PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM..GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SOMVAR VIRADAM TOO . MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS & EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA "




” சிவாயநம வென்றாலே சிந்தை தெளியும் ! 
அவாவும் அகன்றே அழியும் ! 
சிவாயநம வென்னும் பெயரேதான் வெற்றிக்கடித்தளமாம் ! 
என்றும் துதிப்பாய் எழுந்து “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது 
இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சிவ விரதங்களுள் சோமவார விரதமும் மேலானதாகும் .. 
“ சோமன் “ என்றால் - உமையுடன் கூடிய சிவன் என்று பொருள் .. அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு .. சந்திரனுக்குரிய தினம் திங்கள் .. எனவே திங்கட்கிழமை சோமவாரம் என அழைக்கப்படுகிறது
திங்கட்கிழமைக்கு உரிய சந்திரன் மனோகாரகன் எனப்படுபவன் .. நமக்கு விளையும் நன்மைக்கும் தீமைக்கும் மனமே மூலகாரணம் .. மனம் கொண்டு விளைந்த அவலங்களுக்கு வருந்தி அவற்றிலிருந்து நாம் விலகுவதற்கே வழிபாடு ..
சோமவாரத்தில் சங்காபிஷேகத்தை தரிசித்தால் ஆயுள்விருத்தி உண்டாகும் .. தீராத நோய்களும் தீரும் துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை ..
“ சங்கமத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி!
அங்கலக்ஷ்ணம் மனுஷ்யாணான் ப்ரும்மஹத்தியாதிகம் தகேத் “
என்ற வேதவாக்கியத்தின்படி ஈசனுக்குச் செய்த சங்காபிஷேக தீர்த்தத்தைத் தெளித்துக் கொண்டால் பிரம்மஹத்தி தோஷங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை .. 
சோமவாரத்தில் பரமனை வழிபட்டு வரம் பல பெறுவோமாக ..
தென்னாடுடைய சிவனே போற்றி ! 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! 
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி ! 
கயிலை மலையானே போற்றி ! போற்றி !
“ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, sitting


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE GOPASHTAMI DAY TOO .. MAY LORD KRISHNA STEAL ALL YOUR TENTIONS .. WORRIES & SHOWER YOU WITH LOVE .. PEACE & HAPPINESS .. " JAI SHREE KRISHNA " GOPASHTAMI DAY FALLS ON ASHTAMI THITHI .. IT IS A FAMOUS FESTIVAL IN MATHURA .. VIRINDAVAN & OTHER BIRAJ AREAS .. COWS & THEIR CALF ARE DECORATED & WORSHIPED .. THE RITUAL OF WORSHIPPING COWS IS SIMILAR TO GOVATSA DWADASHI IN MAHARASHTRA .. " JAI SHREE KRISHNA " .

 கோமாதா எங்கள் குலமாதா ! 
குலமாதர் நலம் காக்கும் குணமாதா ! 
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா !
வண்ண கோமாதா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் இன்றைய வளர்பிறை அஷ்டமித் திதியை “கோஷ்டாஷ்டமி” என்றும் “கோபாஷ்டமி” என்றும் அழைப்பார்கள் .. இன்றைய நாளில் கோமாதாவைத் துதிப்பது சிறப்பு .. தங்களனைவரது மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாத் திகழ கோமாதாவையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரையும் பிரார்த்திக்கின்றேன் ..
பசு காயத்ரி மந்திரம் -
ஓம் பசுபதயேச வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ பசுதேவி ப்ரசோதயாத் இன்று கோமாதாவை நமஸ்காரம் செய்து அகத்திக்கீரை .. புல் .. முதலியவற்றை உண்ணக்கொடுத்து நீரையும் பருகச்செய்து பக்தியுடன் வணங்கவேண்டும் .. இதனால் அனைத்து தெய்வங்களின் அனுக்கிரஹங்களும் கிடைக்கப்பெற்று பாவங்கள் விலகி சகல மங்களங்களும் உண்டாகும் ..
அனைத்து உயிரினங்களுக்கும் தோஷம் உண்டு .. ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசுமட்டுமே ! ஒருபசுவை ஒருநாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாலும் .. பார்ப்பவருக்கு பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம் .. ஒரு பசுவுக்கு ஒருநாள் தண்ணீர் தந்தவரினது முன்னோர்களுக்கு ஏழுதலைமுறைகளுக்கு பலன் கொடுக்கும் ..
கோமாதாவைப் போற்றுவோம் அழியாச் செல்வமும் மங்களமும் உண்டாகட்டும் .. 
“ ஓம் பசுபதயே நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 
Image may contain: 2 people, people smiling, outdoor.

