SWAMI SARANAM...GURUVE SARANAM...OUR VIRDHAM TODAY ENTERED 38TH DAY....GURUSWAMY VIJAYAM ON FRIDAY... .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESHA .. MAY LORD BLESS YOU ALL FOR DOING SERVICES FOR THE NEEDY ONES ..CHENNAI SLOWLY RECOVERING FROM SEVERE RAIN... " JAI GANESHA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் .. உதவிபுரியும் தொண்டு நிறுவனங்களுக்கும் .. சேவைசெய்யும் நல் உள்ளங்களுக்கும் .. மற்றும் அனைத்து மக்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் காத்தருள்வாராக .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! “ விநாயகனே ! வெவ்வினையை வேரறுக்க வல்லான் ! விநாயகனே வேட்கை தணிவிப்பான் ! விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் ! தன்மையினால் கண்ணிற்படுமின் பணிந்து “ பொருள் - நாம்செய்த .. செய்யப்போகின்ற பாவங்கள் அனைத்தும் வேரோடு அறுத்துவிடுவான் .. விநாயகன் வேட்கை தணிவிப்பான் - நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் .. விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் - இந்த உலகமே அவருடைய பேழைவயிற்றுக்குள் அடக்கம் .. விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும் .. சுடர்விட்டு பிரகாசிக்கும் விண்ணான ஆகாயத்திற்கும் .. சலதுக்கும் நாயகன் அதாவது தலைவனாவான் .. விநாயகனை வணங்கினால் அனைத்து வேலைகளும் நன்றாகவே நடக்கும் .. அதான் தன்மையிலே கண்ணிற்படுமின் பணிந்து - ( கனிந்து என்று இந்த இடத்தில் அர்த்தம் காண்கின்றது ) கனிந்து என்றால் விநாயகரின் சக்தியை நாம் நன்றாகத் தெரிந்துகொண்டு .. மனம் கனிந்து என்பதே இதன் அர்த்தம் .. விநாயகனைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் ! “ ஓம் விக்னேஷ்வராய நமஹ “

No comments:

Post a Comment