PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE ' SADURTHI ' MAY LORD GANAPATHY PROTECT YOU FROM ALL THE EVIL FORCES & ENRICH YOUR LIFE WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. " JAI SHREE GANESHAAYA NAMAHA " GURUVE SARANAM SWAMIYE SARANAM

” வெள்ளம்போல் துன்பம் வியலுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க - உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க வளரொளி விநாயகனே ! வா “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்றைய நாள் செவ்வாய்க்கிழமையும் .. சதுர்த்தித் திதியும் கூடிவருவது சிறப்பு .. விகனவிநாயகரைத் துதித்து சகல கிரகதோஷங்களும் நீங்கி .. இக..பர சுகங்கள் யாவும் பெற்று தங்கள் வாழ்வில் வசந்தம் வீசிட கணங்களுக்கெல்லாம் அதிபதியாகிய கணபதியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!

கோவில்களில் விநாயகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது “ ஓம் அநீஸ்வராய நமஹ “ என்றும் கூறுவார்கள் .. அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் ( இறைவன் ) இல்லை என்பது பொருளாகும் ..
ஓம்காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன ..
விநாயகரின் நெற்றியில் - சூரியன் உறைந்துள்ளான்
அதேபோல் நாபியில் - சந்திரனும்
வலதுதொடையில் - செவ்வாயும்
வலதுகையில் - புதனும்
வலதுமேல்கையில் - சனியும்
தலையில் - குருபகவானும்
இடதுகீழ்கையில் - சுக்ரனும்
இடதுமேல்கையில் - ராகுவும்
இடது தொடையில் - கேதும் இடம்பெற்றுள்ளனர் ..

எனவே ! விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிட்டும் ..
வெற்றிவிநாயகரைப் போற்றுவோம் தடைகள் அனைத்தையும் தகர்த்தி வெற்றி காண்போமாக !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ ” வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SURYA .. MAY HE BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY & THE SUNDAY BE FILLED WITH LOVE & HAPPINESS TOO .. " JAI SHREE SURYA DEV "



ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி !
அருள்பொங்கும் முகத்தைக்காட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி ! தாயினும் பரிந்து சாலச்சகலரை அணைப்பாய் போற்றி ! தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம்
கொடுப்பாய் போற்றி !
தூயவர் இதயம்போலத் துலங்கிடும் ஒளியே போற்றி !
தூரத்தே நெருப்பைவைத்து சாரத்தைத் தருவாய் போற்றி
ஞாயிறே ! நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி !
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி ! போற்றி “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியபகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. மனநலமும் .. உடல்நலமும் நல்லாரோக்கியமாகத் திகழவும் சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!

சூரியபகவான் தன் அருள் ஒளியால் அறியாமை என்னும் இருளகற்றி அறிவென்னும் ஒளிச்சுடரைத் தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவாகத் திகழ்கிறான் .. ஆதவனை வணங்குபவர்களுக்கு சுடர்மிகும் அறிவுடன் கூடிய சுட்டும்விழிச்சுடரான தெளிந்த கண்பார்வையும் கிட்டும் ..

உலகிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக விளங்குபவன் சூரியன் .. எல்லா கோள்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இயங்க வைப்பவனும் சூரியனே ! அதனால் பஞ்சாங்கம் .. ஜோதிடகணிப்புகள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டே கணிக்கப்படுகிறது .. சூரியபகவானை தினமும் வணங்கினால் சகல சௌபாக்கியத்தையும் தந்தருளுவான்
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும்
தீர்க்கும் ஆற்றல் சூரியவழிபாட்டிற்கு உண்டு ..

ஆயிரம் கரங்களுடன் நம்மை உதயநேரத்தில் - பிரம்மரூபத்திலும் ..
உச்சிப்பொழுதில் - பரமேஸ்வர ரூபத்திலும் ..
அஸ்தமன மாலை நேரத்தில் - விஷ்ணு ரூபமாகவும் காப்பதாகவும் ஐதீகம் ..

சூரியபகவானைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் சூர்யாய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Image may contain: 1 person, text

SWAMIYE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND & A DIVINE " THIRUVONAM STAR " MAY LORD VISHNU BLESS YOU & SHOWER YOU WITH HAPPINESS & GOOD FORTUNE & PROSPERITY .. " OM NAMO NAARAAYAnAAYA "
” என்னப்பன் எனக்காயிருளாய் என்னைப் பெற்றவனாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய் 
மின்னப்பொன் மதிழ்சூழ திருவிண்ணகர்ச் சேர்ந்தவப்பன் 
தன்னொப்பாரிலப்பன் ! தந்தனன் தனதாள் நிழலே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையாகிய இன்று பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திரமும் கூடிவருவதால் இதனை 
“ ஸ்ரவண விரதம் “ என்றழைப்பார்கள் .. இன்றைய நாளில் தங்களனைவருக்கும் குறைவில்லாத செல்வமும்
துன்பங்கள் நீங்கி உறவினர் கொண்டபகை .. அகன்று பகைவரே நண்பர்களாகத் திகழ்ந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வாஸுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
 Image may contain: 1 person
மாதந்தோறும் திருவோண நாளன்று நாராயணனை வழிபட்டு விரதங்காப்பது ஸ்ரவண விரதமாகும் .. தனிமனிதனின் உள்ளத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத் தரும் .. இவ்விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதும் நிகழாது .. வாழ்வில் என்றும் அமைதி ஏற்படும் .. உறவினர்கொண்ட பகை அகலும் .. பகைவரும் நண்பராவர் .. அனைத்து துன்பங்களும் நீங்கும் ..
108 திவ்யதேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோவிலில் மாதாமாதம் இந்நாளில் ஸ்ரவணம் என்ற விழா பிரசித்தம் .. 
“ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ 
என்னை சரணடைந்தால் உன்னை நான் காப்பேன் ! என்ற சரமச்லோகப் பகுதி எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது .. தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலார் என்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் .. ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் ..
ஸ்ரீமன் நாராயணனைப் போற்றுவோம் ! அவரது பொற்பாதங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM



GOOD MORNING DEAR FRIENDS WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS OF OUR DEPARTED ANCESTORS .
TODAY IS THE " THAI AMAVASYA DAY " IT'S THE RIGHT TIME AS CONSIDERED BY MANY TO RESPECT THE DEPARTED SOULS BY OFFERING THEM THARPANAM & FOOD FOR THE POOR ... MAY YOU BE BLESSED BY THE PITHRUS TOO ..
" OM PITHRU DEVO BAWA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை நம் இல்லந்தோறும் அள்ளி வழங்கும் வெள்ளிக்கிழமையாகிய இன்று பித்ருக்களுக்கு நம் முன்னோர்களை சிரத்தையோடு நினைந்து தர்ப்பணம் செய்து வழிபாடு செய்யும் தை அமாவாசை புண்ணிய நாளுமாகும் ..

மனிதப்பிறவி மகத்தான பிறவி .. மனிதனாகப் பிறந்தால்தான் இறைவனை எளிதில் அடையமுடியும் .. வேறு எந்தப்பிறவிக்கும் இந்தச் சிறப்பு கிடையாது .. வானுலகில் தேவராக இருந்தாலும்கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்கமுடியாது .. இத்தகைய அரியமானிடப் பிறவியைத் தந்த நம்முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் நன்றிக்கடனாக அமாவாசை .. பௌர்ணமியை எடுத்துக்கொள்ளலாம் ..

ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது .. இருந்தாலும்
“ தை அமாவாசையில் “ பிதுர்தர்ப்பணம் செய்வது மிகவும்
சிறப்பாகும் .. எனவேதான் உத்தராயணப் புண்ணியகாலத்தில் வரும் தை அமாவாசை பிதுர்வழிபாட்டிற்கு உகந்தநாளாக கருதப்படுகிறது .. இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ .. புண்ணிய நதிக்கரையிலோ நீராடி வேதவிற்பன்னர் வழிகாட்டுதலுடன் நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது ..

தைமாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் .. சந்திரன் .. பூமி ஆகிய மூன்றும் ஒருநேர்கோட்டில் அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகிறது .. முன்னோர்களுக்கான வழிபாட்டுடன் ஏழை எளியவர்க்கு அன்னதானம் செய்வதால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும் .. குடும்பத்தில் சுபீட்சம் நிறைந்து காணப்படும் ..

நாமும் தை அமாவாசையில் பித்ருகடன் தீர்த்து இறைவனின் அருளையும் .. பித்ருக்களின் ஆசியையும் பெற்று சுபீக்ஷ்ங்களை தடையின்றி பெறுவோமாக !
“ ஓம் பித்ருதேவோ பவ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 
Image may contain: sky and water

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM



GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A HAPPY REPUBLIC DAY FOR ALL MY INDIAN FRIENDS & A DIVINE (MONTHLY) SIVARATRI TOO .. MAY THE ALMIGHTY LORD SHIVA SHOWER YOU WITH HAPPINESS & PROSPERITY & MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ..
" OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH -

” ஈசனை துதிசெய்வாய் நல்மனமே !
ஈகையாய் வரம்பெறுவாய் அனுதினமே !
ஒரு துன்பமும் இல்லாது மறையுமே !
‘ ஓம் நமசிவாய ‘ ஓதினாலே ! குறையுமே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் இந்திய குடியரசு தின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. குருவருளும் இறையருளும் கூடிய இன்நன்னாளில்
“ மாதசிவராத்திரியும் “ அனுஷ்டிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவரும் ஈசனின் அருட்கடாக்ஷ்த்தோடு சீரானவாழ்வும் .. செல்வ வளமும் பெற்று .. சுபீட்சமான வாழ்வும் அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

சிவராத்திரி ஐந்து வகைப்படும் -
1 - நித்திய சிவராத்திரி
2 - பட்ச சிவராத்திரி
3 - மாத சிவராத்திரி
4 - யோக சிவராத்திரி
5 - மகா சிவராத்திரி - மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளை மகாசிவராத்திரியாக சிவாலயங்களில் கொண்டாடுகிறோம் ..

“ ராத்ர “ என்னும் சொல்லுக்கு செயலற்று ஒடுங்கி நிற்கும் காலம் என்று பொருள் .. இதனையே சம்கார காலம் அல்லது பிரளயகாலம் என்று குறிப்பிடுவர் .. ஒவ்வொருநாள் இரவும் உயிர்கள் தூக்கத்தில் ஒடுங்கி செயலற்று விடுகின்றன அதனையே “நித்திய சிவராத்திரி”
என்று குறிப்பிடுவர் ..

தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது “பட்ச சிவராத்திரி ..
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவது “ மாத சிவராத்திரி “
சோமவாரமான திங்கட்கிழமையில் சிவராத்திரி வந்தால்
“ யோக சிவராத்திரி “
மாசிமாத சிவராத்திரியே “ மகா சிவராத்திரியாகும் “

அம்பிகையின் கோரிக்கை -
மகாசிவராத்திரியைப் பற்றிய புராணக்கதைகள் பல உள்ளன .. அதில் முக்கியமாகக் கூறப்படும் கதை ஒன்று உள்ளது -
அதாவது பிரளயகாலம் பிரம்மனும் .. அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டனர் .. உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின .. உலகங்களே இல்லாமல் இருந்தது .. இந்த நிலையில் எல்லையில்லாக்கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள் .. அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களையும் படைத்தருளினார் ..

அப்பொழுது உமையவள் சுவாமி ! நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றியகாலம் “ சிவராத்திரி “ என்று பெயர் பெறவேண்டும் என்றும் .. அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைபிடிக்கவேண்டும் என்றும் .. அதை கடைபிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிரார்த்தித்தாள் .. இறைவனும் அவ்வாறே என்று அருள்புரிந்தார் ..
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம்பெருமான் .. சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்கள் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது ..
இப்புனித நாளில் நாமும் ஈசனைத் துதிசெய்து நல்லாசி பெறுவோமாக ! ஓம் நமசிவாய !
வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..

