PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM..GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & MAY THE BLESSINGS OF LORD NAARAAYANAA & MAA LAKSHMI BE EVER UPON YOU WITH LOVE .. PEACE & STRENGTH SURROUNDS YOU .. " OM HARI OM "



” பையப் பையப் பயில்வாய் அலையாதிருக்கவே ! மெய்ப்பொருளின் சித்தத்தை நிலைநிறுத்தவே ! 
குருவின் பாதகமலத்தில் குறையாபக்தி வைப்பாயேல் பிறவிச் சிறையினின்று துரிதம் மீள்வாய் உறுதி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மேலானவற்றுக்கெல்லாம் மேலானவனும் .. எவராலும் பக்தியால் அடையக்கூடிய ஒப்பற்றவனாகிய ஸ்ரீவிஷ்ணுபகவானைப் புதன்கிழமையாகிய இன்று துதித்து .. மனதில் நிம்மதியும் .. வாழ்வில் நல்முன்னேற்றத்தையும் தந்தருள்வானாக !
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
சாதாரண மனிதர்களின் பாதங்கள் என்று கூறப்படுவது .. மகான்களுக்கும் .. இறைவனுக்கும் குறிப்பிடும்போது “ திருவடி “ என்றழைக்கப்படுகிறது ஒருவர் தவறு செய்துவிட்டால் வெறுமனே மன்னிப்பு என்று கேளாமல் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினால் உடனேயே மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ கிடைக்கும் .. ஆனால் இறைவன் இறைவன் திருவடியில் சரணாகதி ஆகி .. தவறுக்கு மனமுருகி மன்னிக்கவேண்டினால் சாதாரணமக்களே மனம் இரங்கும்போது மகேசன் மனம் இரங்காதோ..?
மன்னன் பலியின் சிரசில் தன் திருவடியை அழுத்தி பாதாளலோகத்தில் அதிபதி ஆக்கினார் .. 
பிரகலாதனுடைய பக்தியின் தாக்கம் பேரன் மகாபலி சக்கரவர்த்திவரை வந்து பகவான் திருவடி சம்மந்தப்பேற்றினை அடைந்தான் .. 
ராமாவதாரத்தில் சாபம் நீங்கி கல்லாயிருந்த அகலிகை அழகு மங்கையானது ஸ்ரீராமரின் திருவடிகடாக்ஷ்மே !
பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடி அருகே ஏன் அன்னை மஹாலக்ஷ்மி அமர்ந்திருக்கிறாள் என்றால் .. ஜீவன்கள் முக்தி அடைந்ததும் எம்பெருமான் நாராயணனின் திருவடிகளை சேர்கின்றன .. அப்படி சேர்ந்த ஜீவன்களின் சிறு சிறு பாவங்களை களைந்து தூய ஆத்மாவாக இறைவனை அடையச் செய்பவள் கருணையே வடிவான அன்னை மஹாலக்ஷ்மி .. அதனால் தான் திருவடி அருகே இருக்கிறாள் ..
இறைவனின் நேரடி ஸ்பரிசம் நமக்குக் கிட்டுவதில்லை இதற்காகவே இறைவனின் திருவடியாக வெள்ளியிலான உலோக தொப்பி போன்ற சடாரியை கர்ப்பகிரஹத்திலிருந்து எடுத்து வந்து பக்தர்களின் சிரசில் வைப்பார்கள் .. 
சடாரி என்பது - இறைவனின் திருவடியாக சொல்லப்படுகிறது .. எனவே ஒவ்வொருவருக்கும் சடாரி வைக்கும்போது சாட்சாத் பெருமாளின் திருவடியை நாம் நம் சிரசில் தாங்கிக் கொள்வதற்கு இது ஒப்பாகும் ..
பகவானின் திருவடிதனை நம் சிரசில் ஏற்பதால் நம் துர்க்குணங்கள் விலகி நேர்மறை சிந்தனைகள் பெருகி உடலாரோக்கியம் கிட்டும் .. பெருமாள் திருவடிசூடி பேரின்பம் காண்போமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 3 people


