PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
திங்கட்கிழமையாகிய இன்று சோமவார விரதம் வருவதால் ஆலயம் சென்று பரமனை வழிபடல் நன்று .. தங்களனைவரும் 
சகல சௌபாக்கியங்களையும் பெற்று நலமுடன் வாழப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

முன்பு ஒருசமயம் திருக்கயிலாய மலையில் சிவபெருமான் தனியாக அமர்ந்திருக்கச் சுற்றிலும் தேவர்கள் .. முனிவர்கள் ..
சித்தர்கள் .. கந்தர்வர்கள் .. கின்னரர் .. கிம்புருஷர்கள் .. 
அமர்ந்திருந்தனர் .. அந்தநேரத்தில் பார்வதிதேவி அங்கே வந்து பரமனை வணங்கி நின்றார் .. அப்போது பரமன் யாரும் அறியாதபடி தனது ஜடாமுடியை அசைத்துப் பார்த்தார் .. அதில் 
சந்திரன் அமர்ந்திருப்பதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர் .. 

பார்வதிதேவியார் இறைவனிடம் சுவாமி என்ன இது ? 
” தேவியே எனக்கு மிகவும் பிடித்த சோமவார விரதத்தை 
இந்தச்சந்திரன் முறையாகக் கடைப்பிடித்து இந்தப்பேற்றினைப் 
பெற்றுள்ளான் “ என்றார் .. உடனே தேவி சுவாமி அப்படிப்பட்ட சக்திவாய்ந்த விரதத்தை எனக்கும் உபதேசித்து அருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .. பார்வதிதேவியும் .. மற்றவரும் பயன்பெறும் பொருட்டு சோமவார விரதத்தை இறைவன் கூறி அருளினார் .. 

சோமவார தினத்தில் காலையில் வீட்டில் தீபம் ஏற்றிச் சிவனைக் குறித்து விரதம் இருந்து ஒருவேளை சிறிதளவே உணவு எடுத்து .. இரவில் உறங்கி மறுநாள் நீராடி விரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும் .. இப்படியாக விரதம் அனுஷ்டிப்பவர்கள் கயிலை மலையானின் அருள்பெற்று நலம் சேர்ப்பர் .. 

சிவனைப் போற்றுவோம் ! சகலசம்பத்துக்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA ..
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. ' JAI BHOLE NATH ' ..

No comments:

Post a Comment