PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM GURUVE SARANAM



ஜூலை 30 , ஆடி 14 ம் நாள், இனிய ஞாயிறு காலை வணக்கங்களுடன் ஆடி மாதத்தை பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மீண்டும் நினைவு படுத்தி அம்மன் கோவில்களில் சில அம்மனின் தரிசனமும் காண்போம் வாருங்கள்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் ஜோதியான அந்த பரமசிவன் அண்டம் அனைத்தையும் உருவாக்கி அதில்  தான் படைத்த  மனிதன் மகிழ்ச்சியுடன்  வாழ, சிறு-குடில் போன்ற பூமியையும் உருவாக்கி, தன்னுடைய சக்தியான பூமா தேவியை, பூமியில் பூமித்தாய்-அம்மனாக அவதரிக்க செய்த மாதம் தான் இந்த ஆடி மாதம்.

இந்த மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. வருடத்தை இரு காலங்களாக பிரித்து,தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இது தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்கள் லிங்க வழிபாடு செய்கின்ற மாலை நேரம் ஆரம்பமாகின்றது.

ஒரு நாள் பார்வதி தன்னை வேண்டி தவம் செய்வதை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஒரு தனிச்சிறப்பு, சிவனும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரரை  பூசிக்கும் மாதமல்லவா இது .

சிவனும்-சக்தியும் அர்த்தநாரீஸ்வரராய் உலா வரும் போது, ஐயமின்றி  குளு குளு அருவிகளில் ஆடிப்பாடி பூத்துக்குலுங்கும் ஆடி மாதத்திற்கு இயற்கையாகவே  பல தனிச்சிறப்புகளும் உண்டு  பார்க்கும் இடமெல்லாம் பூவும் காய் கனிகளுமாய் கொட்டிக்கிடக்கும் ஆடி மாதத்தில் உணவுக்கு பஞ்சமே கிடையாது  

காடும் மேடும் பள்ளமும் வயலும் குளமும், ஏரியும், ஆறும் கடலும்  பொங்கி வழியும் இந்த மாதத்தின் வருகை விலங்குகளும், பறவைகளும் இன விருத்தி செய்து கீக்கீ கீ.... கூக்கூ கூ.. என்னும் ஒலியுடன் குட்டி-குஞ்சுகளுடன் மகிழ்சியுடன் சுற்றித்திரியும் அற்புதமான மாதமிது

ஆடிக்காற்று , ஆடிப்பெருக்கு - (நதிகளில் நீர்ப் பெருக்கு), ஆடிப்பட்டம், ஆடிப்பூரம்-(கோதை நாச்சியார்-ஆண்டாள் அவதரித்தநாள், அம்மனுக்கு வளையல் அணிவித்தல்) ஆடிக்கூள், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பிறப்பு, ஆடிப்பூரணை-(பெளர்ணமி) ஆடி நிலாச் சோறு, ஆடி அமாவாசை  - (முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும்)

ஆடித்தாலி ( புதுத் தாலி அணிவது), ஆடி கிருத்திகை (திருத்தணி முருகன் திருவிழா), ஆடித்தேர், ஆடி முளைப்பாரி என்று ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் ஆடி மாதச் சிறப்புகளை சொல்லில் வடிக்க முடியாது.

ஆடி மாத-அம்மன் கூழின் மகிமை
ஆனந்தக்கூத்தன் அம்மன் அடியவர்களுக்கு அருட்சத்தியையும், வலிமையையும், குளிர்ச்சியையும் தரும் கஞ்சியில் சேர்க்கும் முதன்மையான பொருட்களில் முதன்மையானது கேழ்வரகு, கம்பு  போன்ற சிறு-தானியங்கள் தான் 

கூழ் காச்சும் போது  ருசிக்காக சேர்க்கப்படும் மற்றய பொருட்கள் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய்-துருவல், மல்லி-இலை, கறிவேப்பிலை, மாங்காய், சில
இடங்களில் உப்பு சேர்க்கமாட்டாங்க மற்றும்  இதில் மஞ்சள், கமகமக்கும் வேப்பிலை மிக சிறப்பு மிக்கது என்பது தான் அம்மன், வேப்பிலை நாயகியின்-கூழின் மகிமை. 

