PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

நவ திருப்பதி - ஆத்திகர்களும் நாத்திகர்கள் இருவரும் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்.


நெல்லை - திருச்செந்தூர் போகும் வழியில் தாமிரபரணியின் இருகரையோரங்களிலும் இந்த ஒன்பது திருத்தலங்களும் அமைந்திருக்கிறன.

காலை ஏழே முக்காலுக்கு முதல் தரிசனம் ஆழ்வார் திருநகரியில் ஆரம்பித்தால், திருக்கோளூர், தெந்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி (இரண்டு திருத்தலங்கள்), திருப்புளியங்குடி, நத்தம் முடித்து இறுதியாக ஸ்ரீவைகுண்டம் தரிசித்து அப்படியே நெல்லை சென்று விடலாம். அல்லது ஸ்ரீ வைகுண்டம் தொடங்கி ஆழ்வார் திருநகரியில் முடித்து திருச்செந்தூரில் இரவு தங்குவதாக அமைத்துக் கொள்ளலாம். வாகனம் கண்டிப்பாகத் தேவை.

ஆத்திகர்கள் : பெருமாள் திருத்தலங்கள் ஒன்பது அருகருகே காணக்கிடைப்பது அரிதாகையால் நிச்சியம் பாருங்கள்.

தமிழார்வலர்கள் : பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள் உலவிய இடம் மற்றும் அவர்கள் வரலாறு குறித்த விசயங்களுக்காக பாருங்கள்.

தொல்பொருள் ஆர்வலர்கள் : நம்மாழ்வார் கிடந்த புளியமரம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நிலம் அங்கே தான் இருக்கிறது. அதற்காக பார்க்கலாம்.

பிஸினஸ் ஆட்கள் : வருமானமே இல்லாத கோவிலில் சத்தமில்லாமல் நல்ல நிர்வாகம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள நவதிருப்பதியையும் சுற்றி வாருங்கள். அத்தனை சுத்தம்/ நேர நிர்வாகம்.

நன்கொடையாளர்கள் : சுண்டக்காயைக் கொடுத்துட்டு சுத்திச் சுத்தி பேர் எழுதிக் கொள்பவர்கள் மத்தியில் 9 கோவிலையும் நிர்வகித்துக் கொடுத்தாலும் ஒரு இடத்தில் கூட தன் பெயரைப் போட்டுக் கொள்ளாத டி.வி.எஸ் அறக்கட்டளையின் சிறப்பினைப் பார்க்க போய் வாருங்கள்.

குழந்தைகள் : ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு பூங்கா மாதிரி இருக்கிறது. நல்ல குடிநீர்/கழிவறை வசதியுடன் புல்தரையுடன் விளையாட வசதியாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லா கோவில்களிலும் யானை இருக்கின்றன.

நாத்திகர்கள் : மேலே சொன்னதெல்லாம் உண்மை தானா என்று ஊர்ஜிதப்படுத்தவாவது சென்று வாருங்கள்.  ( குடும்பத்துடன் ஒரு சுற்றுலா மாதிரி போயிட்டு வாங்க. மனசு சந்தோசமாக இருக்கும்.)
கல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமி!


 
திருவீழிமிழலை திருத்தலம் சைவ திருக்கோயில்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்பு பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்று. பாடல்பெற்ற ஸ்தலமான பெருமைக்கு உரிய இந்தக் கோயிலுக்கு வந்து மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.
காவிரி தென்கரையில் உள்ள இந்தத் திருத்தலம், கும்பகோணத் தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீ வீழிநாதர். அம்பாள்- ஸ்ரீசுந்தர குசாம்பிகை. திருமணப் பரிகாரத் தலங்களில் முக்கியமான தலம் என்று போற்றிப் புகழ்கின்றனர், பலன் பெற்ற பக்தர்கள்.
இங்கே... உத்ஸவர் ஸ்ரீகல்யாணசுந்தரமூர்த்தி, அம்பிகையுடன் திருமணக் கோலத்தில் அழகும் அற்புதமும் நிறைந்து காட்சிதருகிறார். அதனால் இவருக்கு மாப்பிள்ளை ஸ்வாமி என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது, ஸ்தல புராணம்.
திருமணத் தடையால் கலங்கித் தவிக்கும் ஆண்களும் பெண்களும் இங்கே மாப்பிள்ளைக் கோலத்தில், மாப்பிள்ளை ஸ்வாமியாகக் காட்சி தரும் உத்ஸவரை கண்ணாரத் தரிசித்தல் சிறப்பு. உத்ஸவர் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரருக்கும் அம்பிகைக்கும் மாலை சார்த்தி, அர்ச்சித்து வழிபட வேண்டும்.
அதையடுத்து தொடர்ந்து 45 நாட்கள், தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும்,
தேவந்திராணி நமஸ்துப்யம்
தேவந்திரப்ரிய பாமினி
விவாஹ பாக்யமாரோக்யம்
என்று துவங்கும் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யவேண்டும். தினமும் காலையில் மட்டுமின்றி, மாலையிலும் பாராயணம் செய்து வந்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்; வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்.
கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவற்றுடன் மிகப் பிரமாண்டமாகத் திகழ்கிறது கோயில். கருவறையில், மூலவர் லிங்க வடிவில் காட்சி தர... சிவனாரும் பார்வதியும் அழகிய திருமேனியுடன் உள்ளே மணக்கோலத்தில் தம்பதி சமேதராகக் காட்சி தருகின்றனர்.
கிழக்கு நோக்கிய ஆலயம். எனவே, இந்தத் தலத்துக்கு வந்து வேண்டினால், வாழ்க்கையில் விடியல் நிச்சயம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
சுந்தரரும் திருஞானசம்பந்தரும் பாடிப்பரவிய திருத்தலம். கோயிலுக்கு எதிரில் தீர்த்தக்குளம் உள்ளது. இதை விஷ்ணு தீர்த்தம் என்கின்றனர். ஸ்ரீமகாவிஷ்ணு, 1008 தாமரை மலர்களைக் கொண்டு, சிவனாரை பூஜித்து வணங்கி வரம்பெற்ற தலம்  என்கிறது ஸ்தல புராணம்.
கோயிலின் உள்ளே 118 தூண்களைக் கொண்ட திருக்கல்யாண மண்டபம் அழகுற அமைந்துள்ளது. சித்திரையில்  பத்து நாள் விழா இங்கே வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில், இறைவனும் இறைவியும் இந்த திருக்கல்யாண மண்டபத்தில் காட்சி தருவதைத் தரிசித்தாலே திருமணம் முதலான சகல வரங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.  
ஸ்ரீமகாவிஷ்ணு 1008 தாமரை மலர்களைக் கொண்டு சிவனாரை  அர்ச்சிக்கிற வேளையில் ஒரு பூ குறைந்ததாம். அதனால், தன் கண்மலரையே கொண்டு அர்ச்சித்தாராம் மகாவிஷ்ணு. இதில் குளிர்ந்துபோன சிவனார், அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார். எனவே, கண்நோய் மற்றும் கண் கோளாறுகளை நீக்கும் தலம் எனப் போற்றுகின்றனர்.
ஸ்ரீபடிக்காசு விநாயகர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி என ஒவ்வொரு மூர்த்தமும் கொள்ளை அழகுடன் திகழ்கின்றனர்.  
திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்குவந்து, ஸ்வாமிக்கு மாலை அணிவித்து, தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, தினமும் வீட்டில் இருந்தபடி 48 நாட்கள் தொடர்ந்து ஸ்லோகம் பாராயணம் செய்து வழிபட்டால், நல்ல வரன் சீக்கிரமே தகையும் என்பது ஐதீகம்.
கல்யாண வரம் தரும் மாப்பிள்ளை ஸ்வாமியை இங்குவந்து கண்ணாரத் தரிசியுங்கள். கல்யாண யோகம் கைகூடும்!
நெல்லுக்கு வேலியிட்ட இறைவன்!

