One of the holiest places in Central India, Triveni Sangam is located about 7 kilometres away from Civil Lines in Allahabad (Prayagraj). In fact it is the meeting point of three rivers - Ganga, Yamuna, and Saraswati (which is a mythical river, supposed to have dried up more than 4,000 years ago). All three rivers Ganga, Yamuna, and Saraswati are highly revered rivers in Indian mythology, and hence the confluence point of these rivers hold tremendous religious importance. It is one of the places where the Kumbh Mela is held once every 12 years.

Image may contain: sky, ocean, outdoor, water and nature
அனைத்து நீர்நிலைகளும் புண்ணியமானவைதான்.புண்ணியத்திலும் புண்ணியம் பெற்றவை திரிவேணி சங்கமமாய் இணைந்துள்ள கங்கை,யமுனை, சாஸ்வதி இணையும் இடமான அலகாபாத்.இங்கு நீராடுவது மிகப் புனிதமான சடங்கு. அப்படி நீராடும் ஒருவன் தான் ஏழுபிறவியில் செய்த அனைத்து பாவங்களையும் நீங்கி பிறப்பில்லா முக்தி நிலையை அடைவான் என்பது ஐதிகம்.. அது ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. என்ன காரணம் என்று பார்க்கலாமா?
துர்வாச முனிவர் சிவனிடமிருந்து பெற்ற மாலையை ஐராவதத்தின் மேல் உட்கார்ந்து வந்த இந்திரனிடம் கொடுத்தார். எப்போதும் ஒரு வித மமதையில் இருக்கும் இந்திரன் அந்த மாலையின் பெருமையையும், துர்வாச முனிவரின் கோபத்தையும் அறியாமல் உதாசினப்படுத்தியபடி அந்த மாலையை தன் யானையிடம் கொடுக்க, யானை காலில் போட்டு மிதித்துவிட்டது. இதைப் பார்த்த துர்வாச முனிவர் கொதித்தெழுந்து விட்டார். “இந்திரனே என்ன காரியம் செய்துவிட்டாய்? பதவியும் செல்வமும் உன்னை ஆணவத்தின் உச்சியில் வைத்திருக்கிறது. இக்கணம் முதல் உன்னிடம் இருக்கும் செல்வம் அனைத்தும் இழந்து நீயும் உன்னை சார்ந்தவர்களும் பராரிகளாக மாறுவீர்கள் என்று சாபமிட்டபடி சென்று விட்டார்.செய்த தவறை உணர்ந்தான் இந்திரன். ஆனால் அதற்குள் தேவலோகத்தில் இருந்தவர்கள் தங்கள் சுகங்களைஇழந்துவிட்டனர். அவர்களிடமிருந்த செல்வங்களும், சுகங்களும் கைவிட்டு நழுவியது. தேவர்களின் இத்தகைய பராரி கோலத்தைக் கண்ட அசுரர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. எங்கு காணினும் அசுரர்களே இருந்தனர். தேவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. எத்தகைய சாபத்தை பெற்றுவிட்டோம். இனி இதற்கு என்ன தீர்வு என்று தேவர்கள் ஒன்று கூடி யோசித்தபோது கலகத்தின் அதிபதி நாரதரின் நினைவு வந்தது.
எப்போது என்ன விஷயம் கிடைக்கும் கலகத்துக்கு என்று சுற்றி வரும் நாரதர் கண்ணில்பட்டார். அவர் தேவர்களின் நிலையை அறிந்து பாவம் நீங்கள் என்றபடி பிரம்மாவிடம் அழைத்து வந்தார். நடந்ததை கேள்விபட்ட பிரம்மனோ துர்வாச முனிவரின் சாபம் மிகவும் பொல்லாதது, என்னால் இதைத் தீர்த்து வைக்க முடியும் என்று தோன்றவில்லை என்று கைவிரித்துவிட்டார். அவ்வளவு தான் இனி எங்களுக்கு விடிவுகாலமே இல்லையா என்று கண்ணீர்விட்ட தேவர்களுக்கு முக்கலாத்தையும் கட்டிக்காக்கும் கயிலை நாயகனின் நினைவு வந்தது. “துர்வாச