PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM

 பக்தன் ஆஞ்சநேயருக்கு ஸீதா பிராட்டியார் விருந்து : --

பரம பக்தனான ஆஞ்சநேயனுக்கு விருந்து செய்விக்க வேண்டுமென்று ஒரு நாள் ஸீதாபிராட்டிக்குத் தோன்றியது. குழந்தாய்! இன்றைக்கு உனக்கு என் கையால் சமைத்துப் போடுவேன். நீ இங்கே சாப்பிடு என்றாள் ஜானகி.
ஹனுமானும் மிக ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார். ஸீதை தன் தோழிமார்களுடன் பலவிதமான சாப்பாடுகள் தயார் செய்து வைத்தாள். ஹனுமானும் ஸ்நானம் செய்துவிட்டு த்வாதச நாமம் போட்டுக் கொண்டு ராம ராம என்று ஜபம் செய்து கொண்டே வந்து சாப்பாட்டில் உட்கார்ந்து கொண்டார்.
ஸீதை தன் தோழிமார்களுடன் பரிமாறினாள். ஹனுமானோ போடப் போட சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார். ஸீதையால் பரிமாறி மாளவில்லை. ஸீதை சமைத்த தெல்லாம் தீர்ந்துவிட்டது. ஸீதாபிரட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இனிமேல் பரிமாறுவதற்கு ஒன்றுமில்லை. ஹனுமானோ போடு போடு என்கிறார்.
அந்த ஸமயம் பார்த்து லக்ஷ்மணன் அங்கு வந்தார். ஹனுமானின் பசியடங்க என்ன வழி? தெரியாத்தனமாகச் சாப்பிடக் கூப்பிட்டு விட்டேன் என்றாள் ஸீதை. அடாடா! அவருக்குப் போட்டு கட்டுக் கொள்ளுமா? இந்த சாப்பாட்டிலெல்லாம் அவருக்கு த்ருப்தி வந்துவிடாது என்று சொல்லிவிட்டு, ஒரு துளஸீ தளத்தில் சந்தனத்தால் ராம நாமத்தை எழுதி அவர் இலையில் கொண்டு போட்டார் லக்ஷ்மணன். ஆஞ்சநேயரோ உடனே அதை வாயில் போட்டுக் கொண்டு பெரிய ஏப்பம் விட்டவாறே உடனே எழுந்திருந்து போய்விட்டார்.
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
(இதுவொரு ஹிந்தி கர்ணபரம்பரைக் கதை )