SWAMY SARANAM...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE SKANDASHASHTI VIRADAM TOO .. MAY THE DIVINE BLESSINGS OF LORD MURUGA BRING HAPPINESS & PEACE AROUND YOU WITH HIS ETERNAL LOVE & STRENGTH .. " OM MURUGA "


 மலைக்குத் தெய்வமான குறிஞ்சிநாதனே !
அன்பர் குறைகளைப் போக்கும் குகப்பெருமானே !
மயிலேறும் மாணிக்கமே ! தயாபரனே ! 
முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து வாழ்க்கைப்பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் கந்தசஷ்டி மூன்றாம் நாளாகிய இன்று உலகத்தின் புற இருளைப் போக்க நீலக்கடல்மீது சூரியன் உதிப்பது போல .. நம் அக இருளைப்போக்க நீலமயில்மீதமர்ந்து எமைக் காத்தருளும்படி கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !!
கந்தசஷ்டி விரதநாட்களில் ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் .. தனித்து .. விழித்து .. பசித்து இருக்கவேண்டும் .. உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும் ..
உணர்வுகளை அடக்கி .. உள்ளத்தை ஒருநிலைப்படுத்து கந்தப்பெருமானின் பெருமைபேசி இம்மைக்கும் .. மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது ..
கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போருக்கு .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள்கிட்டும் .. சகலசெல்வங்களையும் .. சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும் ..
“ சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் “ என்பதற்கேற்ப கந்தசஷ்டியில் விரதமிருந்தால் 
“ அகப்பையாகிய கருப்பையில் “ கரு உருவாகும் என்பதும் .. 
“அகப் பை “ எனும் உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் 
“ பக்தி “ எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறைபொருள்களாகும் ..
முருகனை உளமாறத் துதித்து .. குறையாத பொருட்செல்வத்தைப் பெறுவீர்களாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

Image may contain: 1 person

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND & A DIVINE SKANDA SHASHTI VIRADAM TOO .. MAY LORD MURUGA PROTECT YOU FROM ALL THE EVIL FORCES & MAY YOU BE BLESSED WITH LOVE .. PEACE & HAPPINESS .. " OM MURUGA "GURUVE SARANAM...SWAMY SARANAM



” மூவிரு முகங்கள் போற்றி ! 
முகம்பொழி கருணை போற்றி ! 
ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி ! 

காஞ்சி மாவடி வைகுஞ்செவ்வேள் மலரடி போற்றி !
அன்னான் சேவலும் மயிலும் போற்றி ! 
திருக்கைவேல் போற்றி ! போற்றி “ 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் கந்தசஷ்டி இரண்டாம் நாளாகிய இன்று கந்தப்பெருமானைப் போற்றித் துதித்து தங்கள் அனைவரும் சகலசௌபாக்கியங்களும் பெற்று .. மங்களகரமான வாழ்வினையும் பெற கந்தவேலனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !! 

அனாதியாகவே செம்பில் களிம்பு போன்று ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கமும் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து இறுதியில் பிறப்பு .. இறப்பு அற்ற மோக்ஷ்நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும் .. 

எனவே முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்மவினைகளை மிகவிரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம் .. 

