PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM.. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE " THAIPUSAM " TOO .. THE WORD THAIPUSAM IS A COMBINATION OF THE NAME OF THE MONTH - THAI & THE NAME OF THE STAR (NAKSHATRAM) - PUSAM .. THIS PARTICULAR STAR IS AT IT'S HIGHEST POINT DURING THE FESTIVAL IT COMMEMORATES THE OCCASION WHEN GODDESS PARVATI GAVE LORD MURUGA A VEL (SPEAR) SO HE COULD VANQUISH THE EVIL DEMON SOORAPADMAN .. STAY BLESSED .. " OM MURUGA "

” பூசத்தின் நாயகனே ! பூவுலகம் காப்பாயாக ! 
புள்ளிமயில் ஏறிவரும் வடிவழகா ! 
தைமாத ஓரத்திலே தங்கரதம் கண்டவரே ! 
காவடியில் உன்முகம் கண்டோம் கதிர்காமா ! 
செந்தூர்க் கடலினிலும் பரங்குன்றத் தரையினிலும் பழமுதிர்ச்சோலையிலும் பழனிமலை மீதினிலும் 
தணிகைமலைக் காவடியில் தெய்வமகள் உடனுறையும் சுவாமிமலை அருளினிலும் அரங்கேற்ற வந்தவரே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த வந்தனங்களும் .. இனிய “ தைப்பூசத் திருநாள் “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! இந்த தைப்பூசத்திருநாளிலே தாங்கள் தொடங்கும் செயல்கள் யாவும் தொய்வின்றி இனிதே நடந்தேறிடவும் .. நல்லாரோக்கியமும் .. செல்வ வளமும் பெருகிடவும் எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும் 
27 நட்சத்திரமண்டலங்களில் எட்டாவது நட்சத்திரமாக பூசம் அமைகின்றது .. தைமாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம் புண்ணியநாளாகவும் .. தைப்பூசவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது ..
தைப்பூச நன்னாள் சிவசக்தி ஐக்கியத்தையும் மேம்பாட்டையும் விளக்கும் புனிதமான பெருநாளாகும் 
சிவாம்சமான சூரியன் மகரராசியில் இருக்க .. சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சிபெற்றிருக்க .. சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைபூசத்துடனிணைந்த பௌர்ணமியில் மட்டுமே நிகழும் ..
தேவர்களுக்கும் .. அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்கமுடியவில்லை .. எனவே பல்வேறு ஒன்னல்கள் கொடுத்துவந்த அசுரர்களை அழிக்கவேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட .. கருணைக்கடலாம் எம்பெருமான் தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன் !
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின .. 6 கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டன .. அப்படி அவதரித்தவரே கந்தன் என்னும் முருகன் ..
அன்னை பார்வதிதேவி ஆண்டிக் கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான் .. அதன் காரணமாகவே பழனிமலையில் தைப்பூசத்திருவிழ மற்ற அனைத்து முருகன் கோவில்களை விடவும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது ..
சக்தி அளித்த வேல் பிரம்ம வித்யா சொரூபமானது அந்த வேலினைக்கொண்டே முருகன் அசுரகுலத்தை அழித்து தேவர்களைக் காத்தான் .. அந்தவேலினை வழிபட்டால் தீயசக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன் அந்த சக்திகள் நமக்கு நல்லருள் நல்கும் என்பது ஐதீகம் ..
இத்தினத்தில்தான் ஆண்டவன் முதலில் ஜலத்தையே படைத்தார் .. அதிலிருந்து பிரமாண்டம் உருவானது .. இதனை நினைவூட்டத்தான் ஆலயங்களில் இத்தினத்தில் தெப்போற்சவம் நடைபெறுவதுண்டு ..

உலக சிருஷ்டியின் சிருஷ்டிகாத்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி .. அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர்கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி முருகனின் பேரருளை நாடி வழிபடுவோம் ! 
“ தைப்பூசவிழாகாணும் முருகனுக்கு அரோஹரா “ 
“ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: 1 person, standing and outdoor

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & THIS DAY IS KNOWN AS " PONGAL OF THE CATTLES " .. IT IS CALLED ' MAATTU PONGAL ' .. IT'S SORT OF THANKS GIVING TO COW WHICH PROVIDES MILK & ORGANIC MANURE OR FERTILIZER & BULL WHICH DRAWS THE PLOUGH .. STAY BLESSED

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
தைப்பொங்கல் நாளின் மறுநாளாகிய இன்று உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும்நாளே இந்நாளாகும் .. 

