PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY & A PROSPEROUS TAMIL NEW YEAR & VISHU .. MAY THE SUN RADIATE ALL THE GOODNESS OF LIFE IN THE COMING YEAR & ALWAYS .. " JAI SURYA DEV "SWAMY SARANAM...GURUVE SARANAM

” மதமும் இனமும் மனதினை ஆளாமல்
மனிதமும் புனிதமும் மலையாய் உயரட்டும் !
இடரும் இன்னலும் இனிமேலும் துளிராமல் 
வளரும் வெண்ணிலவாய் வருங்காலம் பிறக்கட்டும் !
செல்வம் பெருகி வருமை தீர
இல்லாமை என்ற நிலையும் மறைய
நல்வினை புரிந்து நன்மை பெற்றிட
வருவாய் சித்திரை தமிழ் புத்தாண்டே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. அனைத்து தமிழ் அன்புள்ளங்களுக்கு
” இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளும் அன்பு மலையாள நட்புகளுக்கு
” இனிய “ விஷுக்கனி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக பிறக்கும் விகாரி வருட சித்திரைத் தமிழ் புத்தாண்டு தங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் .. நோயற்ற வாழ்வும் .. குறைவற்ற செல்வமும் .. நீண்ட ஆயுளும் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றோம் !
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!
சித்திரை மாதம் முதலாம் நாள் ஞாயிற்றுக்கிழமை
(14.04.2019) ”விகாரி வருடம்” புத்தாண்டாக மலர்கிறது
சூரியன் சித்திரை மாதத்தில் மேஷராசியில் சஞ்சரிப்பதையே “ சித்திரை வருடப் பிறப்பு ” என்கின்றனர் ..
தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக் கொண்டச் சுற்றுகளைக்கொண்டது .. பிரபவ - என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி .. அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும் .. மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும் .. இந்த வரிசையில் 33வது ஆண்டின் பெயரே “விகாரி” ஆகும் .. விகாரி என்றால் - எழில்மாறல் ..
ஆண்டுதோறும் ஆறுபருவங்கள் மாறி மாறி வருகின்றன .. அவற்றுள் வசந்தம் பொங்கும் சிறப்பைக் கொண்டதுதான் சித்திரை மாதம் .. இந்த மாதத்தில் இளவேனிற்காலம் இன்பமுடன் எழுகிறது
“ வந்தது வசந்தம் “ என்று அனைவரும் மங்களம் பொங்க குதூகலிக்கும் பொன்னான நாள் சித்திரைத் திங்களின் முதல் நாள் ..
சித்திரை மாதத்தை “ சைத்ர விஷு “ என்றும் கூறுவர் சித்திரை வருஷப்பிறப்பு தினத்தை கேரளமக்கள்
” விஷுக்கனி காணல் “ என்று கொண்டாடுகின்றனர் .. அன்றையதினம் வீட்டிற்கு வருவோருக்கெல்லாம் பணம் கொடுப்பதனை இன்னும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் ..
சித்திரை புத்தாண்டு பிறந்த ஞாயிற்றுக்கிழமையில் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து .. புத்தாடை தரித்து ஆலயம் சென்று தெய்வ வழிபாடு செய்து சூரியனுக்குப் பொங்கல் .. பூஜைகள் செய்து .. குரு .. பெற்றோர் முதலிய பெரியோரை வணங்கி ஆசிபெற்று பந்துமித்திரர்களுடன் அளவளாவி .. அறுசுவை உண்டிகள் அருந்தி .. அரிய தவத்தால் பெற்ற மானிடப்பிறவியில் செயற்பாலானவற்றைச் சிந்தித்து
ஏழை எளியோருக்கு தான தருமங்களைச் செய்து மங்களமாக வாழக்கடவர் ..
