PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM ..GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & A DIVINE " DWADASI " TOO .. ON THIS DAY LET WE PRAY LORD VISHNU AS " VAAMANAA " .. VAMANA IS THE 5TH INCARNATION OF LORD VISHNU .. THAT SHOWED UP IN " TRETA YUGA " .. VAMANA IMPLIES A DWARF .. MAY YOU BE BLESSED WITH BEST HEALTH ,.. WEALTH & A PROSPEROUS LIFE TOO .. " OM NAMO NAARAAYANAAYA ! OM HARI OM "




” திருமலை வேந்தா ஸ்ரீவெங்கடேசா ! 
திருமங்கையரின் மனநேசா கருநீலவண்ண கமலக்கண்ணா ! கருடனெனும் திவ்ய வாஹனா ! 
குறைதீர்த்தருள்புரி கோமளரூபா ! 
கோவிந்த மங்கள வரதா வாமனா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் புதன்கிழமையும் .. வளர்பிறை துவாதசித் திதியும் கூடிவரும் இந்நாளில் ஸ்ரீமன் நாராயணனை பூவுலகையும் தனது மூன்றடியால் அளந்து திரிவிக்கிரமனாக .. வாமன அவதாரமாக வழிபடுவது சிறப்பாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் விக்ரமாய வித்மஹே ! 
விஸ்வரூபாய தீமஹி ! 
தந்நோ வாமன ப்ரசோதயாத் !!
பெருமாளின் அவதாரங்களில் இது ஐந்தாவது அவதாரமாகும் .. பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ளவடிவமே 
“ வாமன அவதாரமாகும் “ .. தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் .. மண்ணுக்கும் உயர்ந்து நின்றார் .. பிரகலாதனுடைய பேரனாகிய ”பலி” என்ற அசுரராஜன் ஆண்டுவந்த காலமே வாமன அவதார காலமாகும் ..
மூன்றடி நிலங்களை தானம் செய்வதாக மகாபலி உறுதிமொழி அளித்ததுமே வாமனமூர்த்தியாகிய பகவானின் திருமேனி எங்கும் நீக்கமற நிறைந்து நின்று விண்ணும் .. மண்ணும் .. திசைகளும் .. மற்ற உலகங்களும் ஏழுகடலும் அத்தனையும் அவரிடம் அடங்கி இருந்தன ..
ஸ்ரீஹரியாகிய வாமனரின் ஒருகையில் சுதர்சன சக்கரம் சுழன்றது .. மற்றொருகையில் சாரங்கம் என்ற வில்லும் .. இன்னொருகையில் கௌமோதகி என்ற கதையும் .. வேறொருகையில் வித்யாதரம் என்ற வாளும் பிடித்து நின்றிந்தார் ..
தேவர்களும் .. முனிவர்களும் பகவானுடைய திவ்ய தரிசனத்தைக் கண்டு அவரைத் துதிபாடி வணங்கினார்கள் .. வானளாவ நின்ற வாமனர் ஒருகாலால் பூமியை அளந்தார் .. மற்றொரு காலால் வானத்தை அளந்தார் .. ஆயினும் இரண்டாவது அடிக்கு ஆகாயம் போதவில்லை ..
இந்நிலையில் மூன்றாவது அடிவைக்க இடம் ஏது என்று வினவ .. இதோ ! என் சிரசின்மீது தாங்கள் காலடியை வைக்கலாம் .. அதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் நான் ஏற்றுக்கொள்ள சித்தம் என மாபலி சொல்ல .. வாமன அவதாரம் கொண்ட பகவானும் மாபலியின் தலைமீது தன் திருவடியை வைத்து அவனைக் கீழுலகத்தில் ஒன்றான அதலத்தில் அழுத்தி .. அங்கே சக்கரவர்த்தியாக நிலைத்திருந்து அரசாளும்படி ஆணையிட்டார் .. அப்போது முதல் மாபலிமன்னன் “ மாபலிச் சக்கரவர்த்தியாக “ உயர்ந்து மேலும் மேன்மையடைந்தான் .. நாராயணனின் திருவடி தரிசனம் மூவுலகிலும் கிடைத்தது .. மாபலிச் சக்கரவர்த்தி சிரஞ்சீவியர் எழுவரில் ஒருவராக இப்போதும் வாழ்கிறார் ..
உலகளந்த உத்தமனைப் போற்றுவோம் ! பகவானின் திருப்பாதக் கமலங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 2 people