“திரிபுரசுந்தரி திருவடித் தாமரை  தினம் வந்து நமைக் காக்குமே திரிபுரசுந்தரி திருவிழிப் பார்வையில தெய்வீக நிலை பூக்குமே திரிபுரசுந்தரி திருக்கரம் படுவதால் தீமைகள் தான் விலகுமே திரிபுரசுந்தரி திருமுடி காண்கையில்
தேன் வாழ்வுதான் மலருமே”

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE SHASHTI THITHI TOO .. MAY LORD MURUGA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "---GURUVE SARANAM SARANAM...SWAMIYE SARANAM......GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE SHASHTI THITHI TOO .. MAY LORD MURUGA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

Image may contain: indoorImage may contain: flower, plant and indoor




” அருவமும் உருவவமாகி அநாதியாய் பலவாயொன்றாய்ப் பிரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம்பதோர் மேனியாக கருணைகூர் முகங்களாறும் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய “
(இவ்வாறு முருகனின் தோற்றம் பற்றி கந்தபுராணம் கூறுகிறது)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டித் திதியாகிய (மதியம்வரை)இன்று மனதில் நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் தங்கள் வாழ்விலும் என்றும் நிறைந்திட கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகனுக்கு கிழமை .. நட்சத்திரம் .. திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன ..
கிழமைகளில் - செவ்வாய்
நட்சத்திரத்தில் - கிருத்திகை
திதியில் - சஷ்டி
ஆகியவை முருகனுக்கு உகந்தவையாகும் .. கந்தசஷ்டிகவசம் .. கந்தகுருகவசம் .. ஷண்முக கவசம் திருப்புகழ் .. கந்தர்கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்து முருகனை மனதாரத் துதித்து வழிபட்டால் நமக்கு எதிராகவரும் அனைத்து தடைகள் தடங்கல்கள் .. பிரச்சினைகளையும் தகர்த்தெறிந்து வளமான வாழ்வுதனை அருள்வார் என்பது நம்பிக்கை
முருகன் கையில் உள்ள வேல் ஞானசக்தியினை குறிக்கிறது .. அனைத்து துன்பங்களும் ஞானத்தினால் விலகிடும் .. முருகப்பெருமான் பத்மாசுரனுடன் போர்புரிந்து அவனது ஆணவத்தை அடக்கி ஆட்கொண்ட நாளே சஷ்டியாகும் .. இவர்கள் இருவருக்கும் போர்நடந்த இடம் திருச்செந்தூர் திருத்தலம் .. இதனை நினைவுபடுத்தும் வகையில் கந்தசஷ்டியன்று கடற்கரையோரம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுவதற்கு வசதியாக இன்றும் கடல் உள்வாங்கிச் செல்லும் .. சூரசம்ஹாரம் முடிந்து முருகன் கோவிலுக்கு திரும்பும்போது மீண்டும் கடல் பழையநிலையை அடையும் ..
நமது “அகம்” என்கிற நம் மனதில் இருக்கிற பேராசை .. வெறுப்பு .. ஆணவம் .. கோபம் .. வஞ்சம்தீர்த்தல் .. கருமித்தனம் உள்பட பல்வேறு தீயகுணங்களையும் அழித்து நமக்கு நல்வழி காட்டுகிறார் முருகப்பெருமான்
ஆணவம் .. அகங்காரம் அதிகமானால் அதனை அழித்திட ஆண்டவன் அவதாரம் செய்கிறான் ..
இரண்யகசிபுவின் ஆணவத்தை மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தார் ..
அகங்காரம் .. காமவெறி கொண்ட ராவணேஸ்வரனை மஹாவிஷ்ணு .. ராமனாக உருக்கொண்டு அழித்தார்
சூரபத்மாதியர்களை பரமசிவனே மறுவுருவமாக சுப்ரமண்யனாக உதித்து அழித்தார் ..
மற்ற அசுரர்கள் அழிவை “ வதம் “ என்கிறோம் .. சூரபத்ம அழிவை “ சம்ஹாரம் “ என்கிறோம் .. என்ன வேறுபாடு எனில் ..
மாமரமான சூரனை முருகன் வேலால் துளைக்க அதன் ஒருபாதி - மயிலாகி முருகனுக்கு வாகனமாகியது ..
மறுபாதி - சேவலாகியது .. அதனைக் கந்தன் கொடியாக ஏந்தினான் ..
அவர்கள் ஒப்பந்தமும் அவ்வாறே ! இருவரும் மற்றவரை ஏந்தவேண்டும் என்பதே!
இந்தமாதிரியான வினோதம் முருகப்பெருமானுக்கு மட்டுமே உகந்தது .. பகைவரையும் மன்னிக்கும் குணம்
கந்தனைப் போற்றி அவன் திருப்பாதங்களில் சரணடைவோமாக ! ஓம் சரவணபவாய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
Image may contain: 1 person
Image may contain: indoor

