PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swamysaranam.... guruvesaranam....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE POORNIMA DAY TOO .. (CHITHRA POURNAMI) CHITRA POURNAMI IS AN INDIAN FESTIVAL CELEBRATED BY HINDUS ESPECIALLY TAMILS .. IT IS OBSERVED ON THE DAY OF THE FULL MOON IN THE MONTH OF CHITHIRAI OR CHAITRA .. (APRIL OR MAY) THE FESTIVAL IS DEDICATED TO GOD CHITRAGUPTA .. A HINDU DEITY WHO IS BELIEVED TO RECORD THE GOOD & BAD DEEDS DONE BY MEN FOR YAMA .. ON THIS DAY DEVOTEES ASK CHITRAGUPTA TO FORGIVE THEIR SINS MANY DEVOTEES BATHE IN THE SACRED RIVERS TO SYMBOLISE THEIR SINS BEING WASHED AWAY .. FEED THE POOR IS THE BEST FOR ALL .. " JAI SHREE CHITRAGUPTAAYA NAMAHA "



 சித்திரைப் பருவந்தன்னில் உதித்த நற்சித்ரகுப்தன் 
அத்தின அவனை உன்னி அர்ச்சனைக் கடன்களாற்றில் 
சித்தியும் பெறுவர் பாரந்தீருமே ! எமந்தன்னூரில் இத்திறன் அறிந்தேயன்னோன் இரங்குவான் அரங்கள் சொற்றே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சித்ரா பௌர்ணமியாகிய இன்று சீர்மிகு வாழ்வுதனை நமக்கு தந்தருளும் ஸ்ரீசித்ரகுப்தனைத் துதித்து நாம் அறியாமல் செய்தபாவங்கள் மலையளவு இருப்பினும் அதனை கடுகளவாகவும் .. கடுகளவு உள்ள புண்ணியத்தை மலையளவாகவும் கணக்கில் எழுதிக் கொள்ளுமாறும் பிரார்த்திப்போமாக !
ஓம் லேகிறி ஹஸ்தாய வித்மஹே ! 
பத்ரதராய தீமஹி ! 
தந்நோ சித்ர ப்ரசோதயாத் !!
சிறப்புப் பொருந்திய இத்திருநாள் அம்மனுக்கும் உகந்த நாளாகும் .. தாயாரை இழந்த ஆண்கள் அன்னையை நினைத்து தர்ப்பணம் செய்வர் .. (முதலாம் ஆண்டு முடியும்வரை செய்தலாகாது) பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அனுஷ்டிப்பர் ..
சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பௌர்ணமித் திதியில் .. சித்திரை நட்சத்திரமும் கூடிய நன்னாளாகும் .. 
மாதத்தின் பெயரும் .. நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி .. 
சந்திரன் சித்திரையில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில் .. 
சூரியன் உச்சபலம் பெறும் மேஷராசியில் ..
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியாகையால் மிகவும் சிறப்புப் பெறுகின்றது ..
சித்ரா பௌர்ணமியாகிய இன்று அன்னை பார்வதிதேவியின் கைப்பட வரையப்பட்ட சித்திரத்தில் ஈசனின் மூச்சுக்காற்றின்மூலம் உருவாகிய சித்ரகுப்தனை வழிபடுவது சிறப்பாகும் .. ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதிவருகிறார் ..
நமது பாவ - புண்ணியங்களைப் பொறுத்து சித்திரகுப்தனால் எழுதப்படும் கணக்கின் அடிப்படையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் .. துன்பமும் நிகழ்கின்றது அதனால் பாவம் செய்வதை கனவிலும் நினையாமல் இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் எந்தப் பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்து .. 
“ இது ஓர் புண்ணிய ஆத்மா “ என்று சித்திரகுப்தனால் அவரின் கணக்குப் புத்தகத்தில் நம்மைப் பற்றி குறிப்பு எழுதப்பட்டுவிட்டால் அடுத்தப் பிறவியிலும் துன்பநிலை வராது இறைவன் துணையிருப்பார் ..
இன்றைய நாளில் நோட்டுப் புத்தகம் .. பேனா .. பென்சில் முதலிய எழுதப்பயன்படும் பொருட்களையும் .. மற்றும் அன்னதானம் .. விசிறி .. குடை .. பாதணி போன்ற உங்காள் முடிந்த தான தருமங்களை இல்லாதோர்க்கு செய்தால் உங்கள் பாவக்கணக்கிலிருந்து பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் அதிகரிக்கும் .. தர்மதேவதையின் அருட்கடாக்ஷ்ம் கிட்டும் .. நோய் நொடி ஏதுமின்றி எந்த பிறவியும் வளமாகும் .. தங்கள் வாழ்வும் இனிதாகும் ..
“ ஓம் சித்ரகுப்தாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
 Image may contain: 11 people, people standing

