PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் வணங்கப்படும் குருநாதர் ஷீரடி பாபாவினதும் நாளாகும் .. ஸாயினாதரை வணங்கி அனைவரும் மன அமைதி பெற்றிடுவோமாக .. ஓம் ஷீரடிவாஸாய வித்மஹே ! சச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ சாய் ப்ரசோதயாத் !! பாபாவின் பொன்மொழிகள் - மழைக்காலத்தில் கடல் .. ஆறுகளுடன் கலப்பதுபோல் பக்தர்களுடன் பாபா ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும் .. அந்தஸ்த்தையும் அளிக்கிறார் .. அஹங்காரமின்மையே என்வடிவம் .. என் தத்துவம் .. என் உதவியை வேண்டுபவர்கள் அஹங்காரமற்றவர்களாக இருக்கவேண்டும் .. வேற்று மனிதர்களின் பேச்சால் உமது நம்பிக்கை குலைந்தது .. எத்தகைய துன்பம் அளிக்கிறது என்பது பற்றி யோசிக்காதீர் .. பாபாவின் சரணங்களில் உமது உள்ளத்தை நிலைநிறுத்தும் அப்போது பாபா உமக்கு சாந்தி அளிப்பாராக .. எப்போதும் நல்லதையே எண்ணி செயல்படுகிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும் .. அன்பு உள்ளத்தில் ஊற்றெடுக்கவேண்டும் .. எங்கும் எதிலும் கடவுளின் அருட்காட்சியைக் காணமுயலவேண்டும் .. நாம் முன்னேறுவதற்காகவே இப்பூமியில் பிறந்திருக்கிறோம் .. ஒவ்வொரு நிமிடமும் நாம் முன்னேறாவிட்டால் வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாகிவிடும் .. எந்நிலையிலும் நாம் கடவுளிடம் உதவியைப்பெற கற்றுக்கொள்ளவேண்டும் .. அது பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும் .. நமது தேவைகள் அனைத்தையும் கடவுள் நிறைவேற்றுவார் .. நமது பலவீனத்தைப் போக்கி நல்வழிப்படுத்தும் ஆற்றல் கடவுளுக்கு மட்டுமே உள்ளது .. எனவே நமது கடவுளான ஸத்குருவினை நமக்கு எல்லாமுமான ஸாயிநாதனை மனதார பிரார்த்திப்போம் .. சகலவெற்றிகளையும் அடைவோமாக .. ”ஓம் சாய் ராம்” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS OF SHIRDI SAI .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND GOOD LUCK .. " OM SAI RAM " ..

இறுதிக் கிரியைகள் செய்வதும், பிதிர்வழிபாடு செய்வதும் ஏன்?


இப் பூவுலகில் வாழும் மக்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம், சைவம் என பல சமயங்களைச் பின்பற்றுபவர்காளக வாழ்கின்றனர். எல்லாச் சமயங்களும் வாழ்கையை நல்ல முறையில் பயனுள்ளதாக அமைவதற்கான நெறிமுறைகளையும், சமய அனுட்டானங்க்களையுமே போதிக்கின்றன. 

அவற்றுள் சைவ சமயம் மட்டுமே கர்ம வினைகள் பற்றியும் அதன் காரணமாவே பிறப்பு, இறப்பு நிகழ்கின்றது என்றும், ஒருவருடைய இறப்பின் பின் என்ன நிகழும் என்பது பற்றியும் பேசுகின்றது. 

விளக்கமாக கூறுவதாயின் ஒருவருடைய மரணத்தின் பின் என்ன நிழும்? ஏன் அவ்வாறு நிகழ்கின்றது? என்பதை பற்றி சைவ சமயம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. மரணத்தின் பின் என்ன நிகழும் என்பதை அறிவியலாலும், மற்றைய சமயங்களினாலும் இதுதான் நடக்கும் என கூற முடியாத நிலையில் சைவ சமயம் இதுதான் நிகழும் என உறுதியாக கூறுகின்றது. 

ஆன்மா அழிவில்லாதது என்றும் அவை கர்ம வினைகளால் பீடித்து இருக்கும்போது ஜீவாத்மாவாக ஏழுவகையான (ஒவ்வொரு வகையிலும் பல கோடி) பிறப்புக்களை எடுக்கின்றன எனவும், அதனை பீடித்துள்ள கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பு அமையும் எனவும் நாம் சைவசமய நூல்களில் படித்திருக்கின்றோம். ஒரு(வர்) ஆன்மா செய்யும் நல்வினை தீவினைகளை அவையே அனுபவித்து தீர்க்கப்பட வேண்டும் என்பதும் நியதி. 

எப்பொழுது அந்த ஜீவாத்மா தன்னைப் பீடித்திருக்கும் கன்ம விணைகளை தீர்த்து பரிசுத்த ஆத்மாவாக திகழ்கின்றதோ அப்போது அது பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கின்றது என சைவ சமயம் கூறுகின்றது. இதனை திருமூலர் "உரையற்று, உணர்வற்று" என்னும் பாடலில் உயிரானது "உயிர் - பரம் அற்ற நிலை" எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது உயிரானது உயிரின் தன்மை அற்றதாகவும், பரமாத்மாவின் தன்மை அற்றதாகவும் இரண்டும் இணைந்து பேரானந்த நிலையை அடைகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

ஈமைக்கிரியை செய்வதற்கான காரணம்:

ஒரு(வர்) ஆன்மா செய்யும் நல்வினை தீவினைகளை அவையே அனுபவித்து தீர்க்கப்பட வேண்டும் என்பது நியதியாக இருக்கும் போது ஒரு ஆன்மாவின் பிரிவில் அந்த ஆன்மாவுக்காக அவரின் வாரிசுகள் செய்யும் இறுதிக் கிரியைகள் பிரிந்து சென்ற ஆன்மாவுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும்? என்ற கேள்வி எழுவது நியாயமே.

ஒருவர் வாய் மூலமாகவும், மனம் மூலமாகவும், உடம்பு மூலமாகவும் மூன்று விதமாக கன்ம வினைகளை செய்கின்றார். ஒருவர் செய்யும் தீவினையானது இரு சந்தற்பங்களில் நிகழ்கின்றன. அதாவது தான் செய்யும் செயல் பாவமானது என அறிந்தும் செய்வது, மற்றையது பாவம் என அறியாமலே செய்வது. இவற்றுள் தாம் பாவம் செய்வதாக அறிந்தும். செய்யும் பாவமானது அவர் அனுபவித்தே தீரவேண்டும். ஆனால் பாவச்செயல் என அறியாது தற்சமயம் நிகழ்ந்த பாவ வினைகளாயின் அவற்றை அவரின் வாரிசுகளினால் அவருக்காக செய்யப் பெறும் இறுதிக் கிரியை, அந்தியேட்டி கிரியைகளினால் நிவர்த்தியாகின்றன என சைவசமயம் கூறுகின்றது. அதனாலேயே நம் மூதாதையினர் ஈமைக் கிரியைகளையும், அந்தியேட்டிக் கிரியைகளையும் செய்து வந்துள்ளனர்.