)
'அல்வா’வுக்குப் பெயர்பெற்ற திருநெல்வேலி ஆன்மிகம் வளர்க்கும் பூமியும்தான்! இங்கே ஸ்ரீநெல்லையப்பராகக் கோயில் கொண்டுள்ளார் இறைவன் சிவபெருமான். வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து, இவருக்கு தினமும் நைவேத்தியம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வேதபட்டர் என்பவர். ஒருநாள், அவ்வாறு சேகரித்த நெல்லை வெயிலில் உலர வைத்துவிட்டு, தாமிரபரணியில் நீராடச் சென்றார். அந்த நேரம் பெருமழை பெய்ய... 'நைவேத்தியம் செய்ய வேண்டிய நெல் மழையில் நனைந்துவிடுமே...’ என்று பதற்றத்தில் ஓடிவந்தார் பட்டர். என்ன ஆச்சரியம்...! அவர் உலர வைத்திருந்த நெல்மணிகளைச் சுற்றி மழை பெய்து, நீர் ஓடிக்கொண்டிருக்க... நெல் இருந்த பகுதியில் மட்டும் சுள்ளென்று வெயில் அடித்துக் கொண்டிருந்தது. நெல்லுக்கு வேலி அமைத்த ஈசனின் இந்த திருவிளையாடலே 'திருநெல்வேலி’ என்ற பெயருக்கும், 'நெல்லையப்பர்’ என்கிற இத்தலத்து இறைவனின் பெயருக்கும் காரணமானது.
சிறப்புத் தகவல்கள்...
ஸ்ரீநெல்லையப்பர் சந்நிதிக்கு அருகில் உள்ள தனிச் சந்நிதியில், பள்ளிகொண்ட ஆனந்த சயன பெருமாள் தரிசனம் தருகிறார். சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கும் இவருக்கு அருகில் காணப்படும் உத்ஸவரான பெருமாள், மார்பில் சிவலிங்கத்துடன் தரிசனம் தருகிறார். தன் தங்கையை மணந்த சிவபெருமானை, தமது மார்பில் தாங்கினார் எனும் ஐதீகத்தால் பெருமாளுக்கு இப்படியரு திருக்கோலம்.
Click to enlarge

நதியே நதியில் நீராடும் அதிசயம் நெல்லை திருத்தலத்தின் தனிச்சிறப்பு. நெல்லையப்பர் கோயிலில் நாயன்மார் சந்நிதிக்கு அருகில் தாமிரபரணி நதி, பெண் உருவில் காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம் மற்றும் தைப்பூசத்தின்போது இவள் தாமிரபரணிக்கு எழுந்தருளி நீராடுவாள். பொதுவாக தாமிரபரணியில் நீராடுவது, பாவங்களை நீக்கிப் புண்ணியம் சேர்க்கும் என்பார்கள். அந்த உண்மையை உணர்த்தவே இந்த வைபவம் நிகழ்த்தப்படுகிறது என்பர்.

தெட்சிணாமூர்த்தி வழிபாடு

தெட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும். 

தெட்சிணம் என்றால் என்ன?

தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தெட்சிணாமூர்த்தி. ஞானமானது தெட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்றுகொண்டிருக்கிறது.

வியாக்யான தெட்சிணாமூர்த்தி

தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தெட்சிணாமூர்த்தியே ஆவார். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.

குருவின் சின்முத்திரை

வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.

