PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS THE LAST DAY OF THE MAHALAYA PAKSHA AND THE DARK FORTNIGHT OF AMAVASYA KNOWN AS THE NEWMOON DAY SPECIALLY SACRED FOR OFFERING OBLATIONS TO THE DEPARTED ANCESTORS .. TARPANAM CAN CHANGE YOUR DESTINY AND IT IS THE MOST EFFECTIVE MEANS FOR HELPING OUR DEPARTED LOVED ONES & ANCESTORS .. WHEN YOU DONATE CLOTHES OR FOOD TO THE POOR AND NEEDY .. IT ELEVATES YOUR SOUL AND HELPS YOU TO RECEIVE GOD'S GRACE & ABUNDANT BLESSINGS OF OUR ANCESTORS TOO .. IT BRINGS RELIEF IN YOUR LIFE ESPECIALLY IN HEALTH .. WEALTH .. ETC .. " OM PITHRUDEVO BAWA


 அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று புரட்டாசி அமாவாசையும் .. மஹாளயபக்ஷ இறுதி நாளுமாகும் .. நமது முன்னோர்களான மூன்றுதலைமுறைக்கும் சேர்த்து தாங்கள் சிரார்த்தம் செய்யும்பொழுது பித்ருதேவதைகளின் பர்பூரண ஆசிகளும் .. சகலவிதமான சௌபாக்கியங்களும் கிட்டுவதோடு துன்பம் அணுகாமல் 
தங்களனைவரும் இன்பமாக வாழ அருள்புரிவார்கள் .. 

புரட்டாசி மாதத்தில் பூமியின் தென்பாகமும் .. சந்திரனின் தென்பாகமும் சூரியனுக்கு நேர்கோட்டில் நிற்கிறது .. விஞ்ஞான ரீதியாக பித்ருக்கள்லோகம் பூமியை சமீபிக்கும் காலம் கணிக்கப்பட்டு மஹாளயபக்ஷமாக வழங்கப்படுகிறது .. 

முன்னோர்கள் இந்த உலகைவிட்டுச்சென்றாலும் .. அடுத்து வேறுபிறவி எடுத்தாலும் நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம்முன்னோர்களுக்கான நன்றியை .. மரியாதையை .. வணக்கத்தை .. கடமையை .. சிரார்த்தம் .. தர்ப்பணம் முதலானவற்றை சடங்காகச் செய்கிறோம் .. பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் நீரும் அர்ப்பணிக்கிறோம் ..

வேறொரு நாட்டில் இருக்கும் நண்பன் அல்லது உறவினருக்கு நாம் அனுப்பும் பணமானது எப்படி அந்தநாட்டில் உள்ள மதிப்பின்படி அவருக்குப் போய்ச் சேருகிறதோ அதேபோல் நாம் இங்கே செய்யும் பித்ருகடன் அவர்கள் எந்த உருவில் இருக்கிறார்களோ அவர்களுக்குரிய முறையில் போய்ச்சேரும் .. 

எந்த ஒருசெல்வத்தை இழந்தாலும் .. வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும் .. அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும் ! அவை நம்மை காக்கும் கவசங்களாகும் .. 

கடக்கமுடியாத காட்டாற்று வெள்ளத்திலும் .. கிடைக்கும் மரக்கலன்போல பித்ருக்களின் ஆசி நமக்கு அமையும் ..
எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும் .. 

பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் .. நாம் அளிக்கும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்குச் சென்று அவர் நம்முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம் .. ஆனால் மஹாளயம் ஆரம்பமாகிய நாள்தொட்டு நம்முன்னோர்களே நம் இல்லம் வந்து நாம் அளிக்கும் தர்ப்பணத்தை நேரடியாக ஏற்றுக்கொள்வார்களாம் ஏழைகளுக்கு கொடுக்கும் அன்னதானமும் அதில் அடங்கும் .. 

எவரொருவருக்குத் தாயில்லையோ .. தந்தையில்லையோ .. பங்காளிகள் .. நண்பர்கள் இல்லையோ இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு நான் அளிக்கும் இந்த எள்ளும் .. தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும் .. யாருமே அனாதையல்ல ! என்று ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப்பிரார்த்தனை செய்யச்
சொல்கிறது நமது சாஸ்திரம் .. இதுதான் இந்துமதத்தின் மஹோன்னதம் ! 

மஹாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தி வாழ்க்கையில் உயர்வீர்களாக ! 
“ ஓம் பித்ருதேவோ பவ “

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF BHAGAWAN BRIHASPATI .. MAY GOD OF WISDOM ENLIGHTEN THE MIND & RELIEVE YOU FROM ALL THE AILMENTS & NEGATIVE FORCES FROM YOUR LIFE .. " JAI SHREE GURUDEV "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இன்நன்னாளில் குருபகவானாகிய ப்ரஹஸ்பதியைத் துதித்து தங்களனைவரது அனைத்து தோஷங்களும் நீங்கி .. குருபகவானின் அருட்கடாக்ஷ்ம் பெற்று செல்வச்செழிப்பு
மேலோங்கவும் .. மனநிம்மதியான வாழ்வு அமைந்திடவும் குருபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் வ்ருஷ்பத்வஜாய வித்மஹே ! 
க்ருணி ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ குரு ப்ரசோதயாத் ! 
அதிதேவதா ! ப்ரயதிதேவதா ஸஹித 
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !! 

