PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

1229th Jayanthi of Sri Adisankara the Jagadguru ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம், அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம். Although he lived fir just 32 years the work done by him is more than people who lived far more. I sincerely feel this day should be declared as Guru Jayanthi day and celeberated with much faith and fervour. There may be other acharyas after him. But Adisankaracharya stands very tall all above them. Hara Hara Sankara Jaya Jaya Sankara

Image may contain: 1 person

SWAMY SARANAM...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE PANJAMI THITHI TOO .. MAY GODDESS MAA VARAAHI PROTECT YOU FROM ALL THE EVIL FORCES FROM YOUR LIFE & GUIDE YOU ALONG THE RIGHT PATH .. " JAI SHREE VARAAHI DEVI "


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி ! 
வஞ்சர் உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா வயிரவி மண்டலி மாலினி சூலி வராஹி என்றே ! செயிர் அவி நான்முறை சேர் திருநாமங்கள் செப்புவரே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
வளர்பிறை பஞ்சமித் திதியாகிய இன்று அன்னை வராஹியை வழிபடுவது சிறப்பு .. அன்னையைத் துதித்து தாங்கள் எண்ணிய எண்ணங்கள் யாவும் ஈடேறவும் .. சொன்ன வாக்கெல்லாம் பொன்னாகவும் 
எதிரிகள் யாவரும் நண்பர்களாகி வாழ்வில் வசந்தம் வீசிடவும் .. வராஹிதேவியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஸ்யாமளாய வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
அன்னையை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம் காட்டிடுவாள் .. வாழ்வில் வெற்றிகள் அனைத்தும் தருவாள் .. அவளே பகளிமுகி
தூமாவதி என்று சொல்வார்கள் .. ஆக வராஹி வழிபாட்டால் வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம்.. எதிரிகளை அன்பால் வெல்லலாம் ..
வராஹி என்ற நாமத்தைக் கேட்டாலே ! பலருக்கு பயம் வரும் .. அப்படியான ஒரு அம்பிகை நாமம்தான் வராஹி .. சப்தகன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் .. பஞ்சமித்தாய் வாழ்வின் பஞ்சங்களைத் துரத்துபவள் வராஹி வராஹரின் சக்தி என்றும் எமனின் சக்தி (நீதி தெய்வம் ) என்றும் சொல்லப்படுகிறாள் .. அதில் வராஹ அவதாரத்தோடு 
சொல்லப்படும் செய்தி வராஹியின் தத்துவத்தை உணர்த்திவிடும் ..
வராஹம் என்றால் பன்றி .. வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹிதான் ..பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது .. எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஓர் பிராணி ..ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன்மூக்கின்நுனியில் வைக்கவேண்டும் (பூமியை ஒருதூக்கு தூக்கி தலையை உயர்த்தி)
ஆனால் தான் கொண்ட உருவத்தினியல்பை
(இயற்கை ) மாற்றமுடியாதல்லவா .. ? அந்த உந்துதலுக்கு ( உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வராஹி ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம் .. அன்னையின் வழிபாட்டால் நம்முடைய வாழ்வும் தானாய் உயரும் .. வராஹி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை .. உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும் ..வராஹி வழிபாட்டின் பலன் நம்மை சாதாரணமனிதர் என்னும் படியிலிருந்து உயர்த்தி அடுத்தநிலைக்கு கொண்டுசெல்லும் ..
அன்னை வராஹியை வழிபடுவோம் ! வாழ்வில் ஏற்றம் காண்போம் ! 
 “ வராஹியின் பாதார விந்தங்களே சரண் ! அன்னையின் நாமமே துணை “ 
“ ஓம் ஸ்ரீ மஹாவராஹி நமோஸ்துதே “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " SADURTHI THITHI " & A HAPPY WEEKEND TOO .. MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES & NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH LOVE & HAPPINESS TOO .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "


” முன்னவனே ! யானை முகத்தவனே !
முத்திநலம் சொன்னவனே ! சிற்பரனே ! 
ஐங்கரனே !செஞ்சடையஞ் சேகரனே ! தற்பரனே !
நின்தாள் சரண் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சதுர்த்தித் திதியாகிய இன்று அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் “ ஓம் “ எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் கணபதியைத் துதித்து .. தங்களனைவரது இன்னல்கள் யாவும் களைந்து .. வாழ்வில் நிம்மதியும் .. சந்தோஷமும் என்றும் நிலைத்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களிலும் தடைகள் .. தடங்கல்களின்றி வெற்றிகிட்டவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
சதுர்த்தித் திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும் இன்றைய சுக்லபக்ஷ சதுர்த்தித் திதியை (வளர்பிறை) 
‘வரசதுர்த்தி’ என்றழைப்பார்கள் .. விநாயகர் பிரணவத்தின் வடிவம் .. இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி .. பிள்ளையார்சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும் ..
கணங்களுக்கெல்லாம் அதிபதியாவதால் அவரை 
“ கணபதி “ என்று சொல்கின்றோம் .. எனவே நாம் தேவகணத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் ..
மனிதகணத்தில் பிறந்தவராக இருந்தாலும் ..
அசுரகணத்தில் பிறந்தவராக இருந்தாலும் .. அனைவரும் வணங்கவேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமானாகும் ..
மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது .. முக்கண் உடைய பெருமை சிவனுக்கே உரியது .. ஆயினும் கிரியாவழி .. ரூபவழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம் ..
எந்த இடமாயிருந்தாலும் பிள்ளையாரைத் தொட்டு வணங்கக்கூடாது .. அவர் உடல் பூதகணம் .. பாதம்தொட்டு வணங்கவேண்டும் .. அவரின் கால் தேவபாதம் .. தேவபாதங்களைத் தொட்டு வணங்கினால் நினைத்தகாரியம் கைகூடும் ..
ஒற்றைக்கொம்பன் .. இருசெவியன் .. முக்கண்ணன் .. சதுர்புஜன் .. ஐங்கரன் ஆறாதாரத்துள்ளான் .. அவனை வணங்கின் ஏழுபிறவி நீங்கி எண்திசை போற்ற .. நவமணிகளும் .. சம்பத்தும் பெற்று வாழ்வர் .. 
“ ஓம் விக்னவிநாயக பாத நமஸ்தே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person


SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY & A HAPPY AKSHAYA TRITIYA .. MAY GODDESS MAA LAKSHMI BLESS YOU ON THIS AUSPICIOUS DAY & MAY IT BE A NEW BEGINNING OF GREATER PROSPERITY .. SUCCESS & HAPPINESS .. " OM SHAKTHI OM "


Image may contain: indoor
Image may contain: indoor

” எங்களை வாழவைக்கும் எங்களின் அன்னை நீயே !
எங்களின் உயிரில் ஆத்மா என்றிடும் இறைவி நீயே !
பொங்கொளி பரப்பும் தாயே ! புனிதமே கோபிகொண்ட
மங்கள அன்னை நீயே ! மலரடி பணிகின்றோமே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் “ அட்சய திரிதியை “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. இல்லறங்களில் கிருஹலக்ஷ்மி என்ற கிரஹதேவதையாகவும் வாரிவழங்கும் காமதேனுவாகவும் சமுத்திரத்தில் தோன்றியவளும் ..
வேள்வியின் நாயகியுமாகிய அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவரது துயர்களைந்து .. அன்னையின் கருணைமிகுந்த அன்னையின் கருணைமிகுந்த பார்வையினால் துன்பத்தைநீக்கி பொருள்மழை பொழிவித்து நல்லாரோக்கியமும் அருளிட பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே !
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !!

ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை காலத்தில் 3 வது திதியாக “ திருதியை திதி “ வருகிறது சித்திரைமாத அமாவாசைக்கு பின் வருகிற திருதியை திதியையே “ அட்சய திருதியை “ என்று அழைக்கிறோம் .. இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை இன்று மாலை ஆரம்பமாகின்றது .. குபேரன் தான் இழந்த நிதிகளைத் திரும்பப் பெற்ற தினமே இந்த அட்சய திருதியை என்று புராணங்கள் கூறுகின்றன ..
“ அட்சய “ என்றால் எப்போதும் அள்ள அள்ள குறையாது ..வளர்ந்து பெருகுவது என்று பொருள் .. அதாவது இந்நாளில் செய்யப்படும் நல்ல செயல்களான தான தருமங்கள் அள்ள அள்ள குறையாது அதிக பலன்களைத் தரும் .. ஆரம்பிக்கும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக அமையும் என்பதே வேதவாக்கு ..
இந்நாளைப்பற்றி புராணங்களிலும் .. நாடிகளிலும் .. தர்மசாஸ்திரத்திலும் பலவிஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன .. அவற்றுள் சில ..
குசேலன் வறுமையில் வாடுகிறபோது ஸ்ரீகிருஷ்ணரை சந்திக்க முடிவெடுத்து ஒருபிடி அவலை தன் மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார் அவரை நன்கு உபசரித்த கிருஷ்ணபகவான் அவர் அன்போடு கொண்டுவந்த அவலை மகிழ்ச்சியுடன் உண்டு அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து
“ அட்சயம் உண்டாகட்டும் ” என்று வாழ்த்தி அனுப்புகிறார் .. அதேகணத்தில் குசேலனின் வீடு மாடமாளிகையாக மாறுகிறது .. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடிகொள்கின்றன ..

மஹாவிஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமனின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது .. சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிக்ஷை அளித்தநாள் .. கௌரவர் சபையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது ஆடைகளை அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்நாளே ! ஐஸ்வர்யலக்ஷ்மி அவதரித்த நாளும் இன்றே .. சங்கநிதி ,, பத்மநிதியை குபேரன் பெற்றநாள் .. மஹாவிஷ்ணுவின் வலமார்பில் மஹாலக்ஷ்மி இடம்பிடித்தநாள் .. என பல சிறப்புகளைக் கொண்டது அட்சய திருதியை ..
“ பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் “ என்பது ரமணர் வாக்கு .. இல்லாதோர் இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள் .. தர்மங்கள் பலமடங்கு அதிகமாக உதவி செய்தவருக்கே ஏதாவது ஒருவகையில் திரும்ப கிடைக்கும் .. வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தித் தரும் .. இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும் ..
ஏழை நோயாளிகளுக்கு .. சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு .. உடை தானமாகக் கொடுக்கலாம் .. ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம் ஆதரவற்றோர் .. முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவு .. இனிப்புகள் வழங்கலாம் .. பசு .. பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி .. செல்வ வளம் ஏற்படும் ..
” மகிழ்வித்து மகிழ் “ என்று சொல்வார்கள் .. எனவே மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து பல புண்ணியங்கள் பெற்று .. ஆயுள் .. ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வுதனை பெறுவோமாக .. “ ஓம் மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே”
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


SWAMY SARANAM GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD BHAIRAVA .. MAY HE PROTECT YOU FROM ALL THE EVIL FORCES & SHOWER YOU WITH BEST HEALTH & HAPPINESS " JAI SHREE BHAIRAVAAYA NAMAHA "



” சினந்தவிர்த் தன்னையின் சின்மயப் புன்னகை சிந்தையில் ஏற்றவனே ! தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் ! வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான் தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்திடும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நாளில் காலபைரவருக்கு உகந்த “ பரணி “ நட்சத்திரமும் கூடிவருவது சிறப்பு .. (மாலைவரை உள்ளது பரணி)
இந்நாளில் பைரவரைத் துதித்து தங்களனைவரது காலத்தடைகள் யாவும் நீங்கி எதிரிகளின் பயம் அகன்று 
வாழ்வினில் ஏற்றத்தைக் காண பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! 
சூலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ பரவஹ் ப்ரசோதயாத் !!
“ சித்திரைப் பரணி “ விரதம் சித்திரை மாதம் பரணிநட்சத்திரத்தில் பைரவரைக் குறித்து கடைபிடிக்கப்படும் விரதமாகும் .. இன்றைய நாளில் பைரவமூர்த்திக்கு பூஜைசெய்து தயிர்சாதம் படைத்து விரதமிருந்தால் தீங்கிழைக்கும் எதிரிகள் மிகவும் பாதிப்படைவர் .. வாழ்வின் முன்னேற்றத்தடைகளும் தூள் தூளாகும் ..
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர் .. நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே ! தேவ .. அசுர .. மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனிபகவானாவார் .. சனிக்கு வரம்தந்து இக்கடமைகளைச் செய்யவைத்த சனியின்குரு ஸ்ரீபைரவரேயாவார் .. சனியின் வாதநோயை நீக்கியவரும் பைரவரே !
சனீஸ்வரரின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்கவேண்டியிருந்தாலும் அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையே செய்வார் ..
சிவாலயங்களில் விநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிக்கும் வழிபாடு பைரவ தரிசனத்துடன் நிறைவடையும் .. பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது .. பொதுவாக மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்லகாரியமும் செய்யமாட்டார்கள் ..
இறையாணைப்படி அனைத்து ஜீவராசிகளுக்கு எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்டலக்ஷ்மிகள் .. சொர்ணபைரவரிடமிருந்து சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற சக்தியினை பக்தர்களுக்கு அளித்து வருகின்றனர் .. தாங்கள் பெற்ற சக்தி குறைய .. குறைய ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்கின்றனர் .. அஷ்டமி அன்று அஷ்டலக்ஷ்மிகள் பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால் அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபடமுடியாது .. ஆகவே அஷ்டலக்ஷ்மிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில் நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கி வந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் ..
பைரவரைத் துதித்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இறையருளும் .. குருவருளும் இனிதே வழிநடத்தட்டும் .. 
“ ஓம் காலபைரவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

