உன் திருமுகம் கண்டவர்
வேறொரு முகம் காணிலர்
அருளினைச் சொரியும்
கண்கள் அருளுதே
இன்ப ஊற்று 
பொருளினை வேண்டா 
மனம் அடியவர்க்கு
பொருளினை வழங்கிடுதே
கடுகதியாக வந்து 
இடுக்கண் களையுதே
உன் பதமலர் தொழுதவர்
உணர்வார் உன் அருள் 
கொடை தனை
சுடு நெருப்பினில் போடினும்
உனை மறவாதிருப்பரே
நிதம் நிதம் குருவின்
நியமமான பூஜையில்
நிச்சயத்தை கொடுத்து
நிறைவினை தந்திடுவாய்
 



No comments:

Post a Comment