PANVEL BALAGAN PATHAM POTRI POTRI....GURUVE SARANAM SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE " GARUDA PANCHAMI " & MAY GARUDA BHAGAWAN MAKES YOUR TRAVEL THROUGH THE WORLD SMOOTHER & FREE OF OBSTACLES .. GARUDA PANCHAMI CELEBRATES THE MOTHER & SONS LOVE .. AFFECTION .. DEVOTION .. & BOND BETWEEN EACH OTHER .. THE FESTIVAL IS DEDICATED TO GARUDA BECAUSE OF DEVOTION TOWARDS HIS MOTHER KADHRU .. GARUDA POOJA IS MAINLY OBSERVED BY MARRIED WOMEN FOR THE BETTER HEALTH & FUTURE OF THEIR CHILDREN .. " JAI SHREE GARUDA DEV "





" கருடபகவானே ! உம்முடைய கூர்மையான வளைந்த அலகு எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது .. நீர் உமது புருவங்களை நெறிக்கும்போது பாம்பு நெளிவதைப் போல் அச்சமேற்படுகிறது .. உம்முடைய கோரைப்பற்களைக் காணும் எதிர்கள் .. இவை தேவேந்திரனின் வஜ்ராயுதமோ என்று கதிகலங்கிப் பின்வாங்குகிறார்கள் .. இத்தகைய பெருமைகள் கொண்ட உம்மை அடியேன் போற்றுகிறேன் .. வேதாந்த வித்தைகள் அடியேனுக்கு வசமாகும்படியாக அருள் செய்யவேண்டும் .. மேலும் எப்போதும் உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் தவறாமல் தந்தருளவேண்டும் என்கிறார் தேசிகர் .. 
( இந்த “கருடதண்டகத்தைப்” பாராயணம் செய்துவந்தால் எதிரிகள் தொல்லை ஒழியும் .. நோய் நொடிகள் அண்டாது .. விஷ ஜந்துக்களாலும் எந்தவிதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர் )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் கருடபஞ்சமி நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. ( மதியம்வரை பஞ்சமிதிதி)பெருமாளின் வாகனமாகவும் .. கொடியாகவும் விளங்கும் கருடபகவானுக்கு உகந்த நாளாகிய இன்று கருடனைப் போன்ற பலசாலியும் .. புத்திமானாகவும் .. வீரனாகவும் மைந்தர்கள் அமைந்திடவும் .. தாங்கள் வேண்டிய அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறிடவும் .. கனிந்த வாழ்க்கை தங்களனைவருக்கும் கிடைத்திடவும் கருடபகவானைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
ஸூவர்ணபக்ஷாய தீமஹி ! 
தந்நோ கருடஹ் ப்ரசோதயாத் !!
பெருமாளின் வாகனமாகவும் .. கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது .. கருடபஞ்சமியன்று கருடவழிபாடும் .. விஷ்ணுவழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் .. இன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர் ..
வினதையின் மைந்தன் கருடனின் மாற்றந்தாய் கத்ருவின் மைந்தர்கள் நாகங்களே ! அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தான் வினதை அடிமையாக நேர்ந்தது 
அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவலோகம் சென்று அமிர்தம் கொண்டுவர நேர்ந்தது .. அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது .. எனவே கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம் .. மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்டநாகங்களே !
“ ஆழ்வார் “ என்ற சிறப்புப்பெயர் கருடாழ்வார்க்கு உண்டு .. பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் கருடக்கொடியாகவும் .. பெருமாளின் பாதங்களுக்கு கீழே கருடன் கருடவாகனமாகவும் திகழ்கின்றார் ..கருடமந்திரம் சக்திவாய்ந்த ஒன்று .. எதிரிகளை வெல்வதற்கும் .. விஷங்களை முறிக்கவும் மந்திர தந்திரங்களுக்கும் .. தீய சக்திகளை ஒடுக்குவதற்கும் வாதங்களில் வெல்வதற்கும் கருடமந்திரத்தை ஜபிப்பார்கள் ..
கார்கோடகன் என்னும் நாகத்தை அடக்கிப்பிடித்துள்ளதால் கருடன் சனிபகவானின் விளைவுகளை மட்டுப்படுத்துபவர் .. 
“ சுபர்னோ வாயு வாகனா “ என்பார்கள் .. வாயுபகவானே ! கருடனுக்கு வாகனமாக அமைகிறார்
கருடன் வேதசொரூபம் அதனால் குருவுக்குச் சமமானவர் .. கூடப்பிறந்த சகோதரர்களின் நலத்தையும் .. வளத்தையும் கோரும் நோன்பாக அமைகின்றது கருடபஞ்சமி .. ஆதலால் அவர்களை நமஸ்கரித்து ஆசிபெறவேண்டும் .. சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்யவேண்டும் ..

