TODAY 16TH DAY VRADHAM...SWAMYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM.....அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையும் கந்தசஷ்டி ஐந்தாம் நாளுமாகிய இன்று தங்களனைவருக்கும் முருகப்பெருமானின் அருட்கடாக்ஷ்மும் தாங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் எவ்வித தடங்கலுமின்றி வெற்றி பெறவும் .. வேலவனைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹா ஸேநாய தீமஹி ! தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !! கந்தசஷ்டி கவசம் நம்மைத்தீமைகளிலிருந்தும் .. கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது .. இதை அருளியவர் ஸ்ரீதேவராய ஸ்வாமிகள் .. பெரிய முருகபக்தர் .. ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார் .. அவர் மிகவும் எளியமுறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார் .. தினமும் காலையிலும் .. மாலையிலும் பாராயணம் செய்ய முருகனே காட்சிதந்து அருளுவான் .. ஆரம்பமே ‘ சஷ்டியை நோக்க ’ என்று இருக்கிறது .. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கும் அடுத்த ஆறம் நாள் .. ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம் .. கடன் .. விரோதம் .. சத்ரு போன்றவைகளைக் குறிக்கும் .. செவ்வாய் ரோகக்காரகன் இந்த எல்லா தோஷத்தையும் நீக்கும்பெருமான் முருகப்பெருமானே ! அவருக்கு உகந்தத நாள் சஷ்டி .. சஷ்டி என்றால் ஆறு .. முருகனுக்கோ ஆறுமுகங்கள் .. சரவணபவ என்று ஆறு அட்சரம் .. ஆறுபடைவீடுகள் .. ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் .. நாம் அவரது திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது .. வீட்டில் கடன் .. வியாதி .. சத்ருபயம் .. இல்லையென்றாலே அமைதி நிலவும் .. இதைப்படித்தாலே வறுமை ஓடிவிடும் .. நவக்கிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் .. கந்தசஷ்டி கவசம் சொல்லும்போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல்காக்குமாறு பிரார்த்திக்கின்றோம் .. உதாரணமாக ஒருசிலவரிகளைப் பார்ப்போம் .. கதிர்வேல் இரண்டு கண்ணினைக்காக்க .. விதிசெவி இரண்டும் வேலவர் காக்க .. நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க .. பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க .. கன்னம் இரண்டும் கருணைவேல் காக்க .. என் இளம் கழுத்தை இனியவேல் காக்க .. என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்கின்றது .. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது .. இப்படி மூளையின் தனிகவனத்திற்கு வரும்போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது .. சிறு சிறு குறைபாடுகளையும் தாமாகவே சரிசெய்துக்கொள்ள தூண்டுதலாக அமைகின்றது .. கந்தனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் ! ஓம் சரணம் சரணம் சரவணபவ ஓம் ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HIS DIVINE POWER PROTECT YOU FROM ALL THE OBSTACLES AND LEAD YOU TO A HAPPY AND A PROSPEROUS LIFE .. " OM MURUGA "
No comments:
Post a Comment