PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & A DIVINE SHASHTI THITHI TOO .. MAY LORD MURUGA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

” கதம்பமும் முல்லை மல்லி 
கனிவுடன் சூடும் கந்தா ! சதமென ஆயுள் நல்கி 
சகலமும் அருளுவாயே !புதன்திசை நடக்கும் நேரம்
போற்றி நாம் வணங்குகின்றோம் ! 
இதம் தரும் வாழ்வை நல்கி இன்பத்தை வழங்குவாயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டித் திதியாகிய இன்று கந்தப்பெருமானைப் போற்றித் துதித்து மனநலமும் .. உடல்நலமும் .. நல்லாரோக்கியத்துடன் திகழவும் .. வல்வினை நீக்கி வரும்வினைபோக்கி .. செல்வமும் செல்வாக்கும் தங்களனைவருக்கும் தந்தருளும்படி 
கந்தவேலவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி .. 
சஷ்டி என்றால் - ஆறு .. 
 முருகனுக்கு முகங்கள் - ஆறு 
முருகனின் படைவீடுகள் - ஆறு 
முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு .. 
“ சரவணபவ என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து
ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம் .. கடன் .. ரோகம் .. சத்ரு போன்றவற்றைக் குறிக்கும் .. இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே !
“இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை 
அறுவேறு வகையில் அஞ்சுவரமண்டி 
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ் இணர்
மாமுதல் தடித்த மறு இல் கொற்றத்து எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்.”
- நக்கீரர் -
பொருள் - மனித உடலும் .. விலங்கின் உடலும் இணைந்து உருவெடுத்த அசுரனாகிய பெரியசூரனை அவன் அஞ்சும் வண்ணம் சென்று ஆறுவேறு வடிவங்கள் தாங்கி நின்று அசுரர்களுடைய கொட்டம் அழியும்படியாக கவிழ்ந்திருக்கும் கொத்துக்களையுடைய மாமரத்தின் வடிவாக அசுரன் உருமாறி நின்றபோது அதன் அடிமரத்தைப் 
பிளந்த குற்றமில்லாத வெற்றியையுடைய அறியமுடியாத பேரறிவையும் .. பெரும் புகழையும் உடைய செவ்வேலையுடைய அழகன் முருகன் ..
சிறப்புவாய்ந்த கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து அறிவு .. செல்வம் .. சந்தானம் .. வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக்கேட்டாலும் கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்திவாய்ந்த கவசமாகும் ..
மனம் உருகி கந்தசஷ்டி கவசத்தை சஷ்டித்திதிகளில் பாராயணம் செய்து முருகனின் அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Image may contain: 6 people, people standing

SWAMIYE SARANM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE PANJAMI THITHI TOO .. MAY GODDESS MAA VARAAHI PROTECT YOU FROM ALL EVIL & NEGATIVE FORCES FROM YOUR LIFE & GUIDE YOU ALONG THE RIGHT PATH FOR A SUCCESSFUL LIFE .. " JAI MAA VARAAHI DEVI "



 ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற 
அரியபச்சை மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு (ம்) மலர்க்கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே வையம் துதிக்க வருவாள் வராஹி மலர்க்கொடியே “ 
(வீரை கவிராசபண்டிதர் - 16ம் நூற்றாண்டு)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
செவ்வாய்க்கிழமையாகிய இன்று அன்னை வராஹி தேவிக்கு உகந்த வளர்பிறை பஞ்ச்மித் திதியும் கூடிவருவது சிறப்பு .. அன்னையைத் துதித்து தங்கள் எண்ணங்கள் யாவும் எண்ணியபடியே ஈடேறவும் .. வாக்குபலிதம் .. மனவலிமை பெற்றிடவும் அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
வராஹி அம்மனின் நாமத்தைக் கேட்டாலே பலருக்கு பயம் வரும் .. அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராஹி ! சப்தகன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் .. இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்குச் சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர் ..
வராஹி பக்தர்களுக்கே பக்கத்துணை .. ஆனால் பகைவருக்கோ பெரு நெருப்பு ! பயம் .. கவலை .. நடுக்கம் .. எதிர்ப்பு என்று நினைத்து நினைத்து கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புத அன்னையே வராஹி !
ஸ்ரீவராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை .. தைரியம் தருவதோடு எதிர்ப்புகள் .. எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ஓர் கவசமுமாகும் .. அபிச்சாரம் எனப்படும் பில்லி .. சூனியம் .. ஏவல்களை நீக்குபவள் .. எதிரிகளின் வாக்கை அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பிதம் செய்பவள் .. வழக்குகளில் வெற்றி தருபவள் ..
மந்திரசாஸ்திரமொழி - ” வராஹிக்காரனோடு வாதாடாதே “ என்பதாகும் ..
ஸ்ரீவராஹி எலும்பின் அதிதேவதை .. இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும் .. வாத .. பித்த .. வியாதிகளும் தீரும் ..
விவசாயம் சம்பந்தமான தொழில்கள் மேம்பாடு அடைய ஏர் கலப்பையும் .. உலக்கையும் ஏந்தியவள் ..
ஸ்ரீவராஹி அம்மனை ஒருமனதோடு தர்மசிந்தனையிலும் வழிபட்டு வாழ்வில் எல்லாவகையிலும் வெற்றி காண்போமாக ! வெற்றி நிச்சயம் ! 
“ ஓம் கருணாசாகரி ! ஸ்ரீமஹாவராஹி ! பத்மபாதம் நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMI SARANAM...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SADURTHI THITHI TOO .. MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "





” உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறி நிறுவி யுறுதியாகத் தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட்பாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு பொழிச்சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஓம் எனும் மூலமந்திரத்திற்கு அதிபதியும் .. பூதகணங்களுக்குத் தலைவனாக விளங்குபவரும் .. இடையூறுகளை இல்லாது செய்பவருமாகிய விக்னவிநாயகரை சதுர்த்தித் திதியாகிய இன்று துதித்து இன்பங்கள் யாவும் தங்கள் இல்லம் வந்து சேரவும் .. அனைத்து துன்பங்களும் தூர விலகி ஓடவும் 
விக்னேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
“ சதுரம் “ என்றால் நான்கு பக்கங்களும் பூர்த்தியாகிய அமைப்பாகும் ... எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் “ சதுர்த்தி விரதம் “ மேற்கொள்ள வேண்டும் ..
விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் .. மற்றும் வெள்ளிக்கிழமையாகும் .. திதிகளில் சதுர்த்தித் திதி உகந்ததாகும் .. அவருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கின்றது ..
1 - மோதகம் - படைப்பதற்கு காரணம் - 
“ மோதும் அகங்கள் “ இருக்கக்கூடாது .. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் .. குடும்பத்தில் சண்டை .. சச்சரவுகள் ஏற்படாமல் இருக்கவே மோதகத்தைப் படைக்கின்றோம் ..
2 - சிதறுதேங்காய் - துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்கவேண்டும் ..
3 - பழங்கள் - கொய்யாப்பழம் என்றாலும் அது மரத்திலிருந்து கொய்தபழம்தான் .. விளாம்பழம் என்றாலும் அது விழுந்த பழம்தான் .. கடினமான ஓட்டிற்குள் இனிய கனியிருக்கும் .. கடினமான உழைப்பிற்குப் பிறகு கனிவான வாழ்க்கை இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றது ..
4 - அவல் - குசேலனை குபேரனாக்கிய பொருளாகும் .. எனவே அவல் .. பொரிகடலை ஆனைமுகனுக்கு கொடுத்து கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை கிட்டும் .. மக்கள்போற்றும் செல்வாக்கும் வந்து சேரும் ..
5 - அருகம்புல் - அருகம்புல் மாலையிட்டு எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபட்டு கொண்டாடினால் சனிபகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இயலும் .. தோப்புக்கரணம் போடுவதால் மூட்டுகள் வலிமை பெற்று ஆரோக்கியத்தை வழங்கும்
எனவேதான் “ வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும் என்றும் .. வெற்றிமுகத்து வேழவனைத் தொழ புத்திமிகுந்து வரும் என்றும் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் ..
சதுர்த்தியாகிய இன்று விநாயகரை பூவணிந்தும் .. பாவணிந்தும் வழிபாடு செய்யுங்கள் .. அகிலம் போற்றும் வாழ்க்கை அமையும் .. 
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
.
Image may contain: one or more people

PANVEL BALAGANE POTRI POTRI....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE THIRUVADIRAI STAR TOO .. MAY LORD SHIVA FULFILL ALL YOUR DESIRES & REMOVE ALL SINS & PAINS & NEGATIVE FORCES FROM YOUR LIFE " OM NAMASHIVAAYA "



