PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA.......GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE SADURTHI VIRADAM TOO .. MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES & NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH PEACE .. LOVE & HAPPINESS .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "



Image may contain: flower and indoor
 இளஞ்சூரியன்போல் நம் உள்ளத்தில் ஒளிகொண்டவனே ! பாவங்களைக் களைந்து எமை காத்தருள்பவனே ! தேவர்களுக்கெல்லாம் தேவனே!
கருணைமிக்கவனே ! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தைத் தருபவனே ! எல்லையில்லாத பரம்பொருளே ! உன் திருவடிகளை சரணடைந்து நின் அருளை வேண்டுகிறோம் சதுர்த்தி நாதனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலைவந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையும் .. வளர்பிறை சதுர்த்தித் திதியுமாகிய இன்று வேதங்களாலும் அறியமுடியாதவரும் .. வேதத்தின் முடிவாகத் திகழ்பவருமாகிய விக்ன விநாயகரைப் போற்றித் துதித்து எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகிட்டவும் .. தங்களனைவருக்கும் நிம்மதியும் .. செல்வச்செழிப்பும் மேலோங்கவும் .. கணபதியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகர் பிரணவத்தின் வடிவம் .. இதன் திரிந்தவடிவமே பிள்ளையார் சுழி .. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும் .. சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும் .. சுக்லபட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை “வரசதுர்த்தி” என்று அழைப்பார்கள் ..
சதுர்த்தி திதியில் விநாயகர் முன் அமர்ந்து சொல்லவேண்டிய பிரார்த்தனை இது ..இதனைச் சொல்வதால் உயர்ந்த புகழ் ஏற்படும் .. எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும் ..
மகிழ்ச்சிபொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே ! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே ! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே ! உலகத்தை விளையாட்டாகச் செய்பவனே ! ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணம் உள்ளவனே ! 
கஜாமுகாசுரனை வென்றவனே ! தீயதை அழித்து நல்லதைச் செய்து எம்மை காக்கும் விநாயகனே ! உனக்கு எங்கள் வணக்கங்கள் ..
உலகமக்களுக்கு நலமும் .. மங்களமும் தருபவனே!
நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத்தருபவனே ! நாங்கள் செய்யும் குற்றங்களைக்கூட குணமாகக் கொள்பவனே ! உனக்கு எங்கள் நமஸ்காரம் ! திரிபுரம் என்னும் அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்த சிவபெருமானின் மூத்த புத்திரனே ! எங்கள் துன்பத்தை தீர்த்து வை ..தூய்மையான மனதைக் கொடு .. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களி ஓடோடி வந்து காக்க வருபவனே ! உண்மை வெற்றி பெற துணை நிற்பாயாக !!
காலமெல்லாம் உன்னையே நினைந்து வணங்கும் பக்தர்களை என்றும் காத்தருள்வாயாக ! 
” ஓம் விக்னேஷ்வராய நமஹ ” ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: one or more people and indoor


SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SOMVAR VIRADAM TOO .. MAY LORD SHIVA'S DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER & MAY ALL YOUR PRAYERS BE ANSWERED TOO .. " OM NAMASHIVAAYA




” அன்பினைத் தந்து அகந்தையை அழிக்கும் 
அறிவினைத் தந்து அழிவினைத் தடுக்கும் 
வல்லமைத் தந்து வல்வினை அகற்றும் 
நன்மைகள் தந்து நலிவினைத் தடுக்கும் 
ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய ”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிப்பதால் சிவாலயம் சென்று ஈசனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தீமைகள் அகன்று .. நன்மை பயக்கவும் .. தாங்கள் இன்று தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியையும் .. மகிழ்ச்சியையும் தந்தருள்வாராக ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!
திங்கட்கிழமையை சோமவாரம் என்றழைப்பார்கள்
சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு .. திங்கள் என்றால் சந்திரன் .. சிவனாரின் தலையில் சந்திரனையும் .. கங்கையையும் சூடியிருப்பார் .. எனவே திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வர மனோபலத்தையும் .. தெளிவையும் பெறலாம் என்கிறார்காள் ஆச்சார்யார்கள் ..
சந்திரன் தட்சனின் சாபத்தால் கொடிய நோயினால் துன்பப்பட்டான் .. நோய் குணமாகவேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவர் அருளால் நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான் .. அவன் பெயரால் சோமவாரம் (திங்கட்கிழமை) தோன்றியது ..
இந்த விரதத்தினை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைபிடித்து சாம்ப பரமேஸ்வர பூஜையை செய்தால் பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும் வெகுதூரத்தில் உள்ளவர்கள் தங்கள் இருப்பிடத்தை நாடிவந்துசேர்வர் .. வாழ்வில் இழந்த அனைத்தையும் பெறுவீர்கள் என்பது உறுதி ..
சிவனைப் போற்றுவோம் ! சிவயோகம் பெறுவோம்! 
“ ஓம் நமசிவாய ! ஹர ஹர மஹாதேவா ” 
 வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, indoor