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE " PRADOSHAM " TOO .. MAY LORD RELIEVE YOU FROM ALL THE SINS & OBSTACLES FROM YOUR LIFE & SUCCESS & PEACE BE UPON YOU FOREVER .. " HARA HARA MAHAADEVAA ! JAI BHOLE NATH SWAMY SARANAM...GURUVE SARANAM "


Image may contain: indoor
Image may contain: indoor

பேரிடர் நீங்கும் பிணியாதாயினுஞ் சாம்பலாகுமே ! 
மறைபோற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும் ! சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே ! பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம் ஏகித்தெழுதபேறு பெற ப்ருஹந்நாயகியுறை தக்ஷிணமேரு தன்னை கைதொழுதக்கால் சிவனே தரிசனம் தருவான் ! பொய்யல்ல தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க்கே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்தவேளையே பிரதோஷவேளையாகும் (மாலை 4.30 - 6.00 மணிவரையிலான காலவேளையில் ) சிவாலயம் சென்று ஈசனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையை நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கூடாகக் கண்டு தரிசித்து .. நிம்மதியும் .. சந்தோஷத்தையும் .. சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுய்வீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷ பூஜையின் மகத்துவம் யாதெனில் இதில் திரள்வது புண்ணிய சக்திகள் மட்டுமல்லாது இன்றைவனே ! பிரதோஷவேளையில் (மாலை 4.30 - 6.00 மணிவரை) திருநடனக்காட்சி அளிப்பதால் நடராஜத் தத்துவமாகிய “ அனைத்தும் எப்போதும் இறையருளால் இயங்குவதே “ என்ற பேருண்மையை நன்கு உணர்த்துவதாகும் ..
மீனாட்சி ஸுந்தரேஸ்வர ஹாலாஸ்ய நாத ஸ்தோத்திரம் - 
“பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய 
காலப்ரகாந்தி கரளாங்கித கந்தராய 
பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
ஹாலாஸ்ய மத்ய நிலயாய நமஸ்ஸிவாயா “
பொருள் - பக்தர்களுடைய மனக்கவலையைப் போக்கி அருள்பவரே ! மீனாட்சி சுந்தரேஸ்வரா ! 
நமஸ்காரம் ! பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே ! பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே ! பிரதம கணங்களுக்கு ஈஸ்வரரானவரே ! மூவுலகங்களையும் படைத்தவரே! காலகூடவிஷத்தை அருந்தியதன் அடையாளமான கழுத்தை உடையவரே ! ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே ! 
மீனாட்சி சுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் !!
பிரதோஷ தினங்களில் இத்துதியைப் பாராயணம் செய்து சிவ அபச்சாரம் நீங்கி சகலமங்களங்களையும் பெறுவோமாக ! 
” ஹர ஹர மகாதேவா ! ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 

Image may contain: 2 people

SOME MEMORABLE PHOTOS ON THE EVE OF GS 50TH GOLDEN JUBILEE MARRIAGE ANNIVERSARY..




















GOOD MORNING.... HAPPY WEDDING ANNIVERSARY OF GURUSWAMY.... GOLDEN JUBILEE MARRIAGE ANNIVERSARY,.... LET BALAGAR BRINGS ALL HAPPINESS WEALTH AND HEALTH TO GS.. SWAMY SARANAM...