பெருமாள்



SWAMI SARANAM GURUVE SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT WEDNESDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD VISHNU .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED & MAY YOU BE BLESSED WITH PEACE & HAPPINESS TOO .. " OM NAMO NAARAAYANAAYA "


” பையப் பையப் பயில்வாய் அலையாதிருக்கவே ! 
மெய்ப்பொருளின் சித்தத்தை நிலை நிறுத்தவே ! 
குருவின்பாத கமலத்தில் குறையா பக்தி வைப்பாயேல் 
பிறவிச் சிறையினின்று துரிதம் மீள்வாய் உறுதி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
மேலானவற்றுக்கெல்லாம் மேலானவனும் .. எவராலும் பக்தியால் அடையக்கூடிய ஒப்பற்றவனாகிய ஸ்ரீவிஷ்ணுபகவானைப் புதன்கிழமையாகிய இன்று துதித்து நீண்ட ஆயுள் .. மற்றும் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் என்றும் நிலவிட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றையநாளில் அமாவாசை திதியும் கூடிவருவதால் நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜைகள் செய்வது சிறப்பு .. என்றும் அவர்களது ஆசியும் நல்லருளும் தங்களனைவருக்கும் ஒருபாதுகாப்பாக அமையும் ..
சாதாரணமனிதர்களின் கால்கள் என்று கூறப்படுவது மகான்களுக்கும் இறைவனுக்கும் குறிப்பிடும்போது 
“ திருவடி “ என்றழைக்கப்படுகிறது .. ஒருவர் தவறு செய்துவிட்டால் வெறுமனே மன்னிப்பு என்று கேளாமல் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினால் உடனேயே மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ கிடைக்கும் .. ஆனால் இறைவன் திருவடியில் சரணாகதி ஆகி தவறுக்கு மனமுருகி மன்னிக்க வேண்டினால் சாதாரண மக்களே மனம் இரங்கும் போது .. மகேசன் மனம் இரங்காதோ !
பகவான் வாமன அவதாரம் எடுத்து பலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு .. இரண்டடியில் அனைத்தையும் அளந்துவிட்டு மூன்றாவது அடிக்கு தன் திருவடியையே பலியின் சிரசில் வைக்கிறார் .. ஒவ்வொரு அவதாரத்திலும் பகவான் எவரையேனும் சம்ஹாரம் செய்வார் .. ஆனால் வாமன அவதாரத்தில் சம்ஹாரம் செய்யாததன் காரணம் .. பிரகலாதனுடைய தந்தை இரண்யகசிபுவை வதம்செய்தபின் இனி பிரகலாதனுடைய வம்சத்தில் எவரையும் சம்ஹாரம் செய்வதில்லை என்று பகவான் பிரகலாதனிடம் உறுதி அளித்திருப்பதால் ..
பலியின் சிரசில் தன் திருவடியை அழுத்தி பாதாளலோகத்தின் அதிபதி ஆக்கினார் .. பிரகலாதனுடைய பக்தியின் தாக்கம் பேரன் மகாபலி சக்ரவர்த்தி வரை வந்து பகவான் திருவடி சம்பந்தப்பேற்றினை அடைந்தான்.. மகாபலி .. 
ராமாவதாரத்தில் சாபம் நீங்கி கல்லாயிருந்த அகலிகை அழகு மங்கையானது ஸ்ரீராமனின் திருவடி கடாக்ஷ்மே!
பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடி அருகே ஏன் அன்னை மஹால்க்ஷ்மி அமர்ந்திருக்கிறாள் என்றால் .. ஜீவன்கள் முக்தி அடைந்ததும் எம்பெருமான் நாராயணனின் திருவடிகளை சேர்கின்றன.. அப்படி சேர்ந்த ஜீவன்களின் சிறு சிறு பாவங்களை களைந்து தூய ஆத்மாவாக இறைவனை அடையச் செய்பவள் கருணையே வடிவான மஹாலக்ஷ்மி .. அதனால்தான் திருவடி அருகே இருக்கிறாள் ..
இறைவனின் நேரடி ஸ்பரிசம் நமக்குக் கிட்டுவதில்லை .. இதற்காகவே இறைவனின் திருவடியாக வெள்ளியாலான உலோக தொப்பிபோன்ற சடாரியை கர்ப்பகிரஹத்திலிருந்து எடுத்துவந்து பக்தர்களின் சிரசில் வைப்பார்கள் .. சடாரி என்பது இறைவனின் திருவடியாக சொல்லப்படுகிறது .. எனவே ஒவ்வொருவருக்கும் சடாரி வைக்கும் போதும் சாட்சாத் பெருமாளின் திருவடியை நாம் நம் சிரசில் தாங்கிக் கொள்வதற்கு இது ஒப்பாகும் ..

பகவானின் திருவடிதனை நாம் சிரசில் ஏற்பதால் நம் துர்குணங்கள் விலகி நேர்மறை சிந்தனைகள் பெருகி உடலாரோக்கியம் கிட்டும் .. பெருமாள் திருவடிசூடி பேரின்பம் காண்போமாக ! ஓம் நமோ நாராயணாய !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & BLESSED WITH GOOD LUCK .. BEST HEALTH & HAPPINESS TOO .. " OM MURUGA "PANVEL BALAGAN PTHAM POTRI..GURUVE SARANAM SARANAM