குரு ப்ரஹஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும் நவக்கிரகங்களில் ஒருவரும் ஆவார் .. இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார் ..

வியாழக்கிழமைகளில் குருபகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் குருவார விரதமாகும் .. இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள்நிற ஆடை அணிந்து குருவை வணங்குவது சிறப்பு .. நெய்தீபம் ஏறி குருவிற்குரிய வஸ்திரம் .. கொண்டைகடலை தானியம் கொண்டு வழிபடுவது நன்மை தரும் . தன்னை வழிபடுகிறவர்களுக்கு பிறரை வணங்காத உயர்வான பதவியையும் மனமகிழ்ச்சி .. செல்வம் .. ஆரோக்கியம் ஆகியவற்றையும் தந்தருளுவார் .. 

“ குருபார்க்கும் இடம் விருத்தி ! இருக்கும் இடம் பாழ் “ என்பார்கள் .. குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் .. குருபார்வை நீச்சமடைந்தோர் அவருக்கு சாந்தியும் .. பூஜையும் செய்வது நலம் .. 

” ப்ரஹஸ்பதி த்யானம்தப்த காஞ்சனவாணாபாம் !
சதுர்புஜமன்விதாம் ! தண்டாக்ஷ் ஸூத்ரஹஸ்தம் ச 
கமண்டலுவரான் விதாம் புஷ்பராகமயாபூஷம் 
விசித்ரமகுடோஜ்வலம் ஸ்வர்ணாஸ்வரத மாரூடம் ! 
பீதத்வஜ ஸுஸோபிதாம் ! மேரோ ப்ரதக்ஷிணம் 
ஸம்யகாசரந்தம் ஸுஸோபனம் ! அபீஷ்டவரதம் தேவம்
ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம் ! ஸர்வ காமார்த்த ஸித்யர்த்தம்
ப்ரணமாமி குரும் ஸதா “ 

பொருள் .. // ..
உருக்கிய தங்கம் போன்ற நிறத்தைக் கொண்டவரே ! நான்கு கரங்கள் உடையவரே ! அந்தக்கரங்களில் தண்டம்
ருத்ராக்ஷ்மாலை .. கமண்டலம் .. வரதமுத்திரை ஆகியவற்றைத் தரித்தவரே ! நமஸ்காரம் !! 
பொன்னாடை அணிந்தவரே ! மஞ்சள் சந்தனம் பூசியவரே!
ஒளிவீசும் விசித்திரமான கிரீடம் அணிந்தவரே ! 
மஞ்சள் வண்ணக்கொடி கட்டப்பட்ட தங்கநிறத்தில் ஜொலிக்கும் குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்ந்திருப்பவரே ! மேருமலையை மிக அழகாக வலம்வருபவரே ! வேண்டிய வரங்களைத் தட்டாமல் அளிப்பவரே ! தேவர்களால் பூஜிக்கப்பட்டவரே ! ப்ரஹஸ்பதி எனும் குருபகவானே ! நம் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி எமை காத்தருள்வீராக !

ஓம் குருவே சரணம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



பாலகனின்  பாதையில் அன்பெனும் பூக்கள்
கண்களை மூடி நடப்பதே சாத்தியம்
குருசுவாமி அவர்  சொல்லொன்றே மந்திரமாய்
பின்பற்றுவதே எம் கடமை
நோய் கொண்டு தாக்கினும் பன்வேல் பாலகனை
மெய்யன்பு கொண்டு தொழுவார்க்கேதும் வரா
காயம் இது பொய்யெனினும் இம் மண்ணுலகில்
நாமெடுத்த பிறப்பறுக்க நாடு அவன்  தாள்
சேமமுடன் சிறப்புற்று வாழ
சீர்மிகு அவன்  பாதம் பற்றி அவன்
நாமமதை உரக்கச் சொல்லி
சுவாமியே சரணம் அய்யப்பா
என்று பாடு  அவன் புகழ்

GURUVE SARANAM,....SWAMIYE SARANAM IYYAPPA....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY AND A DIVINE PRADOSHAM TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL THE EVIL FORCES AND SORROWS .. SINS FROM YOUR LIFE & FULFILL ALL YOUR WISHES TOO .. " OM NAMASHIVAAYA "





