TODAY OUR VRADHAM 18TH DAY///SWAMIYE SARANAM IYYAPPA...PANVEL BALAGANE SARANAM IYYAPPA..GURUVE SARANAM.....அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. “ அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்ஜே குறி “ கந்தசஷ்டி இறுதிநாளான இன்று .. பாரணைப்பூஜை முடிவுற்றதும் ... மாகேஸ்வரபூஜைசெய்து விரதத்தைப் பூர்த்தி செய்வர் .. சூரசம்ஹாரம் முடிந்து ஏழாம் நாளாகிய இன்று தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது .. அசுரனை எதிர்த்து வெற்றிபெற்றதற்காக இந்திரன் தன்மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார் என்றும் .. மேலும் இவர்களது திருமணம் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளின் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் நடந்தது எனக் கந்தபுராணம் கூறுகின்றது .. நாளை சுவாமி தெய்வானையுடன் வீதிவலம் வருவது மரபாகும் .. அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்து ஊஞ்சலில் காட்சிதருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும் .. ” வேலுண்டு வினைதீர்க்க .. மயிலுண்டு எமைக்காக்க .. ஆறிருதடந்தோள் வாழ்க .. ஆறுமுகம் வாழ்க .. குக்குடம்வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்சை வாழ்க .. மாறிலா வள்ளி வாழ்க .. வாழ்கசேர் அடியார் எல்லாம் “ .. வேலவன் அருளால் நல்வாழ்வு ஆரோக்கியம் .. ஆயுள் .. புகழ் .. செல்வம் என்று அனைத்தும் பெற்று ..நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் வாழ்வில் நிறைந்திட எல்லாம் வல்ல முருகப்பெருமானை மனதாரத் துதிக்கின்றேன் .. சரணம் சரணம் சரவணபவ ஓம் ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HAPPINESS & PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE & STRENGTH .. " OM MURUGA "

No comments:

Post a Comment