“ பொங்கலோ பொங்கல் ! மாட்டுபட்டி பெருக ! 
பால்பானை பொங்க ! நோவும் பிணியும் தெருவோடு போக “ .. என்றுகூறி மாடு உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர் .. 

மேலும் திருவள்ளுவர் தமது திருக்குறளின் மூலம் தமிழின் பெருமையையும் .. தமிழர்களின் பெருமையையும் உலகிற்கு தெளிவாக என்றும் அழியாத வகையில் வெளிப்படுத்தியுள்ளதால் இந்நாளை “ திருவள்ளுவர் தினமாகவும் “ கொண்டாடுகின்றனர் .. 

மற்றும் உடன்பிறந்தாருக்கான “ கணுப்பிடி “ என்றும் “காக்காப்பிடி” என்ற வழக்கமும் இந்நாளில் உண்டு .. இது சகோதரர்களின் நலனுக்காகச் சகோதரிகள் வேண்டிக்கொள்ளும் ஓர் நாளாகும் .. 

“ மஞ்சள் குங்குமத்துடன் நிறைந்த சுமங்கலியாக .. நிர்மலமான மனதுடன் தானும் .. அதேபோலவே வளமான வாழ்க்கையுடன் தங்கள் சகோதர்களும் நீடூழிவாழவேண்டும் என்று பஞ்சபூதங்களிடம் மங்கையர்கள் பிரார்த்தனை செய்துகொள்வார்கள் .. 

இன்றையதினம் முதல்நாள் செய்த சர்க்கரைப் பொங்கலுடன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறச்சாதம் .. தயிர்சாதம் போன்றவற்றை ஒவ்வொரு கைப்பிடி பிடித்து காகத்திற்கு அர்ப்பணிப்பார்கள் .. இதுவே “கணுப்பிடி” .. “ காக்காப்பிடி “ என்பர் ..

நாமும் முகனூலில் உள்ள நம் அனைத்து உடன்பிறவா அன்புச் ச்கோதரர்களின் நல்லாரோக்கியத்திற்காகவும் நல்வாழ்விற்காகவும் பஞ்சபூதங்களைப் பிரார்த்திப்போமாக ! 
“ மங்களங்கள் பொங்கட்டும் ! வண்ணங்களாய் உங்கள் எண்ணங்களும் மிளிரட்டும் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A " VERY HAPPY PONGAL " & MAY THIS FESTIVAL BRING YOU HAPPINESS & PROSPERITY IN YOUR LIFE WITH MORE BLESSINGS & ABUNDANCE THIS YEAR & ALWAYS .. " HAPPY & A PROSPEROUS PONGAL " " JAI SHREE SURYA DEV "SWAMY SARANAM...GURUVE SARANAM...

 சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி ! 
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி ! 
நலங்களை வழங்கும் ஞாயிறு போற்றி ! 
நவகிரகத்தின் நாயகா போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ இனிய தைப்பொங்கல் “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! தைமாதம் முதல் நாளாகிய இன்று தங்கள் உள்ளங்களில் உவகை பொங்க .. இல்லங்களில் இனிய பொங்கல் பொங்கிட .. தைபிறந்ததால் நல்வழியும் பிறந்திட .. எல்லாம் வல்ல இறைவனையும் .. சூரியபகவானையும் பிரார்த்திப்போமாக !
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!
தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் “ பொங்கல் பண்டிகை ” தைத் திங்கள் முதல்நாள் கொண்டாடப்படுகிறது .. இதனை மகரசங்கராந்தி என்றும் அழைப்பர் .. கோடைக்காலம் தரும் சூரியனின் வடதிசைப் பயணம் அதாவது உத்தராயணம் தேவர்களின் பகல்பொழுது .. அதன் தொடக்கம் இந்த மகரசங்கராந்தி என்பதால் புலரும் சூரியனை இன்று வணங்குவது மிகவும் புண்ணியம் தரக்கூடியது ..
மற்ற தெய்வங்களை நாம் சிலைவடிவிலேயே பார்க்கின்றோம் .. ஆனால் சூரியபகவானை கண்கண்டதெய்வமாக தினமும் நம் கண்முன் தெரிகிறார் .. “ அதிகாலையில் சூரியபகவானைப் பார்க்காத கண்கள் வீணே “ என்கின்றனர் மகான்கள் ..
உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில் .. விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன் .. பணியாட்கள் .. மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல்விழா !
“ தைபிறந்தால் வழிபிறக்கும் “ என்ற கூற்றுக்கிணங்க தங்களனைவர் வாழ்விலும் நல்வழி பிறக்க சூரியபகவானைப் போற்றுவோம் ! 
“ ஓம் சூர்யாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 

