PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...







 SWAMI SARANAM .. WISH YOU ALL A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOUR DAY WILL BE FILLED WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. 
" OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சோமவார விரதமும் வருவதால் 
சிவவழிபாட்டிற்கு உகந்த நாளாகும் .. சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழவும் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிபெறவும் 
பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹா தேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சோமன் என்றால் சந்திரன் என்று பொருள் .. பார்வதியுடன் கூடிய 
சிவபெருமான் என்றும் கூறுவர் .. தன்னுடைய கொடியநோய் 
குணமாக சிவபெருமானை ஆராதனை செய்து நவக்கிரகங்களில் ஒருவராகத்திகழும் பேறுபெற்றான் .. அவனது பெயரால் தோன்றியது தான் சோமவார விரதம் .. திங்கள் கிழமையான இந்நாளில் சோமனாகிய சந்திரன் தன் பெயரால் இந்த விரதம் புகழ்பெற வேண்டும் என சிவபெருமானைப் பிரார்த்தித்தான் ..
பெருமான் வரமருள இந்த விரதம் “ சோமவார விரதமாக “ 
சிறப்பு பெற்றது .. 

பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழ கடைப்பிடிக்கவேண்டிய முக்கியவிரதங்களுள் ஒன்று சோமவார விரதமாகும் .. 
சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதமும் ஒன்று .. சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது .. 

க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றான் .. அவனுக்கு சிவபெருமான் அருள்புரிந்ததுடன் அவனுடைய ஒருகலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகர் என்ற பெயரையும் பெற்றார் .. சந்திரனின் நல்வாழ்வுக்காக சந்திரனின் மனைவி ரோகிணி இந்தவிரதத்தைக் கடைப்பிடித்தாள் .. அன்றுமுதல் பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் .. நோய் நொடிகள் தாக்காதிருக்கவும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கின்றனர் .. 

சிவனைப் போற்றுவோம் ! ஆயுள்விருத்தியும் .. மன அமைதியும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

No comments:

Post a Comment