” முருகன் அவன் நாமம் சொல்லிப் பாடுவோம் ! 
மனம் உருக .. உருக .. கந்தன் பாதம் நாடுவோம் ! 
நீலமயில் மீதில் அவன் ஏறுவான் !
நம் உளம் மகிழ நொடியில் முன்னே தோன்றுவான் ! 
ஆடி அவன் வரும் அழகைப் பார்க்கனும் ! 
நாம் கூடி நின்று அவன் புகழைப் பாடனும் ! 
தேவியர்கள் இருவருடன் அருளுவான்! 
நமைத் தாயெனவே காப்பதிலே மகிழுவான் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
செவ்வாய்க்கிழமையாகிய இன்று ஊழிக்காலத்தை உருவாக்குபவனும் .. பின் உயிர்களைக் காப்பவனும் .. உலகங்களை உருவாக்குபவனும் .. யாவருக்கும் தலைவனும் .. அடியார்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனும் .. ஆனந்தப் பெருக்கினை உடையவனும் .. பிறைசூடனின் பிள்ளையுமான கந்தனைத் துதித்து தங்கள் கோரிக்கைகள் வேண்டியவாறே அளித்திடவும் .. கிரகதோஷங்கள் நீங்கி கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி அருளை வாரிவழங்கும் அந்த குகனை இந்தக் கலியுகத்தில் இடைவிடாமல் துதித்தால் பயம் விலகும் .. அச்சத்தை உதறிவிட்டு மோட்ச லாபத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தைச் செயல்படுத்த அந்திமகாலம்வரை காத்திருக்காமல் நன்றாய் இருக்கும் போதே உணர்ந்து ஆறுமுகனை ஆராதனை செய்யவேண்டும் ..
இந்த உலகில் சாஸ்திரம் என்றால் அது ஸ்காந்தம்தான் எந்த பொருளுக்கும் விளக்கம் கந்தபுராணத்தில் உண்டு 
ஒரேதேவன் - ஈசனின் மகனான கந்தன் .. 
ஒரே மந்திரம் - சரவணபவ .. 
ஒரே மோட்சம் கந்தனுக்கு அண்மைதான் .. ஆகையால் 
சகலரும் இகத்திலும் பரத்திலும் இன்பமாய் வாழ சுப்ரமண்யனை வழிபடவேண்டும் ..
கந்தன் திருநீறணிந்தால் கண்டபினி ஓடிவிடும் ! குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும் ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE " PRADOSHAM " TOO .. MAY THE BLESSINGS OF LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..


” இனியோ நாமுய்ந்தோம் ! இறைவன் தாள் சேர்ந்தோம் ! இனியோரிடறில்லோம் நெஞ்சே ! இனியோர் வினைக்கடலை யாக்குவிக்கு மீளாப்பிறவிக்கனைக் கடல் நீந்தினோம் காண் “ 
( காரைக்கால் அம்மையார் )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் .. பிரதோஷமும் சேர்ந்து வருவது சிறப்பு .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிமிகுந்த நன்னாளாக அமைந்திடவும் .. பாவங்கள் நீங்கப்பெற்று .. நல்லாரோக்கியமும் .. மகிழ்ச்சியும் என்றும் வாழ்வில் நிலைத்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் “ சோமவார பிரதோஷம் “ என்றழைக்கப்படுகிறது .. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதாலும் இதனை பிரதோஷம் என்று அழைப்பார்கள் .. சிவாலயங்களில் இன்று சோமவாரப் பிரதோஷம் நடைபெறுகிறது .. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிபிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச் சிறப்பு உண்டு .. இந்நாள் முழுவதும் சிவநாமம் ஜெபித்து மாலைவேளையில் ( 4.30 - 6.00 மணிவரை) ஆலயதரிசனம் செய்வது சிறப்பாகும் ..
சிவனை வழிபட ஏற்றகாலம் சாயரக்ஷை .. அதிலும் சிறந்தது சோமவாரம் .. அதனிலும் சிறந்தது மாதசிவராத்திரி ..அதனிலும் சிறந்தது பிரதோஷம் .. சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள் .. தரித்திரம் ஒழியவும் .. நோய்தீரவும் .. தீயநோய்களின் துயர்மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும் ..
பிரதோஷ காலம் என்பது பரமேஸ்வரனின் ஆனந்த தாண்டவம் நிகழுகின்ற காலம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன .. தினசரி பிரதோஷகாலம் என்று மாலையில் வருகின்ற சந்தியாகாலத்தினைக் குறிப்பிடுவர் .. பொதுவாக திரயோதசி திதியானது மாலைநேரத்தில் வரும்நாளில் பிரதோஷவிழாவினைக் கொண்டாடுவது நமது வழக்கத்தில் உள்ளது ..
இந்த திரயோதசி நாளில் நந்தியம்பெருமானின் இருகொம்புகளுக்கு இடையில் உலகத்திற்கே அப்பனாகிய இறைவன் மனமகிழ்ச்சியோடு ஆனந்தமூர்த்தியாக நடனமாடும் நேரத்தில் பிள்ளைகளாகிய நாம் கேட்கும் வரங்கள் அனைத்தும் உடனடியாக இறைவனின் அருளால் கிடைத்துவிடும் ..
” இப்பிறவிக்கு வேண்டியன எல்லாம் தரும் .. வேண்டத்தக்கது அறிவோய் நீ ! வேண்டமுழுதும் தருவோய் நீ ! எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வாக்கிற்கு இணங்க நமக்கு வேண்டியது அனைத்தும் அருள்பவர் பெருங்கருணை வடிவான எம்பெருமான் சிவபரம் பொருளே !
“ சிவாய நமஹ “ எனச்சொல்லி நம் சிறுமனதை சிதறாமல் கட்டி .. சிவனருளே ! எல்லாமென சிந்தையில் வைத்து .. சிவனே உன் அருளுக்காக தவமிருப்போம் ! சிவ சிவா ! நம்முள்ளே கலந்தருள்வாயாக ! எனப் பிரார்த்திப்போமாக ..
” ஓம் நமசிவாய “ வாழ்க
 


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE " VARUDINI EKADASHI THITHI " MAY YOU BE REDEEMED FROM ALL YOUR PAST SINS & BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH & SUCCESS TOO .. " OM NAMO NAARAAYANAAYA "OANVEL BALAGAN PATHAM POTRI...GURUVE SARANAM