அந்தியேட்டிக் கிரியை செய்வதற்கான காரணம்:

ஆலயங்களில் மஹோற்சவிழாக்கள் நடைபெறுவதை நாம் எல்லோரும் பார்த்திருக்கின்றோம். அவை ஆலயத்தில் நடைபெறும் நித்திய, நைமித்திய பூசைகளின்போது எம்மை அறியாது ஏதாவது குறைகள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே மஹோற்சவ விழாக்கள் நடாத்தப்பெறுவதாக சைவசமயம் கூறுகின்றது. 

அது போலவே,ஒருவருடைய மரணம் என்பதும் (முதியவராகிலும், இளையவராகிலும்,நோய்வாய்ப்பட்டவராகிலும்) எதிர்பாராத நேரத்தில் நிகழ்வதாகும். அதனால் சிலவேளைகளில் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளில் குறைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யவே அந்தியேட்டி கிரியைகள் செய்யப் பெறுகின்றன. 

அந்தியேட்டிக் கிரியை, ஈமைக் கிரியை போன்றே நிகழ்த்தப் பெறுதல் இதனை ஊர்யிதம் செய்கின்றது. அதாவது பூதவுடலுக்குப் பதிலாக 36 தற்பைப் புல்லினால் செய்யப் பெற்ற உருவம் வைத்து அதனை இறந்தவரின் உடலாக ஆவகணம் செய்து அதற்கு பூசைகள் செய்து அந்த உருவம் தகனம் செய்யப்பெறுகின்றது. எனவே இதுவும் ஒருவகையில் மரணகிரியையே. 

ஈமக்கிரியைகள் யாவும் சைவக்குருமார் மூலமே செய்யப் பெறுகின்றது. அதுபோல் அந்தியேட்டிக் கிரியையும் மரணச் சடங்கிற்கு நிகரானதாக இருப்பதனால் சைவக்குருமாரே செய்வது வழக்கம். அத்துடன் ஒருவருடைய மரணக் கிரியை செய்தவரே அந்தியேட்டிக் கிரியை செய்யும்போது தவறுகள் நிவர்த்தியாகுவதாக ஐதீகம். மரணக் கிரியையும், அந்தியேட்டிக் கிரியையும் அபரகிரியைகளாக அமைவதால் மரணக் கிரியை, அந்தியேட்டிக் கிரியைகளை செய்யும் சைவக்குருமார் ஆலயங்களில் செய்யப் பெறும் சுப கிரியைகள் செய்வது தவிர்க்கப் பெற்றுள்ளது. 

பிதிர் வழிபாடு செய்வதற்கான காரணங்கள்:

இல்லறம் சிறக்க தெய்வப்புலவர்; "தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'' பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்திற்கும், இனத்திற்கும், தனக்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம். என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார்.

தென்புலத்தார் என்போர் இறந்த எமது மூதாதையினராவர். அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் ஆசி எம்மை வாழவைக்கும் என்றும், அவர்களை வாழ்த்தி அவர்களின் ஆசியைப் பெறுவது மானிடனாகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது கடமை என்றும் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

இறந்தோரின் (பித்ருக்களின்) ஆசி வேண்டி பித்ரு வழிபாடு செய்யும் வழக்கம் எமது முன்னோர்களால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அவை இரண்டு விதமாக அமைகின்றன. ஒன்று இறந்த எமது நெருங்கிய உறவினர்கள் இறந்த மாதத்தில் வரும் திதியில் ஒரு புரோகிதர் மூலம் எள்ளு நீர் இறைத்து அவர்களை நினைந்து வழிபடுவது. இறந்த திதியைச் சிரத்தையுடன் செய்வதால் சிரார்த்தம் அல்லது திவசம் என்று அழைக்கப்பெறுகின்றது. மாதா மாதம் வரும் அமாவாசையில் எள்ளும் நீரும் இறைத்து வழிபடுவது புரோகிதருக்கு அரிசி காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்வதும் ஒரு வகை பிதிர் வழிபாடாகும்.

இவை தவிர; பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். புரட்டாதி மாதம்பொதுவாக புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும். நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது.

இது, எம்மை விட்டுப் பிரிந்த எல்லா உறவினர்க்கும் விருந்தளிப்பது போன்ற ஒரு ஆராதனையாகும். இங்கே குறிக்கப்பெற்ற மஹாளய தினத்தில் சைவ உணவு ஆக்கிப் படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் வழக்கமாக நடைபெறும் மஹாளய ஆராதனையாகு,இவை தவிர, அமாவாசை, பௌர்ணமி திதிகளில் உரியவர்கள் விரதம் அனுஷ்டிப்பதும், விளகீடு, தீபாவளி போன்ற விஷேச தினங்களுக்கு முதல் நாள் அவர்களுக்கு விருந்து படைப்பதும் நம் முன்னோரால் பின்பற்றி வந்த சில சமய அனுட்டானங்களாகும். 

இவை யாவும் இல்லற வாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும், ஆசீர்வாதங்களும் சிறப்பளிக்கின்றன என்பதனால் எம் முன்னோரால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் எம்மை சபித்து விடுவார்கள் என்பது ஆதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகம்.
ஒரு வருடத்தை தேவ, ப்ரஹ்ம, பூத, பித்ரு, மநுஷ்ய என்னும் ஐந்து பாகங்களாக வகுத்து; புரட்டாதிமாதம் (மஹாளய னக்ஷம்) பித்ருக்களுக்கு உரிய மாதமாக கணிக்கப்பெற்றுள்ளது. எனவே அந்தக் காலத்தில் மஹாளய-பித்ரு வழிபாட்டுகள் செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளை பெறுகின்றோம். 

மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என இந்து மதம் வலியுறுத்துகிறது. அவை பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர் அதனைக் கடைபிடித்து வந்ததுடன் நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர். 

இறந்த எமது முன்னோர்களுக்காகச் செய்யப்படுவது பிதிர் வழிபாடு. 
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ 
(தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள். 

அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த குருமார்களை வைத்து முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். 

சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். 

