PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

பணப்பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்

பணப்பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்
ஆற்றலால் தமது இயல்பு பூரணமடைந்திருந்தாலும் எவ்வித வெளித்தோற்ற சஞ்சலங்களாலும் பாதிப்படையாமலும், அன்னை சீதா மகாலட்சுமியின் திவ்யமான அருள்பிரவாகத்தில் திளைத்து, ராமனின் உள்ளம் கவர்ந்த சுந்தரனாகவும் இருக்கும் அனுமனின் மீதமைந்த இந்த மந்திரம் உச்சரிப்பவரின் உள்ளம் உள்ளூர விரும்பும் நல்ல விளைவுகளை தந்தருளும் என்பது நிச்சயமாகும். 

இதை ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையோ, அல்லது வளர்பிறை வியாழக்கிழமையோ ஆரம்பித்துச் செய்யவேண்டும். அனுமனின் சன்னிதியிலோ அல்லது ஒரு அரச மரத்தடியிலோ அமர்ந்து சொல்வது மிக நல்ல பலன்களைத் தரும். 48 முறைகளோ, 108 முறைகளோ உள்ளார்ந்த பக்தியுடன் ஜபித்து வருவதும், அசைவம் தவிர்ப்பதுமே மிக முக்கியமான விதியாகும். வேறு நியதிகள் பெரியதாக இம்முறைக்கு இல்லை.

மந்திரம் கீழ்வருமாறு: 

'ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே 
ஆதி வராஹாய பஞ்ச 
முஹி ஹநுமதே லம்லம் 
லம்லம் ஸகல 
ஸம்பத்கராய ஸ்வாஹா'. 

No comments:

Post a Comment