எம்பெருமான் பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும் .. அவரைத் தாங்கிச்செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட்டு சுபீட்சமான வாழ்வினைப் பெறுவோமாக ! 
“ ஓம் கருடாழ்வாரே ! நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 Image may contain: 2 people


SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM




ஸ்ரீ வில்லிபுத்தூர் ஐந்து கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது





வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் 
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்
என்று ஆண்டவனையே மணந்துகொள்வது போல் கனவு கண்ட கோதை பெரியாழ்வாருக்கு நந்தவனத்தில் கிடைத்த குழந்தை.சீராட்டி வளர்க்கப்பட்ட அவள் பெரியாழ்வார் ஆண்டவனுக்குத் தினம் சமர்ப்பிக்க வேண்டிய மாலையை தான் அணிந்து அழகு பார்ப்பாள்.ஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் ,வேறு மாலை தொடுத்து ரங்கநாதருக்குச் சமர்பிக்கச் சென்றார். இறைவன் கருவறையிலிருந்து “இனி
கோதை சூடிக் கொடுக்கும் மாலையையே அணிவேன்” என்ற அசரீரி கேட்டது.ஆகவேதான் அவளுக்கு சூடிக்கொடுத்த சுடற்கொடி என்ற பெயர் ஏற்பட்டது.
பெரியாழ்வார் கனவிலும்,கோவில் நிர்வாகிகள் கனவிலும், ஸ்ரீரங்க நாதர் ,
கோதையை மணக்கும் செய்தியைத் தெரிவித்தார். மன்னனிடம் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரை தெருக்களை யெல்லாம் அலங்கரிக்கச் செய்து பல்லக்கு பரிவாரங்களை ஸ்ரீவில்லி புத்தூருக்கு அனுப்பி வைத்தான்.அங்கு கோவில் கருவறையில், ஆண்டாள் அணிந்திருந்த மாலையை, பெரியாழ்வார் எடுத்துக் கொடுக்க,அதை இறைவன் காலடியில் வைத்துவிட்டு ரங்க நாதர் அணிந்திருந்த மாலையை ஆண்டாளிடம் கொடுக்க அவள் அணிந்து கொண்டாள்.இவ்வாறு தெய்வத் திருமணம் நிகழ்ந்தது. அப்போது ஒரு பேரொளி தோன்றியது அதில் ஆண்டாள் ஐக்கியமானாள்
.” அன்பினால் எமை ஆட்கொண்ட கோதை இனி ஆண்டாள் என அழைக்கப்படுவாள்” என கருவறையிலிருந்து ஒலி கேட்டது.
ஆண்டாள் அன்பினால் இறைவனையே ஆண்டாள்!
 Image may contain: 1 person

PANVEL BALAGANE SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. IN TEMPLES THIS DAY IS CELEBRATED AS THE " VALAIKAAPPU " (BABY SHOWER) FESTIVAL FOR MAA SHAKTHI .. WHEN BANGLES ARE OFFERED TO SHAKTHI & THEN DISTRIBUTED TO THE DEVOTEES .. THESE BANGLES ARE SAID TO PROVIDE OFF SPRINGS & GENERALLY PROTECT US FROM ALL EVILS .. MAY YOU ALL BE BLESSED .. " OM SHAKTHI OM "