முனிவரின் சாபத்தை நீக்குமளவுக்கு என்னால் எதுவும் செய்ய இயலுமா என்றூ தெரியவில்லை. வேண்டுமானால் உலகமும், படைக்கும் தொழிலும் சிறந்து விளங்க பரப்பிரம்மே பல அவதாரங்களை எடுத்து வருவது நாம் அறிந்ததுதான், என்னால் ஒன்று மட்டும் செய்யமுடியும். உங்களுக்கு துணையாக வரமுடியும்” என்றபடி தேவர்களை அழைத்துக்கொண்டு பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமனிடம் அழைத்துச்சென்றார். தேவர்களின் கண்களில் ஓயாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணிரைக் கண்டு விஷ்ணுவும் அவர்களுக்கு உதவ வந்தார். உங்களுக்கு செல்வம் வேண்டுமா? இழந்த பலம் வேண்டுமா? மீண்டும் உங்கள் பதவி பலம் பெற வேண்டுமா என்றார். இம்முறை ஏதாவது கேட்டு மாட்டிக்கொண்டால்?,அதனால் தேவர்கள் அனைவரும் இழந்த பலம் கிடைத்தால் போதும் என்றனர். பாற்கடலைக் கடையுங்கள். அதிலிருந்து வரும் அமுதத்தை நீங்கள் சாப்பிட்டால் இழந்த பலம் உங்களுக்கானது, அனைத்தும் கிடைக்கும் என்று கூறினார்.
நமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த தேவர்கள் அசுரர்களை சூட்சுமமாக அணுகி அவர்கள் உதவியோடு பாற்கடலை கடைந்தனர். பல இன்னல்களுக்கு பிறகு புனிதம் மிக்க பொருள்கள் உதயமாகின. வந்ததா.... வந்ததா,அமுதம் வந்ததா... என்று வழிமேல் விழி பார்த்து காத்திருந்து கடைந்தெடுத்த தேவர்களை, காக்க வைக்காமல் ஒருவழியாக அமுதகலசத்துடன் வந்த தன்வந்திரி பகவான் கண்ணில்பட்டார்.
இழந்த பலத்தை தரும் அமுதத்தை அசுரர்கள் உண்ணக்கூடாதே.. என்ன செய்வது என்று எண்ணிய மகாவிஷ்ணு மோகினி வடிவில் உருவெடுத்து தன்வந்திரியிடமிருந்த அமுத கலசத்தைப் பறித்துக் கொண்டு ஓடினார். தேவர்கள் செய்வதறியாமல் திகைக்க.. அசுரர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது புரிந்துவிட்டது, மோகினியை ஆவேசமாக துரத்தினர். பன்னிரண்டு இரவு பகலாக அவர்களுக்குள் ஒரு போராட்டமே நடந்துவிட்டது.. தேவர்களுக்கு ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடம் ஆயிற்றே. அதுபோல் இந்த 12 இரவு பகல் என்பது நமக்கு 12 வருடங்களாகிவிட்டது... போராட்டத்தின் போது கிடைத்ததிலும் அரியத்தக்க அமுதமானது அக்கலசத்திலிருந்து சில துளிகள் சில இடங்களில் சிந்தி, அந்த இடத்துக்கு சிறப்பு சேர்த்துவிட்டது.
இந்த அமுதத்துளிகளை தன்னுள் ஏந்தி எண்ணற்ற பக்தர்களின் பாவங்களைப் போக்கி, வேண்டிய அனைத்தையும் தரும் புண்ணிய இடமாக விளங்குகிறது ஹரித்துவார், உஜ்ஜையினி, நாசிக், அலகாபாத் ஆகிய இடங்கள்.. அமுதம் சிந்திய அந்நாளில் தான் கும்பமேளா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அங்குள்ள நீர்நிலைகளில் சிந்திய அமுதத்துளிகள், பொங்கி வழிவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். தேவர்களுக்காக கடைந்தெடுக்கப்பட்ட அமிர்தத்துளிகளைப் பெற்றிருக்கும் சிறப்பு மிக்க புண்ணியத்தலமாக விளங்கும் இடத்தில் நாமும் நீராடி எப்பிறவியும் இல்லா முக்தி அடைவோம்!
Image may contain: sky, ocean, outdoor and waterImage may contain: ocean, sky, outdoor, water and nature

SWAMY SARANAM...JAI SRI RAM...