கண்ணீர் வழிந்து கன்னத்தில் கோடிடும்
கால்கள் உன் சந்நிதி நாடி வரும்
கைகள் இரண்டுமே கூப்பிய தாமரையாய்
தொழுதேற்றி உனை வணங்க
மனமோ நீ அமர்ந்த மாளிகையாய்
பேருவகை கொண்டு ஆர்ப்பரிக்க
எண்ணம் யாவும் மாலையாய்த் தொடுத்து
பாலகன்  உனக்கே சாற்ற ஆவலாய்
வண்ணம் இல்லா வாழ்க்கையை
வானவில்லாய் மாற்றித் தந்த
எங்கள் குரு பன்வேலில் அமர்திருந்து
உனக்கு தினசரி பூஜை செய்து
உவப்புடன் எமக்கு அளிக்க
அதுவே என் நோய் தீர்க்கும் அருமருந்தாய் இருக்க
உன் கரமோ அடியவர்க்கருளும் சுனையாய் ஊற்றெடுக்க
அடியவர் உன் லீலைகள் கண்டு மகிழ்ந்திருக்க
சபரியோ உன்  அடியவர் கூடும் தலமாய்த் துலங்குதே

swami saranam guruve saranam....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD HANUMAN .. MAY HE BLESS YOU WITH STRENGTH .. ENERGY & MAY HE GIVES YOU ABUNDANT & POWERS TO CONQUER EVIL SPIRITS .. " JAI SHREE RAM ! JAI SHREE HANUMAN


” அசுரர்களை எளிதாக வதம் செய்யும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் உயிருக்கு உயிரான ஆஞ்சநேயரை வணங்குகிறேன் ! கருணை நிறைந்தவரே ! பயத்தைப் போக்குகிறவரே ! பகைவர்களை நாசம் செய்பவரே ! அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவரே ! உமக்கு நமஸ்காரம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
எவ்விதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் தூய அன்புடனும் .. பக்தியுடனும் ஸ்ரீராமனுக்கு தொண்டு செய்த தன்னலமற்ற ஸ்ரீஆஞ்சநேயரை சனிக்கிழமையாகிய இன்று துதித்து தங்களது அனைத்து காரியங்களிலும் வெற்றியும் .. உடல்வலிமை .. நல்லாரோக்கியம் .. வாக்குசாதூர்யம் புகழ் .. மற்றும் அமைதியான வாழ்வும் அமைந்திட வாயுபுத்திரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ! 
ராமதூதாய தீமஹி ! 
தந்நோ அனுமன் ப்ரசோதயாத் !!
புராணங்கள் அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் எனச்சொல்கிறது .. வானரரூபம் பெற்ற அப்சரப் பெண் அஞ்சனை .. வானர வீரர் கேசரியை மணந்து பிள்ளைவரம் வேண்டி தவம் செய்தாள் .. தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் எழுந்த புனிதபாயாசத்தை பருந்து கொத்திக்கொண்டுபோக .. அது நழுவிக்கீழேவிழ .. வாயுபகவான் அதை அஞ்சனையின் விரிந்தகைகளில் விழச்செய்ய அதை உண்டு பிறந்தவர் அனுமான் ..
எதிரிகளிடையே பயத்தை உண்டு பண்ணக்கூடிய சக்தி .
நம்பியவர்கள் பயம்விலகும் பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யாது என்று பிரம்மனும் .. 
கடலைகடக்கும் சக்தியை சிவனும் ..
வஜ்ராயுதத்தைவிட வலிமையான உடல் என இந்திரனும் ..
தண்ணீரில் எந்த ஆபத்துமில்லை என வருணனும் .. நெருப்பு ஒன்றும் செய்யாது என அக்னியும் .. 
நோயற்ற நீண்டவாழ்வை எமனும் .. 
தன்னால் உருவாக்கப்பட்ட எந்த ஆயுதத்தினாலும் சேதமில்லை என விஷ்வகர்மாவும் .. 
திருப்தியான மனதையும் .. மகிழ்ச்சியையும் குபேரனும் .. 
தன்னைவிட வேகமாக செல்லும் வரத்தை வாயுவிடமிருந்தும் பெற்றவர் அஞ்சனை மைந்தன் ..
அனைத்தும் கற்ற சூரியனை தமது குருவாகக் கொண்டவர் .. அவரிடமிருந்து அணிமா .. லஹிமா .. கரிமா சித்திகளைக் கற்றவர் .. ராமபிரானின்மீது கொண்ட அன்பை நம்பாதவர்களுக்கு தன் நெஞ்சைப் பிளந்து காட்டி அதில் ராமரும் சீதையும் கொலுவிருப்பதை காட்டியவர் ..
எந்நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராம தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு தன்னை துதிப்பதைவிட தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும் .. எனவே அனுமனைப் பூஜித்து தங்களால் முடிந்தளவு 
” ஸ்ரீராம் ! ஜெயராம் ! ஜெய ஜெய ராம் “ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள் .. அல்லது கண்மூடி தியானித்து “ ராம் ! ராம் “ என்று சொன்னாலே போதும் அனுமானுக்கு இதைவிட பிரியமானது வேறெதுவுமில்லை ..
சொல்லில் அடங்கா புகழவன் ! சொல்லின் செல்வனைப் போற்றுவோம் ! வாழ்வில் நலம் பல பெறுவோமாக ! ஜெய் ஸ்ரீராம் ! ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
 Image may contain: 1 person