அன்னையின் திருநாள் ஆடிப்பூரத்திருநாள் ! 
அனைத்திலும் உயர்வு ! ஆடிடும் மனதை அசையா நிறுத்தி அதிலே அவளைக் கண்டிட விழைவோம் ! 
ஆடும் மயிலாம் ஆடியே வருவாள் ! 
அழகாய் எம் உள்ளில் உறைவாள் ! அகமும் புறமும் அவளை நினைந்தால் அருளைப் பொழிவாள் கருணைக்கடலாய் ! ஆடிப்பூரத்தில் அவளை நினைப்போம் ! பாடியே நிதமும் பதமலர் பணிவோம் ! 
தேடியே வருவாள் சத்தியம் இதுவே ! நாடியே நாமும் நம்பிக்கை கொள்வோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ஆடிப்பூரத்திருவிழா நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. இந்நாளில் அன்னையைத் துதித்து சகல நலங்களையும் .. வளங்களையும் .. நீங்காத செல்வத்தையும் தங்களனைவருக்கும் தந்தருள்வாளாக ..
ஓம் சீதளாயை ச வித்மஹே ! 
சூர்ப்பஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ மாரீ ப்ரசோதயாத் !!
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடிமாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது கொண்டாடப்படுவது .. இது தேவிக்குரிய திருநாளாகும் 
இந்நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு ..
உலகமக்களைக் காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள் .. அனைத்து உலகத்தையும் படைத்தும் .. காத்தும் .. கரந்தும் .. விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு .. சந்தனக்காப்பு . குங்குமக்காப்பு நடத்துவார்கள் .. அந்த பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள்தான் ஆடிப்பூரம் .. அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள் .. பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாளே திருவாடிப்பூரம் ..
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சாத்துவதும் .. வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் அற்புதமான பலன்களை வாரிவழங்கக் கூடியது .. வளமான வாழ்வுதனையும் தரவல்லது ..
பக்தர்கள் காணிக்கையாகத்தரும் வளையல்களை அம்மனுக்கு சாத்திவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள் .. இதனை அணிந்துகொண்டால் இல்லத்தில் மங்களங்கள் நிறையும் என்பது நம்பிக்கை ..
ஆடிமாதத்தில் துளசித்தோட்டத்தில் அன்னை ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள் .. அரங்கனுக்கு சூட்டவேண்டிய அரத்தினை தானே சூடிக்கொண்டு ஆடியில் அழகுபார்த்தாள் ஆண்டாள் .. தான் சூடிக்களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் “ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்ற திருநாமம் பெற்றாள் .. அப்போது அந்தக்கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அன்னை .. தானே அவனாகப் பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினமாகிய ஆடிப்பூரத்தில் நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் அனைவரும் ஆனந்த வாழ்வினைப் பெறுவர் ..
“ ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, smiling, indoor


SWAMYE SARANAM..GURUVE SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA SHAKTHI .. MAY MAA BRING COUNTLESS BLESSINGS & ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " JAI MAA SHAKTHI "





