PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamiye Saranam iyyappa....Guruve Saranam

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவரது மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழ்ந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 


நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் -
குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயின எல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும்
பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு
கொண்டேன் நாராயணாவென்னும் நாமம் !! (திருமங்கையாழ்வார் )

பொருள் -
நல்லகுலத்தில் பிறக்கச்செய்வதும் .. செல்வங்களை அள்ளித்தருவதும் .. தன் அடியார்கள் படும் துன்பங்களை எல்லாம் போக்குவதும் .. பெரிய தேவலோகப் பதவிகளைத்
தருவதும் .. இந்த உலகை எல்லாம் ஆளவைப்பதும் .. இன்னும்
வேண்டுவன எல்லாம் தருவதும் .. பெற்றதாயினும் மேலாக
அன்பைப் பொழிவதும் .. முக்தியைக் கொடுக்கக்கூடியதுமான
“ நாராயணா “ என்னும் திருநாமத்தை அறிந்துகொண்டேன் ..

அடியவர்களின் துன்பங்களைக் களைந்து .. பாவங்களைப்போக்கி .. ஓர் குழந்தையைப் போல் நம்மை அரவணைக்கும் திருமாலின் திவ்விய பாதக்கமலங்களில்
சரணடைவோமாக ! ஓம் நமோ நாராயணாய !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. 
MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS AND HAPPINESS IN YOUR LIFE .. " OM NAMO NAARAAYANAAYA "


No comments:

Post a Comment