முப்பெரும் சக்திகளில் கிரியா சக்தியாகி திருமுல்லைவாயிலில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள் கொடியிடை நாயகி. அனைத்து செயல்களிலும் துணை புரிந்து நம்முடன் இருந்து நன்மை நோக்கி நம்மை வழிநடத்துபவள் இந்த கிரியா சக்தி. நேரில் நின்று ஆசிர்வதிப்பதைப் போல நம்மை மெய்சிலிர்க்க வைக்கிற கொள்ளை அழகுடன், பரவசத்தில் ஆழ்த்துகிறாள் கொடியிடை அம்மன். சூரியனும், சந்திரனும் வழிபட்ட தலம், நினைத்ததை கொடுக்கிற `காமதேனு’வை வசிஷ்டர் அடைந்த தலம், துர்வாசர் கோபம் நீங்கி சாந்தம் அடைந்த ஊர், அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களுக்கும் பாவ விமோசனம் அளித்த தலம், பிருகு முனிவர் தவம் செய்து ரத்தினங்களை மழையாகப் பெற்ற ஆலயம், சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம், முருகனும் திருமாலும் பூஜித்த தலம் என்று அனைத்து பெருமைகளையும் கொண்ட வடதிருமுல்லைவாயில்.

 





No comments:

Post a Comment