SWAMY SARANAM. GURUVE SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & DIVINE " KAAMADAA EKADASI " FASTING ON THIS KAAMADAA EKAADASI .. OUR SEVERAL SINS CARRIED FROM SEVERAL BIRTHS WILL BE BURNED TO ASHES & THE SOULS GETS PURIFIED & IT BESTOWS THE HIGHEST MERIT .. " OM NAMO NAARAAYANAAYA "




” கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் 
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல் பண் தான்பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே “ (நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாய்க்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த ஏகாதசி விரதமும் கூடிவருவது சிறப்பு .. அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று .. சுபீட்சமான நிம்மதியான வாழ்வுதனைப் பெற்றிட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
வளர்பிறையில் வரும் ஏகாதித் திதியை
“ காமதா ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. இவ்விரதமானது அனுஷ்டிப்பவரின் சகலவிதமான பாவங்களையும் நீக்கி மோட்சப் பிராப்தியை அளிக்கும் ஓர் சக்திவாய்ந்த ஏகாதசியாகும் ..
உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ அதேபோல் “ காமதா ஏகாதசி “ விரதத்தின் புண்ணிய பலனின் பிரபாவத்தால் சகலவித பாபங்களையும் நீக்குவதோடு புத்திர பிராப்தியையும் தந்தருளுகிறது .. அத்தோடு கர்மவினையின் காரணமாக இழிநிலையில் பிறவி எடுத்திருந்தாலும் .. அதிலிருந்து விடுதலை பெறுவதுடன் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர் .. இவ்விரத கதையை மற்றும் மஹாத்மியத்தை கேட்பவரும் .. படிப்பவரும்கூட அத்யந்தபலனை அடைவர் ..
புராண வரலாறு - 
போகிபூர் என்னும் நகரை புண்டரீகன் என்னும் அரசன் ஆண்டுவந்தான் .. அவனது ஆட்சியில் நகரானது அனைத்து வளங்களும் பெற்று ஐஸ்வர்யத்துடன் விளங்கியது .. அந்நகரில் சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்ற லலித் மற்றும் லலிதா என்னும் கந்தர்வ தம்பதியினர் கற்பனையில் கூட பிரிவு என்பதனை ஏற்க இயலாதளவு ஒருவர்மீது ஒருவர் அன்புமிக்கவர்களாக வாழ்ந்து வந்தனர் ..
ஒருமுறை அரசன் புண்டரீகன் இசையரங்கத்தில் கந்தவர்களுடன் அமர்ந்து சங்கீதத்தை ரசித்து கொண்டிருந்தபோது கந்தர்வனான லலித் திடீரென அவனுடைய மனைவி ஞாபகம் வரவே சுருதிவிலகி பாடலை தவறாக பாடியதன் காரணமாக அரசன் அவனை நரமாமிசம் தின்னும் ராட்சசனாக மாறும்படி சபித்தான் .. சாபம் பெற்ற லலித் அக்கணமே கோரவடிவுடைய ராட்சசனாக மாறி காட்டில் இருந்துகொண்டே அநேக பாபங்களை செய்ய ஆரம்பித்தான் ..
அவனுடைய மனைவியும் அவன் போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று அவனுடைய நிலையைக் கண்டு வருந்தி இறுதியில் விந்தியாசல பர்வதத்தை அடைந்து அங்கு சிருங்கிமுனிவருடைய ஆலோசனைப்படி “ காமதா ஏகாதசியை “ முறைப்படி அனுஷ்டித்தி அவ்விரத புண்ணியபலனை தன் கணவருக்கு அளித்து அவனை அதிலிருந்து மீட்டாள் .. 
காமதா ஏகாதசியின் பிரபாவத்தால் இருவரும் முன்பைவிட மிகவும் செழிப்புடனும் .. அன்புடனும் வாழ்ந்து இறுதியில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெற்றனர் ..
இதன்மூலம் நாம் அறிவது என்னவென்றால் மனிதர்கள் எப்பொழுதும் தன் சுகத்தைப் பற்றிய சிந்தனையில் உழல்கின்றனர் .. இதில் தவறேதும் இல்லை .. எனினும் சதாசர்வகாலமும் அது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்று இருந்தால் அது நம் கடமைகளை மறக்கச்செய்து அதனால் விளையும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது .. கந்தர்வன் லலித்தும் கடமையை மறந்ததால் கோரராட்சசனாக மாறி வெறுக்கத்தக்க காரியங்களை செய்ததுடன் கஷ்டத்தையும் அனுபவிக்க நேர்ந்தது ..
தான் பெற்ற புண்ணியபலனை மற்றவரின் நலம்கருதி அர்ப்பணிப்பதால் அந்நற்கர்மாவானது பன்மடங்கு பெருகி மிகுந்த சக்திவாய்ந்ததாகிறது .. அத்தகைய மேன்மையான தானத்தை செய்பவர் தெய்வத்திற்கு ஒப்பானவராகிறார் ..