ஆணவம் .. கன்மம் .. மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம் .. கோபம் .. பேராசை .. செருக்கு .. மயக்கம் .. தற்பெருமை ஆகியவற்றை அழித்து முற்றுணர்வு வரம்பிலாற்றல் தன்வயமுடைமை .. வரம்பின்மை .. இயற்கையுணர்வு .. பேரருள் ஆகிய தேவகுணங்களை நிலைநாட்டுவதால் “ ஒப்பரும் விரதம் “ என கந்தசஷ்டி விரத மஹிமையைப் பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து கூறுகின்றது .. 

கந்தனைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! 
ஓம் சரவணபவாய நமஹ ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
Image may contain: 3 people, people standing, sky and outdoor

SWAMY SARANAM...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " SKANDASHASHTI VIRADAM " TOO .. MAY LORD MURUGA BLESS YOU & GUIDE YOU & REMOVE ALL THE EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH & HAPPINESS .. " OM MURUGA "




ஆனைமுகப் பெருமானின் தம்பியே ! 
ஆதிபராசக்தியின் புதல்வனே ! 
வள்ளிக்கு வாய்த்தவனே ! 
குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே ! சஷ்டிநாதனே ! 
சூரபத்மனுக்கும் பெருவாழ்வளித்த புண்ணியமூர்த்தியே ! எங்கள் தவறுகளையும் மன்னித்து அருள்வாயாக “
அனைவருக்கும் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஐப்பசிமாத முதல் சுக்கிரவாரமும் (வெள்ளிக்கிழமையும்) முருகப்பெருமானுக்கு உகந்த 
“ கந்தசஷ்டி “ விரத முதல் நாளும் கூடிவரும் இந்நாளில் சஷ்டிவேலனைத் துதித்து தாங்கள் வேண்டிய வரங்கள் யாவும் வேண்டியவாறே பெற்றிடவும் .. நோய்நொடிகள் யாவும் நீங்கி வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலவிடவும் .. கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேனாய தீமஹி ! 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !!
கந்தசஷ்டி விரதம் ஐப்பசிமாதம் சுக்கிலபட்சத்து பிரதமைமுதல் ஆறாம்நாளான சஷ்டிதிதிவரை நோற்கப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த சிறப்பான நோன்பாகும் .. அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி .. மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காக சைவைப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதமாகும் ..
ஊணைஉருக்கி .. உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல்நிலைக்குத் தகுந்தாற்போல் கடைபிடிப்பர் .. 
சிலர் ஆறுநாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும் 
சிலர் பானம் மட்டும் அருந்தியும் .. 
பலர் முதல் ஐந்துநாட்களும் ஒருநேரம் உணவு உண்டு கடைசிநாளான ஆறாம்நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் .. 
ஏழாம்நாள் காலை முருகனாலயம் சென்று வழிபட்டபின் பாரணைமூலம் விரதத்தைப் பூர்த்திசெய்வர் ..
இவ்விரதத்தின் போது தினமும் கந்தசஷ்டி கவசம் .. கந்தர் அனுபூதி .. திருப்புகழ் .. கச்சியப்ப சுவாமிகளின் கந்தபுராணம் ஆகியவற்றைப் படித்தாலோ கேட்டாலோ என்னவென்று சொல்லமுடியாத ஒரு மன அமைதி கிட்டும் ..
“ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

SWAMY SARANAM...GURUVE SARANAM. SARANAM...



ண்களில் விழுந்த தூசை எடுக்கும் உனது கரம் 
மனப் புண்களை ஆற்றும் உன் வரம்
பண்களில் வாழும் உன் நாமம் 
பாட்டினில் ஆடும் உன் கால்கள்

திங்களை முடிமேலணிந்த
சித்தனாய்க் காட்சி தந்தாய்
வில்லினினை ஏந்திய ஶ்ரீ
ராமனாய்க் காட்சி தந்தாய்

எக்குலம் எச்சமயம் என்பதை மறந்து
ஏழுலகத்தாரும் வணங்கும் சீரடி வாசா
பக்கபலமாக நீ இருக்க அச்சமென்பதில்லை
இச்சகத்திலுள்ளோரை காக்கும் துவாரகமாயி சாயி
Image may contain: 2 people

GOOD MORNING...GURUVE SARANAM..SWAMY SARANAM.