பிதிர் வழிபாட்டில் பிண்டம் போட்டு சமைத்த உணவு, பழங்களை நைவேதிக்கின்றேம். பிதிர்கள் திருப்தியடைய எள்ளுந் தண்ணீரும் இறைக்கின்றோம். புரோகிதருக்கு அரிசி, காய்கறி, வேட்டி சால்வை, தட்சணை கொடுக்கின்றோம். இவ்வழிபாட்டால் எமக்குப் பிதிர் ஆசியும் குரு ஆசியும் கிடைக்கின்றது. மேலும் நாம் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி மோக்ஷ அர்ச்சனை செய்து வழிபடுவதால் தேவ ஆசியும் கிடைக்கின்றது.
நமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாப புண்ணியத்துக்கு அமையவே நடைபெறும். அதிலே பிதிர் காரியமும் ஒன்றாகும். அதனை நாம் கிரமமாக சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதிர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிஷ சாஸ்திரம் கூறுகின்றது.

நாம் பிறக்கும் போது நமது ஜாதகத்தைக் கணிப்பர். அதனைப் பார்த்து ஜோதித்தர் கிரக தோஷம் உள்ளதால் பிள்ளைப் பாக்கியம் குறைவு என கூறுவார். இத்தகைய கிரகதோஷம் உள்ளதால் பிதிர் வழிபாடு செய்யுங்கள் என கூறுவார்.

இதனால் நமக்குப் பிள்ளை இல்லையே என்ற குறைபாடு கண்டவிடத்து பிதிர் வழிபாட்டை சிரமமாகச் செய்தல் வேண்டும். வீட்டிலே மேலே கூறியவாறு செய்கின்றோம். கீரிமலையில் செய்கின்றோம். வசதியானோர் இராமேஸ்வரம், திருவாலங்காடு, காசி, காயா சென்று பிதிர் வழிபாடு, தேவ வழிபாடுகளைச் செய்வதை நாம் அறிவோம்.

ஆகவே பிதிர் வழிபாடு மிக முக்கியமானது. அதிலும் மஹாளயஞ் செய்து பிதிர் வழிபாடு செய்து பிதிர் ஆசி, குரு ஆசி, தேவ ஆசி பெற்று வாழ்வது மிக மிக மேலானது. 

இதனை வீட்டில் செய்ய முடியாதோர் புரட்டாதி அமாவாசையில் புரோகிதருக்கு அரிசி, காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்யலாம்.

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமும் கூடிவருவது விசேஷம் .. மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .. இன்றைய ஏகாதசி திதியை ‘ மோகினி ஏகாதசி ‘ என்று கூறப்படுகிறது .. அனைவரும் இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்துவந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது .. இந்த ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் மனிதர்களின் சகல பாபங்களும் .. துக்கங்களும் அழிக்கப்படுகிறது .. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம் என்னும் மாயையின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவர் .. துக்கத்தால் வாழ்க்கையில் துன்பப்படும் அனைவரும் இந்த மோகினி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து நன்மை அடைவாராக என ‘மகரிஷி வசிஷ்டர் ‘ ஸ்ரீராமருக்கு உபதேசித்தார் .. மோகினி ஏகாதசி விரத மஹாத்மிய கதை - சரஸ்வதி நதியின் கரையில் ‘பத்ராவதி’ என்னும் பெயர்கொண்ட நகரம் அமைந்திருந்தது .. அந்நகரை த்யூதிமன் என்னும் பெயர்கொண்ட அரசன் ஆட்சி புரிந்து வந்தான் ..அந்நகரில் வற்றாத தனம் .. தான்யசம்பத்துக்களுடன் தனபால் என்னும் பெயர் கொண்ட வியாபாரி வசித்து வந்தான் .. பகவான் மஹாவிஷ்ணுவின் பக்தனாக அவன் மிகுந்த தர்மசிந்தனையுடன் நகரில் ஆங்காங்கே அன்னதான உணவகங்கள் .. குடிநீர் பந்தல் .. குளம் குட்டை தர்மசத்திரங்கள் ஆகியவற்றை அமைத்திருந்தான் .. வியாபாரிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தனர் .. அவர்களில் மூத்தவன் கொடிய பாபவினைகளை புரியும் பாபியாகவும் .. துஷ்டனாகவும் இருந்தான் அவன் துஷ்டர்களுடன் நட்புகொண்டு சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தான் .. அவனது செய்கையால் துக்கத்தில் வாடிய வியாபாரி தனபால் மற்றும் குடும்பத்தினரும் சுடுசொற்களால் நிந்தனைசெய்து வீட்டைவிட்டு வெளியேற்றினர் .. தான் அணிந்திருந்த விலையுர்ந்த ஆடை ஆபரணங்களை விற்று கிடைத்த பணத்தில் நாட்களை கடத்தி வந்தான் .. பணம் கரைந்து போயிற்று .. நண்பர்களும் அவனைவிட்டு விலகிப் போயினர் .. பசியும் தாகமும் வருத்தி எடுக்க வேதனை தாளாமல் திருடுவது என்றும் முடிவுக்கு வந்தான் .. இரவுநேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு அதன்மூலம் கிட்டிய வருமானத்தால் வாழ்க்கையை நடத்திவந்தான் .. ஒருநாள் நகரகாவலரிடம் கையும் களவுமாக பிடிபட்டான் .. ஆனால் வியாபாரியின் மகன் என்று அறிந்ததும் திருந்திவாழுமாறு அறிவுரை கூறி விட்டுவிட்டனர் .. ஆனால் சில நாட்களில் மீண்டும் அகப்பட்டபோது சிறையில் அடைத்தனர் .. சிறையில் சித்திரவதையை அனுபவித்து பிறகு அந்நகரைவிட்டும் வெளியேற்றினர் .. மிகுந்த மனவருத்தத்துடன் நகரைவிட்டு வெளியேறி காட்டில் வசிக்கத் தொடங்கினான் .. பிராணிகளை கொன்றும் .. விற்றும் பசியாறினான் .. வேட்டையில் ஏதும் சிக்காமல் போகவே களைப்பில் பசியும் தாகமும் வருத்து எடுக்க உணவைத்தேடி அலைந்து கடைசியில் கௌடின்ய முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான் .. கௌடின்ய முனிவர் கங்கையில் நீராடிவிட்டு வந்துகொண்டிருந்தார் .. அவரின் நனைந்த வஸ்திரத்தின் நுனியிலிருந்து விழுந்த நீர்த்துளிகள் அவன்மீதுபட்ட மாத்திரத்தில் பாபியான அவனுக்கு நற்சிந்தனையும் .. நல்லெண்ணமும் உருவாகியது .. முனிவரின் அருகில் சென்று இருகரம் கூப்பி கண்ணில் நீர்மல்க “ முனிசிரேஷ்டரே ! நான் என்வாழ்க்கையில் மன்னிக்கமுடியாதளவு பாபம் புரிந்துள்ளேன் .. என் பாபவினைகளிலிருந்து நான் முக்தி பெறுவதற்கு ஏதாவது எளிதான செலவில்லாமல் கடைபிடிக்கக்கூடிய ஒருவழியை கூறி அருளவேண்டும் என்றான் .. முனிவரும் மோகினி ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடித்து உன் பாபங்கள் எல்லாம் நீங்கப் பெற்று புதுவாழ்வு பெறுவாயாக என்று வாழ்த்தியருளினார் .. மோகினி ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் அவனது அனைத்து பாபவினைகளும் அகன்று நல்வாழ்க்கை பெற்றான் .. விரதத்தின் புண்ணியபலனால் கருடவாகனத்தில் விஷ்ணுலோகத்தை அடையும் பிராப்தமும் பெற்றான் .. இவ்விரதத்தினால் மோகம் என்னும் மாயை அகன்று மனிதர் முக்தியை பெறுகின்றனர் .. இவ்வுலகில் இதற்கு நிகரான இணையான விரதம் வேறெதுவும் இல்லை .. இவ்விரத மஹாத்மிய கதையை கேட்டவரும் .. படிப்பவரும் ஓராயிரம் கோ (பசு) தானம் செய்த புண்ணியத்திற்கு இணையான புண்ணியத்தைப் பெறுவர் .. ”ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 'EKADASI DAY' WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE BLESS YOU AND SHOWER YOU WITH GOOD HEALTH WEALTH AND HAPPINESS .. HAVE A SUCCESSFUL DAY TOO .. " OM NAMO NAARAAYANAA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைத் துதித்து தங்களனைவருக்கும் சகலயோகங்களும் .. வளங்களும் பெருக பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் .. !! .. இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமல்ல ஸ்ரீகுருபகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும் .. மயில்வாகனம் - முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு .. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றிவர உதவிய மயில் .. மந்திரமயில் .. சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான் .. இது தேவமயில் .. பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில் தான் .. அசுர மயில் .. சிக்கல் - ” சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் “ என்பர் .. சிக்கல் தலத்தில் தான் முருகப்பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார் .. எனவே முருகனை நாம் நம்பிக்கையுடன் வணங்கிட புனிதகங்கை போன்று ஆறாக அருள்மழை பெய்து அவகுணங்களை அடியோடு அழித்து ஞானானந்த பிரகாசத்தில் நம்மை ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்வோம் .. குகமயமாக ஆவோம் .. “ ஸர்வம் குக மயம் ஜகத் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM MURUGA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானைத் துதித்து தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் எவ்வித தடைகளுமின்றி வெற்றி பெறவும் .. இன்றைய நாள் ஓர் இனிய நன் நாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! “ நமசிவாய “ என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூலமந்திரம் .. சிவம் என்றால் “ மங்களம் “ என்று பொருள் .. யஜுர்வேதத்தின் நடுநாயகமானது ஸ்ரீருத்திரம் .. அதன் நடுநாயகமே “ நமசிவாய “ .. தீட்சை பெற்றிருந்தாலும் .. பெறாவிடினும் “ நமசிவாய “ என தாயைக் கூவியழைக்கும் சேய்போல அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு .. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்துசேரும் .. நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப் போல .. சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார் .. “ என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை .. இனித் தெய்வமே ! உன் செயல் என்று உணரப் பெற்றேன் ! இந்த ஊனெடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை .. பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ இங்ஙனம் வந்து மூண்டதுவே “ .. ( பட்டினத்தார் ) சிவத்தை அணைத்துக் கொண்டால் .. யமனும் நமை வணங்குவான் .. ஹர ஹர ஹர ஹர ! மகாதேவா ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. START THE DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. HAVE A SUCCESSFUL DAY .. " OM NAMASHIVAAYA " ..