கிடைக்காத பலன்களைக்கூட தரும் குலதெய்வ வழிபாடு! - மகா பெரியவா அறிவுரை

வ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் உண்டு. காலம் காலமாக நம் முன்னோர்களால் வழிபடப் பெற்று வரும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே நாம் அனைத்து சுப காரியங்களையும் தொடங்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் அம்மா எவ்வளவு முக்கியமோ அதேபோல் குலதெய்வ வழிபாடும் முக்கியம். குலதெய்வ வழிபாடு நம் வாழ்க்கையில் எப்போதும் துணை நின்று, பல நன்மைகளை நாம் கேட்காமலேயே அருளும்.
குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி காஞ்சி மகா பெரியவா ஒரு பக்தருக்கு உணர்த்திய சம்பவத்தை இங்கே பார்ப்போம்.
ஒருமுறை மகா பெரியவா யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவர் முகாமிட்டிருந்தபோது, ஒரு பக்தர் அவரை தரிசிக்க வந்திருந்தார். மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட பக்தரின் முகத்தைப் பார்த்ததுமே மகா பெரியவா அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்டார்.
"என்னப்பா சொல்லு, என்ன பிரச்னை உனக்கு?'' என்று கேட்டார் மகா பெரியவா.
பெரியவா கேட்ட மறுகணமே விவசாயியின் கண்ணில் இருந்து சாரைசாரையாகக் கண்ணீர் கொட்டியது.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் அந்த விவசாயி.
''சாமி, வாழ்க்கையில நான் எதைத் தொட்டாலும் பிரச்னையில் போய் முடியுது. விவசாயமும் சரி இல்ல, குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்னைகள் சாமி. இதை எல்லாம் போக்க நீங்கதான் ஒரு வழி சொல்லனும் " என்றார் கவலையோடு.
அதற்கு மகா பெரியவா "குலதெய்வக் கோயிலுக்கெல்லாம் அடிக்கடி போய் வர்றியா, பூஜை, புனஸ்காரங்கள் எல்லாம் சரியா செய்றியா" என்று கேட்டார்.
விவசாயியோ "என்ன சாமி சொல்றீங்க? குலதெய்வக் கோயில் எங்க இருக்குன்னே எனக்குத் தெரியாது" என்றார் பரிதாபமாக.
மேலும் "எங்க முன்னோர்கள் எல்லாம் பர்மாலதான் இருந்தாங்க. அங்க இருந்து எங்க குடும்பம் மட்டும்தான் இங்க திரும்பி வந்தோம். எங்க பாட்டனார் ஒருத்தருக்கு இந்த சாமி நம்பிக்கை எல்லாம் இல்லை. அவருக்கு அப்புறம் வந்தவங்களும் அப்படியே இருந்துட்டாங்க. ஏதோ எங்க தலைமுறையிலதான் கோயில், கடவுள்னு கொஞ்சம் போயிட்டு இருக்கோம் சாமி" என்றார்.
"வீட்டுல வேற பெரியவங்க யாருமே இல்லையா?" என்றார் மகா பெரியவா.
மகாப் பெரியவா
"சாமி, எங்க பாட்டனார் ஒருவர் இன்னும் உயிரோடத்தான் இருக்கார்'' என்றார் விவசாயி.
" சரி, நீ போயி அவர்கிட்ட கேட்டு குலதெய்வத்த வழிபடுப்பா" என்றார் மகா பெரியவா.
''சாமி, எவ்வளவோ சாமி இருக்கு. அதையெல்லாம் கும்பிடாம எங்க இருக்குன்னே தெரியாத குலசாமியைத் தேடிப் புடிச்சு கும்பிடனுமா" என்றார் விவசாயி.
மகா பெரியவா, " பாத்திரத்துல அடிப்பக்கம் இல்லாம நீ அதுல எவ்வளவு தண்ணி புடிச்சாலும் பாத்திரத்துல ஒரு சொட்டு தண்ணி கூட நிக்கப் போறது இல்ல. அந்த மாதிரிதான் நீ எத்தனை தெய்வத்த கும்பிட்டாலும், குலதெய்வ வழிபாடு இல்லைன்னா, எந்த பலனும் உனக்கு கிடைக்கப் போறது இல்லை. அதுக்கு என்ன காரணம்னு உனக்கு நான் அப்புறமாச் சொல்றேன் முதல்ல நான் சொல்றதச் செய் " என்று சொல்லி பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.
அந்த பக்தரும் மலை அடிவாரத்துல, புதர் மண்டிக் கிடந்த இடத்தில் அவரோட குலதெய்வமான பேச்சாயிய கண்டுபுடிச்சு, வணங்கிட்டு மகா பெரியவாளை தரிசிக்க வந்தார்.
நடந்ததை எல்லாம் மகா பெரியவாகிட்ட சொன்னார்.
அதைக் கேட்ட மகா பெரியவா, "அந்தக் கோயிலை அப்படியே விட்டுடாத, நல்லா சீரும் சிறப்புமா அங்க ஒரு கோயிலைக் கட்டு. உனக்கு எந்தக் கஷ்டமும் வராது. பேச்சாயிதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் இனி எல்லாம். பேச்சாயி மனசு குளிர்ந்தா உன் வாழ்க்கை ஒளிரும்னு" சொல்லி அனுப்பி வைத்தார்.
ஒரு வருடம் ஆனது, ஒரு தட்டில் பூ, பழம், பணம் என்று செல்வச் செழிப்போடு மகா பெரியவாளைப் பார்க்க வந்தார் அந்த விவசாயி.
"சாமி, இப்ப நான் சந்தோஷமா இருக்கேன். உங்க வழிகாட்டல்தான் என்னோட இந்த நிலைமைக்கு காரணம். பேச்சாயி புண்ணியத்துல ரொம்ப செல்வச் செழிப்போட இருக்கேன் சாமி" என்றவர் தொடர்ந்து,
''சாமி, எப்படி சாமி என் வாழ்க்கையில இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுச்சு? அந்த ரகசியத்த மட்டும் கொஞ்சம் சொல்லுங்க சாமி'' என்றார் ஆவலோடு.