Image may contain: 3 people





எது செய்யினும் என் பாலகர்
அதுவோ இதுவோ என்ற குழப்பம் எனக்கில்லை
இவர் தான் என் ஆன்ம பலம்
இவர் தான் என் ஆன்ம குரு
என் ஆன்மாவுக்கு மிக பழக்கமானவர்
ஜென்மாந்திர உறவு எனக்கு
என் பிழை சரி செய்தவர் இவர்
என் பலமுடன் பலவீனமும் தெரிந்தவர்
துன்பம் வரும்போது தன் காலடியில்
இருத்தி எனைத் தேற்றியவர்
நெடுநாள் பந்தத்தைக் கண்டஓர் துடிப்பு
ஏன் எனை விட்டுப் பிரிந்திருந்தீர்கள்
என்னை முன்னரே வந்து
ஆட்கொள்ளக்கூடாதா என்றதற்கு
நான் உன்னுடனே இருந்தேன் என்றார்
வருடா வருடம் குருசுவாமியுடன் வரும்போது
நீ என்னை அடையாளம் காணவில்லை என்றார்
உயிர்கள் யாவும் பாலகர்
விலங்கும் தாவரமும் பாலகர்
நானும் நீயும் பாலகர்
அன்பில் ஏழை பணக்காரனெனும்
பேதம் உண்டோ
அன்னம் உவந்தளி அன்பை அள்ளிக்கொடு
பாலகர் உன் அருகில் இருப்பார்

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE PROTECT YOU FROM SINS & ALL THE EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH WEALTH & HAPPINESS .. " OM MURUGA " 

” பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா ! 
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா 
நம்பியவர் வந்தால் ! நெஞ்சுருகி நின்றால் ! கந்தா ! 
முருகா ! வருவாய் ! அருள்வாயே “ 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று எங்கள் எண்ணம் .. சொல் .. செயலுக்கு எட்டாதவன் .. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவரும் பரம்பொருளாகிய முருகப்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் வேண்டிய வரங்களை தன் பன்னிருகரங்களாலும் வாரிவழங்கும்படி பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! 

ஆறு என்ற எண் முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது .. 
அவனது திருமுகங்கள் - 6
கார்த்திகைமாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன் 
அவனது மந்திரம் ஆறெழுத்து 
“ நமகுமாரய “ அல்லது “ சரவணபவ “ 
அவனது இருப்பிடம் அறுபடைவீடுகள் 
அவனுக்குரிய விரதநாட்களில் சஷ்டி விரதம் ..
மஹாகந்தசஷ்டியில் ஆறாம்நாள் சூரசம்ஹாரம் ..

முருகன் என்ற பெயரும் 6 பொருளைக் கொண்டது ..
தெய்வத்தன்மை .. மணம் .. இனிமை .. இளமை .. மகிழ்ச்சி
அழகு ஆகிய 6 தன்மைகளை உடையவன் முருகன் .. 

கிழக்கு .. தெற்கு .. வடக்கு .. மேற்கு .. மேல் .. கீழ் என்ற 6 திசைகளிலும் பார்வை உள்ளதால் ஆறுமுகன் என்கிறார் அருணகிரிநாதர் .. 

ஈசானம் .. தத்புருஷம் .. வாமதேவம் .. அகோரம் .. சத்யோஜாதம் என்ற ஐந்துடன் “ அதோமுகமும் “ சேர்ந்ததுவே ஆறுமுகம் .. 
சரவணபவ - என்பது ஷடாக்ஷ்ர மஹாமந்திரம்
(6 எழுத்துகள்) 
இதன் மகிமை - 

ச - லக்ஷ்மிகடாக்ஷ்ம்
ர - சரஸ்வதி கடாக்ஷ்ம்
வ - போகம் - மோக்ஷ்ம்
ண - சத்ரு ஜெயம் 
ப - ம்ருத்யுஜயம் 
வ - நோயற்ற வாழ்வு .. 
ஓம் நம சரவணபவாய என்பது குஹதசாக்ஷ்ரம்
ஓம் நம சரவணபவ நம ஓம் என்பது குஹத்வா தசாக்ஷ்ரம்

ஜோதிடசாஸ்திரத்தின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம் .. ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் .. தடைகளும் நீங்கி வளமான வாழ்வு அமைந்திட ஆறுமுகப்பெருமானை சரணடைவோமாக ! 

” ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

 Image may contain: 3 people

SWAMIYE SARANAM IYYAPPPA...GURUVE SARANAM




GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE " SHATTILA EKADASI " 
ON THIS EKADASI DAY OFFERING SESAME SEEDS WITH WATER & FOOD TO THE POOR WILL WASH AWAY ALL THE EVIL DEEDS & SINS & BE BLESSED WITH HAPPINESS TOO .. 
" OM NAMO NAARAAYANAAYA " 

” குலந்தரும் செல்வம் தந்திடும் 
அடியார் படுதுயர் ஆயின எல்லாம் 
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும் 
அருளொடு பெருநிலம் அளிக்கும் 
வலந்தரும் மற்றும் தந்திடும் 
பெற்றதாயினும் ஆயின செய்யும் 
நலந்தரும் சொல்லை நான்கண்டுகொண்டேன் 
’ நாராயணா ’ எனும் நாமமே “ 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் கூடிவருவதால் ஸ்ரீமன் நாராயணனை வழிபடுவது சிறப்பாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் செய்யும் அனைத்து செயல்பாடுகளும் வெற்றியளிக்கவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய தேய்பிறை ஏகாதசித் திதியை
“ ஷட்திலா ஏகாதசி “ என்றழைப்பர் .. திருமாலை வழிபடுவது தான் இந்நாளின் சிறப்பு 
இதில் ஷட் - என்பது 6 என்றும் 
திலம் - என்பது எள் என்றும் பொருள்படும் .. 
இந்நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை 6 விதமாக பயன்படுத்துவார்கள் .. 
1 - எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொள்வது 
2 - எள்தானம் செய்வது 
3 - எள்ளால் ஹோமம் செய்வது 
4 - எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது 
5 - எள் நிரம்பிய நீர் ஸ்நானம் 
6 - எள் அன்னம் உண்பது 

இதனால் பிரம்மஹத்தி .. பசுவதை .. திருட்டு போன்ற கொடியபாவங்களும் கூட களைந்துவிடும் .. மேலும் இவ்விரதம் அனுஷ்டிப்பவரின் இல்லத்தில் என்றும் உணவுப் பஞ்சமே வராது என்று “ பவிஷ்யாத்ர புராணம்”
குறிப்பிடுகிறது .. 

புராணவரலாறு - 
பலதர்மங்கள் செய்த பெண்ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள் .. அங்கு எல்லா வசதிகளும் கிடைத்தாலும் உணவு மட்டும் கிடைக்கவில்லை .. ஏனெனில் பூவுலகில் இருக்கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை .. பின்னர் ஒரு துறவியின் ஆலோசனைப்படி தேவலோகப் பெண்ணொருத்தியின் ஷட்திலா ஏகாதசி விரதப்பலனை இவள் பெற்றாள் .. அதன்பின் அவளுக்கு உணவு கிடைத்தது .. எனவே இந்த விரதத்தைக் கடைபிடிப்போருக்கு பசி என்னும் வேதனையே உண்டாகாது .. 

இந்த விரதத்தினால் நமக்கு சரீரசுத்தி .. ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அன்னம் .. எள் முதலியவற்றை தானம் செய்வதால் தனம் .. தான்யவிருத்தியும் கிட்டுகிறது .. இதனால் இங்கு எந்த பொருட்களை தானம் செய்கிறோமோ அவையாவும் மரணத்திற்குப் பிறகு நமக்கு மேலுலகத்திலும் கிட்டுகிறது என்பது புலனாகிறது 

இதன் அர்த்தம் என்னவென்றால் தார்மீக காரியங்களை அவற்றின் விதிப்படி செய்யும்பொழுது கூடவே தானங்களையும் அவசியம் செய்யவேண்டும் .. தான தர்மங்கள் இல்லாமல் எந்தவொரு தார்மீக காரியங்களும் பூரணமடைவதில்லை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

பகவானைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்தையும் பெற்றிடுவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person