சுப முகூர்த்த நிர்ணய விதிகள்- 21 .. சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம்


 சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம்

செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என காலவிதானம் எனும் நூல் கூறுகிறது.அவற்றை இனி காண்போம்.

1.உல்கா:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா
எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.
2.பூகம்பம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம்
எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.
3.உபாகம்:
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று
நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.
4.குளிகன்(அ)மாந்தி:
ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய
லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:
முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம்
முகூர்த்தத்திற்கு ஆகாது.
6.அசத் திருஷ்டம்:
முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான
சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.அவ்வாறு
பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
7.அசத் ஆரூடம்:
பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.
8.அசத் விமுக்தம்:
பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர்
அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம்
வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த
தோஷம் பரிகாரமடைகிறது.
9.சித த்ருக்:
சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்
சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.
10.சந்தியா காலம்:
சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்
அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.இதில் சுப
முகூர்த்தம் வைக்கக்கூடாது.
11.கண்டாந்தம்:
அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும்
கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது.
12.உஷ்ணம்:
பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள
நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)
E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)
F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)
13.விஷம்:
தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.
14.ஸ்திர கரணம்:
சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர
கரணங்களாகும்.இதிலும் முகூர்த்தம் கூடாது.
15.ரிக்தை:
சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே
16.அஷ்டமி:
அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.
17.லாடம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த
தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட
நட்சத்திரமாகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
18.ஏகார்க்களம்:
அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்
ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
19.வைதிருதம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம்
ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
20.அஹிசிரசு:
வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
21.விஷ்டி:
வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்
18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,
தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்
18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்
முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
1.அம்ஹஸ்பதி:
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி
எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்
செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
2.மலமாதம்:
ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த
மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
3.சமசர்ப்பம்:
அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப
முகூர்த்தம் கூடாது.
4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:
சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்
குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.
5.குரு,சுக்கிர மௌட்யம்:
குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்
வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்
பெற்றிருந்தால் அது தோஷமில்லை)
6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:
குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்
முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.மேலும்
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்
அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.
A.ஞாயிறு-பரணி
திங்கள்-சித்திரை
செவ்வாய்-உத்திராடம்
புதன்-அவிட்டம்
வியாழன்-கேட்டை
வெள்ளி-பூராடம்
சனி-ரேவதி
B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை
திங்கள்-த்விதீயை&சித்திரை
செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி
புதன்-சப்தமி&பரணி
வியாழன்-த்ரயோதசி&அனுஷம்
வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்
சனி-அஷ்டமி&ரேவதி
C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்
திங்கள்-ஷஷ்டி&திருவோணம்
செவ்வாய்-சப்தமி&அஸ்வினி
புதன்-அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீயை&பூசம்
வெள்ளி-நவமி&ரேவதி
சனி-ஏகாதசி&ரோகினி
D.ஞாயிறு-சதுர்த்தி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-த்விதீயை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானுக்கு உகந்த நாளாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. சகலசம்பத்துக்களும் பெற்றிடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! .. (காயத்ரி மந்திரம்) கருடனின் சகோதரனான அருணனே சூரியபகவானின் தேர்ப்பாகனாகத் திகழ்கிறார் .. காயத்ரி .. ப்ரஹ்தி .. உஷ்ணிக் .. ஜகதி .. திருஷ்டுப் .. அனுஷ்டுப் .. பங்க்தி ..போன்ற ஏழுகுதிரைகள் சூரியனின் ரதத்தை இழுத்துச் செல்கின்றன .. மந்திரங்களில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகிற “ காயத்ரி மந்திரம் “ சூரியபகவானைப் போற்றுவதாகும் .. இம்மந்திரம் யார் நம் அறிவைத்தூண்டி நம்மை வழிநடத்துகிறாரோ அந்த சுடர்க்கடவுளின் மேலான .. பிரகாசமான ஒளியை தியானிப்போமாக என்று பிரார்த்திப்பது .காலை ..