” பண்டை நான்மறையும் கேள்வியும் கேள்விப் பதங்களும் பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரைகடல் ஏழும் ஏழுமாமலைகளும் விசும்பும் அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்கமாநகர் அமர்ந்தானே “ ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
இன்றைய தேய்பிறை ஏகாதசித் திதியை 
“ வரூதினி ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. தங்களது சகலபாவங்களையும் நீக்கி .. மங்களங்களை தந்தருள எமை காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
கிருஷ்ணபக்ஷ்த்தில் வரும் இன்றைய ஏகாதசித் திதியை வரூதினி ஏகாதசியாக கொண்டாடுவர் .. அன்று விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அளவில்லாத சௌபாக்கியம் கிடைக்கும் .. இவ்விரதத்தைக் கடைபிடிப்பதால் மனிதர்களின் சர்வபாவங்களும் நீங்கப்பெறுகிறது .. துர்ரதிஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தை கடைபிடிப்பதால் சகலசௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர் ..
உத்தமமான இவ் ஏகாதசி விரதத்தின் புண்ணிய மஹிமையால் மனிதர்கள் இவ்வுலகில் அல்லாது பரலோகத்திலும் சுகபோகங்களை அனுபவிப்பதுடன் முடிவில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர் ..
சாஸ்திரங்களில் குதிரை (அஸ்வ) தானத்தைவிட யானை (கஜ) தானம் மேலானது எனவும் .. பூமிதானத்தை விட தில(எள்) தானம் மேலானது எனவும் .. தில தானத்தைவிட சொர்ணதானம் பன்மடங்கு மேலானது எனவும் .. தான தர்மங்களைப் பற்றி குறிப்பிடும்போது கூறியுள்ளனர் .. மேலும் 
சொர்ணதானத்தைவிட அன்னதானம் மேன்மையானதும் .. சிரேஷ்டமானதும் ஆகும் என்றும்
கூறியுள்ளனர் .. இவ்வுலகில் அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை .. அன்னதானம் 
பித்ருக்கள் .. தேவர்கள் .. மனிதர்கள் என அனைவருக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது ..
தகுதியானவருக்கு கன்யாதானம்செய்து கொடுப்பது அன்னதானம் செய்வதற்கு இணையானது என்றும் அறியாமையில் உழல்பவருக்கு ஜீவனமுக்திக்கு வழிகோலும் ஆன்மீக அறிவினைப் புகட்டுவது அதைவிட மேலானது என்றும் சாஸ்திரம் அறிந்த சான்றோர் கூறியுள்ளனர் .. கன்யாதானம் .. அன்னதானம் .. கோதானம் மற்றும் ஆன்மீக அறிவு புகட்டுதல் முதலிய உத்தமமான நற்கர்மங்களால் கிட்டும் ஒருங்கிணைந்த புண்ணியபலனை ஒருவர் வரூதினி விரதம் அனுஷ்டிப்பதின் மூலம் பெறுவர் ..
வரூதினி ஏகாதசியாகிய இன்று இறை சிந்தனையுடனிருந்து எம்பெருமான் அருள்பெற்று அனைத்திலும் வெற்றி காண்போமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

PANVEL BALAGAN PATHAM POTRI...GURUVIN PATHARA VINDHANGALE POTRI POTRI.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAHALAKSHMI .. MAY HER CHOICEST BLESSINGS BRING YOU ETERNAL BLISS & FULFILL ALL YOUR DESIRES TOO .. " OM SHAKTHI OM " ..



” எங்களை வாழவைக்கும் எங்களின் அன்னை நீயே ! 
எங்களின் உயிரில் ஆத்மா என்றிடும் இறைவி நீயே ! 
பொங்கொளி பரப்பும் தாயே ! புனிதமே கோபிகொண்ட மங்கல அன்னை நீயே ! மலரடி பணிகின்றோமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை தங்கள் இல்லம்தோறும் அள்ளி வழங்கும் வெள்ளிக்கிழமையாகிய இன்று . தீமை என்னும் தாரித்ரயத்தை அழித்து.. ஞானம் எனும் ஐஸ்வர்யத்தையும் ..பொருட்செல்வத்தையும் .. இகவாழ்வில் வேண்டும் வரங்கள் யாவும் தங்களனைவருக்கும் வேண்டியபடியே கிடைத்திட 
அன்னை மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே !
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
திருப்பாற்கடலில் தோன்றியவள் அன்னை மஹாலக்ஷ்மி .. அவளே சகல செல்வங்களுக்கும் அதிபதியானவள் .. சர்வமங்களங்களையும் அள்ளித்தருபவள் .. அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தேனை அளிப்பவள் .. ஆயிரம் இதழ்கொண்ட தாமரைமலரில் வாசம் செய்பவள் .. பள்ளிகொண்ட பரந்தாமனின் திருமார்பினை அணைந்தவள் ..
ஒளிமயமான வாழ்க்கைக்கு ஒளிமயமானவளை வழிபடுவது சிறப்பு .. நம் மனதில் மண்டிக்கிடக்கும் அறியாமை எனும் இருளை அகற்றி .. பயம் நீக்கி .. அறிவொளி மிளிர எமை காத்தருள்பவளும் அன்னையே !
” உட்கார்ந்தவன் எழுவதன் முன்னே ! நின்றவன் நெடுந்தூரம் போவான் “ என்பது முதுமொழி . அதனால் தன் அடியார் அழைக்கும் முன்னரே ! ஓடிவந்து அருள் செய்வதற்காகவே விழிப்புடன் நின்றுகொண்டே இருக்கிறாளாம் அன்னை மஹால்க்ஷ்மீ ..
அன்னையைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person



PANVEL BALAGANE SARANAM SARANAM....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE THIRUVONAM STAR TOO .. SINGING THE GLORY OF LORD VISHNU'S NAME ON THIS DAY GRACIOUSLY GRANTS ALL YOUR DESIRES & LONG LIFE & ABUNDANT WEALTH TOO .. " OM NAMO NAARAAYANAAYA "