#அயோத்தியா
ஆட்டோ ஒருகிலோ மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்தபடுகிறது பொடி நடையாகவே நடந்து.........ராமஜன்மபூமி கோவிலை நெருங்கினோம்...... பாதுகாப்பு சோதனை, கட்டுப்பாடுகள், தரிசனம்: ஶ்ரீ ராமர் பிறந்த இடத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஊடகங்களைப் பொறுத்த வரையில் எதிர்மறையான கருத்துகள், விவரங்கள், தகவல்கள் முதலியவற்றைத் தான் கொடுத்துள்ளன, கொடுத்து வருகின்றன. அயோத்தியாவிற்கு செல்லலாம் என்று நினைத்தால் ஒருவேளை, அங்கு கலாட்டா, கலவரம் என்று ஏதாவது இருக்குமோ என்ற எண்ணம் தான் ஏற்படலாம். தசரதர் வாளிகையைத் தாண்டி செல்லும் போதே, செல்போன்கள், தோலினால் செய்யப் பட்டப் பொருட்கள், கைக்கட்காரம், பேனா, சீப்பு, பெண்களின் ஹேர்பின்கள், தலை உள்ள பூக்கள், என சகலப் பொருட்களையும் எடுத்துவிட சொல்கிறார்கள். ஆனால், செருப்பு, ஷூ போட்டுக் கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள். ராமஜன்மபூமி என்ற இடத்திற்கு செல்ல கூண்டு மாதிரியான அமைக்கப்பட்டுள்ள குறுகிய வழியாக சுமார் 2 கி.மீ தூரம் வளைந்து-வளைந்து செல்ல வேண்டும். போகும் வழியில் ஐந்து இடங்களில் பக்தர்கள் பலவழிகளில் சோதிக்கப்பட்டார்கள். இது பக்தர்களுக்கு மிகவும் அதிருப்தியை, வெறுப்பை உண்டாக்குகிறது. ஏற்கெனவே இரண்டடி அகலம் உள்ள பாதையில், உட்காரக் கூட வசதி இல்லாத பாதையில், சுற்றி-சுற்றி செல்கின்ற நிலையில் அவதிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இவர்களது சோதனை தொல்லையாகத்தான் உள்ளது. வயதானவர்கள், கால் ஊனமானவர்கள் அல்லது நடப்பதற்கு கஷ்டமாக உபாதை கொண்டவகளுக்கு இவ்வாறு செல்ல மிகக்கடினம் தாம். ஒன்று-இரண்டு இடங்களில் குடிக்க தண்ணீர் உள்ளது, மற்றபடி வேறெந்த வசதியும் இல்லை. இவ்வாற் கஷ்டப்பட்டு சென்றால், சுமார் 20 அடி தூரத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதை விக்கிரங்களை நொடிகளில் தரிசனம் செய்து சென்று விடுங்கள் என்று விரட்டுகிறார்கள். தரிசனம் செய்து வெளியே வர 30-45 நிமிடங்கள் ஆகின்றன. கடவுளை தரிசிக்க வரும் பக்தர்கள் இவ்வாறு சதாய்க்கப்பட வேண்டுமா என்று பக்தர்களின் மனத்தில் சிந்தனை எழத்தான் செய்கிறது. ஆனாலும்
ஸ்ரீ ராமர் பிறந்த இடத்தை பார்த்து திவ்யதேச கணக்கில் அயோதியை டிக் அடிப்பதில் மகிழ்சியே
இனி நான்குவருடம் கழித்து அழகிய கோயிலாகதான் அயோதியை தரிசிக்கமுடியுமாம்.
இன்னும் ஒரிருமாதங்களில்
கட்டுமான பணி ஆரம்பிக்க போகிறதாம்...
பளிங்கு கோயிலில்
ராமசந்திர மூர்த்தியை......
பார்கலாம்.