GOOD MORNING GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " NARASIMHA JAYANTI " .. NARASIMHA IS THE 4TH INCARNATION OF LORD VISHNU WHO CAN DESTROY YOUR ENEMIES ERADICATE YOU FROM EVIL FORCES & MISFORTUNES & PROTECT YOU FROM DISEASES .. HE IS THE MOST INTENSE & FIERCE OF ALL INCARNATIONS OF LORD VISHNU & IS HAILED AS THE " GREAT PROTECTOR " WHO HAS THE FORM OF LION - MAN WITH A LION FACE & HUMAN - LIKE TORSO .. IT IS BELIEVED THAT PROPITIATING HIM ON HIS BIRTHDAY WITH RITUALS ACCORDING TO THE SCRIPTURES CAN BLESS YOU WITH VICTORY .. PROSPERITY & ABUNDANCE " JAI SHREE NARASIMHAAYA NAMAHA



 பள்ளியிலோதிவந்த சிறுவன் 
வாயிலோ ராயிர நாமம் ! ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக் கொன்று மோர் பொறுப்பிலனாகி 
பிள்ளையாச்சீறி வெகுண்டு தூண் புடைப்பப் 
பிள்ளையெயிற் றனல் விழிப்பேழ்வாய் 
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே “ (பெரியதிருமொழி)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தசித் திதியாகிய இன்று ஸ்ரீநரசிம்மமன் அவதரித்த திருநாளாக வழிபடுதல் சிறப்பு .. இரண்யனை வதம் செய்ய பக்தன் பிரகலாதனின் வாக்கைக் காப்பாற்ற .. தர்மத்தை நிலைநாட்ட .. “ எல்லா பொருட்கள் உள்ளேயும் நானிருக்கின்றேன் “ என்று நமக்கு உணர்த்தவே பகவான் ஸ்ரீநரசிம்மமூர்த்தியாக அவதரித்த திருநாளாகும் .. இந்நாளில் தங்களனைவரது பிரச்சினைகளும் தீர்ந்து .. தங்கள் வேண்டுதல்கள் யாவும் வேண்டியபடியே நிறைவேறிடவும் ஸ்ரீநரசிம்மனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே ! 
தீக்ஷ்ணதம் ஷ்ட்ராய தீமஹி ! 
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !!
திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரெனத் தோன்றிய அவதாரமாகும் .. நரசிம்மரின் வலதுகண்ணில் சூரியனும் .. இடதுகண்ணில் சந்திரனும் .. புருவமத்தியில் அக்னியும் உள்ளன .. 
“ நரசிம்மன் “ என்றால் “ ஒளிப்பிழம்பு “ என்று அர்த்தம்
பிரச்சினைகளை இவரிடம் கொண்டு சென்றால் அதனை ஒத்திப்போடுவதில்லை .. அடுத்தநொடி தீர்ப்பே எழுதப்பட்டுவிடும் .. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும் .. பொருள்புரியாத மொழிகளும் .. விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி உயர்நிலை பெற்றன ..
ஸ்ரீநரசிம்மர் ஹிரண்யனை சம்ஹாரம் செய்திட்டார் என்பது வெளிப்புறப் புராணம் .. ஆனால் அசுரசக்திகள் உலகில் பெருகி .. ஆறாம் அறிவாம் இறைப்பகுத்தறிவு மங்கியபோது .. பரிசுத்தமான தேவகுணங்களும் .. புனிதமான மனிதகுணங்களும் அருகியபோது .. அசுரகுணங்களைச் சீர்திருத்தி ஜீவன்களைக் காத்திட ஸ்ரீநரசிம்மர் தோன்றினார் .. எனவே தீய எண்ணங்கள் யாவுமே அசுரகுணங்களே !
அதாவது கலியுகமனிதன் ஆறாம் அறிவு உடையவனாக இருந்தாலும் அதனைப் பகுத்தறிவாகப் 
(இறை)பிரகாசிக்கச் செய்வதைத்தடுத்து மறைப்பவைகளே வன்முறை அதிகாரம் .. ஆணவம் மமதை .. பகைமை .. குரோதம் .. விரோதம் .. பொறாமை .. லஞ்சம் . போர் போன்ற அதர்மமான அசுரசக்திகளாகும் .. எனவே மனிதன் மனிதனாக ஆறாம் இறைப் பகுத்தறிவுடன் வாழ உதவுவதே ஸ்ரீநரசிம்ம வழிபாடு ..
எனவே தீயகுணங்கள் அகன்று .. மனிதகுணங்கள் நன்கு விருத்தியாகி ஆறாம் அறிவாம் பகுத்தறிவுடன் பிரகாசித்திட ஸ்ரீநரசிம்ம வழிபாடு மிகவும் உதவும் .. ஸ்ரீநரசிம்மனைப் போற்றுவோம் ! அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகள் .. பாவங்களை மனசாட்சிப் பூர்வமாக உணர்ந்து இப்பிறவியிலேயே நீக்குவதற்கான வழிவகைகள் கிட்டிட அருள்புரிவாராக
“ ஓம் ஸ்ரீநரசிம்ஹாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
Image may contain: 2 people