“ ஓம் சூர்யாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 2 people, text
Image may contain: 1 person, text

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY " RAM NAVAMI " MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY & YOUR HOME LIGHTEN UP WITH THE DIVINE BLESSINGS OF LORD RAMA ON THIS RAM NAVAMI .. "JAI SHREE RAM "SWAMI SRANAM....GURUVE SARANAM



” நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழுமுண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர்சேனை நீறுபட்டழிய வாகைசூடிய சிலைராமன் தோள்வலி கூறுவார்க்கே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ஸ்ரீராம நவமி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில்
ஸ்ரீராமாவதாரம் பரிபூரண அவதாரமாகும் ..
“ அறமே வாழ்வின் ஆன்மீகஜோதி ! அறத்தை வளர்ப்பதற்கும் .. மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் “ ..
ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமனாக அவதாரம் செய்த புண்ணியமிக்க நன்னாளாகும் .. இந்நாளில் எதற்கும் உதவாத காம.. குரோத மோக .. லோப .. மத மாச்சார்யம் எனும் தீயகுணங்களை விட்டொழித்து அனைவரையும் நேசிக்கும் பண்பும் .. துன்பத்தில் கலங்காத மனதிடத்தையும் .. எடுத்தகாரியங்களில் வெற்றியையும் அருட்கடலாகிய ஸ்ரீராமச்சந்திரன் தங்களனைவருக்கும் தந்தருள்வாராக !
ஓம் தசரதாய வித்மஹே !
சீதாவல்லபாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !!
ராமநவமி .. பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை நவமித் திதியில் அமைகிறது .. ஸ்ரீராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின .. சூரியன் .. குரு .. சனி .. செவ்வாய் .. சுக்கிரன் எனும் ஐந்து கிரகங்களே அவை எனவே ராமஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜைசெய்பவர்களுக்கு ஜாதகரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷங்களும் நீங்கும் .. வியாதிகளும் குணமாகும் .. ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை ..
நவமியில் பிறந்த நாயகரான ஸ்ரீராமர் உபதேசம் மூலமாக தன் கொள்கைகளை விளக்காமல் .. “ தானே ஓர் உதாரண புருஷராக ” வாழ்ந்து காட்டினார் ..
“ ஓகமாட ஓகபாணமு ! ஓக பத்னி வ்ரதுடே “ என்கிறது தியாகையரின் கீர்த்தனை ..
“ ஒருசொல் ! ஒருவில் ! ஒரு இல் “ இதன்படி வாழ்ந்தவரும் ஸ்ரீராமரே ! என நம் தமிழ் அதை நயம்பட உரைக்கிறது ..
ஸ்ரீராமநவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி .. மகிழ்ச்சி நிலவும்
இதனை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம் .. எல்லா காரியங்களிலும் வெற்றிகிட்டும் ..
“ ஸ்ரீராம ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வமங்கல கார்யானுகூலம்
சந்தம் ஸ்ரீராமசந்ரம் பாலயமாம் “
ராமன் நாமத்தை தினமும் சொல்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் பொங்கி பெருகும் ..
ராம நாமமானது அஷ்டாட்சரமான
ஓம் நமோ நாராயணாய என்பதில் உள்ள - “ ரா “ என்ற எழுத்தையும் ..
பஞ்சாட்சரமான நமசிவாய என்ற எழுத்தில் - “ ம “ என்ற எழுத்தையும் சேர்த்து .. “ ராம “ என்றானது ..
பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராமநாமம் .. நல்லது அனைத்தின் இருப்பிடமும் .. இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும் .. தூய்மையைக்காட்டிலும் தூய்மையானதும் .. மோட்சமார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும் .. சான்றோர்களின் உயிர்நாடியாகவும் விளங்குவது “ ஸ்ரீராம் “ என்னும் தெய்வீக நாமம் ஆகும் ..
“ நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்றயிரண்டெழுத்தினால் “
என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திரமாகிய
“ ராம ” நாமத்தின் மகிமையை விளக்குகிறது ..
ஸ்ரீராமர் புகழை தினமும் ஜபித்தால் ஒருவைரம்போல மனதில் பதித்தால் .. துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும் .. இன்பம் எல்லாம் விரைவில் கூடும் ..