IN WHATS UP MESSAGES ON THE SPECIAL DAY
Guruve Saranam. Affectionately yours. Siva n family 🙏🙏🙏
🙏🙏
[06:30, 5/23/2018] Samy Sridar Panchapakesan: Wishing you a very Happy Wedding Anniversary Guruswamy Mama and Mami 💐💐seek your blessings Swamiye  saranam🙏🙏
[06:33, 5/23/2018] Samy Panchapakesan: Swamiye Saranam Ayappa. Happy Anniversary Anna & Manni. Seeks your blessings always.🙏🙏🙏
[06:34, 5/23/2018] Samy Ganesh Porur: Guruve Saranam 🙏 Hearty wishes to guruswamy and maami.💐
Seeking your blessings on this auspicious day 🙏🙏🙏
[06:47, 5/23/2018] Samy Meenakshi Kannan: Happy 50th wedding anniversary 💐 guruswamy & manni
[06:47, 5/23/2018] Samy Meenakshi Kannan: Swamy saranam
[06:52, 5/23/2018] Samy Kannan: Wish you happy wedding anniversary Guruswamy & manni. Swamy Saranam. Seeking your blessings
[06:53, 5/23/2018] Siva: Swami Saranam. Our Revered n Beloved Guruswamy n Manni Swami, Our Namaskaram on the Auspicious Occasion of Your 50th Golden Jubilee Wedding Anniversary. We Seek Your Blessings on this Great Day. We Wish n Pray, You Be always with us with Very Good Health n Guide us continuously. Guruve Saranam. Affectionately yours Siva Bhuvana n Sresht 🙏🙏🙏
[07:03, 5/23/2018] Mohan: Swamy saranam. Guruve saranam. Our Pranams on your GOLDEN JUBILY day.
Seeking your blessings. Guruve saranam. Swamy saranam.
[07:20, 5/23/2018] Samy Duraisait: Happy 50th wedding anniversary 💐 guruswamy & manni

[07:30, 5/23/2018] Harish Darnia: Swamiye Sharanam Ayyappa...a very happy 50th wedding anniversary to our respected Guruswamy and Amma..
[07:33, 5/23/2018] Suganya: Happy Wedding Anniversary Guruswamy mama and mami 🙏🙏🙏🙏💐💐💐 Namaskaram🙏
[07:35, 5/23/2018] Swamy Seshan: Happy wedding anniversary to my guruswamy and Manni.
[07:40, 5/23/2018] Rajeev Naik: Happy wedding anniversary to my Guruswamy and Mammi🙏🙏🙏
Om Swammye sharanam Ayyappa💐💐💐
[07:41, 5/23/2018] Siva: Swami Saranam. Dear Venkat, Many more Happy Returns of the day. We Pray that The Grace of Panvel Balagar and Guruswamy be always with you n your family and bless you with all Prosperity, Good Health n Wealth and Your life filled with Joy. Guruve Saranam. Affectionately yours. Siva n family🙏🙏🙏
[07:43, 5/23/2018] Swamy Thirumalai Raman: Happy Wedding Anniversary Guruswamy mama and mami 🙏🙏🙏🙏💐💐💐 Namaskaram🙏.
[07:45, 5/23/2018] Ramakrishnan: Many happy wedding anniversary Guruswamy Anna. My namaskaram to you AND manni on the auspices occasion🙏🏻💐💐💐💐💐💐🙏🏻
Rao : Guruve saranam. Guruvin padharavindhangale saranam.
A very very Happy wedding anniversary to Guruswamy and Manni. We seek your Blessings. Ever loving rao and lalitha

[07:51, 5/23/2018] Vaikundham: மகிழ்ச்சி
[08:00, 5/23/2018] Nagu New: Guruvae Saranam
Swamy Saranam Seek your & mami blessings on this golden jubilee occasion.
I was present during silver jubilee celebrations,
missed to be present during golden jubilee...
[08:04, 5/23/2018] Kannansamy Nga: Swamiye saranam iyyappa our namaskarams to you and Manni on the occasion of your happy 50th  wedding anniversary seeking your blessings and asirvathams
[08:10, 5/23/2018] Ayyappa Ganesan Madi: Guruvea saranam. 🙏🙏🙏🙏🙏
[08:10, 5/23/2018] Shivram Swamy: Happy 50th marriage anniversary dear Guruswamy and manni. Wish you both more years of togetherness and a very healthy life ahead. We seek your blessings on this auspicious day

[08:52, 5/23/2018] Rao Swamy: Many happy returns of the day venkat swamy. All the best rao lalitha
[09:07, 5/23/2018] Anupkumar Tirumalai: Happy Wedding Anniversary Guruswami and Mami.