Image may contain: text

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY BHOGI FESTIVAL .. BHOGI IS CELEBRATED IN HONOR OF LORD INDRA - THE GOD OF CLOUDS & RAIN .. LORD INDRA IS WORSHIPPED FOR THE ABUNDANCE OF HARVEST THEREBY BRINGING PLENTY & PROSPERITY TO THE LAND ON BHOGI ALL THE PEOPLE CLEAN OUT THEIR PREMISES IN & OUT & COLLECT UNWANTED GOODS AND DESTROY THEM .. MAY LORD INDRA BLESS YOU ALL WITH HAPPINESS & PROSPERITY .. " JAI SHREE INDRA DEV "

” புகைமிகு பாரதம் இனியும் வேண்டாம் ! 
சுத்தம் சுழன்று சுகம் தரவேண்டும் ! 
அசுத்தம் அகன்று விடைபெறவேண்டும் ! 
பழையன போக்கிடவே ! புதியன புகுத்திடவே ! 
அழைப்போம் ! தழைப்போம் ! “ போகி நன்னாளிலே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. ” இனீய போகிப்பண்டிகை ” நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக தங்களனைவருக்கும் அமைந்திடவும் .. போதியளவு மழைபொழிந்து விவசாயத்தை பாங்குறச் செய்யவும் இந்திரபகவானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தேவராஜாய வித்மஹே ! 
வஜ்ரஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ இந்திர ப்ரசோதயாத் !!
இந்தப் பண்டிகை மார்கழி மாதத்தின் இறுதி நாளாகிய இன்று கொண்டாடப்படுகிறது .. இந்நாள் 
” பழையனகழிந்து புதியன புகவரும் நாளாகக் “ கருதப்படுகிறது .. பழையவற்றையும் .. பயனற்றவைகளையும் விட்டொழிக்கும் நாளாகத் திகழ்கிறது .. பழந்துயரங்களை அழித்துப்போக்கும் பண்டிகை “போக்கி” என்றனர் .. நாளடைவில் மருகு “ போகி “ என்றாகிவிட்டது ..
இந்திரபகவானுக்கு “போகி” என்றொரு பெயரும் உண்டு .. மழைபொழியவைக்கும் கடவுள் வருணன் அவருக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவர் இந்திரன் மழைபெய்தால் தான் பயிர்கள் செழிக்கும் .. உயிர்கள் வாழும் .. எனவே பண்டைய நாட்களில் இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது ..
இவற்றோடு பழைய பழக்கங்கள் .. உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் “ருத்ரகீதை ஞான யக்ஞம்” என அழைக்கப்படும் அக்னிகுண்டத்தில் எரிந்து பொசுக்கி தேவையற்ற பொருட்களை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் .. (தவறான சிந்தனைகளையும்) நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும் ..
பல்வேறு தெய்வீகக் குணங்களைத் தூண்டுவதன்மூலம் ஆன்மாவை உணர்தல் .. ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது ..
இந்திரனைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் ! 
“ ஓம் தேவராஜாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

Image may contain: fire, night and text

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE SHASHTI VIRADAM TOO .. MAY LORD MURUGA PROTECT YOU FROM ALL EVIL FORCES & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

 


” வருக குமரா அருகெனவே ! மகிழ்ந்தே இறைவன் கரமேந்த பெருகும் சக்தி மடியிருந்தே பெம்மான் சிவனின் கரம் தாவும் முருகா ! 
பரமன் மகிழ்ந்தணைக்கும் முத்தே ! 
இளமை வடிவுடைய ஒரு சேவகனே கந்தா ! 
நின் உபய மலர்த்தாள் தொழுகின்றோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சனிக்கிழமையும்.. சஷ்டித் திதியும் கூடிவரும் இந்நாளில் எம்துயர் துடைக்கும் கந்தவேலனைத் துதித்து வாழ்வில் ஏற்றத்தைக் காண்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
அறியாமை என்னும் அஞ்ஞான இருள் அகற்றி .. மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காக சைவப்பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதமாகும் ..
சஷ்டித் திதியாகிய இன்று கந்தசஷ்டி கவசம் .. கந்தகுருகவசம் .. ஷண்முக கவசம் முதலான கவச நூல்களைப் பாராயணம் செய்வது சிறப்பாகும் ..
” வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா “ என்றால் - 
வெற்றிவேலைக் கொண்ட முருகனே ! எங்கள் வாழ்வில் இருக்கும் துன்பங்களைப் போக்கி நற்கதியை அருள்வாயாக ! என்று உரிமையோடு முறையிடுவதாகும் ..
முருகனே முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள் இனி ..
“ வெற்றிவேல் இறைவனுக்கு அரோஹரா “ என்று உற்சாகமாகச் சொல்லலாமே ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

