PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamiye Saranam Iyyappa,,,,,,,PanvelBalagan Patham Potri.....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று மாலை 6.10 க்குப் பின் தேய்பிறை அஷ்டமித் திதி ஆரம்பமாகின்றது .. இது காலபைரவரை வணங்குவதற்கு ஏற்ற நேரமாகும் .. கேட்டவரம் அனைத்தும் தங்களனைவருக்கும் கிடைத்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. பைரவரைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் காலத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

பைரவர் சிவனது அம்சம் ஆவார் .. பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர் .. அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள் .. தேய்பிறை .. மற்றும் வளர்பிறை நாட்களில் ஸ்ரீபைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது மரணபயத்தைப் போக்குபவர் .. எமபயத்திலிருந்தும் பக்தர்களைக் காப்பவர் .. 

காலம் தாழ்த்தாது கைகொடுத்து அருள்பாலிக்கும் .. காலபைரவர் வழிபாட்டால் வாழ்வில் நமது கஷ்டங்கள் யாவும் தீரும் என்பது உறுதி .. சனிக்கு குருவாகவும் .. தெய்வமாகவும் விளங்கி .. காலத்தை இயக்குவதால் 
“ காலபைரவர் “ என்று பெயர் பெற்றார் 

ஒரு நிறைவான வாழ்க்கை அமையும் வரை விடாமல் தொடர்ந்து இந்தவழிபாட்டைச் செய்துவாருங்கள் .. பைரவரின் அருட்கடாக்ஷ்ம் பெற்று அஷ்டமா சித்திகளையும் அடைவீர்களாக .. ” ஓம் பைரவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY .. AND LORD BHAIRAVA BLESS YOU WITH HAPPINESS AND GOOD FORTUNE .. " OM BHAIRAVAA " ..

No comments:

Post a Comment