய அனைத்துப் பேறும் கிடைக்கும் என்பர் .. நினைத்தகாரியம் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும் ..
இந்து தர்ம சாஸ்திரங்கள் .. புராணங்களில் ஏகாதசி விரதமஹிமை பற்றி சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது .. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் ஒன்றும் .. தேய்பிறையில் ஒன்றும் என இரண்டு ஏகாதசிகள் வரும் .. ஒவ்வொரு மாதமும் .. அமாவாசை .. பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது ..
வளர்பிறை ஏகாதசி - சுக்லபட்ச ஏகாதசி என்றும் .. 
தேய்பிறை ஏகாதசி - கிருஷ்ணபட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றன ..
வடமொழியில் ஏகாதசி என்பதை தமிழாக்கம் செய்தால் அதன் அர்த்தம் பதினொன்று ஆகும் .. அதாவது பதினோராவது தினம் என்று பொருள் .. 
கர்ம இந்திரியங்கள் - 5 
ஞானேந்திரியங்கள் - 5 
இதனுடன் மனம் ஒன்று கூடினால் - 11 ஆகும் .. 
இந்த பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி இருப்பதே விரதம் .. இந்த 11 இந்திரியங்களால் தெரிந்தோ .. தெரியாமலோ செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த 11வது திதி நாளில் விரதம் இருந்தால் அழிந்துவிடுவது உறுதி .. ஒவ்வொரு மாத ஏகாதசிக்கும் ஒவ்வொரு பலன்கிடைக்கும் என்பது ஐதீகம் ..
அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம் .. பாகவதம் .. ராமாயணம் போன்ற இறைத்திருவிளையாடல்கள் நூல்களையோ .. விஷ்ணு சகஸ்ரநாமம் .. நாலாயிரதிவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்வதும் நல்லது .. பாராயணத்தால் பயனடைவதோடு முறையற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதால் அல்லல்கள் வராமலும் காக்கப்படுவோம் ..
ஏகாதசி விரத சங்கல்ப மந்திரம் - 
தசமீ தினம் ஆரப்பிய கரிஷ்யேகம் விரதம் தவ ..
த்ரிதினம் தேவ தேவேச நிர்விக்னம் குருகேசவ ..
கருணாகரனை கண்விழித்துப் போற்றுவோம் ! கவலைகளை துரத்துவோம் ! ஓம் நமோ நாராயணாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..




