PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY DUSSEHRA & A BLESSED VIJAYADASAMI TOO .. MAY GODDESS MAA DURGA DESTROY ALL THE EVIL FORCES AROUND YOU & FILL YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " JAI MAATA DI "SWAMY SARANAM GURUVE SARANAM


அயிகிரி நந்தினி நந்தித மேதினி 
விஸ்வ வினோதினி நந்தனுதே ! 
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி 
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே ! 
பகவதி ஹேஸிதி கண்ட குடும்பினி 
பூரி குடும்பினி பூரிக்ருதே ! 
ஜய ஜயஹே ! மஹிஷாசுரமர்தினி 
ரம்ய கபர்தினி ஷைலஸிதே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. முப்பெருந்தேவியும் உலக இயக்கத்தின் சக்தியாக .. ஆதாரமாக விளங்கும் அன்னையின் அருளாசியுடன் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் வெற்றியின் ஆரம்பநாளான “ விஜயதசமி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ..
தாய்மையைப் போற்றி வழிபாடு செய்துவந்த நவராத்திரி விழாவும் இன்றோடு நிறைவு பெறுகிறது .. முப்பெருந்தேவியரின் ஆசியும் .. அன்பும் .. அரவணைப்பும் தங்களனைவரது வாழ்வில் என்றும் நிலைத்திடவும் .. மனவலிமை .. தன்னம்பிக்கை மற்றும் வாழ்வைச் சீரானவழியில் கொண்டு நடாத்த நல்லறிவும் பெற்றிட அன்னை துர்க்காதேவியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
தீமைகளை அழித்து (துன்பங்களை) தர்மத்தை நிலைநாட்டும் இந்தப் பத்தாம் நாள் விஜயதசமி என்றழைக்கப்படுகிறது .. 
விஜய் - வெற்றி 
தசமி - பத்து .. 
ஒவ்வொருவர் மனதிலும் உதிக்கும் அசுரத்தன்மையான எண்ணங்களை அழித்து .. வெற்றியை ஈடேற்றும் திருநாள் என்றும் இதனை கூறலாம் .. தளர்வில்லா எதிர்காலத்தை நோக்கி எழுச்சியுடன் அடியெடுத்து வைக்கும் நன்னாளாகவும் அடித்தளமிடும் ஓர் நாளாகவும் விளங்குகின்றது ..
குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் அக்ஷ்ராப்யாசம் என்னும் கல்வி கற்கத் தொடங்க ஏடுதுவக்குகின்ற அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள் .. இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றியினைத் தரும் ..
ஆலயங்களிலும் மஹிஷாசுர சங்காரம் அல்லது மானம்பூத் திருவிழா நடைபெறும் .. அதாவது தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இன்னல்களை விளைவித்துவந்த காட்டெருமை வடிவிலான மஹிசாசுரன் என்னும் அசுரனை அன்னை பராசக்தி சம்ஹாரம் செய்து வெற்றிகொள்ளும் திருநாளுமாகும்
ஆன்மாக்களைப் பீடித்துள்ள ஆணவமலம் .. அறியாமை .. மிருகத்தன்மை ஆகியவற்றை ஒன்பது தினங்களும் தேவியரைப் பூஜித்துப் பெற்ற அருளினால் அழித்தொழிப்பதையே உணர்த்துகின்றது என்றால் மிகையாகாது ..
ஒன்பது இரவுகள் சக்தியாக விளங்கிய தேவி பத்தாம் நாளாகிய இன்று லிங்கத்தைப் பூஜித்து சிவசக்தி ஐக்யஸ்வரூபிணியாக .. அர்த்தநாரிணியாக விளங்குகிறாள் .. அன்னையைப் போற்றுவோம் சகல வெற்றிகளையும் பெற்றிடுவோம் ! 
“ ஓம் சக்தி ஓம் ! துர்க்காதேவி சரணம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 2 people, people smiling

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE SARASWATI & AAYUDA POOJA & MAY GODDESS MAA SARASWATI BRING JOY & PROTECT YOU & BRIGHTEN YOUR LIFE WITH KNOWLEDGE & WISDOM . " JAI MAA SARASWATI DEVI NAMAHA "SWAMYSARANAM GURUVE SARANAM SARANAM


பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்த நல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும் வெங்காலுமன்பாடி 
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகலகலாவல்லியே “ 
( குமரகுருபரர் அருளியது )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் அறியும் திறனுக்கு அரணாய் இருந்து அருள்பாலித்து ஈடு இணையற்ற கல்விச் செல்வத்தை அளித்து எமை காக்கும் சக்தியாகிய அன்னை சரஸ்வதிதேவியைத் துதித்து தங்களனைவரும் சமயோசிதம் .. புத்திக்கூர்மை பெற்றுத் திகழ்ந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
ப்ரம்ம பத்ன்யை ச தீமஹி ! 
தந்நோ வாணி ப்ரசோதயாத் !!
கல்விக்கு அதிபதி சரஸ்வதி .. எல்லா கலைகளுக்கும் தலைவி .. வித்யா என்றாலே ஆத்மாவை மெய்ஞானத்துக்கு இழுத்துச் செல்லும்வழி என்று பொருள் .. 
சரஸ்வதி என்ற சொல்லை 
ஸாரம் - ஸ்வ - என்று பிரிக்கலாம் .. 
“ ஸ்வ - என்பதற்கு “ தான் “ என்னும் சாரத்தை தருபவள் என்று பொருள் .. 
“ தான் ” என்ற அவள் முழுஞானத்தைத் தருபவள் .. அன்னை தருகின்ற ஞானம் பிரம்ம ஞானமாகும் ..
சரஸ்வதியைப் பூஜிக்கின்ற பக்தன் தேடுவது ஆத்மஞானம் .. தன்னடக்கம் .. ஆழ்ந்த கல்வி .. சிந்திக்கும் ஆற்றல் .. தியானம் இவையாவும் இருந்தால் “ நான் “ என்ற அகங்காரம் அழிந்துவிடுகிறது ஆத்மஞானம் பிறக்கிறது .. அதுவே மோட்சம் என்று கூறப்படுகிறது ..
அறிவுத் தெய்வமாகிய வாணி .. காளிதாசனுக்கு காட்சித் தந்தால் “ சாகுந்தலம் “ என்ற காவியம் பிறந்தது .. 
கலைமகளின் அருளால் கம்பன் ராமாயணம் எழுதினார் .. 
கலாதேவியின் அருளால் பேசவேமுடியாத குமரகுருபரர் “ மதுரைமீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்” பாடினார் ..
கல்வி நல்ல ஒழுக்கத்தை நல்குமோ .. உருவாக்குமோ?
மனவலிமையை வளர்க்கச்செய்யுமோ ? விரிந்த அறிவைத் தருமோ ? தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச்செய்யுமோ ? அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை ..இதன்மூலம் நம் அறியாமை நீங்கி அறிவு வளர்ச்சி மேலோங்கும் என்பது நம் அனைவரது நம்பிக்கையுமாகும் ..
ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பு பொறியிலிருந்து சர்வசக்த்யாம் துர்க்கை தோன்றிய 
“ துர்க்காஷ்டமி “ நாளாகிய இன்று அன்னை சரஸ்வதியை துர்க்கையாக .. நரசிம்மதாரிணியாக வழிபடுவது சிறப்பு .. எட்டாம் நாளாகிய இன்று அன்னை ரத்னபீஜனை வதம் செய்யும் நாளாகும் ..

அன்னையைப் போற்றுவோம் ! சகல சித்திகளையும் பெற்று வாழ்வில் சிறப்புப் பேற்றினைப் பெறுவோமாக !
“ ஓம் சக்தி ஓம் ! வாணீ சகலகலா மாதா நமோஸ்துதே”






GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA SARASAWATI .. MAY EVERY GOODNESS TOUCH YOUR SOUL & THE BRIGHTEST LIGHT OF KNOWLEDGE ILLUMINATE YOUR LIFE WITH WISDOM & PEACE .. " JAI MAA SARASWATI DEVI NAMAHA "SWAMY SARANAM...GURUVE SARANAM....


” பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்த நல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும் வெங்காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகலகலாவல்லியே “ 
( குமரகுருபரர் அருளியது )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் அறியும் திறனுக்கு அரணாய் இருந்து அருள்பாலித்து ஈடு இணையற்ற கல்விச் செல்வத்தை அளித்து எமை காக்கும் சக்தியாகிய அன்னை சரஸ்வதிதேவியைத் துதித்து தங்களனைவரும் சமயோசிதம் .. புத்திக்கூர்மை பெற்றுத் திகழ்ந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே !
ப்ரம்ம பத்ன்யை ச தீமஹி !
தந்நோ வாணி ப்ரசோதயாத் !!
கல்விக்கு அதிபதி சரஸ்வதி .. எல்லா கலைகளுக்கும் தலைவி .. வித்யா என்றாலே ஆத்மாவை மெய்ஞானத்துக்கு இழுத்துச் செல்லும்வழி என்று பொருள் ..
சரஸ்வதி என்ற சொல்லை
ஸாரம் - ஸ்வ - என்று பிரிக்கலாம் ..
“ ஸ்வ - என்பதற்கு “ தான் “ என்னும் சாரத்தை தருபவள் என்று பொருள் ..
“ தான் ” என்ற அவள் முழுஞானத்தைத் தருபவள் .. அன்னை தருகின்ற ஞானம் பிரம்ம ஞானமாகும் ..
சரஸ்வதியைப் பூஜிக்கின்ற பக்தன் தேடுவது ஆத்மஞானம் .. தன்னடக்கம் .. ஆழ்ந்த கல்வி .. சிந்திக்கும் ஆற்றல் .. தியானம் இவையாவும் இருந்தால் “ நான் “ என்ற அகங்காரம் அழிந்துவிடுகிறது ஆத்மஞானம் பிறக்கிறது .. அதுவே மோட்சம் என்று கூறப்படுகிறது ..
அறிவுத் தெய்வமாகிய வாணி .. காளிதாசனுக்கு காட்சித் தந்தால் “ சாகுந்தலம் “ என்ற காவியம் பிறந்தது ..
கலைமகளின் அருளால் கம்பன் ராமாயணம் எழுதினார் ..
கலாதேவியின் அருளால் பேசவேமுடியாத குமரகுருபரர் “ மதுரைமீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்” பாடினார் ..
கல்வி நல்ல ஒழுக்கத்தை நல்குமோ .. உருவாக்குமோ?
மனவலிமையை வளர்க்கச்செய்யுமோ ? விரிந்த அறிவைத் தருமோ ? தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச்செய்யுமோ ? அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை ..இதன்மூலம் நம் அறியாமை நீங்கி அறிவு வளர்ச்சி மேலோங்கும் என்பது நம் அனைவரது நம்பிக்கையுமாகும் ..
ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பு பொறியிலிருந்து சர்வசக்த்யாம் துர்க்கை தோன்றிய
“ துர்க்காஷ்டமி “ நாளாகிய இன்று அன்னை சரஸ்வதியை துர்க்கையாக .. நரசிம்மதாரிணியாக வழிபடுவது சிறப்பு .. எட்டாம் நாளாகிய இன்று அன்னை ரத்னபீஜனை வதம் செய்யும் நாளாகும் ..
அன்னையைப் போற்றுவோம் ! சகல சித்திகளையும் பெற்று வாழ்வில் சிறப்புப் பேற்றினைப் பெறுவோமாக !
“ ஓம் சக்தி ஓம் ! வாணீ சகலகலா மாதா நமோஸ்துதே”
Image may contain: 1 person

SWAMYSARANAM...GURUVE SARANAM,. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF MAA LAKSHMI MAY SHE GUIDE YOU FROM DARKNESS INTO THE LIGHT & ELEVATES TO A HIGHER STATE OF BEING & LIVING .. " JAI MAA LAKSHMI