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " PRADOSHAM " TOO .. MAY LORD SHIVA REMOVE ALL THE SINS & SORROWS FROM YOUR LIFE & BRING YOU WITH GREAT JOY INTO THIS GLORIOUS PRESENCE .. " OM NAMASHIVAAYA ! JAI SHREE NANDHI DEV SWAMY SARANAM GURUVE SARANAM"

No automatic alt text available.
Image may contain: indoorImage may contain: indoor
Image may contain: indoor
" சிவமூர்த்தி கவுரிமுக சீர்க்கமலவனமலர்த்தும் நவக்கதிரே ! தட்சமகம் நசித்திட்டோய் நீலகண்டா ! தூக்கியவா ! தொல்பொருளே ! நவநவத்தோய் சிகாரனே ! நமசிவாயனே ! போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சுக்கிரவாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனுக்கு உகந்த பிரதோஷ விரதமும் கூடிவருவது சிறப்பாகும் .. இந்நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. அனைத்து செல்வங்களும் தங்கள் இல்லம் தேடிவர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷம் எனும் இவ்விரதம் சிவமூத்திக்கு உகந்த விரதங்களுள் தலையாயது .. 
வெள்ளி பிரதோஷம் - எதிரிகளின் எதிர்ப்புகள் விலகும் உறவுகள் வளம்படும் .. சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் ..
தோஷம் என்றால் - குற்றமுடையது என்று பொருள் 
அதேநேரம் பிரதோஷம் என்றால் - குற்றமில்லாதது என்று பொருளாகும் .. எனவே குற்றமற்ற இந்த பொழுதில் ஈஸ்வரனை வழிபடுவதால் நம் அனைத்து தோஷங்களும் நீங்கும் .. (மாலை 4.30 - 6.00 மணிவரையுள்ள காலமே பிரதோஷ நேரம்) எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தைப் பெறுவீர்களாக .. மற்றும் தரித்திரம் ஒழியவும் .. அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாக கருதப்படுகிறது ..
நலம்தரும் நந்திதேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு ..
ருத் என்றால் - துக்கம் 
ரன் என்றால் - ஓட்டுபவன் 
ருத்ரன் என்றால் - துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள் .. எனவே பிரதோஷத் தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வரர் வழிபாடு செய்தல் நன்று ..
பிரதோஷ வேளையில் (மாலை - 4.30 - 6.00) சொல்லவேண்டிய ஸ்லோகம் - 
ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக ! 
பிக்ஷூச்ச பிக்ஷூருபச்ச விபனோம்ருது ரவ்யய !!
காலை மாலை இருவேளையும் பாராயணம் செய்து வந்தால் சிவனருள் கிட்டி நினைத்தது நிறைவேறும் .. இம்மையிலும் நன்மை தருவார் நம் பிரதோஷமூர்த்தி !
” ஓம் நமசிவாய ! ஓம் ஸ்ரீநந்தீஸ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

