PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய ஸ்ரீமன் நாராயணனனுக்கு உகந்த நாளாகும் .. 
பெருமாளைப் பிரார்த்தித்து தங்களனைவரும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 

வாசுதேவாய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பார் என்று பொருள்
ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம் மனதில் நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதங்கள்
செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்து விடும் .. 

அஷ்டாக்ஷ்ரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும் .. 
“ ஓம் நமோ நாராயணாய “ .. இதில் 
ஓம் - என்பது ஓரெழுத்தாகவும் .. 
நம - என்பது இரண்டெழுத்தாகவும் ..
நாராயணாய - என்பது ஐந்தெழுத்தாகவும் .. ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து ‘ நாராயண அஷ்டாக்ஷ்ரம் எனப்படும் .. 
இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும் .. எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும் .. தீமைகள் .. துன்பங்கள் தொடராது .. முகவசீகரம் கிடைக்கும் .. எல்லாச் செல்வங்களும் கிட்டும் .. 

காலையில் இதைக் கூறுபவன் - இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான் .. 
மாலையில் கூறுபவன் பகலில் செய்தபாவத்தை நாசம்செய்கிறான் .. 
உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகாபாதகங்கள் ..
உபபாதங்களில் இருந்து விடுபடுகிறான் .. எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தையும் அடைகிறான் .. 
மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை .. 

பிறவித்துன்பத்தினை துடைக்கவல்ல மஹாவிஷ்ணுவைப்
போற்றித்துதித்து துன்பமற்ற வாழ்வை வாழ்வோமாக .. 
“ ஓம் நமோ நாராயணா “ வாழ்க வளமுடனும் ..என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY AND MAY LORD VISHNU SHOWER YOU WITH 
GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. 
" OM NAMO NAARAAYANAA
"

No comments:

Post a Comment