Kettunera Niral songs


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY & A PROSPEROUS NEW YEAR 2019 & A DIVINE " SHATTILA EKADASI " TOO .. ON THIS EKADASI DAY OFFERING SESAME SEEDS WITH WATER & FOOD FOR THE POOR WILL WASH AWAY ALL THE EVIL FORCES & SINS FROM YOUR LIFE .. MAY YOU BE BLESSED WITH SUCCESS & HAPPINESS .. " OM HARI OM "SWAMY SARANAM...GURUVE SARANAM...

” குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் “ நாராயணா “ எனும் நாமமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. எங்கும் நிறைந்திருக்கும் பாலகர் ஐயப்பன் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் .. நிம்மதியும் மற்றும் தங்கள் குறிக்கோளில் வெற்றியும் தந்தருள்வாராக !

ஓம் தத்புருஷாய வித்மஹே !
பன்வேல் பாலகன் தீமஹி !
தந்நோ அய்யப்ப ப்ரசோதயாத் !!

இன்றைய தேய்பிறை ஏகாதசித் திதியை “ ஷட்திலா ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. இதனை அனுஷ்டிப்போருக்கும் .. விரத மஹாத்மியத்தின் உன்னதக் கதைகளை படிப்போரது மனதிற்கும் மிகவும் ஆனந்தத்தையும் .. மகிழ்ச்சியையும் அளிக்கும் ..

ஷட் என்பது - 6 என்றும்
திலம் என்பது - எள் என்றும் பொருள்படும் .. இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது .. 

1 - எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொள்வது
2 - எள் தானம் செய்வது
3 - எள்ளால் ஹோமம் செய்வது
4 - எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது
5 - எள் அன்னம் உண்பது
6 - எள் நிரம்பிய நீர் ஸ்நானம் ..

இவ்விரதம் அனுஷ்டிப்பவரின் இல்லத்தில் என்றும் உணவுப் பஞ்சமே வராது என்று பவிஷ்யோத்ர புராணம் குறிப்பிடுகிறது .. நமக்கு சரீர சுத்தி .. ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அன்னம் .. எள் முதலியவற்றை தானம் செய்வதால் தனம் .. தான்யவிருத்தியும் கிட்டுகிறது ..நாம் இங்கு எந்த பொருட்களை தானம் செய்கிறோமோ அவையாவும் நமக்கு மேலுலகத்திலும் கிட்டுகிறது என்பது புலனாகிறது .. இதன் அர்த்தம் என்னவென்றால் -
தார்மீக கார்யங்களை அவற்றின் விதிப்படி செய்யும்பொழுது கூடவே தானங்களையும் அவசியம் செய்யவேண்டும் .. தான தர்மங்கள் இல்லாமல் எந்தவொரு தார்மீக கார்யங்களும் பூரணமடைவதில்லை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன ..
பகவானைப் போற்றுவோம் அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக !
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

சென்ற 2018 வருடத்தில் சபரிமலையில் இரண்டு முறை அய்யப்பனை தரிசிக்கும் பாக்கியத்தினை நாம் பெற்றோம். குறிப்பாக 2018 மகர ஜோதி நம் மனதினை விட்டு அகலாது. சென்றமாதம் நமக்கு கிடைத்த தரிசனம் மிக மிக அற்புதமானது. ஆயிரம் பிரச்சனைகள் இடையில் நமக்கு மிக அருமையான தரிசனத்தை நம் குருசுவாமி செய்து வைத்தார்.

குருசுவாமி எர்ணாகுளத்தில் செப்பிய உரையை நினைவு கூர்வோம். இந்த வருடம் கணபதிக்கானது. அவரை நாளும் வணங்குவோம். குரு தினம் செய்யும் பூஜையில் நாம் கலந்து கொள்ள முடியவில்லை எனினும் அந்த பூஜையின் அய்யனை தினம் தரிசிக்கும் பாக்யத்தினை நமது குரு தந்துள்ளார். அதனை தினமும் தரிசித்து நமஸ்கரித்து குருவின் ஆசியை வாங்குவது நமக்கு பெரும் நன்மை அளிக்கக் கூடியது. 

பன்வேல் பாலகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். அத்துடன் குரு ஆசி பரிபூர்ணமாய் அனைவரும் பெற வேண்டுகிறேன்.