PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM...PANVEL BALAGAN PATHAM POTRI POTRI

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று திருப்பதி வெங்கடேஸ்வரரைத் துதித்து தங்களனைவரது குறைகளைக் களைந்து .. அனைத்து நலன்களையும் தந்தருள்வானாக ..
வேங்கடேஸா வாஸீதேவ வாரி !
ஜாஸன் வந்தித ஸ்வாமி புஷ்கரிணீ ! 
வாஸ ஸங்க சக்ர கதாதர ! பீதாம்பர தரோதேவ ! 
கருடாரூட ஸோபித ! விஸ்வாத்மா விஸ்வ ஸோகேஸ ! 
விஜயோ வேங்கடேஸ்வர ! ஏதத் த்வாதஸ நாமானி 
த்ரிஸந்த்யம்ய ! படேந்நர ! 
ஸர்வபாப ! வினிர் முக்தோ ! 
விஷ்ணேஸ் ஸாயுஜ்யம் ஆப்னுயாத் !!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவேங்கடேச சுவாமியின் சன்னதியில் காலையிலும் .. மாலையிலும் இந்த
மந்திர ஸ்லோகத்தை ஜபித்து அருள்பெறுகிறார்கள் .. 
இல்லத்தில் இருந்தபடியே இந்த ஸ்லோகத்தை ஜபித்து நாமும் 
பெருமாளின் அருளைப் பெறுவோமாக ..
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை ? .. 
ஏழேல்பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ..
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு !
நாளும் நடப்பதெல்லாம் நாராயணன் விளையாட்டு !
கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது !
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது !
மால்வண்ணம் திருமகளின் மனம்கவர்ந்தது ! 
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது !!
பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து திருப்பதிமலையில் தங்கினார் .. சத்தியலோகத்தில் இருந்து பிரம்மா பூலோகம் வந்து திருப்பதி ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துகிறார் .. இதற்கு புரட்டாதி நவராத்திரி பிரம்மோற்சவம் என்று பெயர் .. காலை .. மாலை வெவ்வேறு 
அலங்காரத்துடன் திருப்பதியிலுள்ள உற்சவர் மலையப்ப சுவாமி பவனிவருவார் ..
திருப்பதி வெங்கடாஜலபதி மட்டும்தான் தன் திருக்கரத்தை கீழ்நோக்கி காட்டியபடி .. பக்தர்களே ! கலியுகத்தில் உய்வதற்குரிய ஒரேவழி என் திருவடியை பற்றிக்கொள்வது மட்டுமே ! என்று உணர்த்தியபடி இருக்கிறார் .. தன்னை சரணடைந்தவர்களை கையில் அணைத்து ஆதரிப்பதை பெருமாளின் இடதுதொடையில் இருக்கும் இடதுகை உணர்த்துகிறது ..
திருப்பதியை “ வேங்கடம் “ என்கிறோம் .. வேங்கடம் என்றால் 
“ பாவம் பொசுக்கும் இடம் “ என்று பொருள் .. புரட்டாதிமாதத்தில் திருப்பதி பெருமாளை மனதால் நினைத்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம் ..
குறையொன்றுமில்லாத கோவிந்தன் ! வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசன் ! நிறைந்த நல்வாழ்வை அளிப்பான் 
மணிவண்ணா ! மலையப்பா ! வேங்கடேஸா ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU 
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM NAMO NAARAAYANAA " .
.

No comments:

Post a Comment