மகா பெரியவா திருவாய் மலர்ந்தார். " நம் முன்னோர்கள் வணங்கிய தெய்வம்தான் நம் குலதெய்வம். முன்னோர்கள் என்றால், நம் தந்தை வழி முன்னோர்களையே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 'கோத்திரம்' என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப்பாதை இதுவே. பெரும்பாலும் நம் பாட்டிகள் வேறு கோத்திரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அதனால் ஆண்வழியாகவே குலதெய்வம் அறியப்படுகிறது. இந்த ரிஷி பரம்பரை ஒரு சங்கிலித் தொடர் போல அறுபடாமல் இருக்கும்.
எனவே குலதெய்வத்தை வணங்கும்போது மற்ற எல்லா கோயில்களுக்குச் சென்று வழிபட்டும் கிடைக்காத பலன்கள் கிட்டும். பக்தி என்னும் ஒன்று உருவாவதற்கு முன்பே குலதெய்வத்தை வணங்கியிருப்போம். குலதெய்வக் கோயிலில் நாம் நிற்கும்போது, நம் பரம்பரையின் வரிசையில் நிற்பதாக அர்த்தம். இந்தத் தொடர்பை வேறு எப்படியும் உருவாக்கிட முடியாது" என்றார்.
தொடர்ந்து, ''மேலும் ஒரு குடும்பத்துக்கு இறைசக்தியானது குலதெய்வவடிவில்தான் கிடைக்கவேண்டும் என்று வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வேறு, நாம் வேறு அல்ல. எனவே அவர்களைத் தொழும்போது பித்ருக்களாக விண்ணில் இருந்து நம்மைப் பார்ப்பார்கள், ஆசிர்வதிப்பார்கள். நாமும் நலமுடன் வாழலாம் " என்று குலதெய்வத்தின் மேன்மையைச் சொல்ல, விவசாயி மட்டும் அல்லாமல் வந்திருந்த அனைவரும் குலதெய்வ வழிபாட்டின் மேன்மையை உணர்ந்து கொண்டனர்.
மகாப் பெரியவர்

