PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swamiyee saranam iyyappa....guruve saranam...panvel balagan namam potri

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று .. கலியுகவரதனாகிய கார்த்திகேயனுக்குரிய கார்த்திகை விரதமாகும் .. ஆலயம் சென்று முருகப்பெருமானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய பொன்னாளாக மிளிர வாழ்த்துகிறேன் ..கந்தனை வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு அருட்சுடர்கள் சரவணப்பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறின .. அவர்களை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடமும் ஒப்படைத்தார் .. அவர்கள் பாலூட்டி .. சீராட்டி வளர்த்தனர் .. 
பிள்ளைகள் ஆறுபேரையும் காணவந்த அன்னை பார்வதிதேவி 
அவர்களை அணைக்க .. ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள் ..சிவனும் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம் நம் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் “ நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள் .. உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு 
“கார்த்திகேயன் “ என்ற பெயரும் சூட்டி .. கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் “ என்று அருள்புரிந்தார் ..

கந்தனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களும் பெற்று மகிழ்ச்சிகராமாய் வாழ்வோமாக ! ஓம் சரவணபவாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. 
MAY HE SHOWER YOU WITH .. GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM MURUGA " ..

No comments:

Post a Comment