14-04-16 THURSDAY
Vishu kani
VISHU KANI TAMIL / MALAYALAM NEW YEAR
Vishu is one of the important festivals of Kerala. It comes in the month of April usually on the 14th. According to the traditional Malayalam calendar, it is the 1st day of Malayalam month Medam which is the astronomical New Year. Traditional rituals are followed to bring in another year of prosperity. 
'Kani-Kanal' is the main event of the day. The night before Vishu, the mistress of the house prepares the Kani. In a big pot, coconuts, a gold ornament, a new cloth, fruits, cereals and Konna (cassia fistula) flower is kept. Behind the pot a mirror and the garlanded deity of Krishna is kept. Around the deity, lighted lamps will be arranged. Early morning on the Vishu day, the master of the house sees the 'Kani' and then the rest of the family follows. Children are brought blind folded from their beds to where the Kani is kept. The elder in the family give money to the youngsters (Vishu Kaineetam) and bless them. It is believed that the Kani we see and its good tidings will stay with you till the year ends. In Kerala, the Kani in the temples of Guruvayur, Ambalapuzha and Sabarimala are famous. Special pujas are held in these temples where the people go to worship and pray for a prosperous New Year. 
விஷு (Vishu, மலையாளம்: വിഷു) தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது பிசு என்ற பெயரில் கர்நாடகாவின் துளுப்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். இது மேடம் (ஏப்ரல் - மே) மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷஷு கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது அதாவது கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ). விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "சமம்" என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பெற்றிருக்கலாம். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாகக் கருதப்படுகிறது.
விஷு\ (மேடத்தின் முதல் நாள் ) ஆருட புத்தாண்டாக கொண்டாடப்படினும் அதிகாரப்பூர்வமாக சிங்க மாதத்தின் (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்நாளே மலையாள புத்தாண்டு தினமாகக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்நாளில் இவர்களின் தெய்வமாகிய விஷுக்கணி க்கு படையல்கள் அளிக்கப்படுகின்றது. அவர்களது பூஜை அறையில் புனிதமாக, அரிசி, புதிய துணி, வெள்ளரிக்காய், வெற்றிலை, பாக்கு, உலோகக் கண்ணாடி, மஞ்சள் நிற கொன்றை மலர் (காசியா பிஸ்டுலா ), தெய்வீகமான புத்தகங்கள் மற்றும் காசுகளை வெங்கல உருளி யில் வைத்துப் படைக்கின்றனர். வெண்கல நிலா விளக்கை யும் ஏற்றி அருகே வைத்திருப்பர். இவ்வெல்லாவற்றையும் முதல் நாளே ஏற்பாடு செய்து வைத்து விடுவர். விஷூ அன்று விடியற்காலையில் எழுந்து கண்களை திறக்காமல் நேரே பூஜை அறைக்குச் சென்று விஷூக்கனியின் முன்னரே விழிக்கின்றனர். இந்நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கமாகையால் புனித புத்தகமாகிய இராமாயணத்தின் பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர் இராமாயணத்தின் எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர். அன்றைய தினம் பக்தர்கள் காலையில் சபரிமலை ஐயப்பன், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய கோயில்களை அடைந்து "விஷூக்கனி காழ்சா" என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர்.

 

Swamiye Saranam..Guruve Saranam.,.,.






அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும் .. புத்துணர்வும் பெற்றிட சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

“ சிவாய நமஹ “ என்று சிந்திப்போர்க்கு .. அபாயம் ஒருபோதும் இல்லை .. உபாயம் ஒன்றே ஏற்படும் என்று நம்முன்னோர்கள் சொல்லிவைத்தனர் .. 

நமசிவாய ! என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும் .. சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும் .. 

சிவலிங்கத்திற்கு வலைகட்டி பாதுகாத்த சிலந்தி .. மறுபிறவியில் கோட்செங்கட்சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பலமாடக்கோயில்களைக் கட்டி சிவதிருப்பணி செய்து புகழ் பெற்றான் ..

சிவன்கோவில் விளக்கு எரிய திரியைத் தூண்டிவிட்ட எலி .. மறுபிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தான் .. 

சிவன் நாமத்திற்கு அப்படியொரு மஹிமை ! சிவ ! சிவ !
என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும் .. பாவங்கள் நீங்கும் .. மனம் தூய்மையடையும் .. 

சிவனைத் துதித்து அவனருளால் ..அவன் அருள் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY LORD SHIVA SHOWER HIS BENIGN BLESSINGS ON YOU AND MAY HAPPINESS AND PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE AND STRENGTH .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

SWAMI SARANAM..GURUVE SARANAM




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் அனைத்து தெலுங்கு அன்புள்ளங்களுக்கும் எங்கள் இனிய ‘ யுகாதித் திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக 
யுகாதித் திருநாள் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடப்படுகிறது .. “ யுகாதி “ என்றால் புதியபிறப்பு 
( யுகம் + ஆதி - யுகாதி - ) யுகத்தின் தொடக்கம் .. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும் .. ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமையவேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்புப் பெறுகிறது .. 

யுகாதி அன்று ராமாயணக்கதை ஒன்றையும் உதாரணமாகச் சொல்வார்கள் .. ராமர் காட்டிற்கு புறப்பட்டார் .. மகனின் பிரிவைத்தாங்காத தாய் கௌசல்யா அவருடன் காட்டுக்கு வருவதாக அடம்பிடித்தாள் .. 