Sunrise in Chenganur, Dharshan of Sri Mayapiran Mahavishnu Perumal & This Temple also called as ‘Thirupuliyoor Mahavishnu Temple’, situated in Puliyoor, Alappuzha District of Kerala and also revered as one of the 108 Divya Desam temples, dedicated to Lord Vishnu. Happy Morning Have a Wonderful Wednesday


Image may contain: outdoor
Image may contain: ocean, outdoor and water

GOOD MORNING DEAR FRIENDS ! WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SANKASHTI SADURTHI ( SANKADAHARA SADURTHI ) TOO .. MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH ABUNDANT GOOD LUCK .. BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHREE GANESHAAYA NAMAHA guruve saranam SWAMY SARANAM"

 விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேற்கை தணிவிப்பான் ! 
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் பனிமின் கனிந்து “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்!
இன்று மாலைவரை தேய்பிறை சதுர்த்தித் திதி வருவதால் தும்பிக்கையானை நம்பிக்கையோடு துதித்து நம் சங்கடங்கள் யாவும் நீங்கி .. வாழ்வில் என்றும் வளம்பெற “ சங்கடஹர சதுர்த்தி “ நன்னாளில் விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
பிள்ளையாரை வழிபட சங்கடஹர சதுர்த்தி மிகவும் ஏற்றது .. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாளில் வரும் தேய்பிறை சதுர்த்தி நாளையே சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது .. “ ஹர “ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் ..
இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்டநாட்களாக தீராமலிருந்த நோய்தீரும் .. வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடையமுடியும் .. மிகச் சிறப்பான கல்வி அறிவு .. புத்திகூர்மை .. நீண்ட ஆயுள் நிலையான செல்வம் உண்டாகும் .. சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் என்றும் நம்பப்படுகிறது ..
ஆகவே சங்கடஹர சதுர்த்தி நாளாகிய இன்று அதிகாலையில் நீராடி விரதமிருந்து உணவைத் தவிர்த்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்குச் சென்று அங்கு விநாயகருக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு .. சந்திரதரிசனம் செய்தபின்பு உணவுண்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும் .. விரதமிருக்க இயலாதவர்கள் நீராகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம் ..
ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடியைச் சரணமடைந்து அனைத்து பாக்கியங்களையும் பெறுவோமாக ! ஓம் விக்னேஷ்வராய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: one or more people

swamy saranam guruve saranamGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SHANI DEV .. MAY HE PROTECT YOU FROM ALL EVIL FORCES & BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHANI DEV "


