
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..நமது சபரி விரதம் தொடக்கி இன்று முப்பத்துஏழாவது நாள். பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்தும் கிடைக்கப்பெற்று மீண்டும் தன்வாழ்வை சகஜநிலமைக்கு மாற்றிக்கொள்ள மனதைரியத்தையும் .. சக்தியையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்தருளுமாறு விக்னவிநாயகனைப் பிரார்த்திக்கின்றேன் .சுவாமியே சரணம் ஐயப்பா. குருவே சரணம் சரணம் .
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
கையில் மகிழ்ச்சிபொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே!
வணங்குவோர்க்கு என்றும் .. எந்நேரமும் .. வரம்தரகாத்திருக்கும் குணநிதியே ! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே !
உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே !
ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணமுள்ளவனே ! கஜமுகாசுரனை வென்றவனே ! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து அனைவரையும் காத்தருள்வீராக ..
நின்பாதம் பணிகின்றோம் !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANAPATHY ..
OH LORD ! PLEASE BE WITH THEM .. BLESS EACH AND EVERY PERSON AFFECTED BY THIS DISASTER AND SURROUND THEM WITH LOVE .. PROTECTION AND LET THEM KNOW THERE ARE MILLIONS OF US HERE PRAYING FOR THEM AND THEIR LOVED ONES ..
" JAI GANESH "
No comments:
Post a Comment