” அம்மா ! கணவருக்கு பணிவிடை செய்வதே மணைவிக்குரிய தர்மம் .. நீங்கள் அப்பாவைக் கவனித்துக்கொண்டு இங்கேயே இருங்கள் .. “ என்று பக்குவமாக எடுத்துச் சொல்லி தாயை சமாதானப்படுத்தினார் ராமர் .. 

இதையடுத்து சீதையும் அவருடன் வருவதாக கிளம்பியபோது .. “ சீதா நீ அங்கே வராதே ! கல்லிலும் .. முள்ளிளும் சிரமப்படுவாய் வேண்டாம் என்றார் .. “ 

“ ஸ்ரீராமா ! என்ன நியாயம் இது ..? உங்கள் அம்மா உங்களுடன் கிளம்பியபோது கணவனைக் காப்பது மனைவியின் கடமை என்று தர்மத்தைப் போதித்தீர்கள் ..
அதே தர்மம்தானே எனக்கும் பொருந்தும் ..? அம்மாவுக்கு ஒருவிதி .. மனைவிக்கு ஒரு விதியா ..? நானும் உங்களுக்கு சேவை செய்யவேண்டுமல்லவா .. நீங்கள் இருக்குமிடமே எனக்கு அயோத்தி .. நின்பிரிவினும் சுடுமோ பெரும்காடு ..! அதனால் உங்களோடு வருகிறேன் என்று சாதுர்யமாக பதிலளித்தாள் .. ராமரால் பேசமுடியவில்லை .. மனைவியை அழைத்துச் செல்ல சம்மதித்தார் .. 

கணவனுக்காக மனைவி .. மனைவிக்காக கணவன் .. குடும்பத்துக்காக பிள்ளைகள் .. என்ற ஒற்றுமை தத்துவத்தை இந்தக்கதை போதிக்கிறது .. யுகாதியன்று இதுபோல் ராமாயண சம்பவங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் .. குடும்ப ஒற்றுமை ஓங்க யுகாதி நன்னாளில் சபதமேற்கும் நன்னாளாகும் .. 
“ ஜெய் சீதாராம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்..” 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY AND A PROSPEROUS UGADI FESTIVAL .. MAY LORD SITHARAM SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. PROSPERITY AND GOOD LUCK TOO .. " JAI SITHARAM " ..

swamiye saranam iyyappa..guruve saranam



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
குருவருளும் .. திருவருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று இன்னும் மக்கள் மனதில் உயிருடன் வாழ்ந்து நமது சுமைகளை ஏற்று .. நம்வாழ்விற்காக ஆனந்த ஒளியைத் தரும் ஷீரடி பாபாவிற்கும் உகந்த நாளுமாகும் .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாகத் திகழ்ந்திட பிரார்த்திக்கின்றேன் .. 


ஓம் ஷீரடி ஸாயிநிவாஸாய வித்மஹே ! 
ஸர்வதேவாய தீமஹி ! 
தந்நோ ஸர்வப்ரசோதயாத் !! 

ஒருமுறை பாபாவை அன்புடன் நோக்கினால் .. நம் ஆயுள்முழுவதற்கும் நம்முடையவராகிவிடுகிறார் .. 
உண்மையான அன்பைத்தவிர நம்மிடம் வேறெதையும் அவர் எதிர்பார்ப்பதில்லை .. நாம் அவரை அழைக்கும்போது காப்பாற்ற ஓடிவருகிறார் .. அந்நேரத்தில் காலமோ நேரமோ அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது .. சதாசர்வகாலமும் நம்முடனே உறுதியாக நிற்கின்றார் ..எங்கு .. எவ்வாறு எந்தவிசையை
இயக்குகிறார் என்று நமக்குத்தெரியாது .. அவருடைய செயல்கள் அனைத்தும் புரிந்துகொள்ளமுடியாத அற்புதமானவை .. ( ஸ்ரீ சாய்சரிதம் ) 