PANVEL BALAGAN SARAN POTRI...GURUVIN PATHARA VINDHANGALE POTRI POTRI..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA LAKSHMI .. MAY SHE GUIDES YOU FROM DARKNESS INTO THE LIGHT BY ELEVATES YOU TO A HIGHER STATE OF BEING AND LIVING .. " JAI MATA DI "




” எத்தனை ஜென்மங்கள் கடந்தேனே ! 
இன்னும் எத்தனை ஜென்மத்தைக் கடப்பேனோ !
எத்தனை ஆனாலும் எமக்கென்ன மனக்கவலை ..?
ஸ்ரீமஹாலக்ஷ்மி நீயிருக்க ! ஏழுகோடி ஜென்மமும் சுகமே ! ஏழேழு கோடியும் வரமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களகரமான வெள்ளிக்கிழமையாகிய இன்று அலைமகளாம் மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவரது இல்லங்களிலும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் என்றும் குறையாது நீக்கமற நிறைந்திருக்க அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !!
மூன்றுவேதங்களின் ஸ்வரூபிணியும் .. மூவுலகத்துக்கு தாயுமான மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரங்களினால் துதிப்பவர்கள் இவ்வுலகில் எல்லாக் குணங்களாலும் நிறைந்தவர்களாகவும் .. மிகுந்த பாக்கியசாலிகளாகவும் .. புத்தி .. சக்தி உள்ளவர்களாகவும் ஆகின்றனர் ..
ஸ்ரீமஹாலக்ஷ்மிதேவியை ஐஸ்வர்யத்தின் வடிவாகவழிபட்டு அஷ்ட ஐஸ்வர்யங்கள் என்கிற எட்டுவாழ்க்கை நலன்களையும் பெறலாம் .. 
“ செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன் “ என்று பாரதியார் தன் பாடலில் திருமகளைப் போற்றிப்பாடியுள்ளார் .. அஷ்டலக்ஷ்மியும் .. நவநிதியும் பெற்று பத்துத்திக்கும் வசமாகி வளமுடன் வாழ செல்வத்திருமகள் அருள்பொழிகிறாள் .. என்றும் எங்கும் தன் அருட்பார்வையால் வீசும் அன்னை மஹாலக்ஷ்மியான ஸ்ரீதேவியே அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தேவதை ..
உலகிலுள்ள அனைத்து செல்வங்களும் மஹாலக்ஷ்மியின் வடிவங்களே ஆகும் .. அவளே விளைபொடுட்களில் - தான்யலக்ஷ்மியாகவும் .. 
வீரர்களிடம் - தைரியலக்ஷ்மியாகவும் ..
பசுக்கூட்டத்தில் - கோலக்ஷ்மியாகவும் திகழ்வதாகக் கூறுவர் ..
“ நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே !
ஸங்கசக்கரகதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே “
பொருள் - மஹாமாயையும் ஸ்ரீபீடத்தில் வசிப்பவளும் .. தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கு .. சக்கரம் .. அதை ஆகியவற்றை ஏந்தியவளுமான மஹாலக்ஷ்மி தேவியே ! உன்னை வணங்குகிறேன் “
உள்ளம் உருக அன்னையைப் போற்றித் துதித்து தங்கள் உள்ளத்திலும் .. இல்லத்திலும் குடியேறி நீங்காதிருந்து வளம் பெருக வரம் தந்தருள்வாளாக !
“ ஓம் மஹாலக்ஷ்மியே ! நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
 Image may contain: 1 person

SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS - WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. " OM MURUGA "



” கார்த்திகை பாலனே ! கார்த்திகேயனே !
அழகிய வள்ளி நேசா !பெருமைகள் வழங்கி நாளும்
பிறர் போற்றும் வாழ்க்கை ஏற்க குருதிசை நடக்கும் நேரம் குமரனை வணங்குகின்றோம் ! திருவருள் தருவதோடு செல்வாக்கும் அருளுவாயே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்
குருவாரமும் .. கிருத்திகை நட்சத்திரமும் கூடிய இந்நாளில் முருகப்பெருமானைத் துதித்து தங்கள் இன்னல்கள் யாவும் களைந்து .. கல்வியில் சிறந்து விளங்கவும் .. குறைவற்ற செல்வம் மற்றும் நல்லாரோக்கியமும் பெற்றிடவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!

