PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA.....PANVEL BALAGANE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மூன்றாம் புரட்டாதிச் சனிக்கிழமையாகிய இன்று சனிதோஷமுள்ளவர்கள் அதன் தாக்கம் குறைய சிவாலயம் சென்று மண்சிட்டிகையில் நல்லெண்ணையிட்டு எள்ளை சிறுபொட்டலமாகக்கட்டி அதனுள்ளே வைத்து தீபமாக ஏற்றி நவக்கிரகங்கள் முன்னால் வைத்து வழிபடலாம் .. 
ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றும் நெய்தீபம் ஏற்றலாம் .. 
இன்றைய நாள் தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி புத்துணர்வுடன் செயலாற்ற சனீஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் காகத்வஜாய வித்மஹே !
கட்கஹஸ்தாய தீமஹி !
தந்நோ சனீஸ்வர ப்ரசோதயாத் !!

ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு எள் கலந்து உணவு வைக்கவேண்டும் .. அதன்பின்பே நாம் மதியம் உண்ணவேண்டும் .. ஏழைகளுக்கும் .. மாற்றுத்திறனாளி .. முதியவர்களுக்கும் முடிந்த உதவிகளைச் செய்யலாம் .. தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது .. விநாயகப்பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணை தீபம் இடுதல் நல்லபலனைக்கொடுக்கும் .. சிவவழிபாடும் சனியின் உக்கிரகத்தைக் குறைக்கும் .. 

கரிநாளில் பைரவரை சிவப்புமலர்களால் அர்ச்சித்தாலும் சனியின் தாக்கம் குறையும் .. சனிபகவான் நீதிமான் .. குற்றங்கள் புரிபவர்களையும் .. தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் .. அகந்தையுடன் .. அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டார் .. சிலசமயங்களில் ஒருபாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும்பொழுது சனி என்னை இந்தநிலைக்கு ஆளாக்கிவிட்டானே என்று புலம்புவதுண்டு .. அது போனஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும் .. ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர் .. 

சனீஸ்வரனைப்போற்றுவோம் ! சகலதோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெறுவோமாக ! .. ” ஓம் சனீஸ்வராய நமஹ “ ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHANIDEV .. 
MAY HE REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH AND GIVE YOU PEACE AND HAPPINESS .. " JAI SHANIDEV "

No comments:

Post a Comment