 "
” செல்வத் திருமகளே ! மோகனவல்லியே ! 
எல்லோரும் கொண்டாடும் வேதவல்லியே ! 
எண்கரங்களில் சங்கு சக்கரம் வில்லும் அம்பும் 
தாமரை மின்னும் கரங்களில் நிறைகுடம் தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே ! 
வரமுத்திரை காட்டியே பொருள் வழங்கும் அன்னையே ! சிரத்தினில் மணிமகுடம் தாங்கிடும் சிந்தாமணியே ! பலவரம் வழங்கிடும் ரமாமணியே ! 
வரதராஜ சிகாமணியே ! தாயே மஹாலக்ஷ்மியே ! 
தனலக்ஷ்மியே ! சகலவளமும் தந்திடுவாய் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ரஜோகுண சொரூபிணியும் .. ஞானசக்தியின் வடிவமான ஸ்ரீமஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவரும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று .. பதினாறு செல்வ வளங்களையும் தந்தருள்வாளாக ..
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே ! 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
அன்னை மூன்று நாட்களுக்கு லக்ஷ்மியாக இருந்து நமக்கு கிரியாசக்தியை அளித்திடுவாள் .. அதாவது வேண்டிய அனைத்து செல்வங்களையும் தந்தருளி எம்மை காத்திடுவாள் .. அன்னையை வணங்குவதால் இப்பிரபஞ்சம் முழுவதும் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகும் என்பது நிச்சயம்
மனதில் மண்டிக்கிடக்கும் அறியாமை எனும் இருளை அகற்ற ஆதவனால் இயலாது .. ஆனால் அன்னையால் இயலும் .. மக்கள் மனதிலிருந்து பயம் அகலவேண்டும் 
அவர்களை ஏழ்மை தழுவக்கூடாது .. அவர்களது அறியாமை அகன்று அறிவொளி மிளிரவேண்டும் .. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு ஆதாரமான வீரம் .. செல்வம் .. கல்வி ஆகிய மூன்றையும் பகிர்ந்தளிப்பவளும் அன்னையே ! அவளே உலகின் தாயாவாள் ..
இன்று அன்னையை “ வைஷ்ணவியாக “ பிரார்த்திப்பது சிறப்பு .. 
அம்பிகையின் கைகளில் இருந்து உருவானவள் வைஷ்ணவி .. இவள் விஷ்ணுவின் அம்சம் .. கருடனை வாகனாமாகக் கொண்டவள் .. வளமான வாழ்வு தருபவள் .. சகலசௌபாக்கியங்கள் அனைத்தையும் தருபவள் .. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு சிறந்தது .. விஷ்ணுவின் சக்தியான இவள் நீலநிறமானவள் .. ஆறுகரங்களைக் கொண்டிருப்பாள் .. வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும் .. மற்றைய கரங்களில் கதா .. தாமரை .. சங்கு .. சக்கரம் ஏந்தியவாறும் காட்சியளிப்பாள் .. விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் .. கொடியாகவும் கொண்டிருப்பாள் ..
அன்னையை தூய்மையான உள்ளத்தோடு தியானித்து துதிசெய்து மங்களநாயகியின் அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக .. 
“ ஓம் சக்தி ஓம் ! ஓம் மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே”
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA DURGA .. MAY SHE BLESS YOU ALL WITH GOOD HEALTH WEALTH & MAY ALL YOUR PRAYERS BE GRANTED ON THIS NAVARATRI DAY .. " JAI MATA DI " SWAMY SARANAM GURUVE SARANAM



துர்க்கை என்று துதிப்பவரை துணைகொள்வாயே ! 
என்றும் எம் அருகில் இருந்து நீயும் ஆதரிப்பாயே ! 
உன் புகழை நாம் என்றும் மறவோம் தாயே ! 
உன் நாமமே என்றென்றும் பாடிடுவோமே ! 
துர்க்காதேவி சரணம் “ 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் முக்குணங்களுக்கும் மூலமான சர்வலோக நாயகியை நவராத்திரி தினமாகிய இன்று பூஜித்து தீமைகள் தம்மை அண்டாவண்ணமும் .. தோல்விகளே தங்கள் வாழ்விலிருந்து தோற்றுப்போய் வெற்றிகளே குவியும் வண்ணம் அன்னை துர்க்காதேவி அருள்பாலிப்பாளாக 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

நவராத்திரியான ஒன்பது நட்களும் அம்பிகையின் சக்தியானது பிரவாகமாய் பரவி இருக்கும் .. அதனை நம்முள் பெற்றுக்கொள்ளும் விதமாக இந்நாட்களில் பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன .. 

சக்தித் தாயை இன்று இந்திராணியாக வழிபடவேண்டும் .. மாகேந்தரி .. சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர் .. இவள் இந்திரனின் சக்தி ஆவாள் கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள் .. ஆயிரம் கண்ணுடையவள் .. யானை வாகனம் கொண்டவள் .. விருத்திராசுரனை அழித்தவள் .. தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே ! பெரிய பெரிய பதவிகளை விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும் .. மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலைகிடைக்க .. பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு .. சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள் .. 

அன்னையைப் போற்றுவோம் ! துன்பத்தை அகற்றி ஒளிமயமான வாழ்வினைப் பெறுவோமாக ! 
“ ஓம் சக்தி ஓம் ! துர்க்காதேவி சரணம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & MAY THIS NAVARATRI FINDS YOU & YOUR LOVED ONES BEING BLESSED BY THE GODDESS MAA DURGA WITH JOY .. PROSPERITY & GOOD FORTUNES TO LAST FOREVER " JAI MATA DI " ..SWAMY SARANAM GURUVE SARANAM

  



துன்பம் மிரண்டு போகும் ! 
தீமை ஓடிப்போகும் ! துர்க்கை என்னும் பெயரைச் 
சொன்னால் அச்சமே அச்சம் கொள்ளுமே ! 
சஞ்சலங்கள் விலகும் ! வினைகள் யாவும் தீருமே ! 
தோல்வி தோற்றுப் போகும் ! 
அமைதி நெஞ்சில் கூடுமே !
ஜெய்ஸ்ரீதுர்க்கா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் மங்களங்களை தங்கள் இல்லம் தோறும் வாரிவழங்கும் வெள்ளிக்கிழமையும் .. நவராத்திரி மூன்றாம் நாளுமாகிய இன்று தமோ குணசஞ்சரியான ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியைத் துதித்து தங்களனைவருக்கும் வீரத்தையும் .. தைரியத்தையும் ஒருநாளும் தளர்வு அறியா மனம் வேண்டியும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
பூவுலகை காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனுக்கு ஒருராத்திரி அதுவே சிவராத்திரி ! ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு ஒன்பது ராத்திரிகள் அதுவே நவராத்திரி ! பொதுவாக அனைத்துப் பூஜைகளும் காலைநேரத்தில் மேற்கொள்வது வழக்கம் .. ஆனால் சிவராத்திரி .. நவராத்திரி நாட்களில் மட்டுமே மாலையிலும் .. இரவிலும் பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன ..
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்று அர்த்தம் . உலகம் அனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம் .. பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவளாவாள் அந்த அம்பிகையின் மகிமைகளை தேவி பாகவதம் விரிவாகச் சொல்கிறது ..
ஆன்மாவை இறைவன்பால் வழிப்படுத்த திருவருள் துணை நிற்கின்றது .. இந்தத் திருவருட் சக்திதான் சித்சக்தி .. பராசக்தி .. ஆதிபராசக்தி எனப்படுகிறது .. இதில் ஆதிபராசக்திதான் துர்க்கையாகும் .. இவள் நெருப்பின் அழகு .. ஆவேசப்பார்வை .. வீரத்தின் தெய்வம் .. சிவபிரியை .. இச்சாசக்தி .. கொற்றவை .. காளி என்றும் குறிப்பிடுவர் .. வீரர்களின் தொடக்கத்திலும் .. முடிவிலும் வெற்றித் தெய்வம் துர்க்கையாவாள்
இன்று மஹிஷாசுரனை வதம் செய்ய தேவியாக .. வராஹியாக அம்பிகை காட்சி தருகிறாள் .. பன்றிமுகத்தோடு காட்சியளிப்பவள் .. அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள் .. வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் இன்றாகும் .. மூன்றுகண்கள் உண்டு 
இது சிவனின் அம்சமாகும் ..
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால் இவள் சிவன் .. ஹரி .. சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள் .. எதையும் அடக்க வல்லவள் .. மிருகபலமும் .. தேவகுணமும் கொண்டவள் .. பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள் .. பிரளயத்தில் உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகிறாள் .. வராஹியை பூஜிக்கும் வீட்டில் தன தான்யம் பெருகும் .. வாழ்வு சிறப்பாக அமையும்
“ ஓம் சக்தி ஓம் ! ஸ்ரீதுர்க்காதேவி சரணம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 
..Image may contain: 1 person

SWAMY SARANAM GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A HAPPY NAVARATRI TOO .. MAY MAA DURGA ILLUMINATE YOUR LIFE WITH COUNTLESS BLESSINGS OF GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI MATA DI "