அமாவாசைத் திதியுமாகிய இன்று மறைந்த நம் முன்னோர்களை நினைந்து பிதுர்தர்ப்பணம் செய்வது சாலச்சிறந்தது ..
மாதாமாதம் வரும் கார்த்திகையை மாதக் கார்த்திகை மற்றும் கிருத்திகை விரதம் .. நட்சத்திர விரதம் என்றும் அழைப்பார்கள் .. இந்நாளில் விரதம் இருப்பவர்களுக்கு குறைகள் நீங்கி நல்வாழ்வும் .. முக்தியும் கிடைக்கப்பெறும் என்று சிவபெருமானே அருளியுள்ளார் ..
வேதகாலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்துள்ளது .. இது ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும் .. கிருத்திகை அக்னியின் நட்சத்திரம் என்றும் அதுவே நட்சத்திரங்களுக்குள் முகம் போன்றது என்றும் வேதம் கூறுகிறது .. மற்ற நட்சத்திரங்கள் ஒன்று .. இரண்டு .. மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமாகும் .. ஆனால் கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானும் .. அவன் வம்ச பரம்பரையினரும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் ..
இவ்வளவு பெருமை வாய்ந்தது கிருத்திகை நட்சத்திரம் என்றாலும் இதற்கு முதன்மை தரப்பட்டதற்கும் ஒருகாரணம் உண்டு ,.. இந்த கிருத்திகைகள் கிழக்கு திசைகளிலிருந்து விலகிச் செல்வதில்லை .. மற்றவைகளோ கிழக்கிலிருந்து விலகிச்செல்கின்றன ..
எனவே வேதகாலத்தில் காலநிர்ணயம் செய்வதற்குக் கிருத்திகை மூலகாரணமாக உள்ளது ..

“ வாயாரப்பாடி ! மனதார நினைத்து
வணங்கிடவே ! எந்தன் வாழ்நாளின் இன்பம்! தூயமுருகா ! மாயோன் மருகா ! உன்னைத் தொழுவ தொன்றே இங்கு யான்பெற்ற இன்பம் ..
” ஓம் சரவணபவாய நமஹ் “
வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும்

PANVEL BALAGAN POTRI POTRI...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & A DIVINE MONTHLY SHIVARATRI TOO . MAY THE GLORY OF LORD SHIVA UPLIFT YOUR SOUL & MAY PEACE & HAPPINESS SURROUND YOU WITH HIS ETERNAL LOVE & STRENGTH .. " OM NAMASHIVAAYA "


” வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி ! 
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி !
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ! 
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி ! 
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ! 
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி ! 
கயிலைமலையானே போற்றி ! போற்றி “ 
(திருநாவிக்கரசர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையும் தேய்பிறை சதுர்த்தசித் திதியுமாகிய இன்று சர்வேஸ்வரனுக்கு உகந்த மாதசிவராத்திரியும் கூடிவருவது சிறப்பே ! இந்நாளில் சிவனைப் பணிவோம் ! சீரான வாழ்வும் .. செல்வ வளமும் தங்களனைவருக்கும் தந்தருள்வானாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பாவவினைகளால் உண்டான பிணி .. தடை .. தோஷம் பாவங்கள் .. கர்மவினைகள் .. மரணபயம் .. எமபயம் போன்றவை நீங்கிட விரதங்கள் .. வழிபாடுகள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது .. அந்தவகையில் சிவனுக்கு உகந்த சிவராத்திரி மிக முக்கிய விரதநாளாகும் ..
பஞ்சராத்திரிகள் - சிவனுக்குரிய ராத்திரிகள் -
நித்ய சிவராத்திரி 
பட்ச சிவராத்திரி 
மாத சிவராத்திரி 
யோக சிவராத்திரி 
மஹாசிவராத்திரி 
என ஐந்துவகைப்படும் .. மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பாள் சிவனை வணங்கி பூஜித்ததால் மஹாசிவராத்திரி என பெயர் பெற்றது ..
அகில உலகமும் பெருங்கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக்காலத்தில் சகல ஜீவராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன .. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க 
” ஓம் “ என்னும் பிரணவத்தை நல்வீணையில் வாசித்துக்கொண்டு இருப்பார் .. இதை அப்பர்பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார் ..
“ பெருங்கடல் மூடிப் பிரளயங்கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும் கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய் வருங்கடல் மிளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே “
அந்த பிரளயகாலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம்கிடந்து இறைவனை பூஜைசெய்த இரவே “ மஹாசிவராத்திரி “ ஆகும் .. பின்னர் படைப்பு தொடங்கிய பின் இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்கவேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவராத்திரி நன்னாளில் சிவனை வழிபடுபவர்களுக்கு இம்மையிலும் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுபேற்றையும் அருளுகின்றார் ..
மாதொருபாகனான எம்பெருமானையும் அன்னை பார்வதியையும் போற்றி அவர்களது அருட்கடாக்ஷ்த்திற்கும் பாத்திரமாவோமாக ! 
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 



வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம்!! குருவின் திருமண நாள்...


