PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று
செவ்வாய்க்கிழமையும் .. உத்தராயணம் தொடங்கும் தைமாத கிருத்திகை நட்சத்திரமும் கூடிவருவதால் முருகப்பெருமானுக்கு உகந்த தினமுமாகும் .. முருகனாலயம்
சென்று முருகப்பெருமானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றையநாள் தங்களனைவருக்கும் முருகனின் திருவருளும் அருட்கடாக்ஷ்மும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்திட கலியுகவரதனாகிய கார்த்திகேயனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்திஹஸ்தாய தீமஹி !
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

முழுமுதற் கடவுளாக கலியுகக் கந்தப்பெருமான் போற்றப்படுகிறார் .. “ எந்தவினையானாலும் கந்தன் அருள் 
இருந்தால் வந்தவழி ஓடும் “ என்பது ஆன்றோர் வாக்கு .. ஆறுமுகம் சிவாக்னியில் தோன்றியவன் .. ஆகவே 
“ ஆறுமுகமே ! சிவம் ! சிவமே ஆறுமுகம் ! “ எனப்படுகிறது .. 

கந்தனுக்கு பாலூட்டி வளர்த்த ஆறுகார்த்திகைப் பெண்களிடம்
சிவபெருமான் ” கார்த்திகை விரதமிருக்கும் அனைவரின் குறைகளை எல்லாம் போக்கி .. நல்வாழ்வு அளித்து .. இறுதியில் முக்தியும் கொடுப்பேன் “ என்று வரமளித்தார் .. இந்நாளில் முருகனை நினைத்து வேல்மாறல் மகாமந்திரம் 
படிப்பதும் .. சிறப்பான பலன்களைப் பெற்றுத்தரும் .. இது முருகனுக்குரிய சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்று .. 

வெற்றிவேல் ! முருகனுக்கு அரோஹரா ! என்றால் வெற்றிவேலைக்கொண்ட முருகனே ! எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப்போக்கி நற்கதியை அருள்வாயாக ! என்று உரிமையோடு முறையிடுவதாகும் .. 

கந்தனைப் போற்றுவோம் சகல நலன்களையும் பெறுவோமாக !
” ஓம் முருகா “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH .. GOOD HEALTH .. GOOD STRENGTH .. AND HAPPINESS .. " OM MURUGA "

No comments:

Post a Comment