பத்து தெட்சிணாமூர்த்திகள்

மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்
தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)
சிற்ப அழகு - ஆலங்குடி
வீராசன நிலை - சென்னை திரிசூலம்
மிருதங்க தெட்சிணாமூர்த்தி - கழுகுமலை (தூத்துக்குடி)
யோகாசன மூர்த்தி - அனந்தபூர் (ஆந்திரா)
வீணா தெட்சிணாமூர்த்தி - நஞ்சன்கூடு (கர்நாடகா)
வியாக்யான தெட்சிணாமூர்த்தி - அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்)
நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி - மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
நின்ற நிலையில் வீணையுடன் - திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்

விசேஷமான கோலத்தில் தட்சிணாமூர்த்தி திருத்தலங்கள் !

சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் மிதித்து, சின்முத்திரை மூலம் ஞானத்தைப் போதித்து சாந்தி மற்றும் ஆனந்தத்தை அருள்பவர் தட்சிணாமூர்த்தி. விசேஷமான திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கும் திருத்தலங்கள் சிலவற்றைப் பார்ப்போம். மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட் அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவதட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து அருள் பாலிக்கிறார். புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபயமுத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல்கையில் நாகம், இடது மேல்கையில் அக்னி என சிவனே தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

குரு - தெட்சிணாமூர்த்தி வித்தியாசம்

நவக்கிரக மண்டபத்தில் இருக்கும் குரு பகவான் வேறு. தெட்சிணாமூர்த்தி வேறு. ஆனால், இருவரும் தங்கள் தொழிலால் ஒன்றுபடுகிறார்கள். இதனால் தான் மக்கள் தெட்சிணாமூர்த்தியை குருவாகக் கருதி, குருவுக்குரிய வழிபாடுகளை தெட்சிணாமூர்த்திக்கு செய்து கொண்டிருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் திசை தெற்கு, குருவின் திசை நவக்கிரக சன்னதியில் வடக்கு. தேவர்களின் குருவே பிரகஸ்பதி. இவரே நவக்கிரக அந்தஸ்தைப் பெற்றவர். தெட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம். இவர் அம்பிகைக்கும், சனக, சனாதனர் உள்ளிட்ட நால்வருக்கும் வேதம் கற்பித்தவர். ஆனால், இருவருக்கும் மஞ்சள் ஆடை அணிவதில் ஒற்றுமை இருக்கிறது.

தெட்சிணாமூர்த்தியை குருவாக வழிபடுவது ஏன்?

குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது. மேலும் கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார்.

சாப்பிட்ட கோலத்தில் தெட்சிணாமூர்த்தி

அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர். விவசாய தம்பதியருக்கு அருள் செய்வதற்காக, முதியவர் வேடத்தில் வந்த சிவன் அவர்கள் படைத்த உணவை வயலில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டுச் சென்றார். இதன் அடிப்படையில் இக்கோயிலில் தெட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இவரை தவ தெட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

ராஜபாளையம்– சபரிமலை இடையே புதிய சுரங்கப்பாதை ரயில் திட்டம்: மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

                        

ராஜபாளையம் – சபரிமலை இடையே புதிய சுரங்கப்பாதை ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து தென்காசி, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டி யிடும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு மாத பூஜைகளுக்கும் மண்டல மற்றும் மகரஜோதி பூஜைக்காகவும் சுமார் 20 லட்சம் பேர் சென்று வருகின்றனர். ராஜபாளையம், செங்கோட்டை, புனலூர், பத்தனம்திட்டா வழியாகவும், திண்டுக்கல், தேனி, குமுளி, பீர்மேடு வழியாகவும், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் வழியாகவும் 3 மார்க்கங் களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.
சென்னையில் இருந்து சபரி மலைக்கு இந்த வழியாகச் செல்லும்போது 12 மணி முதல் 17 மணி நேரம் வரை ஆகும். பயண நேரத்தைக் குறைக்கவும், விரைவாக சபரிமலைக்கு சென்று வரவும் வசதியாக ராஜபாளையம் – சபரிமலை இடையே 58 கி.மீ. நீளத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய சுரங்கப்பாதை ரயில் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்று ரயில்வே வாரியத்துக்கு மதுரை கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு மூத்த உறுப்பினர் பி.டி.கே.ஏ.பாலசுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
சேத்தூர் வழியாக..
ராஜபாளையத்தில் இருந்து செங் கோட்டையை நோக்கி சாலையில் செல்லும்போது 8-வது கி.மீட்டரில் சேத்தூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 8-வது கிலோ மீட்டரில் மேற்குத் தொடர்ச்சி மலைஅடிவாரமும் அதன்பிறகு 42 கி.மீட்டர் தூரத்தில் சபரிமலையும் அமைந்துள்ளன. இப்பாதையில் புதிய சுரங்கப்பாதை அமைத்தால் சேத்தூர் வழியாக சபரிமலைக்கு சில மணி நேரத்திலேயே செல்ல முடியும். பயண நேரம் 7 மணி நேரம் வரை குறையும்.
சேத்தூர் – சபரிமலை இடையே பெரிய மலைகள், நதிகள், ஏரிகள் உள்ளன. மலைகளில் 8 முதல் 12 கி.மீட்டர் வரை சுரங்கப் பாதையும், நதிகளின் குறுக்கே மேம்பாலங்களும் அமைத்து புதிய ரயில் பாதை அமைக்கலாம் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சாத்தியக்கூறுகள்
இந்த சவாலான பணி குறித்து ரயில்வே பொறியாளர் ஒருவர் கூறுகை யில், “சேத்தூர் – சபரிமலை இடையே ஹெலிகாப்டரில் பறந்து அதிநவீன கேமரா மூலம் பிரமாண்ட மலைகள், நதிகள், ஏரிகளை துல்லியமாகப் படம்பிடித்து, சுரங்கப்பாதைக்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம். அந்தப் பகுதியில் பெரும்பாலான பகுதி காப்புக்காடுகளாக இருப்பதால் முதலில் மத்திய வனத்துறை அனுமதி பெற வேண்டும். இதற்கான முயற்சியை தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இந்தியன் ரயில்வே இன்ஜினீயர்களால் மேற்கொள்ளப்பட்ட கொங்கன் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை வெளிநாட்டு இன்ஜினீயர்களும் பாராட்டுகின்றனர். இதுபோல சேத்தூர் – சபரிமலை இடையே சுரங்கப்பாதை ரயில் திட்டத்தை நிறைவேற்றினால் உலக அளவில் பாராட்டப்படும் திட்ட மாக அது இருக்கும்” என்றார்.
புதிய தேயிலைத் தோட்டங்கள்
இப்புதிய திட்டத்தால் தமிழ்நாடு – கேரளா இடையே அதிக அளவில் தேயிலைத் தோட்டங்கள் உருவாகும். இருமாநிலங்களின் சுற்றுலாத் தலங் கள் மேம்படும். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் ரயில்வேக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். சபரிமலை செல்லும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த திட்டம் அமையும்.
திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு நடத்த ரயில்வே நிர் வாகத்தை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தென்காசி, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சித் தலைமைக்கு எடுத்துச் சொல்லி வாக்குறுதியாக அளிக்க வேண்டும் என்றும் தென்மாவட்ட மக்களும், வர்த்தக அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!!



திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.!!!

Karadaiyan Nonbu


Karadaiyan Nonbu is a festival of special significance to married women all over Southern India including states like Tamil Nadu, Karnataka, Kerala and Andhra Pradesh.(But i think its a different name, but the same ritual).This is observed for their respective and prospective husband’s well being and that the couples should remain together always.

Especially observed by the women of Tamil Nadu, K
aradaiyan Nonbu, is celebrated at the conjunction of the Tamil months Masi and Panguni. It is to remember the great battle won by Savithri - a mythological character - over the God of Death - Yama, not by arms or ammunitions but by her clever arguments to regain her husband’s life. But, it was Savithri’s genuine prayers and bhakti to Goddess Gowri that has given her the strength and wisdom to win back her husband's life from Yaman, the Lord of Death. So,women offer their prayers to Goddess Gowri or Kamakshi following the footsteps of Savithri to plead for a long married life (Dheerga Sowmangalyam - they pray for longevity and welfare of their husband).

Savithri was the daughter of king Aswapathi who ruled Mathra. She was married to Sathyavan, son of another king, according to her wish. Despite Naradha’s warning that Sathyavan would die within a year of marriage, Savithri married him. But as a devout wife, she started worshipping Goddess Gowri to protect her mangalyam, - that is, to change the fate and give her husband a long life. On the first day of Panguni, the following year, fate snatched away Sathyavan suddenly. When Yama appeared to take away the life of Sathyavan, Savithri did not give up easily. She argued with Yama, and regained the life of her spouse and in addition begot four more boons too! And they lived happily ever after. Thus goes the story....

So following the tradition the nonbu is observed every year by all women to protect their mangalyam. Normally the Nonbu is observed just before the onset of Panguni, when the last few hours of Masi are left. The exact time to carry out the Nonbu would be told by the family 'vadyar mama'. The pooja room at home is lit with the traditional lamp (kuthu villaku). Kolams are drawn (Arisi maavu will be used for this) in front of the pooja room.Plantain leaves will be placed in order according to the number of women and girl children in the household. If the number is an odd one, one more leaf will be placed for the Goddess. On the right corner of the plantain leaves will be placed the thamboolam along with a banana. The main item is the sacred yellow cotton string - Saradu (tied in the middle with some flower), which the vadyar mama normally give to every household well in advance.

On this day, two special dishes are made. One is a savoury and the other one is a sweet (Karadais and vella adais are specially made for the occasion with rice flour,jaggery and Kaaramani - a red coloured dry beans). The Sweet adais are then placed on the plantain leaves along with 'Vennai'.

Then, every one (married women and even young girls) have to take a sort of vow in front of their offering to offer the same (" Urugada Vennaiyum oradaiyum naan tharuven - orukaalum en kanavar ennai piriyadirukkanum") meaning that year after year - their only wish being that of a long life for their spouse and tie this sacred yellow colour thread around their neck.

After offering the Nivedhyam to the Goddess, the older woman (usually paati else amma) in the house ties one of the Saradu placed in front of her to the Ambal picture in the pooja room.The next day few adais are given to a cow.

Among the many festivals of South India, Karadaiyan Nonbu is more a renewal of the faith in the tradition.

------------------------------------------------------------------------------------------------காரடையான் நோம்பு~*~~*~~*~~*~

இந்த வருடம் காரடையான் நோம்பு மார்ச் மாதம் 14தேதி வெள்ளிகிழமை (நாளை) அன்று வருகின்றது . இந்த நோம்பு மாசியும் -பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடபடுகின்றது. நோம்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டிய சமயம் மாலை8.15 PM-9.15 PM (ISD) TIME.