 என்னப்பன் எனக்காயிருளாய் என்னைப் பெற்றவனாய் ! பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய் ! மின்னப்பொன்மதிழ் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தவப்பன் தன்னொப்பாரிலப்பன் ! தந்தனன் தந்தாள் நிழலே “ 
( திருவோண நட்சத்திரத்தன்று ஒப்பிலியப்பனைத் துதித்து சொல்லவேண்டிய சிறப்பான ஸ்லோகம்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
குருவருளும் .. இறையருளும் கூடிய இன்நாளில் மஹாவிஷ்ணுவிற்கு உகந்த திருவோண நட்சத்திரமும் கூடிவருவது சிறப்பு .. இன்நாளில் ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தை மனதாரத் துதித்து .. துன்பங்கள் களைந்து .. பாவங்களைப் போக்கி சகலசௌபாக்கியத்துடனும் மகிழ்வோடும் வாழ பகவான் அருள்புரிவாராக ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளன்று பெருமாளை வழிபட்டு விரதங்காப்பது சிறப்பாகும் .. இதனை “ ஸ்ரவண விரதம் “ என்றழைப்பார்கள் ..
தனிமனிதனின் உள்ளத்தைத் தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத் தரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து வரும் அன்பர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி வாழ்வில் அமைதி நிலவும் .. உறவினர் கொண்ட பகை அகலும் .. பகைவரும் நண்பராவர் .. அனைத்து துன்பங்களும் நீங்கும் ..
108 திவ்வியதேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோவிலில் மாதாமாதம் இந்நாளில் “ ஸ்ரவணம் “ என்ற விழா பிரசித்தம் ..
“ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ - என்னை சரணடைந்த்தால் உன்னை நான் காப்பேன் “ .. என்ற சரமச்லோகப் பகுதி எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது ..
புராணவரலாறு -
ஒருமுறை மஹாலக்ஷ்மியின் அம்சமான பூமாதேவி தானும் பெருமாளின் மார்பில் இடம்பெறவேண்டியபோது .. பூமியில் மார்கண்டேய மகரிஷியின் மகளாக பிறக்க அருள்புரிந்தார் விஷ்ணுபகவான் .. மார்கண்டேய மகரிஷியிடம் அவர் மகளாகப் பிறந்துள்ள “துளசியை” தனக்கு மணமுடித்துத் தரும்படி வேண்டினார் வயதான தோற்றத்தில் வந்த மஹாவிஷ்ணு .. அந்த வயோதிபருக்கு தன் சிறியவயது மகளைக் கொடுக்க விருப்பமில்லாததால் .. “ என்மகளுக்கு சரியாக உப்புப் போட்டுகூட சமைக்கத்தெரியாது அவளைத் திருமணம் செய்வது தங்களுக்கு சௌகரியப்படாது “ என்று ஏதோ ஒருகாரணத்தைக் கூறி மறுத்தவரிடம் .. 
பெருமாளோ ! “ அதானாலென்ன ! இனிமேல் நான் உப்பேபோடாமல் அனைத்தையும் உண்கின்றேனே “ என்று வாக்களித்து .. விடாமல் பூமாதேவியை மணந்து கொண்டுவிட்டார் ..
அதன்பிறகே வந்தவர் மஹாவிஷ்ணு என்பதனை அறிந்த மஹரிஷி மகிழ்ச்சி அடைந்தார் .. இதனால் அன்றிலிருந்து உப்பிலியப்பன் .. உப்பு இல்லாத அப்பன் என்றும் .. அழைக்கப்பட்டு அந்த கோவிலில் படைக்கபடும் எந்த ஒரு உணவிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை .. ” தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலார் ” என்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் ..
ஒவ்வொருமாத திருவோண நட்சத்திரத்தன்று இக்கோவிலில் அகண்டதீபம் .. வால்தீபம் ஏற்றப்படுகின்றன .. இதனை தரிசிக்கும் மக்களுக்கு குறைவில்லாத செல்வமும் .. அனைத்து துயரங்களும் நீங்கும் என்றும் நம்பிக்கை உள்ளது ..
ஓம் நமோ நாராயணாய ! ஓம் நமோ நாராயணாய ! 
ஓம் நமோ நாராயணாய ! என்று மீண்டும் .. மீண்டும் சொல்லி ஓர் குழந்தையைப் போல் நம்மை அரவணைக்கும் திருமாலின் திவ்யபாதக்கமலங்களில் சரணடைவோமாக ! 

வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 1 person



PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ETERNAL BLISS & FULFILL ALL YOUR DESIRES .. " OM MURUGA "



 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் !
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்!
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் !
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
செவ்வாய்க்கே அதிபதியும் .. கேட்டவரங்களை கேட்டவாறே வாரிவழங்கிடும் கலியுகவரதனாம் கந்தப்பெருமானைத் துதித்து தங்களனைவரது வேண்டுதல்கள் யாவும் வேண்டியபடியே நிறைவேறவும் நல்லாரோக்கியமும் செவ்வாயின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் ஏற்றத்தைக்காணவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகன் தமிழ்க்கடவுள் .. முருகனே தமிழ்மொழியை முதன்முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினார் என்பது வரலாறு .. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் திமிழிலேயே முருகன் உபதேசித்தான் .. 
ஞானமே உடலாகவும் .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும் இப்பெரிய உலகமே கோவிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன் .. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரேகாலத்தில் ஒளிவீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன் ..
முருகன் ஒரு தொகுப்புத் தெய்வம் .. முருகனை வணங்கினால் பலகடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம் .. எனவே முருகன் வழிபாடு மிகச்சிறப்புடையது .. முருகன் தன் அடியவர்கள் வேண்டும் நலங்களை எல்லாம் அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மை வாய்ந்தவன் ..அவன் நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் என்று உணர்ந்து முருகனை சரணடைந்தால் அவன் நம் துன்பத்தைப் போக்குவான் .. நம்துன்பத்தை அழிப்பான் .. முருகனை அன்புடன் வழிபட்டு முருகா ! முருகா ! என கூறித்தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள் .. அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது ..
முருகனைப் போற்றுவோம் ! தங்களனைவருக்கும் முருகனருள் முன் நிற்பதாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 1 person, night



GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SHASHTI VIRADAM TOO .. MAY LORD MURUGA PROTECT YOU FROM ALL EVIL FORCES & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS " OM MURUGA "





” நாளென்செயும் வினைதான் என்செயும் எனைநாடிவந்த கோளென்செயும் ! கொடுங்கூற்றென்செயும் ! குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்வந்து தோன்றிடினே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
திங்கட்கிழமையாகிய இன்று சோமவார விரதமும் .. சஷ்டித் திதியும் கூடிவருவது சிறப்பு .. தங்கள் அனைத்து துன்பங்கள் .. துயரங்கள் நீங்கிடவும் .. நல்ல தொழில்வாய்ப்பு பெற்றிடவும் .. கடன் தொல்லையின்றி மனநிம்மதியுடன் இனிதே வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படியாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் நாளை குறிக்கின்றது .. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது .. அமாவாசை நாளுக்கும் .. பௌர்ணமி நாளுக்கும் அடுத்துவரும் ஆறாவது திதியே சஷ்டி ஆகும் ..
முருகப்பெருமானுக்கு பலவிரதங்கள் இருந்தாலும் சஷ்டி விரதம் மிகவும் சிறப்புவாய்ந்தது .. சஷ்டித் தினத்தன்று முருகப்பெருமானை நாம் எந்தளவுக்கு மனமுருகி பிரார்த்திக்கின்றோமோ அந்தளவுக்கு கந்தனின் கருணையிப் பெறமுடியும் ..
முழுமுதற் கடவுளாக கலியுகக் கந்தபிரான் போற்றப்படுகின்றார் .. மனிதமனம் விரதத்தின்போது தனித்து .. விழித்து .. பசித்து இருந்து ஆறுவகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகிறது .
தூய உள்ளம் .. களங்கமற்ற அன்பு .. கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக “ கந்தசஷ்டி “ விரதம் அமைகிறது ..
அசுரசக்திகளின் ஆணவம் .. கன்மம் .. மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம் .. கோபம் .. பேராசை .. செருக்கு .. மயக்கம் .. பெருமை ஆகியவைகளை அழித்து .. முற்றுணர்வு 
வரம்பிலாற்றல் .. தன்வயமுடைமை .. வரம்பின்மை .. இயற்கையுணர்வு .. பேரருள் ஆகிய தேவகுணங்களை நிலைநாட்டியதால் கந்தசஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது ..
மாணவர்கள் படிப்பிற்கும் .. குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும் .. கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத்துணையாக அடையவேண்டியும் .. குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் .. இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர் ..
கலியுகவரதனும் .. கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியின் திருவருளினால் பூரணமான ஆனந்தப்பெருவாழ்வு வாழ்வோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