 
நீலாஞ்ஜன ஸமா பாஸம் 
ரவிபுத்ரம் யமாக் ரஜம் 
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் 
தம் நமாமி ஸனைச்ரம் “
பொருள் - மைபோன்று கருமைநிறம் கொண்டவனே !
கருமைநிறம் கொண்டவனே ! சூரியனின் மைந்தனே !
எமதர்மனின் சகோதரனே ! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே ! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே ! சனிபகவானே ! உன்னைப் போற்றுகின்றேன் !
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 3ம் புரட்டாசிச் சனிவாரமாகிய இன்று சனீஸ்வரனைத் துதித்து சனிதிசை நடப்பில் உள்ளோர்கள் தங்கள் தோஷங்களில் இருந்து நிவாரணம் பெற்று தடைகள் நீங்கி சுபயோகம் பெற சனிபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
இந்த புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக்கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும் .. சனிக்கிழமையன்று இல்லாதோர் .. இயலாதோர் .. சாலையோரம் வசிப்பவர்கள் .. தொழுநோயாளிகள் .. பாரம் சுமப்பவர்கள் .. முதியோர்கள் போன்றோர்களுக்கு உணவு .. உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது
சனிதிசை நடப்பில் இருப்பவர்கள் ஏழரைசனி .. அஷ்டமசனி .. கண்டசனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனியில் விரதமிருந்து சனிக்கு அதிபதியாகிய பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தாலும் தடைகள் நீங்கும் .. அனைத்து நலன்களும் பெறுவர் ..
சனிபகவான் பாகுபாடு இல்லாத தர்மவான் .. நீதிமான் என்று சனீஸ்வரரை சொல்லலாம் .. ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி பூர்வபுண்ணிய பலத்திற்கேற்ப நன்மை தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே !
சர்வமுட்டாள்களைக்கூட மிகப்பெரிய பட்டம் .. பதவி என்று அமரவைத்துவிடுவார் .. அதேநேரத்தில் அதிபுத்திசாலி .. பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கிவீசிவிடுவார் .. ஏழை .. பணக்காரன் .. படித்தவன் படிக்காதவன் .. பதவியில் இருப்பவன் .. பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனிபகவானுக்கு கிடையாது .. பலகாரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக்காட்டும் சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும் ..
சனிபகவானுக்குரிய தானியம் கறுப்பு எள் .. எள்ளைப் பொட்டலமாகக் கட்டி மண்சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால் வைத்து நல்லெண்ணைவிட்டு எரிக்கவேண்டும் .. எள்ளுச் சாதம் காகத்திற்கு வைத்துவிட்டு அதன் பின்னரே உண்ணவேண்டும் .. ( மதிய உணவு)
சனிபகவானை வணங்கி சகலதோஷங்களையும் களைவோமாக !
“ ஓம் சனீஸ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

Image may contain: 1 person

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA LAKSHMI .. MAY THE DIVINE GRACE OF HER FULFILL ALL YOUR DESIRES & ENLIGHTEN YOUR LIFE WITH LOVE & HAPPINESS TOO .. " JAI MAA LAKSHMI " SWAMY SARANAM...GURUVE SARANAM SARANAM


மா லக்ஷ்மி தாயே ! மலர் பூத்த மாயே ! 
மாலவனின் மணிமார்பில் மகிழ்ந்திருப்பாயே ! 
அழகுக் அழகான திருமகள் நீயே ! 
அகிலமெல்லாம் போற்ற அலைகடல் உதித்தாயே ! 
செல்வங்கள் யாவற்றிற்கும் அதிபதி நீயே ! 
எந்தச் செல்வம் வந்தபோதும் எந்தன் செல்வம் நீயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று சர்வ மங்களங்களையும் தங்கள் இல்லம்தோறும் வாரிவழங்கிட அன்னை மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
இந்த பூமியே அவள்தான் .. ஒவ்வொரு மனிதரிடமும் கல்வியாக .. பொன் பொருள் என வளர்செல்வமாக 
நெஞ்சுரமாக நல்வாழ்வில் விளையும் மகிழ்ச்சியாக .. கூடிவாழ்வதில் மலரும் அன்பாக .. நிறை வாழ்வில் புகழாக .. இறைவாழ்வில் நித்திய சாந்தியாக பொலிபவள் அவளே ! அன்னை மஹாலக்ஷ்மி !
சர்வமங்களங்களையும் அள்ளித்தருபவள் .. அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத் தேனை அளிப்பவள் .. ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரில் வாசம் செய்பவள் .. பள்ளிகொண்ட பரந்தாமனின் திருமார்பினை அணைந்தவள் ..
வழிபடும் அன்பர்களின் துயரங்களையும் துன்பங்களையும் தொலைத்து அழிப்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மி .. நம்முள் மண்டிக்கிடக்கும் தீமை எனும் தாரித்திரியத்தை அழித்து ஞானம் எனும் ஐஸ்வர்யத்தினை அருள்பவள் அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மியே !
அன்னையைப் போற்றுவோம் ! சகல நலன்களையும் பெறுவோமாக ! 
“ ஓம் சக்தி ஓம் ! மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, smiling