பாபாவைப் போற்றுவோம் ! இன்னல்கள் சூழ்ந்த நிலையை மாற்றி ஆசீர்வதிப்பாராக .. வாழ்வில் மனநிம்மதியும் .. அமைதியும் பெறுவோமாக ! 
“ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF 
SHIRDI SAI .. MAY YOU BE BLESSED WITH PEACE AND HAPPINESS .. " OM SAI RAM "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய திருமாலை இதயத்தில் இருத்தி துதித்து தங்களனைவருக்கும் பகவானின் திருவருளும் .. நல் அறிவாற்றலையும் .. ஆரோக்கியத்தையும் தந்தருளும்படி
பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

நாராயணன் ஒருவனே நித்தியமும் .. சத்தியமும் ஆனவர் 
யாரொருவன் அவரை முழுநம்பிக்கையுடன் பூஜிக்கின்றனரோ .. அவர்களுக்கு சகலசௌபாக்கியமும்
கிடைப்பதோடு .. மோட்சமும் கிடைக்கும் .. 

தினமும் நாராயணனின் 24 திருநாமங்களை (பெயர்களை)
உச்சரித்து வாழ்நாள் முழுவதும் மனநிம்மதி .. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் .. பொன் .. பொருள் .. தனதான்யம் .. ஆரோக்கியம் .. நல்ல குடும்பம் .. குழந்தைகள் .. நல்ல புகழ் .. வாகனவசதி .. வாழ்வில் ராஜயோகம் அனைத்தும் கைகூடும் எனவும் .. பிறவி முடிந்தபின்பும் .. மேலுலக இன்பங்களை அனுபவித்து இறுதியில் நாராயணனின் திருவடிகளை அடையலாம் என்று பீஷ்மர் உபதேசித்துள்ளார் .. 

24 நாமங்களும் எளிமையானவை .. காலையிலும் .. மாலையிலும் விளக்கேற்றியவுடன் இந்த நாமங்களை ஜபிக்கும் போது துளசியும் .. சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து வழிபட்டாலே போதுமானது .. 

24 நாமங்கள் - 
ஓம் கேசவாய நமஹ ! 
ஓம் சங்கர்ஷணாய நமஹ ! 
ஓம் நாராயணாய நமஹ ! 
ஓம் வாசுதேவாய நமஹ ! 
ஓம் மாதவாய நமஹ ! 
ஓம் ப்ரத்யும்னாய நமஹ ! 
ஓம் கோவிந்தாய நமஹ ! 
ஓம் அநிருத்தாய நமஹ !
ஓம் விஷ்ணவே நமஹ ! 
ஓம் புருஷோத்தமாய நமஹ ! 
ஓம் மதுசூதனாய நமஹ ! 
ஓம் அதோக்ஷ்ஜாய நமஹ ! 
ஓம் திரிவிக்ரமாய நமஹ ! 
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ ! 
ஓம் வாமனாய நமஹ ! 
ஓம் அச்சுதாய நமஹ ! 
ஓம் ஸ்ரீதராய நமஹ ! 
ஓம் ஜனார்தனாய நமஹ ! 
ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ ! 
ஓம் உபேந்த்ராய நமஹ !
ஓம் பதமநாபாய நமஹ ! 
ஓம் ஹரயே நமஹ ! 
ஓம் தாமோதராய நமஹ ! 
ஓம் கிருஷ்ணராய நமஹ !! 

ஓம் நமோ நாராயணாய ! ஓம் நமோ நாராயணாய ! 
ஓம் நமோ நாராயணாய ! என்று .. மீண்டும் .. மீண்டும் சொல்லி அடியவரின் துன்பங்களை களைந்து .. பாவங்களைப்போக்கி .. குழந்தைபோல் அரவணைத்துக்
கொள்ளும் திருமாலின் திவ்யபாதங்களில் சரணடைவோமாக ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. GOOD FORTUNE AND FILL YOUR HEART WITH LOVE AND MIRTH ..