“ ஜெய்ஸ்ரீராம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 4 people, people smiling, people standing

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " ASHOKASHTAMI " TOO .. (TODAY & TOMORROW MORNING) .. THE WORD "ASHOKA" IMPLIES " ONE WITHOUT SORROW " .. WHILE ASHTAMI SIGNIFIES THE ' EIGHT DAY ' IS CELEBRATED AS THE DAY WHEN SORROWS OF LORD RAMA WERE RELIEVED BY THE LORD SHIVA & GODDESS SHAKTI .. GODDESS PARVATI BLESSED HIM & THE FOLLOWING DAY LORD RAM KILLED THE DEMON KING RAVANA .. SO VICTORY IS CELEBRATED WITH IMMENSE ZEAL & ENTHUISIAMS BY TAKING OUT A PROCESSION ON THE " ASHTAMI DAY " OF LORD SHIVA & GODDESS PARVATI .. STAY BLESSED ..SWAMY SARANAM. GURUVE SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் இன்று அஷ்டமித் திதி காலை 10.45க்குமேல் ஆரம்பமாகின்றது .. இதனை “ அசோகாஷ்டமி “ என்றழைப்பார்கள் .. இந்த அஷ்டமி ஸ்ரீராமநவமி அன்றோ அல்லது அதற்கு முதல்நாளாகிய இன்றும் அனுஷ்டிக்கப்படுகின்றது ..
சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வடமொழியில் “அசோகம்” என்று பெயர் .. பங்குனிமாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமித் திதிக்கு துன்பத்தைப்போக்கி இன்பத்தைத்தரும் சக்தி உள்ளது ..
சோகம் என்றால் - துன்பம்
அசோகம் என்றால் - துன்பமில்லாதது ..
அதனால் “ அசோகாஷ்டமி “ என்று பெயர் வந்தது ..
இன்று மருதாணி மரம் இருக்கும் இடத்திற்குச் சென்று அதற்கு தண்ணீர் ஊற்றலாம் .. மூன்றுமுறை வலம்வந்து முற்கள் இல்லாது ஏழுமருதாணி இலைகளைப் பறித்து அதை கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியபின் வாயில்போட்டு மென்று சாப்பிடலாம் ..
“ த்வாம சோக நரா பீஷ்ட மது மாஸ ஸமுத்பவ !
பிபாமி சோக ஸந்தப்போ மாம் அசோகம் ஸதா குரு”
பொருள் -
ஓ ! மர்ஹுதாணி மரமே ! உனக்கு அசோகம் (துன்பத்தைப் போக்குபவன்) எனப் பெயர் அல்லவா ..? .. மது என்னும் வசந்தகாலத்தில் நீ உண்டாகி இருக்கிறாய் .. நான் உனது அருளைப் பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன் .. நீ பலவித துன்பங்களால் சிரமப்படும் எனக்கு எவ்விதமான துன்பமும் அணுகாமல் பாதுகாப்பாயாக ! என்பதே இதன் பொருளாகும் .. இதனால் நோய்களும் .. நோய் ஏற்பட காரணமான பாவமும் விலகும் என்று கூறுகிறது லிங்கபுராணம் ..
ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டாள் .. சோகமாக இருந்த அவளது மனநிலையை அங்கிருந்த மருதாணி மரங்கள் அறிந்து தனது கிளைகளாலும் .. இலைகளாலும் சீதையை துன்பத்திலிருந்து காக்குமாறு இறைவனைப் பிரார்த்தித்தன ..