 தாயே துர்க்கையே ! துயரத்தில் உன்னை நினைத்தால் நீ எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்குகிறாய் !
இன்பத்தில் நினைத்தால் உலகனைத்திற்கும் நன்மை தரும் மதியை நல்குகிறாய் ! 
ஏழ்மையையும் .. துன்பத்தையும் .. பயத்தையும் போக்குபவளே ! 
எல்லோருக்கும் கருணைபுரிய எப்போதும் உருகும் நெஞ்சுடையவள் உன்னைத் தவிர யார் உளர் ? .. எமை என்றும் காத்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று அலைமகள் .. மலைமகள் .. கலைமகள் என முப்பெரும்தேவியரையும் துதித்து வழிபடும் உலகவாழ் இந்துக்களின் புனித நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை துர்க்காதேவியை கவுமாரியாக அலங்காரம் செய்யவேண்டும் .. அசுரர்களை சம்ஹாரம் செய்த அன்னையை அபயம் .. வரத .. ஹஸ்தம் கொண்டவளாகவும் .. 
பாச .. அங்குசம் ஏந்தியவளாகவும் அமைத்து வழிபடவேண்டும் .. தங்களனைவரது நோய் நொடி நீங்கி ஆரோக்கியம் மேம்படவும் பிரார்த்திப்போமாக ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
முதல் மூன்று நாட்களும் வீரத்தை உணர்த்தும் விதத்தில் துர்க்கை அம்மனுக்கும் .. 
அடுத்த மூன்றுநாட்களும் செல்வத்தை உணர்த்தும் விதத்தில் லக்ஷ்மிதேவிக்கும் .. 
இறுதி தினங்களில் கல்வியை உணர்த்தும் விதத்தில் சரஸ்வதிதேவிக்கும் பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படும் ..
“ கடும் கோடைக்காலமும் .. மழைக்காலமும் எமனது இரண்டு கோரைப்பற்கள் “ என ஞான நூல்கள் சொல்கின்றன .. இந்த இரண்டு காலங்களிலும் பலவிதமான தொற்று நோய்கள் நம்மைத் தாக்கும் ஆபத்துகள் உண்டு .. இது உடலை பாதிக்கும் .. உடல் கெட்டால் உள்ளமும் பாதிப்பு அடையும் .. இந்தப் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காப்பவள் அம்பிகையே!
அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டே நவராத்திரி என்ற பெயரில் அம்பிகையை வழிபடுகிறோம் .. அகிலத்தில் இருக்கும் எல்லா உயிர்களிலும் அம்பிகையே இருக்கிறாள் அவளது கருணையினால்தான் அனைத்து உயிர்களும் வாழ்கின்றன என்ற தத்துவத்தை விளக்கவே இந்நாளில் சக்தி வழிபாடு செய்கின்றோம் ..
முதல் மூன்று நாட்கள் துர்க்கையை மலைமகளாக இச்சா சக்தியாக வழிபடுகிறோம் .. மங்கலவடிவமானவள் .. கருணைமயமானவள் என்று கூறப்படும் துர்க்காதேவி நமது மனதிலுள்ள ஆணவம் .. பேராசை போன்ற அசுரத்தன்மைகளை அகற்றி நம் உடல் உறுதியுடனும் .. வலிமையுடனும் திகழ அருள்புரிபவள் ...
மகா காளியான அன்னையை நீயே வைஷ்ணவி ! சக்தியும் வீரியமும் நீயே ! என்று போற்றித் துதித்து மங்கலம் .. அருள் .. ஞானம் இவற்றைப் பெறுவோமாக!
” ஓம் சக்தி ஓம் ! துர்க்காதேவி சரணம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 



SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY NAVARATRI & MAY GODDESS MAA DURGA PROTECT YOU FROM ALL EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD FORTUNE .. BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI MATA DI " ..