SWAMY SARANAM...GURUVE SARANAM....




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. பிரதோஷ தினமாகிய இன்று கருணாமூர்த்தியான சிவனைத்துதித்து அனைத்து துன்பங்களையும் .. தோஷங்களையும் நீக்குவோமாக .. ஆனால் .. ஒரே ஒருதோஷம் மட்டும் அதன்மூலம் நமக்கு வரும் .. அதுவே ! “சந்தோஷமாகும் ” ! 

பிரதோஷம் என்பது தேவர்களை ஆலகால விஷத்திலிருந்து சிவபெருமான் காத்தருளிய நாளாகும் .. பாற்கடலில் பொங்கிய விஷத்தை உண்டு தேவர்களுக்கு நன்மை அருளிய சிவபெருமான் நம்முடைய வாழ்க்கை எனும் பெருங்கடலில் பொங்கும் பல்வேறு துன்பங்களை
போக்கி .. நன்மைகளை தருவார் .. எனவே பிரதோஷவேளையாகிய மாலை 4.30 - 6.00 மணிவரையிலான நேரத்தில் சிவாலயம் சென்று சிவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளை நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கிடையில் கண்டு தரிசிப்பவர்களுக்கு இம்மை .. மறுமை நலன்களையும் சிவன் அருளுவார் .. 

அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இந்நேரத்திலாவது ஒருவிநாடியேனும் “ ஓம் நமசிவாய “ என்னும் இறைநாமத்தை மனதிலேனும் கூறுவீர்களாக ! 

துன்பங்களைப்போக்கி .. இன்பங்களை நல்கும் ஈசனை இப்பிரதோஷவேளையில் நாமும் வழிபாடு செய்து முன்னைய வினைகள் அனைத்தும் நீக்குவோமாக ! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A
BLESSED " PRADOSHAM " .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS AND SHOWER YOU WITH WEALTH .. HEALTH ..
HAPPINESS AND HONOR .. " OM NAMASHIVAAYA "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....






 அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ... !!!

சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாகாரம் ககனஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ?மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்தயான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்

மேகச்யாமம் பீத கேளசேயவாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம் ... !!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து அன்னையின் திருவருளும் ..
அருட்கடாக்ஷ்மும் தங்களனைவரும் பெற்று .. சகல ஐஸ்வர்யங்களும் தங்கள் இல்லம்தேடிவர பிரார்த்திக்கின்றேன் .. 

யாதேவி ஸர்வ பூதேஷு !

லக்ஷ்மி ரூபேணே ஸம்ஸ்த்திதா !
நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமோ!
நமஹா !!

பொருள் - 
அனைத்து உயிர்களிலும் செல்வ வளமாய் விளங்கும் மஹாலக்ஷ்மி தேவியே ! நமஸ்காரம் ! மீண்டும் ! மீண்டும்
நமஸ்கரிக்கின்றோம் .. என்றும் காத்தருள்வாயாக ! 

இந்தப் பிரபஞ்சத்தில் தாயாக விளங்கும் அன்னையை வழிபடுவதற்கு பலவழிகள் இருக்கின்றன .. அதில் ஒன்று
மிகப் பிரியமான பெயரால் அழைப்பது கூட ஒருவழிதான் 

அம்மா .. மா,, ஆயி .. ஆத்தாள் .. என்னும் பெயர்களே ! அவை .. அதேபொருள் கொண்ட மந்திரத்தாலும் வழிபடலாம் ! “ ஓம் ஸ்ரீமாந்ரே நமஹ .. 

அன்னையைப் போற்றுவோம் ! மங்காத புகழையும் .. நிறைவான செல்வத்தையும் பெற்றிடுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS 
LAXMI .. MAY MAA SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM SHAKTHI OM " 
JAI M
AA LAKSHMI .
.