PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று சர்வ மங்கலங்களையும் தரும் அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து நலங்களும் .. வளங்களும் தங்களனைவரும் பெற்றிட பிரார்த்திக்கின்றேன் .. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே ! சங்க சக்ர கதாஹஸ்தே ! மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !!! .. மஹாமாயை வடிவாகத் துலங்குபவளும் .. ஸ்ரீபீடத்தில் உறைபவளும் .. தேவர்களால் பூஜிக்கப்படுபவளும் .. சங்கம் .. சக்ரம் .. கதை .. இவைகளைக் கையில் தரித்தவளுமான மஹாலக்ஷ்மித் தாயே ! நமஸ்காரம் ! .. கருடவாகனத்தில் அமர்ந்திருப்பவளும் .. கோலாஸுரன் எனும் அசுரனை நடுநடுங்க வைத்தவளும் .. சகலவிதமான பாவங்களைப் போக்குபவளுமான திருமகளே ! நமஸ்காரம் ! .. அன்னையைப் போற்றுவோம் .. அவளது அருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A HAPPY MORNING WITH THE BLESSINGS OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH HEALTH .. WEALTH AND HAPPINESS .. .. 'JAI MATA DI' ..

--------------------------------------------------------------------------------------------------------------------------

என்றும் சங்கரா எப்போதும் சங்கரா எங்கும் சங்கரா

The Different Forms Of Lord Sree Dharamasastha Or Ayyappa Swamy Sabarimala - Brahmachary (Celibacy) Kulathupuzha - Balan (Young Boy) Aryankavu - Kumaran (youth) Achankovil - Grihasthashrami (Family Man) Ponnambala - Sanyasi (who has left his wordly duties to do all worshiping) Thrikkakkare – Dhanda,Pasham,Ankusham,Shulam,Elephant.