” நெறஞ்சமனசு உனக்குத்தானடி மகமாயி ! 
உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி 
மறைகளும் இதைச்சொல்லுமடி மகமாயி ! 
நமை ஆளும் நாயகி நல்மகமாயி ! 
கண் இமைபோல் காத்திடுவாள் எங்கமகமாயி ! 
உமையவள் அவளே ! இமவான் மகளே ! 
சமயத்தில் வருபவள் அவளே ! எங்கள் சமயபுத்தாள் அவளே ! தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தோம் தஞ்சை முத்துமாரி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. பக்திகமழும் ஆடிச்செவ்வாய் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. இரண்டாம் ஆடிச்செவ்வாயாகிய இன்று தங்களனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தையும் .. சுபீட்சத்தையும் அன்னை தந்தருள்வாளாக ..
ஓம் ஸர்வஸம் மோஹின்யை வித்மஹே ! 
விஷ்வ ஜனன்யை தீமஹி ! 
தந்நஸ் சக்தி ப்ரசோதயாத் !!
ஆடிமாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து எண்ணை .. மஞ்சள் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம் .. இதனையே 
“ ஆடிச்செவ்வாய் தேடிக்குளி “ என்பார்கள் ..
ஆடிமாதம் மழைக்காலத்தின் துவக்கமாகும் .. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் .. எலுமிச்சைக்கும் உண்டு .. எனவே ஆடிவழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன ..
ஆடிமாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ”அன்னை ஒளவையார் விரதம் “ அனுஷ்டிப்பார்கள் .. இரவு 10.30க்கு மேல் பெண்கள் மட்டுமே இதனைக் கடைபிடிப்பார்கள் .. மூத்தசுமங்கலிப் பெண்கள் வழிகாட்ட இளைய பெண்கள் விரதத்தைத் தொடங்குவார்கள் ..
பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பார்கள் .. அதன் வட்வம் வித்தியாசமானதாக இருக்கும் .. அன்றைய நிவேதனங்கள் எதிலுமே உப்பு போடமாட்டார்கள் .. அனைத்தும் தயாரானதும் .. அன்னை ஒளவையாரை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள் .. ..
ஒளவையார் அன்னையின் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர் .. இறுதியாக விரதநிவேதனங்கள் அனைத்தையுமே அந்த பெண்களே உண்பார்கள் .. ஆண்மக்களுக்கோ கணவருக்கோ கொடுத்தலாகாது ..
பூஜை முடிந்த உடனே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைபடுத்திவிடுவார்கள் .. இவ்வாறு விரதம் அனுஷ்டித்தால் குடும்ப ஒற்றுமை இலைக்கும் என்பது ஐதீகம் ..
அன்னையைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! 
“ ஓம் சக்தி ஓம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMY SARANAM...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE " AADI AMAAVASYA " TOO .. AADI AMAAVAASAI ( AADI AMAAVASYA) IS THE NEW MOON DAY THAT FALLS IN THE TAMIL MONTH OF " AADI " (JULY - AUG) IT IS ONE AMONG THE THREE MOST POWERFUL NEW MOON DAYS TO OFFER TARPANAM TO HONOR YOUR ANCESTORS & RECEIVE THEIR ETERNAL BLESSINGS .. BY OFFERING TARPANAM RITUALS FOR YOUR ANCESTORS ON THIS DAY HELPS THEIR SOULS ATTAIN MOKSHA ( SALVATION) .. " OM PITHRU DEVO BAVA "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. தட்சிணாயண புண்ணியகாலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதியான இன்று நம்மைவிட்டு .. இவ்வுலகைவிட்டு நீங்கிய நம் மூதாதையர்களை நினைந்து வழிபடுவதற்கு உகந்த நாளாகிய “ ஆடி அமாவாசையாகும் “ நாம் நம் முன்னோர்களின் ஆராதனைக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் .. அன்றைய தினத்தையே “ பித்ரு தர்ப்பணம் “ என்றழைப்பார்கள் ..
பொதுவாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம் .. அதிலும் ஆடி அமாவாசை .. மஹாளய அமாவாசை .. தை அமாவாசை .. ஆகிய மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினங்களாகும் ..
அமாவாசை என்றால் .. சூரியனும் .. சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் நாளாகும் .. சூரியனை தந்தைவழி முன்னோராகவும் .. சந்திரனை தாய்வழி முன்னோராகவும் நினைத்து அவர்களது ஆன்மாவிற்கு மரியாதை செய்யும் விதமாக அமாவாசையன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் தந்து வழிபடுவர் ..
ஆடி அமாவாசை அன்று கோயில் .. குளம் .. நதிக்கரை .. கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி .. நம் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் விட்டு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் .. பின்னர் வீட்டில் முன்னோர் படங்களுக்கு மலர்ச்சரம் அணிவித்து அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளுடன் பூசணிக்காய் .. வாழைக்காய் போன்ற காய்கறிகளையும் சமைத்து படைக்கவேண்டும் .. பின்னர் காகங்களுக்கும் .. அதிதிகளுக்கும் உணவளித்து அதன்பிறகே நாம் உண்ணுதல் சிறப்பாகும் .. இப்படிச்செய்தால் முன்னோர்களுடைய ஆசிகள் நமக்குப் பூரணமாகக் கிடைக்கும் .. வாழ்க்கையில் சகல வெற்றிகளையும் பெறலாம் ..
“ ஓம் பித்ரு தேவோ பவ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
 Image may contain: sky and water

SWAMYE SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA SHAKTHI .. THE TAMIL MONTH OF AADI IS A DIVINE MONTH FILLED WITH POWER .. PROTECTION & SPIRITUAL BLESSINGS OF GODDESS MAA SHAKTHI .. AADI IS CONSIDERED AUSPICIOUS TO INVITE FEMININE ENERGY .. GOOD FORTUNE & GREAT OPPORTUNITIES TO PROGRESS IN LIFE .. DURING THIS MONTH THE ENERGY RADIATING FROM THE SUPREME SHAKTHI FILLS THE EARTH PLANE & CAN PROVIDE YOU WITH SPECIAL BLESSINGS...



