PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று பௌர்ணமித் திதியும் கூடிவருவதால் .. ஆலயம் சென்று அன்னையைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. அன்னையின் அருட்கடாக்ஷ்மும் .. திருவருளும் தங்களனைவரும் பெற்று மகிழ்ச்சியுடனும் .. சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழ வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

பௌர்ணமித் தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர் .. ஸ்ரீசக்கரநாயகியான ஆதிபராசக்தி பதினாறு நித்தியையாக மகர திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன .. 

கிரகங்களின் அதிர்வு பெற்றநாள் பௌர்ணமிநாளாகும் .. ஏழுகிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது அதற்கேற்ப மனிதனின் அறிவு .. புத்தி .. மனம் .. மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன .. 

புதன்கிழமையாகிய இன்று பௌர்ணமி வருவதால் அன்னைக்கு பச்சை பட்டாடை அணிவித்து முல்லை .. மற்றும் நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து .. அதேமலர்களால் 
அர்ச்சனை செய்து .. பால்பாயாசம் .. பழரசங்கள் .. பஞ்சாமிர்தம் நிவேதனமாகப் படைத்து வழிபடவேண்டும் .. அறிவுவளரும் .. கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும் .. ஞாபகசக்தி அதிகரிக்கும் .. 

அன்னையைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி பெறுவோமாக .. “ ஓம் சக்தி ஓம் “ .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI .. MAY SHE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY 
" JAI MATA DI " ..

No comments:

Post a Comment