SWAMY SARANAM..GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " AKSHAYA TRITIYA " .. MAY GODDESS MAA LAKSHMI SHOWER YOU WITH GOOD LUCK & SUCCESS WHICH NEVER DIMINISHES .. " JAI MAA LAKSHMI "





” எங்களை வாழவைக்கும் எங்களின் அன்னை நீயே ! 
எங்களின் உயிரில் ஆத்மா என்றிடும் இறைவி நீயே ! 
பொங்கொளி பரப்பும் தாயே ! புனிதமே கோபிகொண்ட 
மங்கள அன்னை நீயே ! மலரடி பணிகின்றோமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. அட்சயதிரிதியை நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. இல்லறங்களில் கிருஹலக்ஷ்மி என்ற கிரஹதேவதையாகவும் .. வாரிவழங்கும் காமதேனுவாகவும் .. சமுத்திரத்தில் தோன்றியவளும் வேள்வியின் நாயகியுமாகிய அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவரது துயர்களைந்து .. அன்னையின் கருணைமிகுந்த பார்வையினால் துன்பத்தை நீக்கி பொருள்மழை பொழிவித்து நல்லாரோக்கியமும் அருளிட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே ! 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
நட்சத்திரங்கள் .. திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவை .. சிலமாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்புண்டு .. அந்த வகையில் சித்திரை மாதம் வரும் அமாவாசைக்கு பிறகுவரும் 3ம் திருதியை திதி “ அட்சய திருதியை “ என போற்றப்படுகிறது ..
“ அட்சயம் “ என்றால் வளர்வது குறையாது என்று பொருள் .. அன்றைய தினத்தில் செய்கின்ற .. ஆரம்பிக்கும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும் .. நல்லபயனைத் தரும் என்பது வேதவாக்கு ..
இந்நாளைப் பற்றி புராணங்களிலும் .. நாடிகளிலும் தர்மசாஸ்திரத்திலும் பலவிஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன .. அவற்றுள் சில -
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால்யநண்பர் குசேலன் .. வறுமையில் வாடுகிறபோது ஸ்ரீகிருஷ்ணரை சந்திக்க முடிவெடுத்து ஒருபிடி அவலை தன் மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார் .. அவரை நன்கு உபசரித்த கிருஷ்ணபகவான் அவர் அன்போடு கொண்டுவந்த அவலை மகிழ்ச்சியுடன் உண்டு அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து “ அட்சயம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தி அனுப்புகிறார் .. அதேகணத்தில் குசேலனின் வீடு மாடமாளிகையாக மாறுகிறது .. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடிகொள்கின்றன ..
மஹாவிஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமனின் பிறந்தநாளாகவும் .. சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிக்ஷை அளித்தநாளாகவும் .. கௌரவர்கள் சபையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது ஸ்ரீகிருஷ்ணர் “ அட்சய “ எனக்கூறி ஆடையை வளரச்செய்து அருள்பாலித்ததும் இந்நாளே ! ஐஸ்வர்யலக்ஷ்மி அவதரித்த நாளும் இன்றே ! சங்கநிதி .. பத்மநிதியை குபேரன் பெற்றநாள் .. மஹாவிஷ்ணுவின் வலமார்பில் மஹாலக்ஷ்மி இடம் பிடித்தநாள் என பலசிறப்புகளைக் கொண்டது இந்நாள்
” பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் “ என்பது ஸ்ரீரமணர் வாக்கு ! இல்லாதோர் .. இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள் .. தர்மங்கள் பலமடங்கு அதிகமாக உதவி செய்தவருக்கே ஏதாவது ஒருவகையில் திரும்பக்கிடைக்கும் .. மேலும் மேலும் தான தருமங்கள் செய்கிற அளவுக்கு வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தித் தரும் ..
இந்நாளில் நாம் செய்யும் தான தருமங்கள் நமக்கு புண்ணியத்தைச் சேர்க்கும் .. இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும் ..
ஏழை நோயாளிகளுக்கு .. சாலையோரம் வசிப்பவர்களுக்கு .. வேஷ்டி .. சேலை .. போர்வை தானம் செய்யலாம் .. கல்விக்கு உதவலாம் .. ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவு .. உடைகள் வழங்கலாம் .. பசு .. நாய் .. பட்சிகளுக்கு உணவளிப்பதன் மூலம் மன அமைதி .. செல்வ வளம் பெருகும் ..