" நெஞ்சினிலே நிறைஞ்சிருப்பா ! நிம்மதியைத் தந்திடுவா ! வஞ்சகரின் வாழ்வறுப்பா ! வந்தவினை தீர்த்திடுவா ! மஞ்சளிலே குளிச்சிருப்பா ! சிங்காரமாய்ச் சிரிச்சு நிப்பா ! தஞ்சம் என்று வந்துவிட்டால் தயங்காம காத்து நிப்பா ! வாரும் அம்மா தூயவளே ! எந்தன் தாயீ மாரியம்மா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை அந்தனங்களும் .. முதலாம் ஆடிவெள்ளி நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் .. சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் என்று பக்திமணம் கமழும் ஆடிமாதத்தின் முதல் வெள்ளியும் .. பிரதோஷத் திதியும் கூடிவரும் இந்நாளில் தங்களனைவருக்கும் அன்னை மாயீ சகல பாக்கியங்களையும் அள்ளித்தருவாளாக .. அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று வாழ்வின் உச்சத்தைத் தொடுவீர்களாக !
ஓம் சீதளாயை ச வித்மஹே ! 
சூர்ப்பஹஸ்தாயை தீமஹி ! 
தந்நோ மாரீ ப்ரசோதயாத் !!
பல்வேறு விதமான சாஸ்திர சம்பிரதாயங்களை நம் முன்னோர்கள் பன்னெடுங்காலமாக கடைபிடித்து வருகின்றனர் .. அவற்றுக்கு நிச்சயமாக ஏதாவது காரணமும் .. அறிவியல் முக்கியத்துவமும் இருக்கும் அந்தவகையில் ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பு என்பது சூரியனின் சஞ்சாரத்தைக்கொண்டே கணக்கிடப்படுகிறது ..
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடிமாதத்தை கர்கடகமாதம் என்பார்கள் .. சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் 4ம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடகராசியில் சூரியன் செல்வதே ஆடிமாதப் பிறப்பாகும் ஆடிமாதத்தில் இருந்துதான் விரதங்கள் .. பண்டிகைகள் உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது
இந்த மாதத்தை ”அம்மன்மாதம் ” என்றும் .. 
”அம்பாள்மாதம் ” என்றும் சிறப்பித்து கூறுவார்கள் .. அந்தளவுக்கு வீடுகளிலும் .. கோவில்கலிலும் விழாக்களும் .. விரதவழிபாடுகளும் களைகட்டும் ..
பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளுக்கென்றே ஓர் தனிச்சிறப்பு உண்டு .. அதிலும் ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை .. அந்தவிதத்தில் இன்று ஆடிமுதல் வெள்ளியில் பெண்கள் விரதமிருந்து கணவன் மற்றும் குடும்ப நலன் வேண்டி அம்மன் வழிபாடு செய்கின்றனர் 
சுமங்கலிப்பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும் 
திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம்கூடிவரவும் விரதம் மேற்கொள்கின்றனர் ..
கண்ணன் கீதையில் சொன்ன வழி -
” ஒரு சிறு இலையாவது முழுமனதுடன் அர்ப்பணிப்பவரைக் காத்து ரட்சிப்பேன் என்று “ 
அவன் தங்கை மாயி ! மகமாயி மணிமந்திர சேகரிக்கும் அஃதே ! அதுவே வேப்பிலை !
இலைகூட உனக்குக் கிடைக்கவில்லையா ..? சரி தண்ணீர்கிடைக்குமே ! தண்ணீர் கிடைக்கவில்லை என்று யாரும் எங்கும் .. எப்போதும் சொல்லவே முடியாதே ! என்று கண்ணன் உறுதியாகச் சொல்கின்றான் .. ஏன் ..? 
“ உன்கண்களில் இரண்டு சொட்டாவது இருக்குமே தண்ணீர் ! அதை அர்ப்பணி “ என்று .. இதோ என்று அன்னையவளின் பாதக்கமலத்தில் சமர்ப்பிப்போமாக !

“ ஓம் ஸ்ரீசக்தி ! ஜெயசக்தி ! சிவசக்தி ! நவசக்தி ! நமோ நமஹ “ .. 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 Image may contain: 2 people