SWAMI SARANAM ..GURUVE SARANAM SARANAM....WISH YOU ALL A HAPPY WEEKEND & A DIVINE SADURTHI TOO ..MAY LORD GANESHA REMOVE ALL THE OBSTACLES & SINS FROM YOUR LIFE & SHOWER YOU WITH SUCCESS IN ALL YOUR ENDEAVORS .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "


” இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே ! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருபவனே ! தேவர்களுக்கெல்லாம் தேவனே ! கருணைமிக்கவனே ! யானைமுகத்தோனே!
அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே ! எல்லையில்லாத பரம்பொருளே !
விநாயப்பெருமானே ! உன் திருவருடிகளை சரணடைந்து நின் அருளை வேண்டுகின்றேன் ! தந்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்றுமாலைவரை சதுர்த்தித் திதி வருவதால் கணங்களுக்கெல்லாம் அதிபதியாகிய விநாயகப்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. அனைத்து சங்கடங்களையும் களைந்து .. நினைத்த காரியங்கள் மற்றும் தொடங்கும் செயல்கள் யாவும் இலகுவாக முடிந்திடவும் விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகர் முழுமுதற்கடவுளாவார் ! விநாயகர் என்ற சொல்லுக்கு “ தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் “ என்று பொருளாகும் .. விக்னங்களுக்கு அதிபதியான அவர் நாம் தொடங்கும் சுபகாரியங்களுக்கு இடையூறு ஏற்படாமல் அருளாசி புரிகிறார் ..
சங்கடஹர சதுர்த்தி என்றால் .. 
சங்கம் என்றால் - சேருதல் என்று பொருள் .. கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங் + கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது .. இந்த சங்கஷ்டமே பின்பு சங்கடமாக மருவி உருமாற்றம் பெற்றுவிட்டது .. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும் ..
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாளே சங்கடஹர சதுர்த்தியாகும் .. இது இருள்சூழும் மாலை நேரத்தில் வரும் .. நமக்கு வரும் துன்பங்கள் .. தடைகளை .. கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்புமிக்க விரதமாகும் ..
மனிதருக்கு மட்டும் அல்ல .. தெய்வங்களுக்கும் .. தேவர்களுக்கும்கூட கஷ்டங்கள் வந்தபோது அவர்கள் பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர் .. என்பதனை புராணவரலாறு தெரிவிக்கின்றன .. விநாயகர் அகவல் .. விநாயகர் கவசம் ,, காரியசித்திமாலை பாடல்களைபாடி விநாயகரை வழிபடலாம் ..
இதில் எடுத்த செயல்கள் வெற்றிபெறச் செய்யும் தனிச் சிறப்புடையது
காரியசித்திமாலை .. கேட்டவரம் தரும் தனிச்சிறப்புடையது இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றி பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும் ..
வளர்பிறை சதுர்த்தித் திதியை பார்த்தால் தீங்குவிளையும் .. பகவான் கிருஷணர் .. செவ்வாய் .. புருகண்டி முனிவர் .. ஆகியோர் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகரின் அருளை பெற்றுள்ளனர் .. முற்பிறவியில் நாம்செய்த வினையின் பயனால் நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும் அவை நீங்க சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டு எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் பெறுவீர்களாக ..
” ஓம் ஹேரம்பாய மதமோதித மமசங்கட!
நிவாரயே ! ஸ்வாஹா ! 
ஓம் விக்னேஷ்வராய நமஹ ! 
வாழ்க வளமுடமும் என்றும் நலமுடனும் .. !!
 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " KAAMADA EKADASI " .. FASTING ON THIS KAAMADA EKAADASI .. OUR SEVERAL SINS CARRIED FROM SEVERAL PREVIOUS BIRTHS WILL BE BURNED TO ASHES .. " OM NAMO NAARAAYANAAYA "PANVEL BALAGAN PATHAM POTRI. GURUVE SARANAM SARANAM





மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன் !
அரியதற்கும் மேலாக அரிதானவன் ! 
மிகுந்த சக்தி உள்ளவன் .. நிரந்தரமானவன் எவராலும் பக்தியால் அடையக்கூடியவன் ! ஒப்பற்றவன் முன்னைக்கும் முந்தையவன் ஒளிமயமானவன் .. ஞானிகளுக்கெல்லாம் முதன்மையான பரமஞானஸ்வரூபனான அந்த விஷ்ணுவை நமஸ்கரிக்கின்றேன் ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை தங்கள் இல்லம்தோறும் அள்ளிவழங்கிடும் வெள்ளிக்கிழமையாகிய இன்று 
ஸ்ரீமன் நாராயணனனுக்கு உகந்த ஏகாதசித் திதியும் கூடிவருவது சிறப்பாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று சுபீட்சமான வாழ்வு மலர்ந்திட விஷ்ணுபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
சுக்லபக்ஷ்த்தில் வரும் ஏகாதசி திதியை “ காமதா ஏகாதசி”
என்று அழைக்கிறார்கள் ..இவ் ஏகாதசி விரதமானது அனுஷ்டிப்பவர்களின் சகலவிதமான பாவங்களையும் நீக்கி மோட்சப் பிராப்தியை அளிக்கும் சக்திவாய்ந்தது .. உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ அதேபோல் “ காமதா ஏகாதசி “ விரதத்தின் புண்ணியபலனின் பிரபாவம் சகலவிதமான பாபங்களையும் நீக்குவதோடு புத்திர பிராப்தியையும் அளிக்கிறது ..
இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் கர்மவினையின் காரணமாக இழிநிலை பிறவி எடுத்தவர் .. அதிலிருந்து விடுதலை பெறுவதுடன் இறுதியில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர் ..
புராணவரலாறு ..
பழங்காலத்தில் போகீபுர் என்னும் நகரை புண்டரீகன் என்னும் அரசன் ஆண்டுவந்தான் அவனது ஆட்சியில் நகரானது அனைத்து வளங்களும் பெற்று ஐஸ்வர்யத்துடன் விளங்கியது .. அந்நகரில் வசித்துவந்த கந்தர்வ தம்பதியினர்களான லலித் மற்றும் லலிதா சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர் .. கற்பனையில் கூட பிரிவு என்பதை ஏற்க இயலாதளவிற்கு இருவரும் அன்புமிக்கவர்களாகத் திகழ்ந்தனர் ..
ஒருமுறை அரசன் புண்டரீகன் இசையரங்கத்தில் கந்தர்வர்களுடன் அமர்ந்து சங்கீதத்தை ரசித்துக்கொண்டிருந்தான் .. அங்கு மற்ற கந்தர்வர்களுடன் சேர்ந்து கந்தர்வனான லலித்தும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவனுடைய மனைவி ஞாபகம் வரவே சுருதி விலகி பாடலை தவறாக பாடியதன் காரணமாக அரசனும் அவனை நரமாமிசம் தின்னும் ராட்சஸனாக மாறும்படி சபித்தான் ..
சாபம்பெற்ற கந்தர்வன் லலித் அக்கணமே கோரவடிவுடைய ராட்சஸனாக மாறி காட்டில் இருந்துகொண்டே அநேக பாபங்களை செய்ய ஆரம்பித்தான் .. அவனுடைய மனைவியும் அவன் போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று அவனுடைய நிலையை எண்ணி வருந்தினாள் ..
இறுதியில் விந்தியாசல் பர்வதத்தை அடைந்து சிருங்கிமுனிவருடைய ஆலோசனைப்படி 
“ காமதா ஏகாதசியை ” முறைப்படி அனுஷ்டித்து அவ்விரதபுண்ணியபலனை தன் கணவருக்கு அளித்து அவனை அதிலிருந்து மீட்டாள் .. காமதா ஏகாதசியின் பிரபாவத்தால் இருவரும் முன்பைவிட மிகவும் செழிப்புடனும் அன்புடனும் வாழ்ந்து இறுதில்யில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெற்றனர் ..
இவ்விரத கதை மற்றும் மஹாத்மியத்தை கேட்டோ படித்தோ வருபவர்களுக்கு அத்யந்த பலனை அளிக்கக்கூடியது .. கருணைமிக்கவனை மனதார போற்றுவோம் ! கவலைகளை துரத்துவோம் ! 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