மதியம் .. மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் இம்மந்திரத்தைக் கூறி சூரியபகவானைப் பிரார்த்தித்து அர்க்யம் விடுவது சிறந்தது .. ( சூரியபகவானை நோக்கி இருகரங்களிலும் நீரை ஏந்தி அருவிபோல பொழிந்து சமர்பிக்கும் பூஜை முறை) சூரியபகவானைப் போற்றுவோம் .. அவரது திருவருளும் .. அருட்கடாக்ஷ்தையும் பெறுவோமாக .. “ஓம் சூரியபகவானே நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI SURYA BHAGWAN "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் சுபீட்சம்மிக்க நன்னாளாய் மலர்ந்திடவும் .. மனநலமும் .. உடல் நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! .. சிவபெருமானுக்கு பிரியமான பூக்கள் - சிவபெருமானுக்கு என்னென்ன மலர்கள் பிரியமானவை என்பது பற்றியும் அதை அணிவிப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் அப்பைய தீட்சிதர் என்ற தீவிர சிவபக்தர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் எழுதியுள்ளார் .. அந்த ஸ்லோகத்தின் பொருள் - பரமேஸ்வரா ! உன்மேல் எருக்கையும் .. த்ரோணம் என்னும் தும்பை மலரையும் அர்ச்சனை செய்தாலே போதும் அது ஒருவனுக்கு மோட்ச சாம்ராஜ்யத்தை என்னும் பேரின்ப வீட்டைத் தந்துவிடுகிறது என்பதாகும் .. எருக்கை .. தும்பை மலர்கள் பெண்கள் சூடாதவை .. எல்லாராலும் ஒதுக்கப்படுபவை .. விநாயகருக்கு மட்டுமல்ல சிவனுக்கும் எருக்கு உகந்ததாகிறது .. இனி சிவனுக்கு வில்வமாலையுடன் எருக்கம் மலர்களையும் அர்ச்சனைக்கு எடுத்துச் செல்லலாம் .. இந்த மலர்களை சிவலிங்கத்தின்மீது அர்ச்சனை செய்து அதையே பிரசாதமாகப் பெற்றுவந்து நம் பூஜை அறையில் வைத்துவிட்டால் இறைவனின் தன்மையே நமக்கும் வந்துவிடும் .. காஞ்சிப்பெரியார் சொல்லும் தகவல் இது .. சிவனைப்போற்றுவோம் அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் .. “ ஓம் சிவாய நமஹ “ .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY WITH THE DIVINE BLESSINGS OF LORD SHIVA .. MAY HE BLESS YOU WITH HAPPINESS AND PROSPERITY .. " OM SIVAAYA NAMAHA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் ஷிர்டி சாய்பாபாவினதும் நாளும் ஆகும் .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. தங்களது அனைத்து காரியங்களும் தடைகளின்றி வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் ஷிர்டிவாஸாய வித்மஹே ! சச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ சாய் ப்ரசோதயாத் !! .. பாபா தனது பக்தர்களிடம் நம்பிக்கை .. பொறுமை .. என்ற இரண்டு வார்த்தைகளை எப்பொழுதும் கடைபிடிக்கவேண்டும் என வலியுறுத்துவார் .. காரணம் நல்லவன் துன்பப்படும்போது தாமாக அவனை வலியத்தேடிச்சென்று அவனுக்கு அனுக்கிரகம் செய்கிறார் இதற்காக அவர் மாறுவேடங்களில் சென்று கணக்கற்ற அற்புதங்களைத் திட்டமிட்டுச் செய்கிறார் .. வீட்டினுள்ளோ .. வெளியிலோ .. அல்லது வழியிலோ நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்கள் அனைவரும் என்னுடைய வெளிப்பாடுகளே ! அவர்கள் அனைவருள்ளும் நான் உறைகிறேன் என்கிறார் பாபா .. எந்தவடிவில் அவர் வருகிறார் என்பது தெரியாமலே நமக்கு நன்மை நடக்கும் .. ஏற்கனவே அவர் திட்டமிட்டு செயல்படுவதால் எந்த விஷயத்திலும் அவரது பக்தன் அவசரப்படத்தேவையில்லை .. பொறுமையாக அவரை நம்பிக்கொண்டிருந்தால் போதுமானது அவர் நினைப்பதே நடக்கும் .. அவரே வழியைக் காட்டுவார் .. நம்முடைய இனிய விருப்பங்கள் ஒருகணமும் தாமதமின்றி நிறைவேறும் .. நேரம்வரும் பாபா கூறியிருக்கிறார் அதுவரை பொறுமை காக்கவேண்டும் .. எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் பொறுமையாக இருப்பது மட்டுமே நம்மை கரைசேர்க்கும் உபாயம் என பாபா கூறியிருக்கிறார் .. பாபாவைப் போற்றுவோம் சகலதும் வெற்றி பெறுவோம் ! .. வெற்றி நிச்சயம் ! “ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE DIVINE BLESSINGS OF SHIRDI SAI .. MAY HE SHOWER HIS BLESSINGS WITH GOOD HEALTH .. WEALTH .. AND A SUCCESSFUL LIFE .. " OM SAI RAM "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று சதுர்த்தி விரதமும் சேர்ந்து வருவதால் விநாயகரைத் துதித்து தங்கள் அனைவருக்கும் சிறந்த கல்வி அறிவும் .. தெளிந்த ஞானமும் .. சிறந்த செல்வமும் .. துன்பங்கள் விலகி இன்பமும் .. உடல் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சிகரமாக வாழ பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! .. கஜானனம் .. பூதகணாதி ஸேவிதம் .. கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் .. உமாஸுதம் சோகவினாச காரணம் .. நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் ! சாரம் - யானை முகம்படைத்தவரும் பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும் .. பழுத்த ஜம்பூபழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும் .. உமாவின் குமாரரும் .. நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும் விக்னங்களுக்கே (தடங்கல்களுக்கு) ஈஸ்வரரும் (அதிபதி) ஆகிய கணபதி பகவானின் பாதக்கமலங்களில் தண்டனிடுகிறேன் .. அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ”ஓம்” எனும் ஓங்காரவடிவமாக விளங்குபவர் ஸ்ரீவிநாயகப் பெருமான் .. மிகவும் எளிமையானவர் .. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர் .. வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன் .. அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன் ஸ்ரீவிநாயகரே முழுமுதற்கடவுள் எனக்கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாடு முறையாகும் .. ஸ்ரீவிநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்தபோதிலும் சதுர்த்திவழிபாடு சிறந்தவழிபாடாகும் .. சதுர்த்தியில் விரதமிருந்து ஆனைமுகனை முறையாக வழிபட்டால் வேண்டிய வரத்தையும் காரிய அனுகூலத்தையும் அவர் பெருமையுடன் நமக்கு அளிப்பார் .. எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம் .. கணங்களுக்கெல்லாம் அதிபதியாவதால் அவரை ‘கணபதி’ என்று சொல்கின்றோம் .. எனவே நாம் தேவ .. மனித .. அசுர .. கணத்தில் பிறந்தவாராக இருந்தாலும் அனைவரும் வணங்கவேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமானே ! தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழுநம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்துசேரும் .. துன்பங்கள் அனைத்தும் தூரவிலகி ஓடிடும் .. விநாயகரைப் போற்றுவோம் !அவரது அருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக ! .. ’ஓம் விக்னேஷ்வராய நமஹ ‘ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. MAY THE DIVINE BLESSINGS OF LORD GANESH BRINGS YOU ETERNAL BLISS & FULFILL ALL YOUR WISHES .. " JAI GANESH "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ‘அட்சய திரிதியை’ நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .. அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன் நாளாகவும் .. சகலசௌபாக்கியங்களையும் பெறுவீர்களாக .. ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! விஷ்ணுபத்ந்யை ச தீமஹி ! தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !! .. நட்சத்திரங்கள் .. திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கியபங்கு வகிப்பவை .. சிலமாதங்களில் வரும் திதிகளுக்கு தனிசிறப்பு உண்டு .. அந்தவகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகுவரும் திருதியை திதி .. “அட்சயதிருதியை “ என போற்றப்படுகிறது .. ’அட்சயம்’ என்றால் வளர்வது .. குறையாதது .. என்று பொருள் அன்றைய தினத்தில் செய்கிற .. ஆரம்பிக்கிற எல்லாகாரியங்களும் வெற்றிகரமாக நடக்கும் .. நல்ல பயனைத்தரும் என்பது வேதவாக்கு .. இந்த நாளைப்பற்றி புராணங்களிலும் .. நாடிகளிலும் .. தர்மசாஸ்திரங்களிலும் பலவிஷயங்கள் சொல்லப்படுகிறது .. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால்யநண்பர் குசேலன் வறுமையில் வாடுகிறார் .. கிருஷ்ணரை சந்திக்க முடிவெடுத்து ஒருபிடி அவலை தன் மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார் .. அவரை நன்கு உபசரித்த கிருஷ்ணபகவான் அவர் அன்போடு கொண்டுவந்த அவலை மகிழ்ச்சியுடன் எடுத்து உண்டு அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து “அட்சயம் உண்டாகட்டும் “ என்று வாழ்த்தி அனுப்புகிறார் .. அதேகணத்தில் குசேலரின் குடிசைவீடு மாடமாளிகையாக மாறுகிறது .. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடிகொள்கின்றன .. இந்த அற்புதம் நிகழ்ந்ததும் அட்சய திருதியை நாளிலே ! மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான “பரசுராமனின் “ பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது .. சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள் ..கௌரவர் சபையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது ஆடைகளை அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்தநாளே என்கிறது வியாசபுராணம் .. ஐஸ்வர்ய லக்ஷ்மி அவதரித்த நாள் .. சங்கநிதி .. பத்மநிதியை குபேரன் பெற்ற நாள் மஹாவிஷ்ணுவின் வலர்மார்பில் மஹாலக்ஷ்மி இடம்பிடித்தநாள் .. என பல சிறப்புக்களை உடையது அட்சயதிருதியை நாள் .. “பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் “ என்பது ரமணர் வாக்கு .. இல்லாதோர் .. இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள் தர்மங்கள் .. பலமடங்கு உதவி செய்தவருக்கே ஏதாவதொருவகையில் திரும்ப கிடைக்கும் .. வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தித் தரும் .. அட்சய திருதியை நாளில் நாம் செய்யும் தானதருமங்கள் நமக்கு புண்ணியத்தைச் சேர்க்கும் .. இந்நாளில் சுயநலத்துடன் செய்கிறகாரியங்களைவிட .. பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும் .. ஏழைநோயாளிகளுக்கு .. சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேஷ்டி .. சேலை .. போர்வை தானமாகக் கொடுக்கலாம் .. ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம் .. ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு .. இனிப்புகள் வழங்கலாம் .. பசு .. நாய் .. பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி .. செல்வவளம் ஏற்படும் .. சமீபகாலத்தில்தான் ஆடம்பரபொருட்கள் தங்கம் .. வெள்ளி .. வைரம் வாங்கும் வழக்கம் உருவானது .. ” மகிழ்வித்து மகிழ் “ என்று சொல்வார்கள் எனவே மற்றவர்கள் மகிழும் வகையில் தானதருமங்கள் செய்து .. பலபுண்ணியங்கள் பெற்று .. ஆயுள் .. ஆரோக்கியம் நிறைந்த வளமானவாழ்வு பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY AND BEST WISHES FOR THE ' AKSHAYA TRITIYA ' .. MAY GODDESS LAXMI BLESS YOU AND SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI MATA DI " ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று பைரவருக்கு உகந்த அவரது ஜென்ம நட்சத்திரமான ” சித்திரை பரணியாகும் “ இன்றே அவர் அவதரித்தார் .. தங்களனைவருக்கும் அனைத்து தீராவினைகள் யாவும் நீங்கி அனைத்திலும் வெற்றிபெற வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் சூலஹஸ்தாய வித்மஹே ! ஸ்வாந வாஹனாய தீமஹி ! தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர் .. நவக்கிரகங்களுக்கும் பிராணதேவதையாக இருப்பவரும் பைரவரே ! தேவ .. அசுர .. மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனிபகவான் ஆவார் .. சனிக்கு வரம்தந்து இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார் ! .. சனியின் வாதநோயை நீக்கியவரும் பைரவரே ! பைரவருக்கு பலவிரதங்கள் இருந்தாலும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் அன்று கடைப்பிடிக்கப்படும் இந்த விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது .. இந்தநாளில் சிவபெருமானையும் விரதம் இருந்து வழிபடலாம் ..விரதகாலத்தில் திருமுறை ஓதல் நன்று .. பகல் பொழுதில் பால் .. பழம் உண்டு விரதத்தை முடிக்கலாம் .. அன்றைய தினம் மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று பைரவருக்கும் சிவபெருமானுக்கும் நெய்விளக்கேற்றி விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும் .. இந்த சித்திரை பரணியில் பைரவருக்கு விரதத்தை தொடங்கி வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் பைரவருக்கு வழிபாடு செய்யலாம் .. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை ஒழித்து இன்பம் அடைய பைரவர் வழிவகை செய்வார் என்பது நம்பகமான உண்மை .. பரணி நட்சத்துக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும் .. பலனும் அதிகம் கிடைக்கும் .. ஏனெனில் பைரவர் அவதரித்த நட்சத்திரமே பரணி ! பைரவரைப் போற்றுவோம் வாழ்வில் அனைத்து கஷ்டங்களும் நீங்கி அனைத்துவிதமான சந்தோஷங்களையும் பெறுவோமாக .. “ ஓம் பைரவாய நமஹ “ GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAVA .. " OM BHAIRAVAAYA NAMAHA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் பூமியில் நிறைந்த நாள் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன் நாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் சூரிய காயத்ரி - ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! “ லோக கர்த்தா “ என வேதங்கள் புகழும் சூரிய பகவான் பிரத்யக்ஷமாக நம் கண்முன்தோன்றி அருள்புரிபவன் .. அங்கிங்கெனாதபடி எங்கும் தன் அமுத கிரணங்களை வீசி உலகை வழிநடத்துபவர் .. உலகில் எவ்வுயிர்க்கும் ஏற்றத்தாழ்வுகளின்றி தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தரும் தேவதேவன் .. அவரது ஒளிக்கற்றைகளில் பேதமில்லை .. நம் எல்லோருக்கும் மேல் வானத்தில் பிரகாசித்து எல்லா உயிர்கள் .. பொருட்கள் .. மீதும் தன் ஒளிக்கிரணங்களை பாரபட்சமின்றிப் பொழிபவர் .. பேதமில்லாமல் யாவரையும் சமமாக நோக்கும் நெறியை நமக்குச் சொல்லாமல் சொல்பவர் .. தன்னை உதிக்கக்கூடாதென்று தன் கற்பின்சக்தியால் சாபமிட்ட நளாயினி .. மறுபிறவியில் திரௌபதியாகப் பிறந்தபோது அவளது பக்திக்கு இரங்கி அக்ஷ்யபாத்திரம் அளித்த கருணைப் பெருங்கடல் சூரியபகவான் .. சூரியனைப் போற்றுவோம் ! அவரது திருவருளையும் அருட்கடாக்ஷ்த்தைப்பெறுவோமாக .. “ ஓம் சூரியபகவானே நமோஸ்துதே ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. & HAPPINESS .. " JAI SURYADEV " ..