எனக்குத் தந்தையாகி
என் பிள்ளைக்கும் தந்தையாகி
நேர் வழி காட்டி நின்ற
சற்குருநாதனே
உன் போல் குரு உண்டோ
நம்பிக்கை நாயகனே
உன்னை நம்பினேன் தூயவனே
ஒரு முறை இடறியறியேன்
உனை ஒரு முறை மறுதலித்தறியேன்
கண்ட நாள் முதலாய் 
கண்ணுக்குள் எமை வைத்துக்
காக்கின்ற சற்குருவே
எண்ணத்தில் தூய்மை
செய்கையில் ஈகை
உள்ளத்தில் தாய்மை
இவை நீ தந்த பரிசு
கன்னத்தில் வழிகின்ற
கண்ணீருன் கதை சொல்லும்
சொர்க்கமோ நரகமோ
இன்பமோ துன்பமோ
துணையென நீ இருந்தால்
துணிவுடன் நானிருப்பேன்



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பதால் மாலைவேளையில் 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷகாலவேளையில் ஆலயம் சென்று சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் தரிசிப்பது சாலச்சிறந்தது .. 

தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் துன்பங்கள் .. பாவங்கள் .. தோஷங்கள் யாவும் களையப்பெற்று நிம்மதியான வாழ்வு
மலர்ந்திட எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை தன்னகத்தேயிருத்தி நம்மை ஈசன் காத்தவேளையே பிரதோஷவேளையாகும் .. ( மாலை 4.30 - 6.00 மணிவரை)
பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்று பொருள் .. குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமேயானால் நாம் செய்த சகலபாவங்களும் 
நீங்கும் என்பது ஐதீகம் .. 

சிவனுக்கு உகந்த விரதங்களுள் முக்கியமானது பிரதோஷமாகும் .. தேய்பிறை .. வளர்பிறை என்ற இருபக்ஷ்ங்களிலும் வரும் அமாவாசை .. பௌர்ணமி இரண்டிற்கும் பிறகுவரும் பதின்மூன்றாம் நாளிலே இப்பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது ..

பிரதோஷகாலங்களில் சிவபெருமான் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார் .. எனவே இக்காலங்களில் ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்வது மிகச்சிறந்த பலன் அளிக்கும் .. “ சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளைத்தரும் .. சிவபுராண பாடல்களை பாடியும் .. எம்பெருமானை வழிபடலாம் .. 

மூலவரின் தீபாராதனையை நந்திதேவரின் இருகொம்புகளுக்கு ஊடாக காண்பது சிறந்தபலனைக் கொடுக்கும் .. சிவபெருமான் நந்திதேவரின் இருகொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம் .. இத்தகைய தரிசனம் சகலபாவங்களையும் போக்கும் .. 

சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் போற்றுவோம் !
வாழ்வில் நலம்பல பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE BLESSINGS OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH THE TREASURE OF HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று தாங்கள் வேண்டும் நலங்களை எல்லாம் வேண்டியவாறே விரும்பிக்கொடுத்தருளும் முருகப்பெருமானைத் துதித்து 
இக பர சுகங்கள் யாவும் பெற்று நலமுடமுடன் வாழ்வீர்களாக ! 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! 

ஞானமே உடலாகவும் .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்னும் முச்சக்திகள் மூன்று கண்களாகவும் 
இப்பெரிய உலகமே ! கோவிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகனே ! 

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரேகாலத்தில் ஒளிவீசுவது போன்ற பேரழகு
வாய்ந்த தெய்வீகவடிவம் கொண்டவன் முருகன் ..
முருகனை வணங்கினால் பலகடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் ஒருங்கே பெறலாம் .. எனவே முருகவழிபாடு மிக்க சிறப்புடையது .. 

முருகனை நம்பிக்கையுடன் வணங்கிட புனிதகங்கைபோன்று ஆறாக அருள்மழைபெய்து அவகுணங்களை அடியோடு அழித்து ஞானானந்த பிரகாசத்தில் ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்ந்து .. “ குஹமயமாக ! ஸர்வம் குஹமயம் ஜகத் “ என வழிபடவேண்டும் .. 

நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் என்று உணர்ந்து முருகனை சரணடைந்தால் அவன் நம்மைக்காப்பான் .. நம்
துன்பத்தை அழிப்பான் ! முருகனை அன்புடன் வழிபட்டு முருகா ! முருகா ! எனக்கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள் .. அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது !

ஓம் சரவணபவாய நமஹ ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



ஞானக் குருவாயிருந்து
நற் சிந்தனை தந்தாய்
 
மோன​ நிலையிலிருந்து
உயிர்களை அன்பு செய்தாய்
 
கானகம் சென்றிலை நீ
 
பன்வேல் தனிலேயிருந்து காத்தாய்
 
வானகம் தந்த அருட்பெருங்கடலே
வையகம் உள்ளவரை உமை வணங்கும்
 
தானமொன்றே உமது தவம்
ஈகையிலே உமைக்கண்டோம்

 
எங்கள் குருநாதனே உங்கள் பொற்பாதம் போற்றி