காரடையார் நோன்பின் மகிமை

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், ஆன்மீகத்தில் சிறந்த நாடாக, பலம் மிகுந்த நாடாக இந்தியா கருதப்படுவது ஏன் என்று சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் பதில், பாரத தேசம் ஒரு புண்ணிய பூமி, கர்ம பூமி பல ஆலயங்கள் நிறைந்த நாடு என்று கூறுவார்கள். அது மட்டுமல்ல : நமது நாட்டுப் பெண்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் ஆற்றிய ஆன்மீகப் பணியும் ஒரு காரணம். நமது நாட்டு வரலாற்றில்
ஆன்மீக பக்கத்தை புரட்டினால் ஆண்கள் புரிந்த ஆன்மீகச் செயல்கள், மற்றும் அதிசயச் செயல்கள் போல சற்றும் குறையாமல், ஏன் சற்று அதிகமாகவே பெண்கள் ஆற்றியுள்ளனர். அப்படி ஒரு ஆன்மீகச் சாதனை புரிந்தவர்களில் சாவித்திரி தேவியும் ஒருவர். அவர் புரிந்த சாதனையே இன்று கொண்டாடப்படும் காரடையார் நோன்பிற்கு காரணம். அதனுடைய வரலாற்றை நாம் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

மத்திர தேசம் என்ற நாட்டை ஆண்டு வந்த அசுவபதி என்ற ராஜாவிற்கு குழந்தை இல்லை என்ற கவலை. ஒரு நாள் நாரதர் அங்கு வந்த போது, அவரிடம் தன் குறையை சொல்ல, நாரதர் சாவித்திரி தேவியை நினைத்து பூஜை, ஹோமங்கள் செய்தால் வழி பிறக்கும் என்று சொல்லி மறைந்தார். ராஜாவும் அவர் சொன்னபடியே செய்தார். அந்த ஹோமம் செய்த அக்னி குண்டத்திலிருந்து, ஜெகத்ஜோதியாய் தேவியவள் வந்தாள். பிரம்மதேவன் அனுப்பியதால் இங்கு வந்தேன். இப்போது உனக்கு மகன் இல்லை. இனிமேல் உண்டாகும். செய்த தவத்திற்கு பலனாக நானே கன்னிகையாய் வந்து அவதரிப்பேன் என்று சாவித்திரி தேவி சொல்லி மறைந்தாள்.

சிறிது நாட்களுக்கப் பிறகு தேவி அவள் சொன்னபடியே அரசனின் பட்ட மகிஷியான மாளவியின் வயிற்றில் சாவித்திரி தேவி பிறந்தாள். அவள் வளர்ந்து பருவ மங்கையானதும் அவளுக்கு திருமணம் செய்ய நினைத்தார்கள். அவளுடைய அழகிற்கு ஈடாக எந்த அரச குமாரனும் இல்லை, என்பதால் அசுவபதி ராஜா, தன் மகளிடம்''நீயே உன் தோழிமாரோடு சென்று உனக்கேற்றவனைக் தேர்ந்தெடுத்து வா''என்று சொல்லி அனுப்பினார்.

சாவித்திரி தேவியும் தேசமெங்கும் ஆராய்ந்தும் கிடைக்காமல் இருந்தபோது, நாட்டை இழந்து காட்டில் வசிக்கும் சாலுவ தேசத்து அதிபதியின் மகனை (சத்தியவான்) வனத்தில் கண்டாள். தன் தந்தையிடம் வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். அப்போது அங்கு வந்த நாரதர் அதைக் கேட்டுக் கலங்கினார். காரணம் என்ன என்று ராஜா கேட்டதற்கு நாரதர் சொன்னார். '' அந்த சத்தியவான் ஒரு வருடத்தில் மரணம் அடைந்து விடுவான் '' என்று. ராஜா தன் மகளிடம் '' வேறு ஒருவரை வரித்து '' வா என்று சொன்னார். ஆனால் சாவித்திரியோ மனதில் ஒருவரை வரித்த பின்பு-வேறு ஒருவரைத் தேடுவது பதிவிரதம் கெட்டுவிடும். அவரையே தான் நான் மணப்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டாள்.

நாரதர் அரசனிடம், சாவித்திரி அவள் மன திடத்தாலே எமனையும் வெற்றி பெறுவாள் என்று சொல்ல, அரசரும் அவள் விருப்பப் படியே காட்டிற்கு சென்று சத்தியவானிடம் கன்னிகா தானம் செய்து விட்டு வந்தார். காட்டில் சாவித்திரி பதிவிரதா தர்மத்திற்கு ஒரு குறையும் இல்லாமல் கணவனோடு கானகத்தில் வாழ்ந்து வந்தாள். கணவனுடைய மரண தேதியை அறிந்து இருந்ததால், கடுந்தவம் செய்தாள், கௌரி நோன்பு இருந்தாள். காமாக்ஷி தேவியை நோக்கி கடுந்தவம் இருந்தாள்.அந்த பங்குனி முதல் நாள் வந்தது. கடும் நோன்பு இருந்து உணவு இல்லாமல் இருந்தாள். காட்டில் விறகு கொண்டு வர கணவனுடன் சென்றாள். விறகு பிளக்கும் போது கணவன் உயிர் துறந்தான். சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்க சபதம் கொண்டாள். கணவனுக்கு ஈமைக்கிரியைகள் செய்ய உறவினர்கள் வந்தபோது செய்ய அவள் அனுமதிக்கவில்லை. சாவித்திரி தனது கணவனின் உடலுடன் காட்டில் தனியாக அவன் உயிரை மீட்க காமாட்சி தேவியை நோக்கி பூஜித்தாள். பூஜையை தொடர்ந்து நடுவே எமன் தோன்றி ''உன்னுடைய பூஜைகள் அனைத்தும் வீண். உயிர் பிரிந்தது பிரிந்ததுதான்''என்று சொல்லியும் அவள் தன் விரதத்தை கைவிடவில்லை. காட்டில் கிடைத்த பூக்களையும், பழங்களையும் வைத்து பூஜித்தாள். அம்மைக்கு அமுது படைக்க விரும்பினாள். காடுகளில் ஏதும் கிடைக்காததால் அங்கே கிடைத்த களிமண்னை அடையாகவும், கள்ளிப் பாலை வெண்ணெயாகவும் பாவித்து பூஜை செய்தாள்.