SWAMY SARANAM.GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE FULL MOON DAY .. MAY SHIVSHAKTHI BLESS YOU ALL & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHREE SHIVSHAKTHI "


” அம்மையப்பனை அனுதினமும் தொழுது 
அவர்தம் அடிவாழ எம்மையும் ஆட்கொள்வாய் ஏகனே!
என்றும் இம்மையில் மறுமை வேண்ட தம்மோடு எம்மையும் ஆற்றுப்படுத்திய சிவபார்வதி சிநேகரையும் போற்றுதுமே “ 
ஓம் நமசிவாய !
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நாளில் பௌர்ணமித் திதியும் கூடிவருவது சிறப்பு .. புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமித் திதி பொதுவாக உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருகிறது .. இன்று உமாமஹேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது .. 
அம்மையப்பனைத் துதித்து தாங்கள் நினைத்த காரியங்கள் அத்தனையும் நிறைவேறிடவும் .. கடன் தொல்லை மற்றும் காரியத்தடை அனைத்தும் நீங்கிடவும் சிவசக்தியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
உமையும் .. உமையொருபாகனும் .. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நமக்கு இன்னல்கள் வராமல் அருள்புரிகிறார்கள் .. சிவனின் மகிமையை போற்றி அவர் அருள்பெற அரிய விரதங்கள் பல உள்ளன .. அவற்றுள் ஒன்றுதான் 
“ புரட்டாசி பௌர்ணமி “ .. இன்றைய நாளில் வரும் 
உமாமஹேஸ்வர விரதம் அம்மையும் அப்பனுமாகி அண்டமெல்லாம் படைத்து காத்து அருள்ச்ருரந்தருளி இம்மைக்கும் மறுமைக்கும் தோன்றாத துணையாய் துலங்கி நிற்கும் உமாபதியின் மகிமை போற்றும் இவ்விரதத்தை கடைபிடித்து வேண்டுவன யாவும் பெறலாம் ..
அரியும் அரனும் ஒன்றே ! எங்குமாகி நிறைந்த பரம்பொருளே ! வெவ்வேறு வடிவம் தாங்கி நின்று நமக்கு அருள்புரிகிறது .. நம் மனப்பான்மைக்கு ஏற்றவாறு தாயாகவோ .. தோழனாகவோ .. நம் குழந்தையாகவோ அவரை வழிபட்டு பிறவிப்பிணி அகற்றும் மார்க்கத்தை அறிதல் சிறப்பு ..
புரட்டாசி பௌர்ணமியன்றுதான் ஈசன் திரிபுரம் எரித்ததாக புராணங்களில் கூறப்படுகின்றன .. சிவபிரானை காலையில் வழிபட்டால் - முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும் .. 
மதியம் வழிபட்டால் - முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும் .. 
மாலையில் வழிபட்டால் - ஏழுபிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழிவோதடல்லாமல் விரும்பியன யாவும் வந்துசேரும் ..
அம்மையப்பனைப் போற்றுவோம் ! சகலசௌபாக்கியங்களையும் பெற்றுய்வோமாக ! 
“ ஓம் சிவசக்தி போற்றி ! ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 2 people, people standing


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE PRADOSHAM TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS & EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA "SWAMIYE SARANAM...GURUVE SARANAM



இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் 
உன்கழல் தொழுதெழுவேன் ! 
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கி வேதியனே ! இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று பிரதோஷமும் கூடிவருவது சிறப்பாகும் .. தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி .. வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றுய்ய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
தோஷங்கள் எல்லாம் நீங்கி இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் வீடுபேற்றை அளிக்கும் சக்தி பிரதோஷ விரதத்திற்கும் .. வழிபாட்டிற்கும் உண்டு ..
செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாயன்று கூடும் பிதோஷத்தன்று ஆலயம் செல்வது நன்று .. மனிதனுக்கு வரும் ரூனம் .. மற்றும் ரணத்தை நீக்கக்கூடிய பிரதோஷமே இது ..
பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பல விரதங்களுள் தலையாயது .. இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவர் .. பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 - 6.00 மணி) அலுவலக பணியில் ஈடுபட்டோரும் ஒருவிநாடியேனும் இறைவனை மனதால் நினைத்துக்கொள்வது நலம் ..
பிரதோஷவேளையில் மாலை 4.30 - 6.00 மணிவரையிலான நேரத்தில் நந்திதேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கூடாக கண்டு தரிசிக்க அனைத்து தோஷங்களும் நீங்கி நன்மை உண்டாகும் ..
இறைவழிபாடு என்றுமே குறைகளைக் களைந்து நிறைவினைத் தரும் .. அதுவும் புண்ணிய தினத்தில் வழிபடுவது ஒன்றுக்கு பலநூறுமடங்கு மிகுதியான உயர்ந்த பலன்களைத் தரவல்லது .. இகம் .. பரம் .. வீடு என்ற மும் நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் ..
“ சிவனை நினை ! சிவனை துதி ! சிவயோகம் பெறு “ 
“ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE PAPANKUSHA EKADASHI TOO .. MAY YOU BE BESTOWED WITH THE BLESSINGS OF LORD VISHNU & MAY HE RELIEVE YOU FROM SINS & EVIL FORCES FROM YOUR LIFE .. " OM NAMO NAARAAYANAAYA " SWAMY SARANAM GURUVE SARANAM


 துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே ! ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் !
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன் ! அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே “ 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் . மஹாவிஷ்ணு பகவானுக்கு உகந்த ஏகாதசித் திதியாகிய இன்று கருடவாகனத்தில் சஞ்சரிக்கும் பகவானை சேவிப்பதால் நீண்டநெடுங்காலம் தவத்தால் பெறக்கூடிய பலன் அனைத்தையும் பெறலாம் .. இன்றையநாள் தங்களனைவருக்கும் மனநிறைவைத் தரும் நன்னாளாக அமைந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய வளர்பிறை ஏகாதசியை “ பாபங்குச ஏகாதசி” என்றழைப்பார்கள் .. மஹாவிஷ்ணுவை பக்தியோடு வழிபடுவோர் இவ்வுலகில் வேண்டுவனயாவும் பெற்று சுகபோகமான வாழ்வு வாழ்வதோடு மரணத்திற்குப் பின் மோட்சப் பிராப்தியும் அடைவர் .. 

அளவில்லா கடும்பாவங்களை செய்திருந்தாலும் பாவங்களை அழித்து பக்தர்களைக் காக்கும் பரம்பொருளான ஸ்ரீஹரியை வணங்குவதன் மூலம் நரகத்தின் தண்டனையிலிருந்தும் விடுபடலாம் .. 
பகவானின் புனித திருநாமங்களான .. 
1 - ராம் 
2 - விஷ்ணு 
3 - ஜனார்த்தனன் 
4 - கிருஷ்ணன் 
இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபிப்பவர் யமலோகத்தைக் காணமாட்டார்கள் .. மேலும் இந்த பாபங்குச ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவரும் யமலோகத்தைக் காணவேண்டியதில்லை விஷ்ணு தூதர்களால் இறைவன் ஹரியின் இருப்பிடத்திற்கே அழைத்துச் செல்லப்படுவர் .. 

பகவத் நாமஸ்மரணம் .. பாகவதம் படித்து விரதம் கடைபிடிப்பவர் வைகுந்தத்தை அடைவது மட்டுமன்றி 
அவரது தாய் தந்தை மற்றும் மனைவி வழியின் பத்து தலைமுறை முன்னோர்களும் மோட்சப் பிராப்தி அடைவர் .. 

பகவானைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person