
Today our 41st Day Viradham...Mandala Viradham....அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கையில் மகிழ்ச்சிப் பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே ! வணங்குவோருக்கு என்றும் .. எந்நேரமும் .. உதவக்காத்திருக்கும் குணநிதியே ! பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது வாழ்வில் விடிவையும் .. வசந்தத்தையும் .. தந்தருளுமாறு நின்பாதம் பணிகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! எச்செயலையும் நாம் செய்ய ஆரம்பிக்கும் முன் விநாயகரை வணங்கி அவருடைய அருளைவேண்டுகிறோம் .. கணபதியே ஓங்காரஸ்வரூபி ! அவர் விக்னங்களை அகற்றுபவர் .. குழந்தைமுதல் முதியோர்வரை அவரை வணங்கி எல்லா இடையூறுகளையும் களைய பிரார்த்திக்கின்றனர் .. இவர் அன்பே சிவம் ! அருளே சக்தி ! என்று அப்பா .. அம்மாவைச் சுத்திவந்து தாய் தந்தையர்களின் மதிப்பை உலகறியச் செய்தவர் .. உலகில் உள்ள அன்பையெல்லாம் சேர்த்து ஒரு மொத்த உருவமாக்கினார் .. அந்த உருவமே “ பிள்ளையார் “ .. அன்பின் உச்சம் பக்தி .. பக்தியின் உச்சம் சரணாகதி .. சரணாகதியின் உச்சம் நம்பிக்கை .. ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை என்பது மிகவும் அவசியமான ஒன்று .. இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே ! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருபவனே ! தேவர்களுக்கெல்லாம் தேவனே ! கருணைமிக்கவனே ! யானைமுகத்தோனே ! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தைதருபவனே ! எல்லையில்லாத பரம்பொருளே ! விநாயகப்பெருமானே ! உன் திருவடிகளைச் சரணடைந்து நின் அருளை வேண்டுகின்றோம் ! தந்தருள்வாயாக !! “ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY AND MAY THE DIVINE BLESSINGS OF LORD GANAPATHY BRINGS YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES .. " JAI GANESHA "

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment