PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM... GURUVE SARANAM....WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE " SHANI MAHA PRADOSHAM" TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM SINS & ALL THE NEGATIVE FORCES & SHOWER YOU WITH GOOD LUCK GOOD HEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA "


” அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு 
மஃதறிவீர உய்வினை நாடாதிருப்பது முந்தமக் கூனமன்றே ! கைவினைச் செய்தம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்! செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறாதிரு நீலகண்டம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சிவமூர்த்திக்கு உகந்த விரதங்களுள் துன்பத்தை நீக்கி 
இன்பத்தை நல்கும் சனிக்கிழமை மஹாபிரதோஷமாகிய இன்று சிவனைத் துதித்து தங்களனைவரது துன்பங்கள் யாவும் களைந்து பாவங்கள் போக்கி .. ஒளிமயமான வாழ்வுதனை தந்தருளுமாறு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷ வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய சிறப்புமிக்க வழிபாடாகும் .. 
“ தோஷம் “ - என்ற வடமொழிச் சொல்லிற்கு - குற்றம் என்று பொருள் ..
“ பிரதோஷம் “ - என்றால் குற்றமற்றது என்று பொருள் 
குற்றமற்ற இந்தப் பொழுதில் (மாலை 4.30 - 6.00 மணிவரை) ஈசனை வழிபட்டோமேயானால் நாம் செய்த சகலபாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம் ..
பிரதோஷகாலம் சூரிய அஸ்தமனத்தோடு தொடங்குகிறது . இவ்வேளை பரமேஷ்வரனைத் தியானம் செய்வதற்குத் தகுந்த காலமாகும் .. உலகம் ஒடுங்குகிறது .. மனம் எல்லாம் வல்ல ஈஸ்வரனிடம் ஒடுங்க .. அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் .. அதுவே பிரதோஷ மகிமை ..
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும் .. நந்திதேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கூடாக சிவதரிசனம் செய்ய அனைத்து தோஷங்களும் நீங்கி நன்மை உண்டாகும் ..
வில்லைவிட்டு அம்பு சென்றுவிட்டாலும் மந்திர உச்சாரண பலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வதுபோல ஈஸ்வரன் தான் விட்ட சக்தியை எல்லாம் தன் வசப்படுத்திக் கொள்கிறார் .. உலக சக்தி முழுவதும் தன்வசம் ஒடுக்கிக்கொண்டு நர்த்தனம் செய்யும் இவ்வேளையில் ஈசனை பிறையணிந்த பெருமானாகவும் .. ஈஸ்வரியோடும் ..முருகனோடும் சோமஸ்கந்த மூர்த்தியாக தரிசித்து வாழ்வில் சகல நலன்களையும் பெறுவோமாக ..
அலுவலக பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில் 
(மாலை 4.30 - 6.00) ஒருவிநாடியேனும் 
“ஓம் நமசிவாய “ என்று மனதளைலேனும் நினைத்துக்கொள்வீர்களாக . என்றும் ஈசனின் அருள் தங்களனைவருக்கும் கிட்டுவதாக் .
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் . என்றும் நலமுடனு
Image may contain: 1 person


SWAMY SARANAM... GURUVE SARANAM.....WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " VAIKUNTA EKADASHI " .. IT'S AN AUSPICIOUS DAY DEDICATED TO BHAGAWAN SHRI HARI VISHNU .. MAY THE BLESSINGS OF LORD VISHNU SHINE UPON YOU ON THIS DAY & MAY HIS LIGHT GUIDE YOUR PATH & HIS LOVE GRACE YOUR HEART & MAY HIS BLESSINGS STRENGTHEN YOUR SOUL TOO .. " OM HARI OM ! OM NAMO NAARAAYANAAYA "WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " VAIKUNTA EKADASHI " .. IT'S AN AUSPICIOUS DAY DEDICATED TO BHAGAWAN SHRI HARI VISHNU .. MAY THE BLESSINGS OF LORD VISHNU SHINE UPON YOU ON THIS DAY & MAY HIS LIGHT GUIDE YOUR PATH & HIS LOVE GRACE YOUR HEART & MAY HIS BLESSINGS STRENGTHEN YOUR SOUL TOO .. " OM HARI OM ! OM NAMO NAARAAYANAAYA "


" அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா ! நிகர் இல் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே ! 
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே ! புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் பிறவித் துன்பத்தினை துடைக்கவல்ல பரந்தாமனை அருள்மழை பொழியும் “வைகுண்ட ஏகாதசி” நன்னாளாகிய இன்று .. தங்கள் இல்லறம் சிறக்கவும் .. துன்பமற்ற நல்வாழ்வு அமைந்திடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
மார்கழி மாதம் வந்த உடனே திருமாலின் உன்னத கருணையைப் போல் நம் மனதைக் குளிரவைக்க வரும் விரதம் “ வைகுண்ட ஏகாதசி விரதமாகும் “ தேவர்களின் ”உஷக்காலம் ” எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் நமது வாழ்நாளில் ஒருவருடம் தேவ வருஷத்தில் ஒருநாள் ஆகிறது .. 
அதில் தைமுதல் - ஆனிமுடிய உள்ள 6 மாதங்களும் - பகல் என்றும் ..
ஆடிமுதல் - மார்கழி முடிய உள்ள 6 மாதங்களும் - ஒரு இரவு என்றும் கூறுவர் .. 
இரவு காலத்தில் அதிக இருட்டும் .. மழையும் .. பனியும் .. குளிரும் மற்றும் பகல்பொழுது குறைந்தும் காணப்படுகின்றது ..
மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது “உஷக்காலம்” எனும் அதிகாலை 
4.00 மணிமுதல் - 6.00 மணி (பிரம்ம முகூர்த்தத்தில்)
உள்ள கால அளவில் வைகுண்ட வாசல் திறக்கப்படுகின்றது .. அவ்வேளையில் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சியும் .. திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்கள் நிவேதனம் செய்வார்கள் ..
தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை வேளையில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தந்து கருணைமழை பொழியும் நன்னாளே வைகுண்ட ஏகாதசி .. இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் எனும் வடக்குவாசல் வழியாக வருகின்றார் .. (தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார்) இந்நேரத்தையே நாம் சொர்க்கவாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம் ..
அனைத்து ஏகாதசியிலும் விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும் வைகுந்த வாசல் திறக்கும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்றாவது உண்ணா விரதம் இருந்து இரவு கண்விழித்து விரதம் கடைபிடித்தால் மற்ற 24 ஏகாதசி விரத சிறப்புப் பலனும் சேர்ந்து கிட்டும் .. சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கும் ..
இன்றைய நாளில் விஷ்ணுபகவானின் பெருமையைக் கூறும் ஹரிகதைகளைக் கேட்பதும் .. படிப்பதும் சிறந்தது .. பகவானின் நாமத்தை உச்சரித்து நாராயணனின் அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக !
” ஓம் ஹரி ஓம் ! ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: indoor


SWAMY SARANAM.... GURUVE SARANAM...WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD BRIHASPATI .. MAY THE GOD OF WISDOM ENLIGHTEN YOUR LIFE & MIND & RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES TOO .. " JAI SHREE BRIHASPATI DEV "


உத்தமனே ! உயர்ந்தவனே ! தத்துவத்தின் நாயகனே!
சித்தனே ! புத்திரருக்கு அதிபதியே ! பொன்மகனே ! நித்தம் பக்தியுடன் நின்பாதம் பணிவோம் ! ப்ரஹஸ்பதியே ! போற்றி ! போற்றி ! போற்றி !!
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று கிரகங்களுள் தலைமையானவரும் .. மற்ற கிரகங்களால் ஏற்படும் துன்பங்களை தனது பார்வை பலத்தால் போக்குபவராகிய ப்ரஹஸ்பதியைத் துதித்து தங்களனைவரது சகல கிரகதோஷங்களும் நீங்கப்பெற்று .. சுபீட்சமான வாழ்வுதனை பெற்றிட வியாழபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே ! 
க்ருணிஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரயத்யதி தேவதா தேவதா ஸஹித 
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !!
ஒருவரின் அதிர்ஷ்டநிலையின் அளவீட்டை நிர்ணயம் செய்வதும் குருவே ! இதுதவிர பொருளாதார உயர்வு .. பிறர் நம்மை மதிக்கும் நிலை .. புத்தியின் தெளிவு ஆகிய பல்வேறு விஷயங்களில் குருவின் பங்களிப்பு பெருமளவு உண்டு ..
கிரகங்களில் முழுமையான சுபக்கிரகம் குரு .. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார் .. எனவே இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும் .. ஒருவருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்றால் அந்த ராசிக்கு குருபார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே .. 
“ குருபார்க்க கோடிநன்மை “ என்கிறார்கள் .. கோடி என்றால் அளவுகடந்த என்றும் பொருள் உண்டு ..
“ குரு இருக்கும் இடம் பாழ் .. பார்க்கும் இடம் விருத்தி “ என்றும் சொல்வார்கள் .. அதன்படி இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும் .. குருவுக்கு பல்வேறு ஆதிக்கம் உள்ளது .. சமூக அந்தஸ்து .. அரசியல் .. பதவி .. ஆன்மீக ஈடுபாடு 
தர்மகாரியங்கள் .. நற்பணி நிலையங்கள் .. தர்ம ஸ்தாபனங்கள் .. ஆதரவற்றோர் .. முதியோர் இல்லங்கள் அமைத்தல் .. பள்ளி .. கல்லூரி கட்டுதல் .. அறங்காவலர் பதவி .. நீதிபதி .. கவர்னர் போன்ற அரசு உயர்பதவியில் அமர்வதற்கு குருபகவானின் அருட்கடாக்ஷ்ம் தேவை ..
குருபகவானின் அருட்பார்வை கிடைக்க .. 
“ ஓம் பிம சிவய வசி குருதேவாய நமஹ “ என்று 108 முறை சொல்லி வரலாம் .. வியாழக்கிழமைகளில் தூபதீபங்கள் ஏற்றி மஞ்சள் நிற ஆடை அணிவித்து நறுமண மலர்களால் குருபகவானை அர்ச்சிப்பதோடு .. ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வருவோர் வாழ்நாள் முழுவதும் குருகடாக்ஷத்தால் எல்லா நற்பலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்பது நிச்சயம் .. 
“ ஓம் ப்ரஹஸ்பதியே நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
Image may contain: one or more people, people standing and indoor

SWAMY SARANAM.. GURUVE SARANAM WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA "

  


மாதவனே மார்கழி ! 
மார்கழியே மாதவன் !
ஹரியே சரணம் ! 
ஹரனே சரணம் ! 
ஹரிஹர சிவமே சரணம் ! சரணம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த நன்னாளுமாகும் .. பகவானைப் போற்றித் துதித்து இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகத் திகழவும் .. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கிடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
மார்கழி மாத நாட்கள் அனைத்தும் மிகவும் விசேஷமானவை .. நாள்தோறும் சைவ ஆலயங்களிலும் .. வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை .. ஆராதனை நடத்துவர் .. சிவாலயங்களில் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சியும் .. விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும் ..
மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது .. அதனால் இம்மாதம் முழுவதும் பகவானைத் தியானித்து அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதும் நமக்கு சகலசௌபாக்கியங்களையும் அளிக்கின்றது ..
நாம் நமது மனதை தெளிவுபடுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது .. ஸ்ரீமன் நாராயணனின் 12 நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாகக் கருதப்படுகின்றன ..
1 - கேசவா 
2 - நாராயணா 
3 - கோவிந்தா 
4 - மாதவா 
5 - மதுசூதனா 
6 - விஷ்ணு 
7 - த்ரிவிக்ரமா 
8 - வாமனா 
9 - ஸ்ரீதரா 
10 - ரிஷிகேசா 
11 - பத்மநாபா 
12 - தாமோதரா
இதில் முதல் நாமமாக விளங்கும் “கேசவா “ என்பது மாதங்களுக்கு மணிமகுடமான “மார்கழியாக” விளங்குகிறது .. ஆன்மீக மார்க்கத்திற்குச் செல்ல தலையான மாதமாகக் கருதப்படும் இம்மார்கழி மாதத்தை “மார்கசீர்ஷம்” என்பர் .. நாளடைவில் மருகி “மார்கழி” என்றானது ..
இம்மாதத்தில் மாதர்கள் வைகறையில் துயிலெழுந்து வீட்டிற்கு முன்னால் கோலமிட்டு சாணத்தினைப் பிடித்துவைத்து அதன்மீது பூசணிப்பூவை மகுடம் வைத்தாற்போல் அழகுற வைப்பர் .. அதனைச் சுற்றி விதவிதமான வகையில் வண்ண வண்ணப்பூக்களை கண்ணைக்கவரும் வண்ணம் அழகாக அடுக்குவர் .. இவ்வாறு வாயில் முன்புறத்தை அழகுற அலங்கரிக்கும் பழக்கம் பண்டு தொட்டே நிலவி வருகின்றது .. அதற்குக் காரணமான முக்கிய பாரதக்கதையும் உண்டு ..
பாண்டவர்களுக்கும் .. கௌரவர்களுக்கும் போர் நடந்தது மார்கழி மாதமே ! யுத்தத்தில் பாண்டவர்களில் மாண்டவர் சிலர் .. மீண்டவர் பலர் .. பாண்டவர்களின் வீட்டை அடையாலம் கண்டுகொள்வதற்காகவேண்டி வியாசர் வீட்டு வாயிலில் சாணம் இட்டு ஊமத்தம் பூ வைப்பதற்கான ஏற்பாடு செய்தாரம் .. அந்த அடையாளத்தைக் கொண்டு யுத்தகாலத்தில் பாண்டவர் சேனைகளின் வீடுகளை கௌரவர்களின் தாக்குதல் ஏற்படாமல் கண்ணன் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார் .. அன்றுமுதல் இந்தப் பழக்கம் தொடர்ந்து வர ஆரம்பித்தது ..
இந்த மார்கழியில் இறைவனை மனதால் துதித்துப் போற்றுங்கள் .. அனைத்து நலன்களையும் பெறுவீர்களாக .. 
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
Image may contain: 1 person, indoor

SWAMY SARANAM...GURUVE SARANAM....WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & GOOD LUCK .. " OM MURUGA "


” முருகா ! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடித் தாமரைகளையே காணட்டும் !
என் உதடுகள் உந்தன் திருப்புகழை மட்டுமே பாடட்டும்
இரவும் பகலும் என் மனம் உன் பெருமையை மட்டும் சிந்தித்திருக்கட்டும் ! 
இந்த அரிய பெரும் வரத்தை நீ தந்தருளவேண்டும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
செவ்வாய்க் கிழமையாகிய இன்று .. செவ்வாய்க்கே அதிபதியாகிய கந்தப்பெருமானைப் போற்றித் துதித்து மனநலமும் .. உடல்நலமும் நல்லாரோக்கியமாகத் திகழவும் .. கிரகதோஷங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வுதனை பெற்றிடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
வேதங்களே மயிலாகி ஞானவடிவேலனைத் தாங்குவதாக வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது .. 
“ வேலும் மயிலும் “ என்ற தமிழ் மந்திரத்தில் மயில் இடம் பெற்றுள்ளது .. 
“ வேலுண்டு வினையில்லை ! மயிலுண்டு பயமில்லை “ என்பது முருகனடியார்களின் அருள்வாக்கு ..
முருகனை நம்பிக்கையுடன் வணங்கிட புனித கங்கை போன்று ஆறாக அருள்மழை பெய்து அவகுணங்களை அடியோடு அழித்து .. ஞானானந்த பிரகாசத்தில் ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதனை உணர்ந்து 
“ குகமயமாக ! ஸர்வம் குஹமயத் ஜகத் “ என வழிபடல் வேண்டும் ..
முருகனைப் போற்றித் துதிக்க எத்தனையோ கவசங்கள் உள்ளன .. ஆனால் கோடிக்கணக்கான பக்தர்களின் நாவில் விளையாடுவது கந்தசஷ்டி கவசமும் மற்றும் சுப்ரமண்ய கவசமுமாகும் .. இந்த கவசத்தை எந்த அளவுக்கு மனம் உருகி பாராயணம் செய்கின்றோமோ அந்த அளவுக்கு முருகன் திருவருளால் நம் வாழ்வில் எல்லா வளங்களும் கிட்டும் .. நம் உள்ளத்தை கவரும் பண்புடையான் என்பதனை உணர்ந்து அவன் பொற்பாதங்களில் சரணடைவோமாக !
“ ஓம் சரவணபவாய நமஹ் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