பகவானைப் போற்றுவோம் ! நலம்பல பெறுவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 Image may contain: 1 person

SWAMY SARANAM GURUVE SARNAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA KANNAGI (BHAGAWATHY) MAY SHE PROTECT YOU FROM ALL THE EVIL & NEGATIVE FORCES & FULFILL ALL YOUR WISHES TOO .. " JAI SHREE MAA BHAGAWATHY "




” பீஜகவிருக்ஷ சாயாஸ்திதாம் 
பராசக்திஸ்வரூப நாயகீம் 
காவேரீ புஷ்பநகரிணீம் தேவீம்
பகவதீம் ஸ்ரீகண்ணகீம் நமாமி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
பங்குனித் திங்கள் இரண்டாம் வாரமாகிய இன்று வேங்கைமரநிழலில் பராசக்தி வடிவமாக தெய்வீக உருவெடுத்தவளும் காவிரிப்பூம்பட்டினத்தினை தன் சொந்த ஊராகக் கொண்டவளும் பகவதியாகிய அன்னை கண்ணகியை போற்றித் துதித்து .. நல்லாரோக்கியம் பெற்று .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற அன்னை அருள்புரிவாளாக !
முற்பிறப்பில் செய்த தவத்தின் பயனாய் சிறப்போடு தோன்றியவள் .. மனிதகுலம் போற்றும் மாணிக்கம் போன்றவள் .. பங்குனித் திங்கள் தினத்தை முன்னிட்டு பெண்களால் கண்ணகி அம்மனை நினைத்து விரதம் கடைபிடிக்கப்படுகின்றது .. இந்நாளில் பக்தர்கள் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு தமது நேர்த்திக்கடன்களைச் செலுத்துவர் .. இதனால் கண்ணகி அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் ..
பெண்களுக்கு மாங்கல்யநலம் .. பலம் கிட்டும் .. கணவரின் துன்பங்கள் .. நீங்காத நோய்கள் தீரும் .. குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கி குதூகலம் ஏற்படும் .. மங்களம் பெருகும் .. கணவன் மனைவியிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு வளரும் .. அமைதி நிலவும் .. அன்னையைப் போற்றி அவள் தாள் பணிவோமாக ! 
ஓம் சக்தி ஓம் ! ஓம் கண்ணகித் தாயே போற்றி ! போற்றி ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 
“ தீர்க்க சுமங்கலிபவ “
 Image may contain: 1 person, cloud, sky and outdoor

SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS . WISH YOU ALL A BLESSED SUNDAY & A " RAAM NAVAMI " TOO .. MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY & YOUR HOME LIGHTEN UP WITH THE DIVINE BLESSINGS OF SHREE RAMA ON THIS RAM NAVAMI & ALWAYS .. " JAI SHREE RAM "




ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் ! 
நல்ல திவ்யமுகச்சந்திரனுக்கு சுபமங்களம் ! 
மாராபிராமனுக்கு மனுபரந்தாமனுக்கு 
ஈராறு நாமனுக்கு ரவிகுலசோமனுக்கு ஜெயமங்களம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ஸ்ரீராமநவமி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் பரிபூரண அவதாரமாகும் ..
“ அறமே வாழ்வின் ஆன்மீகஜோதி ! அறத்தை வளர்ப்பதற்கும் .. மனிதனிடம் மறைந்துகிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமனாக அவதாரம் செய்த புண்ணியமிக்க நன்னாளுமாகும் .. இந்நாளில் எதற்கும் உதவாத காம .. குரோத .. மோக .. லோப .. மத மாச்சார்யம் எனும் தீயகுணங்களை விட்டொழித்து அனைவரையும் நேசிக்கும் பண்பும் .. துன்பத்தில்கலங்காத மனதிடத்தையும் .. எடுத்த செயல்கள் யாவும் தங்களனைவருக்கும் வெற்றியளிக்கவும் அருட்கடலாகிய ஸ்ரீராமச்சந்திரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தசரதாய வித்மஹே ! 
சீதாவல்லபாய தீமஹி ! 
தந்நோ ராம ப்ரசோதயாத் !!
ராமநவமி பங்குனி அல்லது சித்திரைமாதம் வளர்பிறை நவமி திதியில் அமைகிறது .. ராமபிரானின் ஜனனகாலத்தில் ஐந்துகிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின .. சூரியன் .. குரு .. சனி .. செவ்வாய் .. சுக்கிரன் எனும் ஐந்து கிரகங்களே அவை .. எனவே ராமஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜைசெய்பவர்களுக்கு ஜாதகரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷங்களும் நீங்கும் .. வியாதிகளும் குணமாகும் .. ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை .. இன்று ஸ்ரீராமனின் பட்டாபிஷேக புகைப்படத்தை பூஜைசெய்வது .. ராமாயணம் படிப்பது 
மற்றும் 108முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவது சிறப்பாகும் ..
நவமியில் பிறந்த நாயகரான ஸ்ரீராமர் உபதேசம் மூலமாக தன் கொள்கைகளை விளக்காமல் உதாரண புருஷராக தானே வாழ்ந்து காட்டினார் ..
” ஓகமாட ! ஓகபாணமு ! ஓகபத்னிவ்ரதுடே “ என்கிறது தியாகையரின் கீர்த்தனை .. 
“ ஒருசொல் ! ஒருவில் ! ஒரு இல் “ இதன்படி வாழ்ந்தவரும் ஸ்ரீராமரே ! என நம் தமிழ் அதை நயம்பட உரைக்கிறது ..
கிருஷ்ணாவதாரத்தில் என்ன நடக்கும் என்பது ஸ்ரீகிருஷ்ணருக்குத் தெரியும் .. ஆனால் .. 
ராம அவதாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது மானுட அவதாரம் எடுத்த ஸ்ரீராமருக்குத் தெரியாது .. அதுதான் இந்த அவதாரத்தின் மகிமை ..
ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள் .. சுகதுக்கங்களில் சலனம் அடையாமல் தான் ஆனந்தமாகவே இருந்துகொண்டு மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருபவன் தான் ஸ்ரீராமன் ..
திருமால் பக்தர்களின் எட்டெழுத்தும் .. 
சிவநேயச் செல்வர்களின் ஐந்தெழுத்தும் சேர்ந்தே 
“ ராம “ என்ற இரண்டெழுத்து மந்திரம் உருவானது என்கிறார் “ எவரநி “ என்று தொடங்கும் கீர்த்தனையில் தியாகராஜர் ..
” நாராயணாய “ மந்திரத்தில் ஜீவ அட்சரம் “ ரா “ - 
அவ்வெழுத்து இல்லையேல் ந அயனாய என்று 
“ வழிகாட்டாதவன் “ எனப் பொருள்படும் .. 
அவ்வாறே “ நமசிவாய “ மந்திரத்தில் ஜீவ அட்சரம் “ ம “ 
அவ்வெழுத்தை நீக்கினால் “ நசிவாய “ என மங்கலத்தை வழங்காதவன் எனப் பொருள்படும் .. 
ஆக இருமூலமந்திரங்களிலும் உயிர் எழுத்தாக உள்ள 
“ ரா “ .. “ ம “ என்ற இரண்டு எழுத்துகளும் இணைந்து 
“ ராம “ என்ற அற்புதச் சொற்பதம் பிறந்தது .. அதுவே நற்பதம் அருளும் என்கிறார் தியாகராஜர் ..
“ பட்டாபிஷேகம் “ என்று ராமர் பரவசப்பவுமில்லை .. 
“ வனவாசம் “ என்று ராமர் வருத்தப்படவுமில்லை .. 
இன்பத்தையும் .. துன்பத்தையும் சமநோக்கில் எடுத்துக்கொண்டார் .. இன்று போய் நாளை வா ! என பகைவனுக்கும் கருணைகாட்டினார் .. வானரங்கள் .. பறவை ஜடாயு .. கரடி ஜாம்பவான் .. அணில் என காக்கை .. குருவி எங்கள் ஜாதி ! என்ற மேலான சமத்துவம் கடைபிடித்து வாழ்ந்த இதிகாச நாயகனே ஸ்ரீராமர் ..
எங்கெல்லாம் ஸ்ரீராமநாமம் ஒலிக்கிறதோ ! ராமரின் திருக்கதை எவ்விடங்களில் எல்லாம் சொல்லப்படுகிறதோ ! அங்கெல்லாம் அழுதகண்ணும் தொழுதகையுமாக நின்றிருப்பான் ஸ்ரீஹனுமான் .. 
ஸ்ரீராமநாமம் கூறியே அனுமன் கடலைக் கடந்தான் .. ஆனால் மூலமந்திரத்திற்கு உரிய மூர்த்தியோ அணைகட்டி “ சேதுராமனாக “ ஆகியே இலங்கை சென்றார் ..
மூர்த்தியைவிட மூலமந்திரஜபமே சாலச்சிறந்தது என்று கண்டு பாரத ஞானிகள் அனைவரும் அப்பாதையில் தான் சென்றார்கள் .. சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்த சங்கீதமும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜரின் ராமபக்தி ஆன்மீக உலகம் அறிந்த ஒன்றே !
வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி ..
ராமன் என்ற கடலில் கலப்பதற்கு பூமியைப் புனிதப்படுத்திக்கொண்டு செல்லுகின்ற மகாநதியே ராமாயணம் .. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால் இவரது வரலாற்றுநூல் “ ராமாயணம் “ எனப் பெயர் பெற்றது ..
நற்குணங்கள் நம்மிடையே தழைக்கும் நாள் எதுவோ ! அதுவே ஸ்ரீராமன் பிறந்த பொன்னாளாகும் .. 
“ ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ! 
ரகுநாதாய ஸீதாய பதயே நமஹ “
” ஸ்ரீராம் ! ஜெயராம் ! ஜெய ஜெயராம் ”
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA KANNAGI .. MAY SHE PROTECT YOU FROM ALL THE EVIL FORCES & SHOWER YOU A PROSPEROUS HEALTHY LIFE .. " OM SHAKTHI OM ! JAI MATA DI " SWAMY SARANAM..GURUVE SARANAM...

