PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM....GURUVE SARANAM








எவ்வளவு பெரிய வலியை
ஒரு நொடியில் போக்கினாய்
உண்மை எது பொய் எதுவென
கண் முன் காட்டினாய்
உன் பிள்ளைகளைக் காப்பதில்
உனக்கிணை உண்டோ
சற்றுமே கலங்காத
உறுதியினைத் தந்தாய் 
குருவின் பூஜையிலே
குழந்தை பாலகனாய்
நீயிருக்க தவிப்பதெதற்கு
ஓயாமல் உனை நினைக்க
ஓடிடுமே துன்பம்
காவலாய் நீயிருக்க
கவலைகள் ஏது
கண்கண்ட தெய்வமே
பன்வெல் குடிகொண்ட பாலகனே

SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA






” எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ ! 
சிந்தா குலமானவை தீர்த்தனையாள் கந்தா கதிர்வேலவனே ! உமையாள் மைந்தா ! குமரா ! 
மறை நாயகனா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாய்க்கு அதிபதியாம் அழகிய வேலாயுதத்தினை கரத்தில் ஏந்தியவரும் திரிபுரமெரித்த சிவனாரின் மகனுமாகிய கந்தப்பெருமானை போற்றித் துதித்து தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி ஆனந்த வாழ்வுதனை தந்தருள்வானாக ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
ஓடுகின்ற ஆறு இருந்தும் நாம் குளிக்காமல் இருக்கலாமா..? நாம் ஆற்றில் குளித்தால் ஆற்றுநீர் எம் உடம்பில் உள்ள நோய்களைக் குணப்படுத்துவதுடன் .. உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்கி எம் உடலைத் தூய்மைபடுத்துகின்றது .. அதுபோல் நாம் சரவணப்பொய்கையில் அவதரித்து அம்பிகையிடம் சக்திவேல் பெற்ற ஞானவேலனை வணங்கினால் அவரின் கருணையினால் எமது உயிர்மீது படிந்துள்ள 
(அழுக்குகள்) கன்மவினைகள் நீங்கப் பெற்று ஆன்மா தூய்மை பெறுகின்றது ..
எனவே “ யாம் இருக்க பயம் ஏன் “ என எம்முன்னே தோன்றி எம் துயர்துடைக்கும் ஆறுபடைவீடுகளில் உறையும் ஆறெழுத்து கூறும் அன்பர் நெஞ்சில் நிறையும் ஞானவேலாயுதனை இன்றைய நாளில் வழிபட்டு இஷ்ட சித்திகளைப் பெற்று உய்வோமாக !
“ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

SWAMY SARANAM...POOJA AT SETHURAMAN SWAMY RESIDENCE









SWAMY SARANAM.....MALA DHARNA AT CHENNAI.....25-11-2017










தனித்திருக்கும் தவப்பொருளே
தனியானதொரு அரும்பொருளே
தண்மையான திருவருளே
தணிப்பாயெம் குறையிருளே!
கனிந்திருக்கும் ஞானக்கனியே
கனத்திருக்கும் வேதநிதியே
கணையொத்த பேரறிவே
குணக்குன்றே கற்பகதருவே!
விரிந்திருக்கும் மெய்ப்பொருளே
விரைந்திருக்கும் திருபதங்களே
விழைந்திரங்கும் கருணைவிழிகளே
விழாதுதாங்கும் திருகரங்களே!
சரணம் சரணம் ஐய்யப்பா  எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
சுவாமி சரணம்  என்று இனியேனும்
தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!

SWAMY SARANAM.....GURUVE SARANAM SARANAM....






நாள் ஒவ்வொன்றும் நலம் பெறச் செய்தாய்!
 நன்மை தர அய்யனே நீ அன்பைப் பெய்தாய்!
கோளுக்கஞ்சா மனம் தனைத் தந்தாய்
கொடுங்கூற்றுக்கே ஐயன் கட்டளை வகுத்தாய்
 
இருவேளை உனை வணங்கச் செய்தாய்
எம்மதமும் சம்மதம் என்று மொழிந்தாய்
வாளினை ஒத்த நாவடக்கச் சொன்னாய்
வாழுகின்ற உயிரனைத்திலும் 
நேசம் வைக்கச் சொன்னாய்
மீளாத துன்பங்கள் மாற்றியே சென்றாய்
தாளாத சோகம்தனை சடுதியில் போக்கினாய்
கேளாத செவிப்பலன் கேட்டிடச் செய்தாய்
காணாத கண்களைக் காணச் செய்தாய்
பேசாத மொழியெல்லாம் பேசிட வைத்தாய்
மீண்டும் பிறப்புண்டேல் உன்
பாதம் தொழும் வரமே தருவாய்
பன்வேல் குடிகொண்ட என் குரு நாதனே!!


SWAMY SARANAM....GURUVE SARANAM....






ஒன்றை உணரா மனதிலே
நின்று போகும் ஆவலே
ஒன்றை உணர்ந்த பின்னிலே
வந்திடாதோ காவலே
கன்றை காக்க ஓடியே
வந்து தாங்கும் தாயைப் போல்
ஒன்றில் கலந்த மனதையே
நின்று தாங்கும் ஒன்றுமே 
அன்று போகும் சலனமும்
தீர்ந்திடாத துயரமும்...
சென்று ஒன்றில் கலந்ததால்
என்றும் உண்டு நன்மையே
ஒன்று நீயே என்பதால் 
ஒன்றி மனதில் வேண்டியே 
உன்னை இங்கு போற்றுவோம்
சரணம் என்று சொல்லுவோம்
சகலத்தீமை வெல்லுவோம்
பாலகன் நாமம் சொல்லியே
பாவ வினைகள் நீக்குவோம்