PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamiye Saranam Iyyappa...Guruve Saranam,,அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளும் .. புதனுக்கே அதிபதியாகிய மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! ” எட்டெழுத்து மந்திரமந்திரத்தின் இனிய பொருள் “ - ” ஓம் நமோ நாராயணாய “ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் ஆழ்ந்த அகன்ற விரிவான பொருளை நம்மால் சிந்திக்க முடியாது என்றாலும் ஓரளவாவது சிந்திக்கும் தகுதியை நமக்கு நாராயணன் தந்துள்ளார் .. இதில் வரும் ‘ ஓம் ‘ என்ற பிரணவம் மூலமந்திரம் என்பது நாம் நாம் அறிவோம் ..வைஷ்ணவ சித்தாந்தபடி .. அ .. உ .. ம் .. என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கை ஒலியே “ ஓம் “ என்பதாகும் .. இதனுள் இருக்கின்ற அகரம் இறைவனையும் .. மகரம் உயிரையும் .. உகரம் படைத்தலையும் காட்டுவதாகும் .. உயிரானது இறைவன் ஒருவனுக்கே அடிமை என்பதை காட்டுவதே மந்திரத்தின் கடைசி பகுதியில் வரும் ‘நம’ என்ற வார்த்தையாகும் .. நம என்ற வார்த்தையில் ந என்ற முதல் எழுத்தில் இல்லை என்ற பொருள் மறைந்திருக்கிறது .. மீதமுள்ள மகரம் உயிரை குறிப்பதாக அறிந்தோம் .. அதாவது இதன் பொருள் நானும் எனக்குரியவன் அல்ல என்பதாகும் .. அப்படி என்றால் நான் யார்க்குரியவன்.. ? .. சந்தேகமே வேண்டாம் நான் நாராயணன் ஒருவனுக்கே அடிமை .. அவனுக்கே நான் தாசானு தாசன் .. இந்த மந்திரத்தில் மீதமுள்ள நாராயணாய என்பது இதைத்தான் சொல்லாமல் சொல்கிறது .. மேலும் இதில் உள்ள நார .. அயன .. ஆய .. என்ற வார்த்தைகளுக்குத் தனித்தனி பொருள் உண்டு .. 1 - நார - என்பது நரனிடம் இருந்து தோன்றிய உயிர்களைக் குறிக்கும் .. 2 - அயன - என்ற சொல் உபாயம் .. பலன் .. ஆதாரம் என்ற பல பொருள்களைத் தருகிறது .. 3 - இவை இரண்டும் சேர்ந்த நாராயண என்ற சொல் உயிர்களுக்கு ஆதாரம் என்ற பொருளைக்காட்டுகிறது .. 4 - கடைசியாக உள்ள ஆய - என்ற பதம் பணி என்ற பொருளைக்கொண்டது .. அதாவது உயிர்கள் எப்போதும் இறைவனின் பணிக்காகவே உரியவைகள் என்பது இதன் அர்த்தமாகும் .. ஆக ஓம் நமோ நாராயணாய என்ற வார்த்தையில் மனிதனின் ஆணவம் அழிகிறது .. ஆண்மை பிறக்கிறது .. ஆன்மநேய ஒருமைப்பாடு ஏற்படுகிறது .. இதனால் தான் பெரியாழ்வார் “ மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி மேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விண்ணகத்தில் மேவவும் ஆமே “ என்று சொல்கிறார் .. அதாவது எட்டெழுத்து மந்திரத்தை மூன்றுமாத்திரை அளவு மூச்சுக்காற்றுடன் உள்ளுக்குள் இழுத்து தியானம் செய்தால் இறைவனாகிய திருமாலின் பரமபதம் கிடைக்கும் என்பது ஆழ்வாரின் அமுதமொழியாகும் . வைஷ்ணவம் வெறுமனே வாழும் நெறியாக மட்டுமல்லாது இறைவனோடு பக்தனைக் கொண்டு சேர்க்கும் நெறியாகவும் இருக்கிறது .. என்று பல பெரியவர்கள் சத்தியவாக்காகச் சொல்வது இதனால்தான் .. எனவே நாமும் ” ஓம் நமோ நாராயணாய “ என்று மீண்டும் .. மீண்டும் சொல்லி அடியவரின் துன்பங்களைக் களைந்து .. பாவங்களைப்போக்கி .. குழந்தைப்போல் அரவணைத்துக் கொள்ளும் திருமாலின் திவ்விய பாதக்கமலங்களை சிக்கெனப்பிடித்து வைகுண்ட இன்பத்தைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA "

No comments:

Post a Comment