” மாணிக்க நூபுர ஹஸ்தாம் 
மாநாய்க்க வைஸ்யராஜ கந்யாம் 
மாசாத்வ சுத் நாயகீம் கல்யாணீம்
மாதரம் ஸ்ரீகண்ணகீம் நமாமி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் பங்குனித் திங்களாகிய இன்று பெண்கள் விரதமிருந்து அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவார்கள் ..
அம்பாளின் மகிமை சொல்லும் விரதங்களில் 
“ பங்குனித் திங்கள் “ விரதமானது தனித்துவம் மிக்கது 
அம்பாளுக்கு அபிஷேகமும் மஹேஷ்வர பூஜை என்று சொல்லப்படுகின்ற அன்னதானமும் வழங்கப்படும் .. எனவே அடியவர்கள் இந்த விஷேட வழிபாடுகளில் கலந்துகொண்டு அம்பாளின் இஷ்டசித்திகளைப் பெறுவீர்களாக !
சிறப்பாக கண்ணகி அம்மன் ஆலயங்களில் பங்குனிமாதம் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம் .. பெண்கள் நோன்பிருந்து அபிராமி அந்தாதி மற்றும் பக்திப் பாடல்கள் அனைத்தியும் மறுநாள் உதயத்திற்குள் பாராயணம் செய்து முடிப்பர் ..
கண்ணகி அம்மனுக்கு மங்களாதேவி என்றுதான் பெயர் அன்னையைப் பூஜிப்பதால் வாழ்வில் மங்களமும் .. சுமங்கலித்துவமும் ஏற்படும் ..
“ ஓம் சக்தி ஓம் ! தீர்க்கசுமங்கலிபவ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 

Image may contain: 1 person, standing

SWAMY SARANAM.. GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

No automatic alt text available.Image may contain: indoor

சேந்தனைக் கந்தனை 
செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல் வேந்தனைச் 
செந்தமிழ் நூல் விரிந்தோனை 
விளங்கு வள்ளிகாந்தனைக் கந்தக் கடம்பனைக் 
கார்மயில்வாகனனை சாந்துணையும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாம் கந்தப்பெருமானைத் துதித்து தங்களனைவரது கவலைகள் யாவும் அகன்று என்றும் மகிழ்ச்சியுடன் திகழ எல்லாம் வல்லவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகனுக்குத்தான் எத்தனை ரூபங்கள் -
சிறுகுழந்தைகளுக்கு - குமரனாகவும் 
இளைஞர்களுக்கு - சிங்காரவேலனாகவும் 
கலைஞர்களுக்கு - ஸ்கந்தனாகவும் 
வீரர்களுக்கு - வேலாயுதனாகவும்
இல்லறத்தார்க்கு - வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யனாகவும் 
உபதேசம் வேண்டுவோருக்கு - சுவாமிநாதனாகவும் 
துறவிகளுக்கு - பழனி ஆண்டவனாகவும் .. 
மேலும் பலரூபங்களில் நமக்கு வழித்துணையாகவும் வருவான் திருத்தணி முருகன் ..
கந்தனைக் கரம்குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும் .. காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது .. மலையேறி வந்து தன்னை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் உச்சத்தை அடைந்து எப்போதும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டுள்ளான் ..
முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத்தாலே மனம் ஆறும் .. நமது உடலில் ஆறுவிதமான ஆதாரங்கள் உண்டு .. முருகப்பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார் ..
திருப்பரங்குன்றம் - மூலாதாரம் 
திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம் 
பழனி - மணிபூரகம் 
சுவாமிமலை - அநாகதம் 
திருத்தணி - விசுக்தி 
பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை
முருகா முருகா என்று மனமுருகி வேண்டுவோர்க்கு நிலையான இன்பத்தினை அளித்திடுவான் கந்தனே ! 
“ ஓம் முருகா சரணம் ! கந்தா சரணம் ! 
ஓம் சரவணபவ ஓம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
Image may contain: one or more people