PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...PANVELBALAGAN PATHAM POTRI


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
செவ்வாய்க்கிழமையும் .. சஷ்டி திதியும் சேர்ந்து வருவது விசேஷம் .. முருகன் ஆலயம் சென்று முருகனைத் தரிசிப்பது அதிவிசேஷம் .. செவ்வாய்க்கு அதிபதியாகிய கலியுகவரதனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. அனைத்து வளங்களும் பெற்று வளமாய் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வ
ர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

“ எந்தவினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்தவழி ஓடும் “ என்பது சான்றோர் வாக்கு .. சஷ்டியில் விரதமிருப்பது உடலையும் .. உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் ஓர் மகத்தான விரதமாகும் ..

இளங்குமரனே ! சிவபெருமானுக்கு குருவாய்வந்த குகனே !
கந்தப்பெருமானே ! சேனாதிபதியே ! வெற்றிவேலவனே ! மயில்வாகனனே ! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே ! அசுரனை அழித்தவனே ! எப்போதும் எமை காத்தருளவேண்டுகிறேன் !

முருகனைப் போற்றுவோம் ! அவனது திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்றிடுவோமாக ! “ ஓம் முருகா “ .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS 
" OM MURUGA " ..

No comments:

Post a Comment