PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

ஜெய் ஸ்ரீமன் நாராயணா! மங்கலமான ஜய வருடம் வைகாசி மாதம் 26ம் நாள் துவாதசியுடன் ஸ்வாதி நக்ஷத்திரம் கூடிய ப்ரதோஷ நாள் செவ்வாய் கிழமை. இன்று ந்ருஸிம்ஹருக்கு உகந்த நாள். மாலை வேளையில் அருகில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்கு சென்று சிறிது நேரம் நரசிம்மனை தியானித்தால் தொழிலில் ஏற்பட்டிருக்கு தொய்வுகள் விலகும் உத்தியோகத்துக்கு முயற்சிப்போர்க்கு வேலை கிடைக்கும் திருமண தடை அகலும், படிப்பில் அதிக கவணம் செலுத்த முடியும். கீழ்வரும் மூல மந்திரத்தை சொல்லி தியானிக்கவும். ‪#‎உக்ரம்‬ வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் ! ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம் யஹம் !! பெரியாழ்வார் திருமொழியையும் படிக்கலாம். நம்பனே ! நவின் றேத்தவல் லார்கள் நாத னேநர சிங்கம தானாய் உம்பர் கோனுல கேழு மளந்தாய் ! ஊழி யானாய் ! ஆழி முன் னேந்தி ! கம்ப காமகரி கோள்விடுத் தானே காரணா ! கடலை கடந்தேனே ! எம்பிரான் ! என்னை யாளுடைத் தானே ஏழையேனிட ரைக்களையாயே அனைத்து நண்பர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க தென் அஹோபிலத்தில் எழுந்தருளியிருக்கும் ந்ருஸிம்ஹனை ப்ரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment