அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கந்தசஷ்டி நான்காம் நாளாகிய இன்று .. அருள்சுரக்கும் சுப்ரமண்யரைப் பிரார்த்தித்து தங்கள் அனைவருக்கும் இஹ பர சுகங்கள் யாவும் பெற்று .. சகலதுயர் களைந்து மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹா ஸேநாய தீமஹி ! தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !! மக்களின் வாழ்வு நலம்பெறச் சமயம் உதவுகின்றது .. நல்லவர்களைப் பாதுகாக்கவும் .. தீயவர்களை அடக்கவும் .. தர்மத்தை நிலைநாட்டவும் .. யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றார் .. தனு .. கரண .. புவன .. போகங்கள் அனைத்தையும் படைத்தலும் .. காத்தலும் இறைவனது இடையறாத திருவிளையாடல்கள் .. இறைவனை உணர்ந்து .. அவனைச் சரணடைந்தால் அழிவில்லாத பேரின்பம் அடையலாம் என்பது சமயங்கள் காட்டும் பேருண்மை .. இறைவனது திவ்ய அவதாரத்தையும் .. செயலையும் .. யாரொருவர் உள்ளபடி அறிகின்றார்களோ .. அவர்கள் மீண்டும் இறைவனையே அடைந்துவிடுகிறார்கள் .. என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறியுள்ளார் .. கந்தனைப் போற்றுவோம் ! குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவீர்களாக ! ஓம் சரணம் சரணம் சரவணபவ ஓம் ! சரணம் சரணம் ! ஷண்முகா சரணம் !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY YOUR DAY BE FILLED WITH PEACE AND HAPPINESS .. " OM MURUGA "


No comments:

Post a Comment