வாரம் ஒரு பாசுரம் சுவைப்போம்.. சனி விடியலில் அன்பு வணக்கம்

திருவாய்மொழி நூற்றந்தாதி
மன்னும் புகழ்சேர் மணவாள மாமுனிகள்

நன்னருளால் உட்பொருள்கள் தன்னுடனே - சொன்ன
திருவாய் மொழிநூற்றந் தாதியாம் தேனை
ஒருவா(து) அருந்துநெஞ்சே உற்று.

-
பிள்ளை லோகஞ்சீயர்

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் அனைத்து ஐஸ்வர்யங்களும் பெற்று .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழ பிரார்த்திக்கின்றேன் .. ஓம் சிவாய நமஹ ! ஓம் ஸ்ரீசிவ சித்தாய நமஹ ! ஓம் ஸ்ரீமஹா வேதாய நமஹ ! ஓம் சித்தேஸ்வராய நமஹ !! என்னில் யாரும் எமக்கு இனியாரில்லை .. என்னிலும் இனியான் ஒருவன் உளன் .. என்னுள்ளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்கு என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே உன்கிறார் .. ” யோகம் மூலம் என்னை அடையலாம் .. என்னிடமிருந்து பிரிந்த சக்தியை மீண்டும் அடையவே யோகமிருக்கிறேன் ” என்கிறார் சிவபெருமான் .. மனதை திடப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும் உரு (எண்ணிக்கை) ஏற திரு ஏறும் என திருமூலர் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்கும் நன்மையைப் பற்றிக் கூறுகிறார் .. திரு என்றால் பிரகாசமான என்று அர்த்தம் .. எல்லோரையும் கவரும் காந்தசக்தி என்றும் கூறலாம் .. “வாழ்க வளமுடன் “ என்பதும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமே ! நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகளுக்கும் சக்தி உண்டு .. அதைவிட திருமந்திரம் .. பெரியபுராணம் .. கந்தசஷ்டிகவசம் .. கந்தரலங்காரம் .. திருப்பாவை முதலான தமிழ் ஆன்மீகப் படைப்புகளுக்கு நாம் அவற்றை பாடும்போதும் .. மனதிற்குள் ஜபிக்கும்போதும் சக்தி அதிகம் .. இதற்குச் சமமானசக்தி கொண்டவையே சமஸ்கிருத மந்திரங்கள் .. அவற்றின் பெரும்பாலான மந்திரங்களுக்கு அர்த்தம் கிடையாது .. ஆனால் அவற்றை முறையாக உச்சரிக்கும் போது அது மனித நலத்தை அதிகப்படுத்துகிறது .. இது தொடர்பாக ஒலியியல் .. விஞ்ஞானம் என்ற புதிய அறிவியல்துறை உருவாக்கப்பட்டு இந்துக்களின் வேதமந்திரங்களுக்கு மனித கஷ்டங்களை நீக்கும் அல்லது மாற்றும் வலிமை உண்டு என கண்டறியப்பட்டுவிட்டது .. சிவனைப் போற்றுவோம் .. அவரது திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்று வளமுடனும் .. நலமுடனும் ..வாழ்வீர்களாக .. “ ஓம் நமசிவாய “ .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY THIS DAY WILL BE THE BEST OF ALL .. " OM NAMASHIVAAYA " ..