SWAMIYE SARANAM IYYAPPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE " PRADOSHAM " TOO .. PRADOSHA TIMES ARE THE WINDOWS OF OPPORTUNITY TO REMOVE KARMA OR KARMIC ENERGIES THAT LIMIT US FROM ENJOYING UNLILIMTED POTENTIALS IN THIS CURRENT LIFE .. BE IN A MEDITATIVE STATE OF MIND DURING PRADOSHA TIME (4.30 - 6.00 EVENING) & CHANT THE POWERFUL MANTRA " OM NAMASHIVAYA " & PARTICIPATE IN THE PRADOSHAM RITUALS & REMOVE ALL YOUR NEGATIVE KARMA BY RECEIVING THE BLESSINGS OF LORD SHIVA .. " OM NAMASHIVAAYA "


” நந்தியம் பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு புந்தியில் ஞானம் சேரும் ! பொலிவுறு செல்வம் கூடும் ! குலமுறை தழைத்தே ஓங்கும் குணம் நிறை மக்கள் சேர்வர் ! சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
செவ்வாய்க்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்தவேளையே பிரதோஷவேளையாகும் .. மாலை 4.30 - 6.00 மணிவரையிலான வேளையில் ஆலயம் சென்று நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கூடாக சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக்கண்டு தரிசிக்க தங்கள் வாழ்வில் பாவம் விலகி புண்ணியம் சேரும் .. மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கி மனதில் அமைதி குடிகொள்ளவும் எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷம் என்பது சைவசமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும் .. இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷவழிபாடு எனவும் அழைக்கப்படுகின்றது
புராணக்கதை -
மானிடர்கள் மட்டுமல்லாமற் பட்சிகள் தொடங்கி முப்பத்து முக்கோடித்தேவர்களின் தலைவனாகக் கூறப்படுபவன் தேவேந்திரன் .. துர்வாச முனிவரின் சாபத்தினால் தன் செல்வங்களை இழந்த இந்திரன் தேவகுருவின் ஆலோசனைப்படி பாற்கடலைக் கடைந்து ஐராவதம் .. பரிவாரம் முதலிய செல்வங்களை மீட்கத் திட்டமிட்டான் ..
பாற்கடலை கடைவது இயலாத காரியமென அறிந்த தேவேந்திரன் அசுரபலத்தையும் நாடினார் .. பாற்கடலை கடையத் துணைபுரிவதால் என்றும் மரணமெய்யா நிலைதரவல்ல அமிழ்தத்தில் தமக்கோர் பங்கு கிடைக்குமென எண்ணி ஒப்புகொண்டனர் அசுரர்கள் .. பாற்கடலில் பள்ளிகொண்டருளும் நாராயணனார் தனது இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரமெடுக்க தருணம் வந்தமையறிந்து தேவேந்திரனுக்கு உதவிட எழுந்தருளினார் ..
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்பொழுது ஆலகாலம் எனும் விஷம்வெளிப்பட அதனைக்கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை தங்களை காத்தருளும்படி வேண்ட சிவபெருமானும் அதனை உண்ண எல்லா உயிர்களுக்குள்ளும் உறைபவனாம் சிவனின் உடலில் நஞ்சு சேர்ந்தால் சகல உயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சிய பார்வதிதேவி ஓடிவந்து சிவனாரின் கண்டத்தையிருகப் பற்றிட கண்டத்திலேயே உறைந்து போனது ஆலகாலம் ஆலகாலத்தின் சூட்டினாலும் .. விஷத்தினாலும் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் ஈசன் ..
இவ்வாறு கயிலையில் சகல தேவ அசுரபடை சூல அபயந்தேடி ஒன்றாக கூடியிருக்கின்ற வேளையில் 
(4.30 - 600 மாலையில்) நாமும் ஆலயத்தினுள் இருக்க வரவிருக்கின்ற அபாயம் ஆலமேயாயினுங் ஈசனின் திருவருளால் மறைந்துபோகுமென்பது உறுதி ..
பிரதோஷ புண்ணிய வேளையில் எம்பெருமானையும் 
நந்தீஸ்வரரையும் வணங்கி வழிபட்டு பெரும்பேறு பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 

Image may contain: 1 person