sreemad sankara nandanam, hari sudam kawmara maragragam,chapam pushpa saranidhim,,madagaja roodam,,surakthambaram, bhootha,preta,pisacha vanthitha padam, smasru swayalankritham,parswe pushkala poorna kaminiyutham,,sasthara meesam bhaje,,swamiye saranamayyappa
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று சதுர்த்திவிரதமும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று விநாயகரை தரிசிப்பது மேன்மையைத்தரும் .. தங்கள் அனைவரது எண்ணங்கள் யாவும் நிறைவேறவும் .. சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் வாழ்த்துகின்றேன் .. விநாயகரை வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே! வக்ரதுண்டாய தீமஹி! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!! .. மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதற்கடவுளாக விளங்குகிறார் .. இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர் .. மண்பிள்ளையாரைப் பூஜித்தால் நல்ல பதவி கிடைக்கும் .. புற்றுமண்ணில் செய்த பிள்ளையாரை பூஜித்தால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையலாம் .. வெல்லத்தால் செய்த பிள்ளையாரை பூஜித்தால் சகலபாக்கியத்தையும் அடையலாம் .. உப்பினால் செய்தபிள்ளையாரை வணங்கினால் எதிரிகளை வெல்லலாம் .. வெள்ளெருக்குப் பிள்ளையாரை பூஜித்தால் ஞானம் பெறலாம் .. பசுஞ்சாணியால் பிள்ளையார் செய்து பூஜித்தால் எண்ணிய காரியங்கள் கைகூடும் .. வெண்ணெய்யில் செய்து பூஜித்தால் நோய்கள் நீங்கும் .. நிவேதனம் நமக்கு சொல்வது என்ன..? விநாயகருக்கு மோதகம் .. கரும்பு அவல் .. பொரி .. ஆகியவற்றைப் படைக்க வேண்டும் .. இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிக்கிடக்கிறது .. அது என்ன என்று தெரிந்து படைத்தால் வாழ்க்கை வளமாகும் .. மோதகம் - இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும் உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கின்றது .. மனதை வெள்ளையாக வைத்துக்கொண்டால் கண்ணுக்குக்குத் தெரியாத இறைவனை அடையலாம் .. என்ற தத்துவத்தில் படைக்கப்படுகிறது .. கரும்பு - கடிப்பதற்கு கடினமானாலும் .. இனிமையானது .. வாழ்க்கையும் இப்படித்தான் கஷ்ட்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின்படி படைக்கப்படுகிறது .. அவல் - பொரி .. ஊதினாலே பறக்கக்கூடியவை .. இப்பொருள்கள் வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளிவிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது .. // .. சதுர்த்திநாளாகிய இன்று விநாயகரைப் போற்றி .. விநாயகரின் அருளால் செல்வாக்கும் .. சொல்வாக்கும் பெறுவீர்களாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும.. MAY LORD GANAPATHY PROTECT YOU .. AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE .. HAVE A BLESSED WEDNESDAY .. 'JAI GANAPATHY
18 STEPS MEANING OF SABARIMALA.
1. step- Getting knowledge and consciousness to make think is called first step.
2. step- The bhakters ultimate consciousness is second step. Dvaita & advaita are same. Advaita means God & Dvaita means soul.
3. step- vision or insight,imagination, understand, act,excercise, law to be connectedwith intellect.
4. step- pure consciousnessimage of knowledge it refers.
5. step- not in pure form &enlightened like bhagavathi gods form.
6. step - past several births (purvajanam) goodness if we climb sixth step and we can see lord shiva.
7. step- will-power, we will have will-power to get god blessing
8. step- yaga inner form. rahoyagam.
9. step- supreme celestial light , "paramjyothis" in order today also "makara jyothi" is seen.
10. step- meditating and knowing universal supreme lord.
11. step- ascetic meditating.God and devotee uniting.
12. step- samadhi non dualistic state of consciousness.
13. step- atma, soul changes happens.
14. step- supreme brahma, indicates knowledge person god subramanian. Ultimate supreme brahma is also called this step.
15. step- nadabrahma means ecstasy continues.
16. step- jyothiswarupa- illumination of god. A supreme effulgence, the proper form of god.
17. step- trigunathitha means tri characters of god
18. step - which is considered as parama feet- the ultimate supreme feet of lord ayyappa swamy.
DO any one know about Ayyappan Dharmam... 
This Article is the famous, As lord ayyappa swamy himself advised to the Devotees As he is a Dharma sastha.. lord rules the kaliyuga Dharmam...
Sri Ayyappan Dharmam concentrate the famous 18 Ayyappa Dharmam said by himselfs...
1.To Gain the path of god, one should purify himself. for this people should have faith in truth and sacrifices.
2.One should know that within himself is own athma is a part of paramathma following and believing this truth is the aim of human-being is to get merge into parabrahmam.
3.Like human beings no other creatures are not in this world so everyone should work for the food for his own athma.
4.By lords blessing all this universe is abode with lord so everything is lord Ayyappa so there is no differentiation.
5.In the world of Ayyappan there is no religious thoughts are allowed, there is no high and low in society and richness and lord Ayyappa doesn't have any caste differentiation.
6.In the society all religious and caste people must have peace and every one should live like brothers without fear in the society.
7.Religion or caste or what ever it is.. All religion and caste base route is one. so all religion and caste must have acceptance and should be accepted by all
8.People will be in different religion and castes and languages to. they all are the sons of god.so there shouldn't be there any clashes between them, because the sons clashing each other in front of father is a most-wicked. so all should work for the peace.
9.One must work for the welfare of the country and the society peoples development n it should be the aim one should sacrifice anything in the sake countries pride.
10.We should not torch-er any living beings of the world because if we torch-er any living beings it is torched as Ayyapan himself.
11.If we see adharma any where without any hesitation we should face n destroy it.
12.Which ever is sin we shouldn't practice that.
13.We should work for the win of truth n loose of false.
14.Natures rules is any living being can live on the earth.
15.By the thoughts of good thinking n by working purity of himself and proceeding one mandalam 41days of vrath those people can only have rights to visit pampa and sabarimala its a strict.
16.During one mandalam 41days of vrath.by thoughts,vocally,verbally,celibacy,truth,peace,equality and oneness should follow. pure foods should be considered.
17.Who ever who follow with atmost faith and trust and purity 41days of vrath there sins will be purified and they attain moksha.
18.Through out there life like vratham ahimsa,Truth,peace,love should be followed and by teaching others to and one following these Ayyappan guidance is Ayyappan Dharmam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதம். மாலையில் 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கூடாக சிவதரிசனம் செய்வது சிறந்த பயனை அளிக்கும் ..தங்களனைவருக்கும் சகலதுன்பங்களும் பனிப்போல் நீங்கி .. மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர்ந்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. ” ஓம் சிவாய நமஹ ” ... // .. பிரதான தோஷங்களைநீக்குவது தான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு பிரதோஷ தினத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் .. பிரம்மா .. விஷ்ணு ஆகியோரும் வழிபாடு செய்வர் .. சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம் .. எனவே அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6.00மணி வரை) நாமும் பிரார்த்தனை செய்தால் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன .. சிவனின் வாகனமான நந்திபகவானுக்கும் மரியாதை செய்யக்கூடியது பிரதோஷ வழிபாடு .. நான்கு வேதங்கள் .. 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர் .. சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்திபகவான் என்று ஐதீகம் கூறுகிறது .. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும் .. இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது .. மெத்தப்படித்திருந்தாலும் நந்திபகவான் மிகவும் அடக்கமானவர் .. சிவன்கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது .. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும் .. எனவே பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும் .. நினைவாற்றல் பெருகும் .. தோஷங்கள் நீங்குகிறது .. சிவனைப் போற்றுவோம் .. சிவயோகம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப் பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து .. தங்களனைவரது குடும்பத்திலும் சுபீட்சமும் ..மகிழ்ச்சியும் என்றும் நிலைப்பதாக ..ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்!! .. ஒவ்வொருவருக்குள் இருப்பது ஜீவாத்மா .. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா .. நமக்குள் பகவான் இருப்பதை உணர்ந்து கொண்டால் நம்வாழ்க்கை ஆனந்தமயமாக ஆகிவிடும் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A HAPPY MORNING AND A BLESSED WEDNESDAY FILLED WITH HAPPINESS .. MAY LORD VISHNU BE WITH YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE .. "OM NAMO NARAAYANAA " ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று ஸர்வ ஏகாதசி விரதமும் ஆகும் .. காத்தல் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் அமைந்திடவும் .. எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .. .. ஏகாதசி தோன்றிய புராண வரலாறு .. // .. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் .. மானிடர்களுக்கும் .. மிகுந்த தொல்லை அளித்து வந்தான் “முரன்” என்னும் அசுரன் இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனைத் துதித்தனர் .. அவர்களை மஹாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான் .. அதன்படி அனைவரும் மஹாவிஷ்ணுவை சரணடைந்தனர் .. அவர்களைக் காக்க எண்ணிய மஹாவிஷ்ணு அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார் .. 1000 ஆண்டுகள் கடுமையா நீடித்தது .. அதன்பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மஹாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள குகையில் படுத்து ஓய்வெடுத்தார் .. அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு “முரன்” பகவானைக் கொல்லத் துணிந்தபோது அவருடைய திவ்யசரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது .. இவளை அசுரன் நெருங்கியவேளையில் அவளிடமிருந்து வெளிப்பட்ட ஓங்காரமே அசுரனை எரித்து சாம்பலாக்கியது .. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன் அந்த சக்திக்கு ‘ஏகாதசி’ எனப்பெயரிட்டு .. உன்னை விரதமிருந்து போற்றுவோருக்கு நான் சகலநன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக் கொண்டார் .. நாராயணனின் அருள் தங்களனைவருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வீர்களாக என்று வாழ்த்தி வணங்குகிறேன் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. // .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU FOREVER ..