** 27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்








* உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

* அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

* பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

* கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

* ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

* மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

* திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

* புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

* பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

* ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

* மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்

* பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

* உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

* அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

* சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

* சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

* விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்

* அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

* கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

* மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

* பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

* உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

* திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

* அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

* சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

* பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

* உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

* ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்u

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் மஹாலக்ஷ்மியை ச வித்மஹே ! விஷ்ணுபத்ன்யை ச தீமஹி ! தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !! தேவர்களும் .. அசுரர்களும் பாற்கடலிலே அமிர்தத்தை கடைந்து கொண்டிருந்தபோதே ஸ்ரீலக்ஷ்மிதேவி ஸர்வசக்தியாக வெளிவந்து இந்த பிரபஞ்சத்தையே காக்கும் ஸ்ரீமன் நாராயணனின் இதயத்தில் அமர்ந்தாள் .. அதனாலேயே பக்தர்கள் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நினைத்து ஆத்மரூபமாக பூஜைசெய்தவுடன் கருணாமாயியான அவள் ஸ்ரீமன் லக்ஷ்மி நாராயணனாக தோன்றி சகல சம்பத்துக்களையும் கொடுத்து காத்து ரட்சிக்கிறாள் .. தெய்வீக உண்மைகளை உணர்ந்து வாழ்க்கை வழிமுறைகளை கற்றுக்கொண்டே தொடர்ந்து ஆத்ம ஒளியின் கீழ் வாழ்பவர்களுக்கு என்றென்றும் ஆனந்தம் தொடரும் .. மஹாலக்ஷ்மியைப் போற்றுவோம் ! அஷ்ட ஐஸ்வர்யம் .. சௌபாக்கியம் .. ஆனந்தம் என்றும் நிலைத்திடும் ! ஓம் மஹாலக்ஷ்மியே ! நமோஸ்துதே ! .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A HAPPY MORNING AND A BLESSED FRIDAY .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS MAHALAXMI .. MAY SHE SHOWER HER DIVINE BLESSINGS WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " JAI MATA DI " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் சேர்ந்து வருகின்றது .. மாலையில் பிரதோஷ வேளையில் (4.30 மணிமுதல் 6.00 மணிவரை ) சிவாலயம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையே சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை தரிசிப்பது நம் அனைத்து துன்பங்களும் நீங்கி இன்பத்தை அடையும் வழியே .. தங்களுக்கும் அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! பிரதோஷ வரலாறும் .. மகிமையும் .. அகிலாண்டேஸ்வரி ஒருமுறை தேவலோக கன்னிகை ஒருத்திக்கு அவளது நடனத்தை மெச்சும் வண்ணம் தனது கழுத்தில் இருந்த மலர்மாலையை பரிசாகத் தர .. கன்னிகையோ அதனை எதிரில் வந்துகொண்டிருந்த துர்வாசமுனிவரிடம் கொடுத்துச் சென்றாள் .. தேவலோகம் சென்ற துர்வாசர் அம்மாலையை இந்திரனுக்கு பரிசளிக்க .. மாலையின் மகிமையை அறியாத இந்திரன் அம்மாலையை தனது யானையிடம் தர .. யானை மாலையை தனது கால்களால் மிதித்து சிதைத்தது .. கோபத்திற்கு பெயர் பெற்றவராயிற்றே துர்வாசர் .. இந்திரனையும் .. தேவர்களையும் .. ஒருசேர சபித்தார் .. சாபவிமோச்சனம் பெறவேண்டி தேவரும் ..இந்திரனும் ..பரந்தாமனை வேண்டினர் .. மனம் இளகிய பரந்தாமனும் திருப்பாற்கடலை கடைந்து அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்துமாறு கூறினார் .. மந்திரகிரி மலையை மத்தாகவும் .. வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாம்பின் தலைப்பகுதியை அசுரரும் .. வால்பகுதியை தேவர்களும் பிடித்து கடையத் தொடங்கினர் .. மலை சாய்ந்தது உடனே மஹாவிஷ்ணு ‘ கூர்ம அவதாரம்’ எடுத்து மலையைத் தாங்கிப்பிடித்தார் .. மேலும் கடையும்பொழுது வாசுகி வலிதாங்காமல் விஷம்கக்க அப்பொழுது கடலிலும் நஞ்சுதோன்ற இரண்டும் சேர்ந்து “ஆலகாலம்” என்ற கடுமையான விஷமானது .. இதைக்கண்ட வானவர் அஞ்சி நடுங்க திருமாலும் நான்முகனும் அவர்களை கயிலை சென்று பரமனிடம் தஞ்சமடையுமாறு சொன்னார்கள் வானவரும் அவ்வாறே செய்ய கயிலைநாதன் தனது தொண்டனான சுந்தரனை அழைத்து அந்த ஆலகால விஷத்தை எடுத்துவரச் சொன்னார் .. யாராலும் அணுகமுடியாத அந்த விஷத்தை சுந்தரன் நாவல்பழம்போல் உருட்டி எடுத்துவர முக்கண்ணன் அதனை எல்லோரையும் காக்கும் பொருட்டு தனது வாயில் இட .. பரமன் உண்டால் பெரும்கேடு விழையுமே என அஞ்சிய உமையாள் பரமனின் கண்டத்தில் தனது கைகொண்டு தடுக்க விஷமானது சிவனின் கண்டத்திலேயே தங்கி சிவனாரது கழுத்து நீலநிறமானது .. பெருமானும் “நீலகண்டரானார் “ .. இது நடந்தது ஏகாதசி அன்று மாலைபொழுதில் .. பின்னர் தேவர் சிவனின் கூற்றுப்படி பாற்கடலை மீண்டும் கடைந்தனர் .. மறுநாளான துவாதசி திதியன்று பாற்கடலில் அமிர்தம் தோன்ற தேவர்கள் அதனை உண்டு சாகாவரத்தை திரும்ப பெற்றனர் .. ஆனால் சிவனை மறந்தனர் .. பின்னர் பிரம்மதேவர் தேவர்களின் குற்றத்தை உணர்த்த தேவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கயிலை அடைந்து நாதனை மன்னித்தருள வேண்டினர் .. சிவபெருமானும் மனம்கனிந்து தனக்கு முன்னால் இருந்த ரிஷபவாகனத்தின் இருகொம்புகளுக்கு இடையில் அம்பிகை காண திருநடனம் புரிந்தார் .. அனைவரும் அதைக்கண்டு களித்து பெருமானை வணங்கினர் இதுநடந்தது திரயோதசி திதியன்று மாலைவேளையில் .. இதுவே பிரதோஷகாலம் என வழிபடப்படுகிறது .. (மாலை 4.30 - 6.00 மணிவரை ) பிரதோஷ பூஜை சிவபெருமானுக்கு மட்டுமே உரிய பூஜை .. சிவபெருமானை விஷ்ணு .. பிரம்மன் முதலிய அனைத்து தெய்வங்களும் வழிபடும் நேரம் .. எனவே இக்காலங்களில் வேறு எந்த கடவுளருக்கும் பூஜைகள் நடைபெறாது .. சிவாலயங்களில் உள்ள மற்ற கடவுளரின் நடைகள் சார்த்தப்பட்டிருக்கும் .. அல்லது திரையிடப்பட்டிருக்கும் .. சிவனைத் துதித்து அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BLESS YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " ..