அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
கந்தசஷ்டி ஆறாம்நாளாகிய இன்று முருகப்பெருமான் சூரனை சூரசம்ஹாரம் செய்து தேவர்களைக் காத்த அருட்செயலைக் குறிக்கும் நாளாகும் .. இதனை ‘ சூரன் போர் ‘ என்னும் சமயநிகழ்வுகளாக அனைத்து முருகன் ஆலயங்களிலும் நடைபெறுவது வழக்கம் .. திருத்தணியில் மாத்திரம் நடைபெறுவதில்லை .. அங்கு போருக்குப்பின் அமைதி நிலவுவதாக ஐதீகம் ..
கந்தசஷ்டி ஆறாம்நாளாகிய இன்று முருகப்பெருமான் சூரனை சூரசம்ஹாரம் செய்து தேவர்களைக் காத்த அருட்செயலைக் குறிக்கும் நாளாகும் .. இதனை ‘ சூரன் போர் ‘ என்னும் சமயநிகழ்வுகளாக அனைத்து முருகன் ஆலயங்களிலும் நடைபெறுவது வழக்கம் .. திருத்தணியில் மாத்திரம் நடைபெறுவதில்லை .. அங்கு போருக்குப்பின் அமைதி நிலவுவதாக ஐதீகம் ..
சூரபத்மனின் ஒருபாதி ‘ நான் ‘ என்கின்ற அகங்காரமும் .. மற்றொருபாதி ‘ எனது ‘ என்கின்ற மமகாரமாகவும் அமையப்பெற்றவன் .. சர்வலோகங்களையும் அரசாளும் சர்வவல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து
அதன்மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும் .. 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும் இந்திரஞாலம் எனும் தேரையும் சிவசக்தியால் அன்றி வேறுஒரு சக்தியாலும் அவனை அழிக்கமுடியாது என்னும் வரத்தையும் பெற்றான் ..
அதன்மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும் .. 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும் இந்திரஞாலம் எனும் தேரையும் சிவசக்தியால் அன்றி வேறுஒரு சக்தியாலும் அவனை அழிக்கமுடியாது என்னும் வரத்தையும் பெற்றான் ..
சூரபத்மன் தான்பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்தான் ..
இறைவன் அவர்களைக்காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலான அசுரர்களை அழிக்கும் சக்திபடைத்த ஆறுமுகனை அவதரிக்கச் செய்தார் .. அதன்படிதான் முருகன் திருச்செந்தூரில் எழுந்தருளினார் ..
இறைவன் அவர்களைக்காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலான அசுரர்களை அழிக்கும் சக்திபடைத்த ஆறுமுகனை அவதரிக்கச் செய்தார் .. அதன்படிதான் முருகன் திருச்செந்தூரில் எழுந்தருளினார் ..
சூரபத்மன் ஆணவமலம் கொண்டவன் .. தாரகாசுரன் மாயாமலம் உடையவன் .. சிங்கமுகன் கன்மமலத்தின் வடிவம் ..இவர்களை “ ஞானம் “ என்கின்ற முருகனது வேல் வெல்கிறது .. அதாவது எம்மைப் பீடித்துள்ள ஆணவம் .. கன்மம் .. மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறைசக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இந்நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது ..
சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார் .. பிளவுபட்ட மாமரம் சேவலும் .. மயிலுமாக மாறவும் .. சேவலை கொடியாகவும் .. மயிலை வாகனமாகவும் .. முருகன் ஏற்றுக்கொண்டார் ..
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம் .. வெகுளி .. ஈயாமை
( உலோபம் ) மயக்கம் .. செருக்கு .. பொறாமை ஆகிய அசுரப்பண்புகளை அழித்து .. அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள்பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்தசஷ்டி உணர்த்தும் பெய்ப்பொருளாகும் ..
( உலோபம் ) மயக்கம் .. செருக்கு .. பொறாமை ஆகிய அசுரப்பண்புகளை அழித்து .. அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள்பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்தசஷ்டி உணர்த்தும் பெய்ப்பொருளாகும் ..
முருகனைப் போற்றுவோம் ! சகல சௌபாக்கியங்களையும் பெற்றிடுவோம் ! ஓம் சரணம் சரணம் சரவணபவ ஓம் !
சரணம் சரணம் .. ஷண்முகா சரணம் !!
வாழ்க வளமுடனும் ,.. நலமுடனும் ..
சரணம் சரணம் .. ஷண்முகா சரணம் !!
வாழ்க வளமுடனும் ,.. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH GOOD FORTUNE .. AND HAPPINESS ..
" OM MURUGA " ..
MAY HE SHOWER YOU WITH GOOD FORTUNE .. AND HAPPINESS ..
" OM MURUGA " ..


No comments:
Post a Comment