POOJA AT SEETHAPATHI SWAMY RESIDENCE...SWAMY SARANAM...GURUVE SARANAM




























 சங்கடமின்றி நான் வாழ்வது பாலகனின் நிழல்
சலியாது நான் துதிப்பேன் சந்ததமும் அவர் கழல்
பங்கமின்றி வந்துதித்த எங்கள் அற்புதக் குரு
பாவங்களை நிவர்த்தி செய்யும் அதிசயக் கரு
பன்வேல் பாலகன் ஆட் கொண்ட முக்திக்குரு

அற்புதங்கள் செய்திடுவார் எங்கள் குரு
அரியணைமேல் ஏற்றிடுவார் பாலகனை தினம்தினம்
சித்துபல செய்திடும் அவர் அலங்காரம்
சீதாபதிசுவாமி இல்லத்திலே கண்டோமே ஐயன் அவன் சிருங்காரம்
சிந்தையிலே(அவர்) உத்தித்துடுமே தினந்தோறும்
சிறியேன் தேடுகின்றேன் அவன் பாதம் தினந்தோறும்
மந்தைகள் கூட்டமானோம் அவரின்றி நாம்
மகத்துவம் அறிந்து சொன்னோம் அய்யனே சரணம் என்று
முந்தய வினையகற்றும் குரு இவர் காண்
முக்திபெற வணங்கிடுவோம் குரு அவர் பாதம்










SWAMY SARANAM IYYAPPA.. MALIGAIPURAM SHANTHA RES POOJA.. GURUVE SARANAM















என்னுக்குள் உயிரான பாலகனே
என் எண்ணத்தில் கலந்திட்ட குருநேசனே
மண்ணக அரசாள வந்த மணிகண்டனே
மாளிகைப்புரம் சாந்தியின் வீட்டில் வந்தமர்ந்த என் நேசனே
அம்பாரியின் மீதமர்ந்து  நீ காட்சி தந்தாய்

அச்சங்கள் போக்கி அமைதி தந்தாய்
குருவின் கைஜோதியிலே நீ வந்தமர்ந்தாய்
சின்முத்திரையோடு நீ காட்சி தந்தாய்
துன்பங்கள் பறந்தோடும் உன் காட்சியினால்
கண்கள் மூடி உனைத் தியானிக்கவே
உள்ளத்தில் நீ உறைந்தருள் செய்வாய்
கன்னத்தில் வழிந்தோடும் சுடுநீரின்
கோடுகள் காயுமுன்பே
அடியேனை கண்டிட நீ வந்திடுவாய்
அடியேன் கைபிடித்து பெரும்பாதை கடத்திடுவாய்
பொன்மனம் கொண்ட என் பாலகனே
எம் மனம் கொள்ளை கொண்ட குருநேசனே
என்றும் எனை நீ காத்து அருள்வாய்