Image may contain: sky and outdoor

Image may contain: outdoor
Image may contain: sky and outdoor
Image may contain: one or more people, tree, sky, outdoor and nature
Image may contain: 5 people, crowd and outdoor
......

SWAMY SARANAM..GURUVE SARANAM



முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்
தென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.
முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்
தென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.
தல வரலாறு :
படைப்புக் கடவுளான பிரம்மா, ஒருமுறை பூலோகத்தை வலம் வந்து கொண்டிருந்தார். பூலோகத்தின் இயற்கை அழகில் மகிழ்ந்து பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஓரிடத்தில் காடுகள் அதிகமிருந்த மலைப்பகுதியில் தனியாக ஒரே ஒரு நெல்லிமரம் இருப்பது தெரிந்தது. அந்த நெல்லிமரத்தின் அழகில் மயங்கிய அவர், அதனைப் பார்ப்பதற்காக அருகே சென்றார்.
நெல்லி மரத்தின் கீழ் மகாவிஷ்ணு அமர்ந்திருப்பது போல் அவருக்குத் தெரிந்தது. மேலும், அந்த இடம் அவருக்கு வைகுண்டமாகத் தோன்றியது. பூலோகத்தில் இறைவன் விஷ்ணுவின் வைகுண்டக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், மகாவிஷ்ணு சிலையை உருவாக்கி, அவ்விடத்தில் நிறுவி வழிபடத் தொடங்கினார். அதன் பிறகு, பிரம்மன் தினமும் அருகிலிருந்த நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்து, அங்கே மலர்ந்திருக்கும் மலர்களைப் பறித்து வந்து, விஷ்ணு சிலையை அலங்கரித்து வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஒருநாள் அவர் முன்பாகத் தோன்றினார்.
அப்போது பிரம்மன் விஷ்ணுவிடம், ‘இறைவா! இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு நற் பலன்களைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.
அவரது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, ‘பிரம்மனே! இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியில் நீராடி, என்னை வந்து வழிபடும் பக்தர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வாழ்வு வளம் பெறும்’ என்று அருள்கூறி மறைந்தார்.
அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மகாவிஷ்ணு கோவில் உருவானதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.







SWAMY SARANAM...GURUVE SARANAM

ஆறு காடுகள் இருந்த இடம்தான் ஆற்காடு என்று மருவி, தற்போது வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஊராக இருந்து வருகிறது. வேப்பூர், மேல்விஷாரம், புதுப்பாடி, காரை, குடிமல்லூர், வன்னிவேடு ஆகிய ஆறு ஊர்களிலும் ஈசன் அருள்பாலித்து வருகிறார். இந்த ஊர்கள் ஆரம்பத்தில் வனங்களாக, முறையே வேப்பங்காடு, எட்டிக்காடு, மாங்காடு, காரைக்காடு, மல்லிக்காடு, வன்னிக்காடு என்று இருந்தன.
ஆறு ரிஷிகளுக்கு ஈசன் காட்சி தந்து கல்ப மூலிகைகளைப் பற்றி சொல்லித் தந்த இடங்களே இவை. பாலாற்றங்கரையின் வடகரை, தென்கரைகளில் தலா மூன்று கோயில்கள் அமைந்துள்ளன. :
காஷ்யபர் ஆவாரங்காட்டில் சிவபெருமானைக் குறித்து தவமியற்றினார். அவர் மனதில், `ஈசன் என்ன தனக்கு உபதேசிப்பது' என்பதாக ஒரு கர்வம் சிறுபொழுது ஏற்பட்டு மறைந்தது. அதன் காரணமாக ஈசன் அவருக்கு நீண்ட காலம் சென்றே தரிசனம் தந்தார். கல்ப மூலிகை ரகசியங்களையும் எடுத்துரைத்தார்.
ஷடாரண்ய ஷேத்திரங்களை ஒரே நாளில் தரிசித்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
Image may contain: 3 people, people standing
No photo description available.
Image may contain: 1 person
No photo description available.
No photo description available.