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று கார்த்திகை மாதப்பிறப்பு .. “ ஸ்வாமியே சரணம் ஐயப்பா “ என்ற பக்திகோஷமே எங்கும் வியாபித்திருக்கின்றது .. சபரிமலை ஐயப்பபக்தர்கள் மாலையணிந்து மண்டலவிரதம் தொடங்குவார்கள் .. 41 நாட்கள் விரதமிருந்து யாத்திரை மேற்கொள்வர் .. இதனால் இம்மாதம் ஸ்ரீஐயப்பனுக்கும் .. பக்தர்களுக்கும் உரிய மாதமாகவும் கருதப்படுகிறது .. அனைத்து அன்புள்ளங்களையும் காத்தருளுமாறு ஸ்ரீஐயப்பனை வேண்டுகின்றேன் .. ‘ஸ்வாமியே ! சரணம் ஐயப்பா ! ! .. ஐயப்பனின் வரலாறு .. // .. மகசி என்பவள் அரக்கர்களின் அரசரான ‘ மஹிஷாசுரனின் தங்கையாவாள் .. மஹிஷாசுரனின் வதத்திற்கு பிறகு அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகசி முடிவு செய்தாள் .. பிரம்மாவை நோக்கி கடுந்தவமிருந்தாள் ..அதனால் மகிழ்ந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகசிக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார் .. பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுபகவான் பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது .. பின்னர் யோகம் களைந்து எழுந்தபோது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுபகவானின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார் .. அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பனாவார் ,, இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு (ஹரி) விஷ்ணு .. ஹரன் (சிவன்) ஹரிஹரன் என்ற பெயரும் உண்டு .. ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு .. ஆர்ய என்றால் மதிப்பிற்குரிய என்பது பொருள் .. பந்தள அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார் .. அவருக்கு குழந்தையில்லாதமையால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார் .. குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் “மணிகண்டன் “ என்று பெயரிட்டார் .. பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார் .. அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது .. ஆனால் பந்தள இளவரசனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்டுவதாக ராஜசேகரன் முடிவு செய்தார் .. இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரை விட்டு ஐயப்பனிடம் சொல்லச்சொன்னாள் ..அது சூழ்ச்சி என்பதைஉணர்ந்தும் தன் அன்னைக்காக கானகம் சென்றார் .. அங்கு மகசியை வதம் செய்தார் .. ஐயப்பனைப் போற்றுவோம் .. அவனருள் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .... WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHREE IYAPPA ..