[09:32, 5/23/2018] Samy Sudhagar: Om Shree Swamiye Sharanam Ayyappa. Satgurunathare Shranam Ayyappa. Om Shree Guruvinapadaravindhangale Shranam Ayyappa. Guruvararige Sharanam. Sarva Mangala Dayakare Shranam Ayyappa. Sarvaroga Nivarana Shree Dhanvantari Moorutiye Sharanam Ayyappa. Om Shree Swamiye Sharanam Ayyappa
[09:34, 5/23/2018] Samy Sudhagar: Swami Sharanam Guruswami. Wishing you and Mami a very Happy 50th Marriage Anniversary and many more years of togetherness and a very healthy life ahead. We seek your blessings on this auspicious day. God Bless. Om Shree Swamiye Sharanam Ayyappa
[09:34, 5/23/2018] +91 80562 17557: Happy wedding anniversary.   Anna. and manni.    our namaskaram🍎🍎🍬🍬🍬
[09:34, 5/23/2018] +91 80562 17557: lakshmisankaran
[09:35, 5/23/2018] Samy Sudhagar: Wish you many Happy Returns on your Birthday Venkat Anna. God Bless. Om Shree Swamiye Sharanam Ayyappa
[09:41, 5/23/2018] Samy Nagaraj Dubai: Guruswami swamy saranam. Many more happy returns of the day 

[11:05, 5/23/2018] Guruswamy: Blessings Manoharan GS
[11:05, 5/23/2018] MANOHAR: Happy 50th wedding anniversary to Guruswami.💐💐


[11:48, 5/23/2018] Samy Sridar Panchapakesan: Swamiye saranam🙏🙏
[12:01, 5/23/2018] +91 92844 03259: Happy 50th wedding anniversary to Guruswamy ji & Amma.
Om swamiye sharanam ayyappa..🙏🙏🙏




[13:14, 5/23/2018] Samy Vaibhav: Swamiye Sharanam Ayyappa...a very happy 50th wedding anniversary to our respected Guruswamy and Amma🙏
[13:15, 5/23/2018] Samy Vaibhav: A very happy birthday to you Venkat Anna🙏
[13:36, 5/23/2018] CA Sharad Shetty: Happy 50th wedding anniversary to Guruswami and Amma.💐💐
🙏
[[14:46, 5/23/2018] +91 98331 76483: Happy 50th Wedding Anniversary
[14:47, 5/23/2018] +91 98331 76483: From Seethapathy Other n family
[14:47, 5/23/2018] +91 98331 76483: Iyer

[[15:29, 5/23/2018] Latha: Happy 50th wedding anniversary to guruswami and Amma.  Namaskaram🙏🙏
[15:33, 5/23/2018] Samy Viswanathan: Happy 50th wedding anniversary to respected Guruswamy ji & Amma.


[15:57, 5/23/2018] +91 94444 59445: Our namaskaram to Guruswamy and    manni on the 50th wedding anniversari wishing your blessings sethu uma
[15:58, 5/23/2018] Ayyappa Ganesan Madi: Guruvea  saranam👏👏👏👏


[20:30, 5/23/2018] J C S: Swamy saranam
Guruvae Saranm
our pranam to you both on your golden jubily day
seek your blessings
jcs uma vishal vaishnavi



SWAMY SARANAM..GURUVE SARANAM.GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE PUNARVASU STAR (PUNARPOOSAM) SHREE RAMA IS THE 7TH AVATAR OF LORD VISHNU .. IT IS BELIEVED THAT A CALMNESS ENGULFS AS ONE INDULGES IN WRITING THE "SHREE RAMA JEYAM " .. BRINGING IN MORE CLARITY OF MIND .. TOLERANCE & STRENGTH TO WITHSTAND OBSTACLES IN LIFE .. " JAI SHREE RAM " .. STAY BLESSED..


 கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ ! 
அந்தி காலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்தி தர்ப்பணங்களும் ஜபங்களும் தபங்களும் சிந்தை மேவு ஞானமும் தினம் ஜபிக்கும் மந்திரமும் எந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே “ (நம்மாழ்வார்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சனிக்கிழமையாகிய இன்று ஸ்ரீராமனுக்கு உகந்த புனர்பூச நட்சத்திரமும் கூடிவருவது சிறப்பே ! இந்நாளில் தங்களனைவரின் இன்னல்கள் யாவும் களையப் பெற்று .. நல்லாரோக்கியமும் .. வாழ்வில் மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திட ஸ்ரீராமபிரானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தசரதாய வித்மஹே ! 
சீதாவல்லபாய தீமஹி ! 
தந்நோ ராம ப்ரசோதயாத் !!
மனிதன் உலகில் எப்படி வாழவேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீராமாவதாரம் ! பங்குனிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில் கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன ..
தர்மம் காக்க அவதரித்த ஸ்ரீராமன் தர்மம் அழிந்து அதர்மம் தலை எடுக்கும்போதெல்லாம் மண்ணுலகையும் .. மக்களையும் காக்க மஹாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தார் என்கின்றன புராணங்கள் ..
இதில் 7வதாக எடுத்த ராம அவதாரமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது .. முந்தைய அவதாரங்களான மச்சம் .. கூர்மம் .. வராகம் .. நரசிம்மம் .. வாமனர் .. பரசுராமர் ஆகியவை நீர்வாழ்வனவாகவும் .. விலங்காகவும் .. விலங்கும் மனிதனும் இணைந்தும் காணப்படும் ..
இந்த ராம அவதாரத்தில் தான் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவனும் அனுபவித்து .. அதன்மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார் ..
ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன் .. சீதாதேவியை மணந்து .. ஏகபத்தினி விரதனாக இருந்தார் .. தந்தை செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார் ..
அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்து மக்களைக் காத்தார் .. இவரது சிறப்புகளை விளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது .. இதில் ராம அவதாரத்தைப் பற்றியும் அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது ..
ஸ்ரீராம நாமத்தின் மகிமை பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது .. ராமநாமம் சொல்வதும் ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும் .. பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது .. இறைஞானத்தைத் தூண்டுகிறது .. அறியாமை .. காமம் .. தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது .. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள்கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .. 
ராம நாமத்தைச் சொல்லி தசரத மைந்தனின் அருட்கடாக்ஷத்தைப் பெறுவோமாக !
” ஸ்ரீராம் ஜெயராம் ! ஜெயஜெயராம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 5 people

SWAMY SARANAM... GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD BRIHASPATHI .. MAY THE GOD OF WISDOM RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH PEACE & SUCCESS .. " JAI SHREE GURUDEV "

Image may contain: one or more people, flower and plant மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி ! நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும் இறையவன் குருவியாழன் இருமலர்ப் பாதம் போற்றி ! போற்றி “
(நல்வாழ்க்கை அமையும்)

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று .. வாக்கிற்கும் .. அறிவுக்கும் அதிதேவதையான குருபகவான் பிரஹஸ்பதியைத் துதித்து தங்களனைவரது தோஷங்கள் யாவும் நீங்கப்பெற்று .. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கவும் .. மகிழ்ச்சியும் நல்லாரோக்கியமும் பெற்றிடவும் குருபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வ்ருஷப்த்வஜாய வித்மஹே !
க்ருணி ஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரயதிதேவதா ஸகித
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !!
நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுவது குரு நவக்கிரக சன்னிதிகளில் நவக்கிரகங்களுள் ஒருவராக குரு அமர்ந்திருப்பார் .. அவருக்கு தேவகுரு .. பிரஹஸ்பதி .. வியாழபகவான் எனப் பலபெயர்கள் உண்டு ..
பிரஹஸ்பதி என்றால் - அறிவில் சிறந்தவர் என்றும்
குரு என்றால் - இருளைப் போக்குபவர் என்றும் பொருள் ..
ஜோதிடப்படி குருபலம் இருந்தால்தான் எதிலும் வெற்றி பெறமுடியும் என்பது நம்பிக்கை .. குருவைப் பொறுத்தமட்டில் பெயர்ச்சி ஆவதற்கு முன்னரே பெயர்ச்சி பலன்களைக் காட்டிவிடக்கூடியவர் .. அதனால் குருப்பெயர்ச்சிக்கு முன்னரும் .. அன்றும் .. பின்னரும் வழிபடுவதால் கேட்டவரம் பெற்று மனமகிழ்ச்சியை அடையலாம் .. குரு சந்நிதியில் நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும் அவற்றைக் காலாகாலத்தில் நிறைவேற்றி நலம்பல பெறவைப்பார் என்பது ஐதீகம் ..
குழந்தைகள் நல்லபடியாக படித்து முன்னேறவும் குருபகவான் தான் அருளவேண்டும் .. கல்வியில் முன்னேற்றம் .. வேத வேதாந்த சாஸ்திர அறிவு .. நல்ல புத்தி .. ஞாபகசக்தி அனைத்தையும் வழங்குபவர் குருபகவான் தான் .. படித்தேறிய குழந்தைகளுக்கு உரிய பதவியை வழங்குபவரும் குருபகவானே !
” குருபார்க்க கோடி நன்மை “ என்பது பழமொழி .. அத்தனை சக்திவாய்ந்தது குருவின் பார்வை .. இவர் அமரும் வீட்டைவிட .. பார்க்கும் வீட்டிற்கு தான் யோகம் அதிகம் ..
வியாழனன்று மஞ்சள் நிற பட்டு சாத்தி .. கடலை நிவேதனம் செய்து குருஸ்லோகம் சொல்லி வழிபட்டால் வாழ்வில் சுகம் உண்டாகும் ..
குருபகவானைப் போற்றுவோம் ! நல்ல வாக்குவன்மையும் .. ஞானத்தையும் பெறுவீர்களாக !
“ ஓம் ஸ்ரீ குருவே நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & MAY THE LOVE & BLESSINGS OF LORD KRISHNA FILL YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " JAI SHREE KRISHNA s SWAMY SARANAM GURUVE SARANAM