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....POOJA AT SIVA SWAMI RESIDENCE 24-6-2017









சிந்தை எல்லாம் நிறைந்து சீர்செய்தவன்
சிவாவின் இல்லத்தில் கால் பதித்தவன்
முந்தை வினையகற்றி முக்தி தரும் சீலன்
மந்தைகளாய் இருந்தோம் இறை அறிவின்றி
வந்தெமை அடியவராய் ஆட்கொண்டாய் 
பிந்தை வரும் பிறப்பிலும் நான் உன் அடியவனாய்
சந்தமெடுத்துப் பல பாக்கள் பாடவேண்டும் 
விந்தையிலும் விந்தை உன் லீலைகள்
உன் கண்ணசைவில் என் மனம் களி நடனம் புரிய
உன் புன்னகையில் அகிலமே அன்பால் நிறையும்
உன் கால் ஜதியில் எம் நாடி துடிக்க
உன் அன்பில் இந்த உலகம் தளிர்க்க
நீ அசைந்தால் இந்த உலமே அசையுமன்றோ
பார் போற்றும் பாலகன்  சற்குருநாதன்
சபரியில்  கால் வைத்தால் துன்பம் தீரும்



swamiye saranam iyyappa...guruve saranam.....








SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE " THIRUVAADIRAI STAR " TOO MAY LORD SHIVA REMOVE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & MAY YOU BE BLESSED WITH A DELIGHTFUL .. SUCCESSFUL & A PROSPEROUS LIFE AHEAD . " OM NAMASHIVAAYA "





"ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன் 
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன் போது 
இயலும் முடிமேல் புனலோடு அரவும் புனைந்த வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே “ ( திருஞானசம்பந்தர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும் கூடிவருவது சிறப்பு .. மகாதேவரும் பெரும் ஜோதி சொரூபரும் எல்லையற்ற தேஜசையுடையவருமாகிய நடராஜப்பெருமானைப் போற்றித் துதித்து மனதில் நிம்மதியும் அனைத்து கலைகளிலும் தேர்ச்சிபெற்று ஓர் உயர்ந்த அந்தஸ்தினைப் பெற்றிடவும் ..ஆடல்வல்லானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் சித்ஸபேசாய வித்மஹே !
சிதாகாசாய தீமஹி !
தந்நோ ப்ரசோதயாத்
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை ருத்திரனாகும் .. அதனால் இதற்குச் சிறப்பு ஓங்குகிறது 
சிவபிரானை ஆதிரை முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் போற்றுகின்றோம் ..
சிவபெருமான் அருவம் .. உருவம் .. அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் வழிபடப்படுகிறார் .. 
அருவம் என்பது - உருவமற்ற நிலை ..
உருவம் என்பது - கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை 
அருவுருவம் என்பது - உருவமும் அருவமும் கலந்தநிலை .. இம்மூன்று நிலைகளும் உள்ள திருத்தலமாக சிதம்பரம் உள்ளது .. 
அருவ நிலைக்கு சிதம்பர ரகசியமும் .. 
உருவநிலைக்கு - நடராஜரும் 
அருவுருவ நிலைக்கு - மூலவர் மூலட்டானேஸ்வர லிங்கவடிவிலும் இங்கு அமைந்துள்ளார் ..
நடராஜனின் திருப்பாதங்களில் வேதங்கள் சிலம்பாக ஒலிக்கிறது .. 
வலக்கை - டமருகம் இசைக்கிறது 
இடக்கை - அக்கினியைத் தாங்கியிருக்கிறது .. 
அவரின் சிவந்த இதழ்கள் புன்முறுவலுடன் காட்டுகின்றது .. 
பால் போன்ற வெண்ணீறு காற்றில் நறுமணம் பரப்புகிறது .. 
செஞ்சடை எட்டுத் திசைகளிலும் விரிந்தாடுகிறது .. வலக்கால் அசுரனை மிதித்து நிற்கிறது .. 
இடக்கால் குஞ்சிதபாதமாக (தொங்கியநிலையில்) நமக்கு அருள்செய்கிறது .. 
நம் இதயம் என்னும் கோவிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார் .. இதனைக்கண்டு தரிசித்தால் வாழ்வில் எப்போதும் நமக்கு ஆனந்தமே !
திருவாதிரை நன்னாளில் அவனே ! அவனே ! என்று கூறாமல் .. சிவனே ! சிவனே ! என்று வாழ்த்தி வணங்கி எல்லா நலங்களையும் பெறுவோமாக .. 
“ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person