SWAMY SARANAM ...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE BLESSINGS & GUIDANCE OF GURU BHAGAWAN BRIHASPATHI .. MAY THE GOD OF WISDOM RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH PEACE & SUCCESS ... " JAI SHREE GURU DEV "



” மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி .. நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கதிபனாகி .. நிறைதனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும் இறையவன் குருவியாழன் இருமலர்ப்பாதம் போற்றி “ 
(நல்வாழ்க்கை அமையும்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று வாக்கிற்கும் .. அறிவுக்கும் அதிதேவதையான குருபகவானை வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவரது கிரகதோஷங்கள் யாவும் நீங்கி .. எடுத்த காரியங்களில் வெற்றியும் .. உயர்பதவிகளும் .. வியாபாரத்தில் அதீத லாபமும் பெற்றிடவும் குருபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வ்ருஷ்பத்வஜாய வித்மஹே ! 
க்ருணிஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ குரு ப்ரசோதயாத் ! 
அதிதேவதா ப்ரயதிதேவதா ஸகித 
ப்ரகஸ்பதி க்ரஹாய நமஹ !!
” குருபார்க்க கோடி நன்மை “ என்பது பழமொழி .. அத்தனை சக்திவாய்ந்தது குருவின் பார்வை .. இவர் அமரும் வீட்டை விட .. பார்க்கும் வீட்டிற்குதான் யோகம் அதிகம் .. நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப்போற்றக்கூடிய சுபக்கிரகம் குரு ஆவார் .. தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர் .. அறிவு .. ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர் .. தனம் .. புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குருபகவான் 
நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இருயோகமும் தங்குதடையின்றி அமையும் ..
பிரம்மாவின் பேரர் ஆங்கீரச மகரிஷி அவருடைய மகனாகப் பிறந்தவர் குரு என்று போற்றப்படும் வியாழபகவான் ..இவர் தேவகுருவாக விளங்குபவர் .. குரு அருட்பார்வை ஒருவருக்கு ஞானத்தை .. கல்வியையும் கலைகளையும் அருளும் .. குரு எனப்படும் வியாழன் சூரியனைச் சுற்றிவர பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும் ..
இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர இவரது பார்வை மிகவும் சக்திவாய்ந்தது .. பலதோஷங்களையும் அகற்றிவிடும் வல்லமை கொண்டது .. “ அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு “ என்ற ஜோதிடவாக்கு இவரை குறிப்பதுதான் ..
சமூக அந்தஸ்து .. ஆன்மீக ஈடுபாடு .. தர்மகாரியங்கள் .. நற்பணி நிலையங்கள் .. ஆதரவற்றோர் .. முதியோர் இல்லங்கள் அமைத்தல்.. பள்ளி .. கல்லூரிகள் கட்டுதல் .. வங்கி .. அரசுகஜானா போன்ற இடங்களில் வேலைகிடைத்தல் .. நிதி .. நீதித்துறையில் பணிபுரிவது .. நீதிபதி .. அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குருபகவான் ..
வியாழனை குரு என்றும் அழைப்பது பிரசித்தம் தேவர்களின் குருவாக விளங்கும் பிரஹஸ்பதியும் இவரே! ஆங்கிலத்தில் ஜுபிடர் என்பார்கள் .. ஆங்கிரஸ மகரிஷிக்கும் சிரத்தாதேவிக்கும் மகனாக பிறந்தவர் .. 
குருவின் நிறம் - பொன்னிறம் 
வாகனம் - மீன் 
தானியம் - கொண்டைக்கடலை 
மலர் - முல்லை 
வஸ்திரம் - மஞ்சள் ஆடை 
ராசிக்கல் - புஷ்பராகம்
நான்குகரங்களை உடைய வியாழபகவான் மூன்றில் ஜபமாலை .. யோகதண்டம் .. கமண்டலம் எந்தி இருப்பார் 
ஒருகரம் அபயஹஸ்தமுத்திரையுடன் இருக்கும் .. குருபகவானுக்கு வியாழனறு மஞ்சள் கலந்த நீரினால் அபிஷேகம் செய்வித்து கடலை நிவேதனம் செய்து குருபகவானுக்கு விருப்பமான ‘ அடானா ராகத்தில் ‘ கீர்த்தனைகள் பாடி .. குருஸ்லோகம் சொல்லி வழிபட்டால் குரு கிரகதோஷங்கள் நீங்கி வாழ்வில் சுகம் உண்டாகும்

குருபகவானைப் போற்றுவோம் ! குருபார்வை பெற்று சகலதோஷங்களும் நீங்கப்பெறுவோமாக ! 
” ஓம் ஸ்ரீ குருவே நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..