” சிறுபாத சதங்கை குலுங்கிடவே நீ வரவேண்டும் !
உன் தித்திக்கும் வேணுகானம் கேட்டிட வேண்டும்
திருதுளாய் மணமும் கமழ்ந்திடவேண்டும் 
உன் திவ்ய ரூபதரிசனமும் கிடைத்திடவேண்டும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் புதன்கிழமையாகிய இன்று “ ரோகிணி “ நட்சத்திரமும் கூடிவருவது மேலும் சிறப்பைத்தருகின்றது .. மஹாவிஷ்ணுவின் 9வது அவதாரமாகிய ஸ்ரீகிருஷ்ணபகவானை இன்று போற்றித் துதித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசீர்வாதமும் தங்கள் இல்லத்திற்கும் .. உள்ளத்திற்கும் கிடைக்கப் பிரார்த்திப்போமாக !
ஓம் மஹாபுருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத் !!
கிருஷ்ண அவதாரத்தில் பகவான் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும் .. சுதர்சனம் என்ற சக்கரத்தையும் ஆயுதமாகக் கொண்டார் ..
யுகங்கள் நான்கு - கிருதயுகம் .. திரோதாயுகம் .. துவாபரயுகம் .. கலியுகம் ஆகும் .. இந்த நான்கும் சேர்ந்தால் ஒருசதுர்யுகம் (101) ஆகும் .. ஒவ்வொரு சதுர்யுகமும் முடிந்து முதல்யுகமான கிருதயுகம் தோன்றும் .. பகவான் பல சதுர்யுகங்களில் பலமுறை அவதாரம் எடுத்து உள்ளார் ..
“ பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய சதுஷ்க்ருதாம் !
தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி யுகே ! யுகே “
(கீதை - 4-8)
எப்பொழுது எங்கு தர்மம் தலைசாய்ந்து அதர்மம் தலையோங்குகிறதோ !! அப்பொழுது அங்கு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் யுகம் தோறும் அவதரிக்கின்றேன் ! என்று கிருஷ்ணபகவான் பகவத்கீதையில் நேரிடையாகக் கூறியுள்ளதற்கிணங்க அவரின் அவதாரம் திகழ்கின்றது ..
கிருஷ்ணரின் அருளைப் பெற “ கீத கோவிந்தம் “ .. ஸ்ரீமன் நாராயணீயம் “ .. “ கிருஷ்ண காணாம்ருதம் “ ஆகிய ஸ்தோத்திரங்களால் துதித்து வணங்கவேண்டும் ..
கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும் .. குழந்தைகளுக்கு மூர்க்ககுணம் ஏற்படாது .. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள் .. அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்
பெண்கள் கண்ணனை மனமுருகி போற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் விலகி கல்யாணம் கைகூடும் ..
விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும் .. மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும் ..
கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களுக்கும் .. கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி ..
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாயா “ என்று ஜெபித்தால் ஸ்ரீகிருஷ்ணர் பார்வை படும் ..
மஹாவிஷ்ணு எடுத்த 9வது அவதாரம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்யவேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் ஸ்ரீகிருஷ்ணர் உணர்த்தியுள்ளார் ..
பகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் பரிபூரணமான நிறைவையும் .. மகிழ்ச்சியையும் தந்தருள்வாராக !
“ ஜெய் ஸ்ரீகிருஷ்ணா “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