” காஞ்சி காமாட்சி ! மதுரை மீனாட்சி ! காசி விசாலாட்சி! கருணாம்பிகையே !
தருணம் இதுவே தயை புரிவாயம்மா ! பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா ! 
ஏன் என்று கேட்டு எம் பசி தீர்ப்பாய் !
என் அன்னை நீயே அம்மா ! 
மங்களம் வழங்கிடும் மகாசக்தியே ! 
மங்கலத் தாயே ! நீ வருவாயே ! 
என்னுயிர்த் தேவியே ! 
எங்கும் நிறைந்தவளே ! எங்கள் குலவிளக்கே ! 
பயிர்களில் உள்ள பசுமையில் கண்டோம் பரமேஸ்வரி உனையே ! சரண் உனை அடைந்தோம் சங்கரி தாயே !
சக்தி தேவி நீயே ! அரண் எனக் காப்பாய் ! அகிலாண்டேஸ்வரியே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை முதல் நவமிவரை வருகின்ற ஒன்பது நாட்களும் நவராத்திரி விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது .. ஆனால் இம்முறை பத்துநாட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ..
அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து .. தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால் தன்னை துதித்துத் தொழுகின்ற தங்களனைவரின் விருப்பங்கள் யாவும் நிறைவேறவும் .. அச்சங்கள் யாவும் விலகி வாழ்வில் உச்சத்தைத் தொட அன்னை துர்க்காதேவியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
அசையாப் பொருள் - பரம்பொருள் என்றும் .. 
அசைவுடைய செயல் - சக்தி என்றும் கூறப்படுகிறது .. 
சக்திவழிபாடு மட்டும் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது .. ஜீவராசிகள் யாவும் துன்பமின்றி நலமோடு வாழ விரதமிருப்பர் ..
நவம் என்றால் புதியது என்றும் .. ஒன்பது என்றும் இருபொருள் தரக்கூடிய சொல்லாகும் .. பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம் ..
புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது .. (இம்முறை 10) நவராத்திரியின்போது ஒன்பது வகையில் மலர்வழிபாடு செய்வார்கள் .. கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து ஒன்பது வகைப் பழங்கள் .. பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்வார்கள் ..
படைத்தல் .. காத்தல் .. அழித்தல் எனும் மூன்று சக்திகளைக்கொண்ட அன்னையின் அருள்வேண்டி பூஜைசெய்தலே நவராத்திரி வழிபாடாகும் .. துர்க்கா .. லக்ஷ்மி .. சரஸ்வதி என மூவகையாம மும்மூன்று நாட்கள் விழாவாகக் கொண்டாடுவதும் இறுதியில் அம்மனை சிம்மவாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும் ..
நவராத்திரி விழாவில் கொலுவைத்தல் என்பது பரம்பரையாகச் செயல்பட்டுவரும் ஓர் பக்தி நிகழ்ச்சியாகும் .. நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் .. பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாகும் ..
அனுதினமும் அன்னையின் பாதம் பணிவதுடன் .. நவராத்திரி நாட்களிலும் வணங்கி அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று நலம் பெறுவோமாக ! 
ஓம் சக்தி ஓம் ! துர்க்காதேவி சரணம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
..
 Image may contain: 1 person, standing




SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS THE LAST DAY OF THE MAHALAYA PAKSHA IS KNOWN AS NEW MOON DAY CONSIDERED AS THE MOST IMPORTANT DAY FOR OFFERING & TO EXPRESS OUR GRATITUDE TO ALL OUR DEPARTED ANCESTORS .. DURING MAHALAYA AMAVASYA TARPANAM DONE BY VARIOUS POOJAS & OFFERINGS SUCH AS COOKED RICE .. SESAME SEEDS & WATER TO EXPRESS OUR GRATITUDE TO OUR ANCESTORS .. ALSO YOU CAN TAKE PART IN CHARITABLE ACTIVITIES LIKE DONATING FOOD .. CLOTHES & FUNDING FOR EDUCATION .. DONATING FOOD IS CONSIDERED.. IT IS THE GREATEST CHARITIES OUT OF ALL THESE ACTIVITIES WILL BALANCE YOUR KARMA & HELP YOUR LIFE TO FLOURISH .. THE BLESSINGS OF OUR ANCESTORS ARE VERY IMPORTANT FOR A PEACEFUL & A SUCCESSFUL LIFE .. " OM PITHRU DEVO BAWA "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் இன்று புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமையும் .. மஹாளயபக்ஷ இறுதி நாளுமாகும் .. பித்ருக்களுக்காகவே பூஜைகளை மேற்கொண்டுவந்த நம் அனைவரையும் மேல் உலகிலிருந்து வந்த அனைத்து பித்ருக்களும் ஆசிகூறி எம்மைவிட்டு விடைபெறும் மஹாளயபக்ஷ அமாவாசை தினமுமாகும் .. இதனை புரட்டாசி மாத அமாவாசையென்றும் அழைப்பார்கள் ..
தசராவின் துவக்கத்தைக் குறிக்கும் அமாவாசை தினமே மஹாளய அமாவாசையாகும் .. நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை தலைமுறையினருக்கும் .. மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக இந்நாள் கருதப்படுகின்றது
(இல்லறம் சிறக்க தெய்வபுலவர்)
“ தென்புலத்தார் தெய்வம் விருந்து ஓக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை “
பிதிர்க்கும் தெய்வத்திற்கும் .. விருந்தினர்க்கும் .. இனத்திற்கும் .. தனக்கும் .. தருமம் செய்தல் தலைமையான தருமம் என்றுகூறி .. இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார்கள் ..
பித்ருவழிபாடு இல்லறவாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும் .. ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெற்று சிறப்பளிக்கின்றன என்பதனால் எம் முன்னோர்களால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .. பித்ருக்களை நாம் அவமதித்தால் .. அல்லது உதாசீனம் செய்தால் அவர்கள் எம்மை சபித்துவிடுவார்கள் என்பதும் .. அதனால் நாம் குடும்பவாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துக்களின் ஐதீகம் ..
எவரொருவருக்குத் தாயில்லையோ .. தந்தையில்லையோ .. பங்காளிகள் .. நண்பர்கள் இல்லையோ .. இதுபோன்ற யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு “ நான் அளிக்கும் இந்த எள்ளும் .. நீருமானது திருப்தியை அளிக்கட்டும் ! யார்மே அனாதையல்ல ! என்று ஜாதி மதபேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் “ எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நம் சாஸ்திரம் .. இதுதான் இந்துமதத்தின் மகோன்னதம் !
மஹாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு நன்றிகடன் செலுத்தி வாழ்க்கையில் உயர்வீர்களாக ! 
“ ஓம் பித்ரு தேவோ பவ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: one or more people and text