இறுதியில் சீதாராமர் அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்துகொண்டபின் சீதை இந்த அசோகமரங்களிடம் .. “ உங்களை யார் ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ .. பூஜிக்கிறார்களோ .. உன் இலைகளை சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்தத் துன்பமும் நேராது என்று ஸ்ரீராமரின் அனுமதியுடன் வரமளித்தாள் .. ஆகவேதான் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள் .. எந்தக்கஷ்டமும் அப்பெண்களுக்கு நேராது என்று சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே “ அசோகாஷ்டமி “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: crowd, sky and outdoor

GOOD MORNING DEAR FRIENDS .. WE WISH OUR TELUNGU & KANNADA FRIENDS A VERY HAPPY & A PROSPEROUS " UGADI FESTIVAL " & MAY THIS UGADI BRINGS NEW SPIRIT & NEW BEGINNING .. YUGA MEANS - ERA .. ADI MEANS - THE BEGINNING .. UGADI IS BELIEVED TO BE THE DAY WHEN LORD BRAHMA THE CREATOR IN THE HINDU TRINITY FORMED THE UNIVERSE .. IT IS ALSO THE TIME WINTER IS ON IT'S WAY OUT & SPRINGS ROUND THE CORNER .. GOOD LUCK ! SWAMY SARANAM, GURUVE SARANAMN

 வருஷாதி பிரதிபந்தவேத சஹிதா 
க்ராஹ்யா ரக்ஷ்னாம் பதே
மத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ
ஜென்மா பவத்சா திதி “
( மகா கவி காளிதாசரின் உத்தரகாலாமிருதயம் என்னும் ஜோதிட நூலில் 38ம் பாடல் )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. தெலுங்கு மற்றும் கன்னட அன்புச் சகோதர சகோதரிகளுக்கும் எங்கள்
“ இனிய யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துகளும் “
(யுகாதி சுபக்காஞ்சலு) .. உரித்தாகட்டும் .. புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும் .. ஒற்றுமை உணர்வைத் தூண்டுவதாகவும் அமையவேண்டும் என இந்நாளில் பிரார்த்திப்போமாக!
தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் கொண்டாடும் புத்தாண்டை “யுகாதி என்றும் “உகாதி” என்றும் கூறுவர் மஹாராஷ்டிர மக்கள் இதேநாளை “குடிபட்வா” எனவும் .. சிந்தி மக்கள் “சேதிசந்த்” எனவும் பலவாறாக கோண்டாடுகின்றனர் ..
” யுகத்தின் ஆரம்பம் யுகாதி ” என அழைக்கப்படுகிறது .. ஏனென்றால் சைத்ர மாதத்தின் முதல்நாள் அன்றுதான் பிரம்மதேவன் உலகத்தை படைத்ததாக பிரம்மபுராணம் கூறுகிறது .. மேலும் சைத்ர மாதத்தின் முதல்நாள் வசந்தகாலத்தின் பிறப்பை குறிப்பதால் இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது ..
யுகாதி அன்று எல்லோரும் விடியற்காலையில் எழுந்து எண்ணை ஸ்நானம் செய்து புத்தாடைகள் அணிந்து இறைவழிபாடு செய்வர் .. இன்று அறுசுவௌயுடன் கூடிய (இனிப்பு .. காரம் .. கசப்பு .. உவர்ப்பு .. துவர்ப்பு .. கரிப்பு) பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது .. இதில் வெல்லம் .. வேப்பம்பூ .. மாங்காய் .. புளி .. மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்கின்றனர் .. மனித வாழ்வில் இன்பம் .. துன்பம் .. மகிழ்ச்சி .. துக்கம் முதலிய எல்லாம் கலந்தே இருக்கும் என்பதையும் அதனை பொறுமையோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதனையும் யுகாதி பண்டிகை உணர்த்துகின்றது ..
தமிழ்ப் புத்தாண்டைப் போலவே யுகாதியன்றும் பஞ்சாங்கம் படித்தல் நடைபெறுகிறது .. தெய்வ அனுகூலத்தையும் .. உலகமக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துக் கொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி .. வாரம் .. நட்சத்திரம் .. யோகம் .. கரணம் என்ற ஐந்துவிதமான அங்கங்களைக்கொண்ட மங்களகரமான பஞ்சாங்க படனமாக இது மலர்கிறது ..
குடும்ப ஒற்றுமை ஓங்கவும் யுகாதி நன்னாளில் சபதம் ஏற்று .. புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடுவீர்களாக ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No photo description available.