“ மகிழ்வித்து மகிழ் “ என்று சொல்வார்கள் .. எனவே மற்றவர்கள் மகிழும் வகையில் தான தருமங்கள் செய்து பல புண்ணியங்கள் பெற்று .. ஆயுள் .. ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வுதனை பெறுவீர்களாக ! 
“ ஓம் சக்தி ஓம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: 1 person, flower

SWAMY SARANAM... GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE " VARUTHINI EKADASI " WHOEVER OBSERVES A COMPLETE FAST ON THIS SACRED DAY .. HIS SINS COMPLETELY REMOVED & MAKES EVEN AN UNFORTUNATE WOMAN TO A FORTUNATE PERSON .. THE MERIT ONE ACHIEVES BY DONATING FOOD OR MONEY FOR THE POOR WITH LOVE & DEVOTION BESTOWS MATERIAL ENJOYMENT IN THIS LIFE & LIBERATION AFTER THE DEATH OF THIS PRESENT BODY IT SAVES PEOPLE FROM THE MISERIES OF REPEATED REBIRTH .. " OM NAMO NAARAAYANAAYA ! OM HARI OM "




 
” தேடுவாய் உலகத்தையாளும் தேவனின் ஒளிமயமான ஒளி உருவை ! பாடுவாய் ஹரிநாமம் !
ஓதுவாய் கண்ணனின் கீதை இடைவிடா பாவனையால் நல்லோர்மட்டிலே மனத்தை நிறுத்து
செல்வம் உண்டேல் ஏழைக்குதவு ! புலனும் மனமும் ஒழுங்குபட்டால் காண்பாய் உள்ளத்தினுள்ளேயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்
குருவருளும் இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்றைய தேய்பிறை எகாதசியை “ வரூதினி ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. இதனை அனுஷ்டிப்பதால் சகலபாவங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களையும் தங்களனைவருக்கும் தந்தருள்வதாக !
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
குருவார விரதமும் .. ஏகாதசித் திதியும் இணைந்து வரும் இந்நாளில் துளசி .. வில்வம் இரண்டையும் புனிதமான புண்ணிய தீர்த்த நீர் .. அல்லது ஊற்று நீரில் ஊறவைத்து .. மூங்கில்குவளை .. வெள்ளித்தம்ளர் .. சுரைக்குடுவை போன்றவற்றில் நிரப்பி இதனை மட்டுமே அருந்தி விரதமிருந்து பெருமாள் சிவமூர்த்திகள் இரண்டும் உள்ள ஆலயத்தில் பூஜிப்பது மிகவும் விசேஷமானது ..
இன்றைய ஏகாதசி வரூதிணி ஏகாதசி .. சகலபாவங்களையும் நீக்கி மங்களங்களை அருளக்கூடியதும் பிறவிப்பெருங்கடலை கடக்கத் தோணியாக நின்று உதவும் இந்நாளில் செய்யும் தானம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி ஆயிரம் மடங்கு பலனைத் தரும் ..
இவ்வுலகில் அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை எனலாம் .. அன்னதானம் பித்ருக்கள் .. தேவர்கள் .. மனிதர்கள் என அனைவருக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது ..
ஒருவர் அன்புடனும் .. பாசத்துடனும் ஹோம அக்னிவளர்த்து இறை வணக்கத்துடன் மந்திரங்கள் ஒலிக்க அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்ட கன்னியை தகுதியானவருக்கு கன்யாதானம் செய்வதனால் கிட்டும் புண்ணியத்தைக் கணக்கிட சித்ரகுப்தனாலும் இயலாது .. அத்தகைய மேன்மையான கன்யாதான புண்ணியபலனை வரூதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் எளிதில் பெறலாம் ..
“ ஓம் நமோ பகவதே
வாசுதேவாய நமோ நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
Image may contain: 3 people