எமதர்மன், சத்தியவான் உயிரை எடுத்துவிட்டுச் சென்று கொண்டிருந்தார். சாவித்திரி விடாமல் பின் தொடர்ந்து சென்றாள். எமன் அவளைப் பார்த்து ''என்னை ஏன் தொடருகிறாய்?''என்று கேட்க ''என் கணவன் உயிர் வேண்டும்'' என்றாள். வேறு எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன், என்ற எமனிடம் ''எனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்'' என்று வரம் கேட்க, ''தந்தேன் அம்மா உனக்கு''என்றார். தொடர்ந்து அவரைப் பின் தொடர்ந்து உங்கள் வரம் ''பலிக்காமல் போகலாமா!கணவனில்லாமல் எப்படி உங்கள் வரம் எனக்கு பலிதமாகும்? தரும தேவனுடைய வாக்கு பொய்யாகலாமா?''என்றாள். எமதேவனுக்கு அப்போது தான் சாவித்திரி தேவியின் மதி நுட்பம் புரிந்தது. சாவித்திரியின் பூஜைகளையும், மதி நுட்பத்தையும் மெச்சி உள்ளங்குளிர்ந்து, கணவனுடைய உயிரைப் தந்ததோடு, இழந்த ராஜ்ஜியத்தையும் அளித்தார்.

இவ்வாறு காலனையே கதி கலங்க வைத்து போராடி வெற்றி பெற்றதற்கு, சாவித்திரியம்மன் செய்த கௌரி நோன்பு தான் காரணமாகும். அப்படி சாவித்திரி செய்த பூஜையே இன்று நாம் அனைவரும் செய்யும் காரடையார் நோன்பு ஆகும். மாசி முடிந்து பங்குனி தொடங்கும் சமயம் அன்றைய தினம் சுமங்கலிகள் பூஜை செய்தால், அவர்களுடைய கணவரைப் பிரியாமல், தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள் என்பதே அந்த நோன்பின் மகத்துவம்.

காட்டில் சாவித்திரி படைத்த மண் அடையை வெல்ல அடையாகவும், கள்ளிப்பாலை வெண்ணெயாகவும் நாம் அன்னைக்கு படைக்கிறோம்.

பூஜையின்போது ''உருகாத வெண்ணெயும், ஒரடையும் நான் உனக்கு தருவேன். கணவனை பிரியாத வரம் வேண்டும்'' என்று சுமங்கலிகள் அனைவரும் காரடையார் நோன்பு எனும் பூஜையை செய்தால் சாவித்திரி போல திடமான மனதையும், கொண்ட கொள்கையில் உறுதியும் காமாட்சி அன்னையின் அருளையும் பெறுவார்கள் என்பது உறுதி.

சாவித்திரி மாங்கல்ய தேவதை சண்டிகையை மாங்கல்யம் பெற மங்களாம்பிகை மாங்கல்யேஸ்வரர் பூஜித்த மந்திரம் :

மங்களே மங்களாதாரே|
மாங்கல்யே மங்களப்ப்ரதே|
மங்களார்த்தம் ம்ங்களேசி |
மாங்கல்யம் தேஹி மே ஸதா||
 

PANCHAMUKHI AANJANEYA SWAMY (Near Mantralayam)

It is a cave temple where Sri Raghavendra Swamy (Rayaru) had performed penance for 12 years meditating on Panchamukhi (five headed) Hanuman before entering into Brindavana at Mantralayam. One can find a script engraved to this effect on the walls of the temple. It is said that Rayaru had the darshan of Lord Hanuman in a unique way with five faces (Varaha, Garuda, Narasimha, Hayagreeva and Aanjaneya) at this spot along with Lord Venkateswara (Tirupathi), Goddess Sri Mahalakshmi (Kolhapura), and Kurma Avathara of Lord Maha Vishnu. One can find the idols of these deities inside the temple along with a small Brindavana (replica) indicating the spot where Sri Rayaru did the penance. Lord Hanuman manifested here, is in a rare posture, sitting on his knees with folded hands facing east. It is believed and said that whoever worships him will be benefited with merits and fulfillment of their desires.

As per the Kshetra Mahatya this location is said to be in existence since Tretha Yuga. Lord Hanuman is believed and said to have visited this spot during the epic days of Ramayana in the course of getting Sri Rama and Lakshmana released from the clutches of Mahiravana. You will find rare and giant rocky structures in the replica of a bed and a plane (elevated rock) said to have been used by Lord Hanuman. There is also an underground passage near Erukalamba temple through which Lord Hanuman is said to have reached Mahiraavana and finally killed him.

Outside the main temple there is a spot where we find a very large sized footwear being worshipped said to be of Lord Hanuman. It is said and believed that Lord Hanuman uses this foot wear which is replaced once in five years as per the local customs and beliefs when they get soiled due to wear and tear. Apart from this there is a temple of Goddess Erukalamba (Grama Devatha) located at a small distance from Panchamukhi temple. She is the presiding deity of this place who is also worshiped by the pilgrims coming from far off places.

Since the days of Sri Rayaru the temple has come into prominence. People visiting Mantralayam will make it a point to visit this temple to seek the blessings of Lord Hanuman in a rare form. During festival days especially on the new moon (Amaavaasya), full moon (Pournami), Tuesdays, and Saturdays there will be rush of pilgrims to this temple.

The temple of Panchamukhi Aanjaneya Swamy is located on the banks of river Tungabhadra about 20 km to the north of Mantralayam. It is on the Karnataka – Andhra border coming under Karnataka state about 2 km from Ganadhala village.

வேதம் கற்றால் அவன் பிராமணன் ஆகிவிடுவானா?' என வினவுகிறது நம் உள்ளுணர்வு.



