
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஐப்பசி மாதம் தேய்பிறை அஷ்டமியாகிய இன்று ’பைரவரை’ ராகுகாலத்தில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்ர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும் .. நல்லருள் கிட்டும் .. இலுப்பை .. விளக்கெண்ணெய் .. தேங்காய் எண்ணெய் .. நல்லெண்ணெய் .. பசுநெய் .. இவற்றினை தனித்தனி தீபமாக அகல்விளக்கில் ஏற்றலாம் ..( ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல்) எல்லா சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய் நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார் .. காலையில் ஆலயம் திறந்தவுடனும் .. இரவு அர்த்தாஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யாபூஜாவிதி கூறுகிறது .. தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகுகாலத்தில் பைரவரின் சன்னதிக்கு அஷ்டலட்சுமிகளும் வருகை தருகிறார்கள் .. அவர்கள் பைரவரை வழிபடும்போது நாமும் போய் வழிபாடு செய்தால் .. கோரிக்கை வைத்தால் அடுத்த தேய்பிறை அஷ்டமிக்குள் பணப்பிரச்சினை .. கடன் தீர்ந்துவிடுகிறது .. அல்லது பணவரவு நியாயமான வழியில் அதிகரித்துவிடுகிறது ஆயில்யம் .. சுவாதி .. மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும் .. பதவி உயர்வும் கிட்டும் .. தொழிலில் லாபம் கிட்டும் .. சனி பிரதோஷத்தன்று தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம் ..வசதியில்லாவிட்டால் நெய் தீபமும் சிறந்தது ..பைரவரை வணங்கி தங்களனைவருக்கும் .. வறுமை .. பகைவர்களின் தொல்லைகள் பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் .. தனலாபமும் .. வியாபார முன்னேற்றம் .. பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சி பெற வாழ்த்தி வணங்குகின்றேன் .. “ ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ! ஸ்வான வாஹனாய தீமஹி ! தந்நோ பைரவ ப்ரசோதயாத் !!!
No comments:
Post a Comment