PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புரட்டாதிமாத திங்கட்கிழமையாகிய இன்றிலிருந்து .. புரட்டாதி அமாவாசைவரையிலான காலம்வரை பதினைந்து நாட்களுக்கு “ மஹாளயபக்ஷாரம்பம் “ .. இன்றிலிருந்து முன்னோர்கள் பூலோகம் வரும் காலம் ஆரம்பமாகிவிட்டது எனலாம் .. இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு 
மிகச்சிறந்ததாகும் .. 

மஹாளயபக்ஷ்காலத்தில் நம்முன்னோர்களை திருப்தி செய்யும்வகையில் தர்ப்பணம் செய்யவேண்டியது அவசியம் .. தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள் .. தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீர்க்கவேண்டும் .. 

புராணங்களில் கருடபுராணம் .. விஷ்ணுபுராணம் .. வராகபுராணம் போன்ற தெய்வீக நூல்களில் மஹாளயபக்ஷ்த்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன ..

அன்னதானம் செய்த கர்ணன் - 
பிணிகளில் கொடுமையானது பசிப்பிணி .. பசிவந்திடப் பத்தும் பறந்துபோகும் என்பார்கள் ..பசியின்கொடுமை பலதானங்கள் செய்த கர்ணனையே வாட்டியது .. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாததுதான் என்று கூறப்பட்டது .. 

கர்ணன் தர்மங்கள் பலசெய்த மாபெரும்வள்ளல் என்றாலும்கூட
தர்மத்துக்கு துணைபோன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால் அவனை அழிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் .. அர்ஜுனன்விட்ட சில அம்புகளால் அவரைக் காயப்படுத்தினவேயொழிய உயிரைப்பறிக்கவில்லை அதற்குக்காரணம் கர்ணன் செய்த தர்மமே !

கர்ணன்செய்த தர்மங்களை தானமாகப்பெற்றுச்சென்றார் கிருஷ்ணர் .. அதற்காக மோட்சம் பெற்றார் ..சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு அவன்செய்த பொன் .. நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித்தரப்பட்டிருந்தது ஆனால் உணவு அங்கே கிடைக்கவில்லை .. இதற்குக் காரணம் தெரியாமல் தவித்தபோது .. தேவர்கள் அவனிடம் கர்ணா நீ பூமியில் இருந்தபோது பொண்ணும் .. மணியுமே தானம் செய்தாய் .. அன்னதானம் செய்யவில்லை எனவே நீ இப்போது பூமிக்குச்செல் .. மஹாளயபக்ஷ்காலம் பிதுர்கள் பூமிக்குச்செல்லும்காலம் .. அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று தர்ப்பணம் செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர் .. இக்காலத்தில் நீ மறைந்திருந்து அன்னதானம் செய்துவா .. பின்பு இங்கு உணவு கிடைக்கும் என்றார் .. இதனையேற்று கர்ணன் பூமிக்கு வந்த காலமே .. ”மஹாளயகாலம் “ ஆனது .. 

நாமும் முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியைப் பெற்று அனைத்து தடைகளையும் வெல்வோமாக .. “ பித்ருதேவோ பவ” ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS ..MAHALAYAPAKSHA WHICH IS ALSO KNOWN AS " PITHRUPAKSHA" WHICH IS GREAT AND ONE SHOULD NOT
THINK OF SKIPPING IT ON ANY COUNT .. THIS PAKSHA HAS IMMENSE VALUES AND GIVES SATISFACTION TO THE PITHURS .. 

DURING THE PAKSHA THE SOULS OF THE PITHRUS WILL DECEND TO EARTH IN THE FORM OF SPIRITS AND WILL BE PRESENT AROUND THIS BIOLOGICAL DECENDANTS TO SEE AND BLESS THEM .. HENCE NITHYA TARPANA IS HIGHLY RECOMMENDED IF POSIBLE .. 
" PITHRU DEVO BAWA " ..

No comments:

Post a Comment