SWAMY SARANAM GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE PRADOSHAM TOO .. MAY LORD SHIVA REMOVE ALL THE SINS & NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..


” கோல்வரை மத்தென்ன நாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த ஆலநஞ்சு கண்டவர் மிகவிரிய அமரர்கட்கருள்புரிவது கருத் ! 
நீலமார் கடல் விடந்தனையுண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த சிலங்கண்டு ! நின் திருவடி அடைந்தேன் 
செழும் பொழில் திருப்புன் கூறுளானோ “ (சுந்தரர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த தேய்பிறை பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பதால் மாலை 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷவேளையில் ஆலயம் சென்று பிரதோஷகாலப்பூஜையைத் தரிசிக்க அனைத்து பாபங்களும் நீங்கப்பெற்று .. உடல்நிலை .. மனநிலை அனைத்தும் சீராக எல்லாம் வல்ல ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சிவனுக்கு உகந்த விரதங்களுள் முக்கியமானது பிரதோஷ விரதமாகும் .. தேய்பிறை .. வளர்பிறை என இரண்டி பக்ஷ்ங்களிலும் வரும் அமாவாசை .. பௌர்ணமி இரண்டிற்கும் பிறகு வரும் பதின்மூன்றாம் நாளிலே இப்பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது 
இவ்விரதம் மாலை நேரத்திற்குரியது .. 
மாலை 4.30 - 6.00 மணிவரையிலான காலமே பிரதோஷ காலமாகும் ..
மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை தன்னகத்தேயிருத்தி காத்தவேளையே பிரதோஷ வேளையாகும் .. இந்தவேளையில் சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் வழிபாடு செய்வது சிறப்பு .. பிரதோஷவேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறப்பு குற்றங்கள் .. பாபங்கள் மற்றும் சகலதோஷங்களும் நீங்கப்பெற்று நலம் கிட்டும் .. பாவம் விலகி புண்ணியம் சேரும் .. வருமை அகலும் .. பயம் .. மரணவேதனை நீங்கும் ..
பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் ஈசனை வழிபட சகலதோஷங்களும் நீங்கிவிடும் .. சர்ப்பதோஷம் உட்பட் .. சிவனை தேவர்கள் மூவர்கள் வழிபடும் காலம் வளர்பிறை பிரதோஷம் .. அதேபோல் மானிடர்கள் வழிபடும் காலமே தேய்பிறை பிரதோஷமாகும் ..
பிரதோஷத்தன்று விரதம் இருப்பதால் உடல்நலம் நல்லாரோக்கியமாகத் திகழும் .. சந்திரன் சூரியனை நோக்கிப் பயணிக்கக்கூடிய காலகட்டமே அது ..
சிவபெருமானையும் .. நந்தீஸ்வரரையும் போற்றுவோம் ! வாழ்வில் நலம் பல பெறுவோமாக ! 
“ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person