SWAMY SARANAM... GURUVE SARANAM....OOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A HAPPY WEEKEND TOO .. MAY LORD HANUMAN SHOWER YOU WITH GOOD STRENGTH .. POWER & WISDOM & FULFILL LL YOUR DESIRES TOO .. " JAI SHREE RAM ! JAI SHREE HANUMAN "


Image may contain: 1 person, flower
Image may contain: 2 people, indoor
Image may contain: indoor


ஆயுள் வளரும் உன்னாலே ! 
அழகும் வலிவும் உன்னாலே ! 
பாயும் நோயும் பல்பகையும் பறந்து போகும் உன்னாலே ! கோயில் எனது நெஞ்சகமாம் ! 
கூறும் கவிதை மந்திரமாம் ! தேயம் தழுவும் புகழானே! 
சித்தம் இரங்காய் அனுமானே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சனிக்கிழமையாகிய இன்று சக்தியும் நல்ல புத்தியும் கொடுக்கும் சமய சஞ்சீவி ஸ்ரீராமனின் தூதனாகிய ஸ்ரீஆஞ்சநேயனைத் துதித்து கவலைகள் மலையளவு என்றாலும் அனைத்தையும் தகர்த்து .. தைரியம் .. மனோபலத்தையும் தந்தருள்வானாக !
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ! 
வாயுபுத்ராய தீமஹி ! 
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் !!
அஞ்சனையின் மகனாக அவதரித்தவரும் .. தெய்வீக புருஷரும் .. அனந்தன் என்னும் ஆதிசேஷனால் போற்றி வணங்கப்படுபவராகிய ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும் ..
அனுமனுக்கு பிடித்த அர்ச்சனை பொருட்கள் - 
வடைமாலை .. வெற்றிலைமாலை .. துளசிமாலை .. சிந்தூரம் .. பசுநெய் .. பழங்கள் ..
ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராமகடாக்ஷ்ம் பெற்று நல்ல கல்வி செல்வம் பெறலாம் 
அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை எடுத்துரைத்தபோது மகிழ்ந்த சீதை அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையிஅக் கிள்ளி அனுமனின் சிரசில் வைத்து ஆசீர்வதித்தாள் .. “ இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்று “ .. வெற்றிலையைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றிபெற வெற்றிலைமாலை ஆஞ்சநேயருக்கு சாத்துகின்றனர் ..
திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது மணமக்களுக்கும் அவர்களை ஆசீர்வதிப்பவர்களது வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையவேண்டும் என்பதற்குத்தான் .. 
வடைமாலை அணிவித்து தானம் செய்தால் செல்வ வளம் பெருகும் ..
ராம ராவண யுத்தத்தின்போது ஸ்ரீராமனையும் .. லக்ஷ்மணனையும் தன் தோளில் சுமந்துகொண்டு அனுமான் சென்றபோது ராவணனால் சரமாரியாகத் தொடுக்கப்பட்ட சக்திமிகுந்த அம்புகளால் தாக்கப்பட்ட அந்தக் காயத்திற்கு மருந்தாகத் தன் உடம்பில் வெண்ணை பூசிக்கொண்டாராம் .. வெண்ணை சீக்கிரமாக உருகும் தன்மை கொண்டது .. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்தகாரியம் நடந்துவிடும் என்ற நம்பிக்கை அதனால் வெண்ணை சாத்தும் பழக்கம் ஏற்பட்டது ..
அனுமனை வழிபட்டு ஆசிபெறுவோமாக ! 
“ ஜெய்ஸ்ரீராம் ! ஜெய்ஸ்ரீஹனுமான் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 8 people, people smiling

Image may contain: indoor