சாஸ்திரங்களுக்கும் வேதத்திற்கும் என்ன வித்தியாசம்? சாஸ்திரங்கள் புவியில் வாழும் வழிமுறைகளையும் விதிகளையும் லோக வாழ்வுக்கு தேவையான அறிவையும் பிரிவுகளாய் எடுத்துறைக்கிறது. வேதமோ பரம்பொருளை நோக்கி நாம் செய்யும் பயணம். சாஸ்திரங்கள் தெரிந்ததால் அவன் இறையை உணர்ந்திருக்கிறான் என்றோ, உயர்ந்தை இலக்கை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளான் என்ற எண்ணமோ பெரும்பாலும் தவறானது. வேதம் கற்றிருந்தால் மட்டுமே ஒருவனின் அறிவை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய அறிவாகக் கொள்ளலாம்.

வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாய் பிரிவாகியுள்ளது.

இவற்றில் ரிக் வேதம் மந்திர பாகமாகவும் சூக்தங்களாகவும் உள்ளது. யஜுர் வேதம் யாகங்களின் மந்திரமாகவும், சாமம் இசையோடு கூடியதாகவும், அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றன. ரிக் வேதம் செய்யுள் நடையோடும், யஜுர் வேதம் உரை நடையின் வழியிலும், சாம வேதம் கானம்/பாடல்களாகவும் எழுதப்பட்டு ஓதப் பட்டு வந்தன.

பொதுவாக ரிக்வேதம் 10 மண்டலங்களாகவும், 10415 ரிக்குகள் உடையதாகவும், 1029 சூக்தங்கள் உடையதாகவும் சிறந்து காணப்பெறுகின்றது. கடவுள் ஒருவரே! அவரே தலைவர், அவரே பலராக ஆகின்றார் என்பன ரிக் வேதத்தின் சாரமாகும்.

யஜுர் வேதம் யாகங்கள் செய்யும் முறைகளை விளக்குக்குவதாக அமைந்துள்ளது.

சாம வேதம் பாடல்களின் வடிவில், ஒலிவடிவில் இறைவனைப் போற்றித் துதிக்கும் வேத ஒலிகள். வேதங்களின் நான் "சாம வேதம்" என்கிறான் கீதையில் கண்ணன். சாம வேதம் ஓம்காரத்தின் சாரம்சமாக கருதப்படுகிறது.

அதர்வண வேதம் மந்திர யந்திர தந்திரங்களும், விஞ்ஞான கருத்துக்களும், உலகியல் ஆரோக்யத்திற்கும் வளமான வாழ்வுக்கு தேவையான அறிவும் அதர்வன வேதத்தில் தரப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் இது அதிகம் வழக்கில் இல்லை.

ஒவ்வொரு வேதமும் நான்கு பாகங்களாக பிரிக்கப்படலாம். 'சம்ஹிதை' என்பது மந்திர பாகம், 'ப்ரம்மணம்' என்பது யாகம் செய்யும் முறைகள், 'ஆரண்யகம்' யாகத்தின் அர்த்தங்களையும், அதன் நோக்கத்தையும் விரிவுபடுத்துகிறது. இறுதியாக வேதத்தின் ஒரு பகுதியான "உபநிஷதம்" .

வேதங்களின் அந்தமே 'வேதாந்தம்'. அதுவே பரம்பொருள். ரிஷிகள் உணர்ந்து உபதேசித்தது உபநிஷதம். ஆன்மீகத் தேடலுக்கு வழிகாட்டி. "நான் யார்" என்ற மையக் கேள்வியும், "ஜீவ - பரமாத்மா" பாகுபாடுகளும், பிரம்மத்தை அடையும் முறைகளும், ஆன்ம ஞானம் முதலியன பற்றிய விளக்கங்களும் உபநிஷதத்தின் முக்கிய கருத்துக்கள். மொத்தம் 108 உபநிடதங்கள் உள்ளன. அதில் பன்னிரெண்டை முக்கியமாக சொல்வதன் காரணம், ஷங்கரரும், ராமானுஜரும், மாத்வரும் இவற்றை பாதுகாத்து உரை எழுதியிருப்பதால், புரிதல் எளிதாகிறது. படிப்பதால் அன்றி, உணர்வதால், உணர்ந்து நடப்பதால் ஒருவன் உயர் கதி அடைகிறான்.

'வேதம் கற்றால் அவன் பிராமணன் ஆகிவிடுவானா?

இப்பொழுது பதிலும் தெளிவாகிறது. வேதம் கற்பதால் அவன் அறிவு மட்டுமே விருத்தியடைகிறது. வேதம் மனிதனுக்கு பாடம் புகட்டுகிறது. அது இலக்கு அல்ல. இலக்கை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் பாதை. கற்றத்தைத் தாண்டி வேதத்தை "உணர்ந்தால்" உணர்ந்து அதன்படி நடந்தால், அவன் பிராம்மண நிலைக்கு தன்னை தயார் படுத்திக்கொள்கிறான்.

அவனின் தன்மைகளில் சிலவற்றை முன்பு கண்டோம். மேலும் சில குணங்களும் அவசியமாகிறது.

பிராமணன் என்பவன் சமப்பார்வையுடையவனாக இருக்க வேண்டும். சமப்பார்வை என்பது மனித ஜாதிகளைக் குறிப்பிடுவதல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்பது. இரட்டைகளற்ற பார்வை. மரம், செடி, மிருகம், மனிதன் என்ற பேதமே அகன்று விடும் பார்வை. எல்லாம் ஒரே பொருளின் வெளிப்பாடுகள் என்ற பார்வை. மானம் அவமானம், விருப்பு வெறுப்பு, அற்ற நிலை.

நாளைக்கு என சேமித்து வைப்பவன் பிராமண நிலைக்கு தயார்படுத்திக்கொண்டவனில்லை. பொருளையோ பணத்தையோ சேமித்து வைத்தல் அவனுக்கு விதிக்கப்பட்ட இயல்பு அல்ல.

மேலும் அவனுக்கென கூறப்பட்டுள்ள ஷட்கர்மாக்களை (ஆறு) பற்றின்றி செய்பவனாக இருக்க வேண்டும்)

1. வேதம் கற்பது கற்பிப்பது
2. யாகம் செய்வது செய்விப்பது
3. தானம் வாங்குவது (உடன்) கொடுப்பது

பிராமணன் ஒரு ஞானியைப் போல் வாழ வேண்டும். பிறகு ஞானிக்கும் (வர்ண)பிராமணனுக்கும் என்ன வித்தியாசம்? வர்ண முறைப்படி பிரம்மணீயத்தை தழுவியவனுக்கு கர்மாக்கள் உண்டு. பிராமணன் கர்மாக்களை பற்றற்ற உணர்வுடன் செய்வதால் அவன் ஞானியின் நிலையில் தன்னை இருத்திக்கொள்கிறான். ஞானியோ கர்மாக்கெல்லாம் அப்பாற்பட்டு வேதத்தின் கருப்பொருளின் பரம்பொருளின் அருகாமை நிலையில் நிற்பதால், அவனை கர்மாக்களும் கூட கட்டுப்படுத்துவதில்லை எனக் கொள்ளலாம்
 —
Photo: ஹனுமான் ஒரு வானர வீரர். அதாவது குரங்கின் இயல்பை உடையவர். சுக்ரீவனது வானர சைன்யத்தில் எத்தனையோ குரங்குகள் இருக்க ஹனுமனுக்கு மட்டும் ஏன் அத்துனை ஏற்றம்? ஏன் என்றால் ஹனுமான் தன்னை முழுமையாக இறைவனான ராமபிரானுக்கே அற்பணித்ததால், ராமரின் கட்டளையை மீறி ஹனுமான் மூச்சு கூட விடமாட்டாராம். குரங்கின் இயல்பு கட்டுக்கடங்காமல் அங்கும் இங்குமாக ஓரிடத்தில் தாங்காமல் தாவிக்கொண்டே இருப்பது. ஆனால், ஹனுமான் குரங்கின் இயல்பில் இருந்து மாறி (அங்கும் இங்கும் தாவாமல்) எப்பொழுதும் ராமன் எங்கு உள்ளாரோ அங்கயே இருப்பார். சலனம் இல்லாமல் அந்த ஸ்திரமான தன்மையே குரங்கை ஹனுமனாக ஆக்கியது.

இங்கு ஒரு தத்துவம் ஒளிந்துள்ளது. நம்மிடமும் ஒரு குரங்கு கட்டுப்படாமல் நம்மை துன்புருத்துகிறது. அக்குரங்கை நாம் கட்டுப்படுத்தும் நுணுக்கத்தை மறந்துவிட்டோம். அது என்ன குரங்கு என்று யோசிக்கிறீர்களா? அந்த குரங்கின் பெயர் தான் "மனம்"
நமக்கு கட்டுப்படாமல் சதா அலைந்துகொண்டே இருக்கிறது. சிறு சிறு விஷயங்களைக்கூட பெரிதாக்கி நம் நிம்மதியைக் கெடுக்கிறது. நாம் ராமரை த்யானம் செய்து நம் மனதை கட்டுப்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

"மனம் ஒரு நல்ல வேலைக்காரன் ஆனால் கெட்ட எஜமானனாம்"

இனியாவது மனதை நம்கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்வோமாக...ராம நாமம் எழுதி ..

https://www.facebook.com/simplebank
ஹனுமான் ஒரு வானர வீரர். அதாவது குரங்கின் இயல்பை உடையவர். சுக்ரீவனது வானர சைன்யத்தில் எத்தனையோ குரங்குகள் இருக்க ஹனுமனுக்கு மட்டும் ஏன் அத்துனை ஏற்றம்? ஏன் என்றால் ஹனுமான் தன்னை முழுமையாக இறைவனான ராமபிரானுக்கே அற்பணித்ததால், ராமரின் கட்டளையை மீறி ஹனுமான் மூச்சு கூட விடமாட்டாராம். குரங்கின் இயல்பு கட்டுக்கடங்காமல் அங்கும் இங்குமாக ஓரிடத்தில் தாங்காமல் தாவிக்கொண்டே இருப்பது. ஆனால், ஹனுமான் குரங்கின் இயல்பில் இருந்து மாறி (அங்கும் இங்கும் தாவாமல்) எப்பொழுதும் ராமன் எங்கு உள்ளாரோ அங்கயே இருப்பார். சலனம் இல்லாமல் அந்த ஸ்திரமான தன்மையே குரங்கை ஹனுமனாக ஆக்கியது.

இங்கு ஒரு தத்துவம் ஒளிந்துள்ளது. நம்மிடமும் ஒரு குரங்கு கட்டுப்படாமல் நம்மை துன்புருத்துகிறது. அக்குரங்கை நாம் கட்டுப்படுத்தும் நுணுக்கத்தை மறந்துவிட்டோம். அது என்ன குரங்கு என்று யோசிக்கிறீர்களா? அந்த குரங்கின் பெயர் தான் "மனம்"
நமக்கு கட்டுப்படாமல் சதா அலைந்துகொண்டே இருக்கிறது. சிறு சிறு விஷயங்களைக்கூட பெரிதாக்கி நம் நிம்மதியைக் கெடுக்கிறது. நாம் ராமரை த்யானம் செய்து நம் மனதை கட்டுப்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

"மனம் ஒரு நல்ல வேலைக்காரன் ஆனால் கெட்ட எஜமானனாம்"

இனியாவது மனதை நம்கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்வோமாக...ராம நாமம் எழுதி ..