PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMI SARANAM... GURUVE SARANAM..... · GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE "SOMVAR PRADOSHAM" IF PRADOSHAM FALLS ON MONDAY IT IS CALLED " SOMVAR PRADOSHAM " .. THE GRACE OF LORD RUDRA CAN ELIMINATE DISEASE .. ENEMIES & DESTROY NEGATIVE FORCE OR ENERGY OR KARMA WITHIN A PERSON & FROM OUTSIDE ELEMENTS .. IN ORDER TO OBTAIN THE BLESSINGS OF RUDRA THE RITUALS DONE ON A MONDAY PRADOSHAM ( EVENING 4.30 - 6.00 ) IS SAID TO BE EXTREMELY AUSPICIOUS .. " OM NAMASHIVAAYA ! JAI BHOLE NATH "







” கோல்வரை மத்தென்ன நாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த ஆலநஞ்சு கண்டவர் மிகவிரிய அமரர்கட்கருள் புரிவது கருதி நீலமார் கடல்விடந்தனை யுண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த சிலங்கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன் கூருளானோ “ (சுந்தரர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் திங்கட்கிழமையாகிய இன்று ஈசனுக்கு உகந்த சோமவார விரதமும் .. பிரதோஷமும் கூடிவருவது சிறப்பு .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிமிகுந்த நன்னாளாகவும் .. துயர்களைந்து என்றும் மகிழ்ச்சியுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சோமவாரமும் பிரதோஷமும் கூடிவருவதால் இதனை “ சோமவார பிரதோஷம் “ என்றழைப்பார்கள் .. சோமவார பிரதோஷம் அனைத்து தோஷங்களையும் நீக்கவல்லது .. சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம் .. ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனைத் தரவல்லது ..
ஆலயவழிபாடு உடல் நலத்தையும் ..
திருமுறைகளை ஓதுவதால் வாக்கு நலத்தையும் ..
மந்திரங்களை ஜெபிப்பதால் மனநலத்தையும் தந்து நம்மைக்காக்கும் ..
இந்நாளில் மாலை 4.30 முதல் 6.00 மணிவரையிலான நேரமே பிரதோஷ காலமாகும் .. இந்நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை ..
மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குள் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்லவேண்டும் .. நந்திபகவானின் அனுமதி பெற்று சிவபெருமானை நந்திபகவானின் கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாக தரிசித்துவிட்டுச் செல்லவேண்டும் ..
“ சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை .. கடன் .. நோய் .. மரணபயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும் .. சிந்தையில் உறையும் சிவனின் பொற்பாதங்களில் சரணடைவோமாக !
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 

Image may contain: 1 person, indoor

SWAMY SARANAM... GURUVE SARANAM...Maheswari Somapalan 2 hrs · GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE " PARAMA EKADASI " PARAMA EKADASI IS THEREFORE ALSO KNOWN AS " PURUSHOTTAM KAMALA EKADASI " .. IT IS BELIEVED THAT OBSERVING THIS EKADASI BRINGS MATERIAL PROGRESS & WASHED AWAY ALL THE SINS COMMITTED DURING LIFE TIME .. FASTING IS NOT ABOUT DIET OR BURNING CALORIES .. BUT .. BURNING OF PRIDE .. EGO & SINS .. "OM HARI OM "






” கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் ! 
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே “ ( நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த ஏகாதசித் திதியும் கூடிவருவது சிறப்பு .. இன்றைய நாள் தங்களைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய ஏகாதசித் திதியை “ பரம ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. ஒருவரின் பாவவினைகள் அனைத்தையும் அழித்துவிடும் மற்றும் ஜட இன்பத்துடன் கூடிய முக்தியையும் தரவல்லது .. மாதங்களில் சிறந்தது “ லீப்வருடமாதம் “ இந்த “அதித” மாதத்தில் வரக்கூடிய ஏகாதசிகள் “பரம” மற்றும் “பத்மினி” என்பன பகவான் ஹரிக்கு மிகவும் பிரியமானவை ..
புராணவரலாற்றில் ஒன்று - 
கம்பில்ய நகரில் தெய்வபக்தி மிகுந்த ஒரு அந்தணர் வசித்து வந்தார் .. அவர் பெயர் சுமேதா .. அவரது மனையின் பெயர் பவித்ரா .. சில பாவவிளைவுகளால் அந்த அந்தணர் மிகவும் ஏழையானார் .. பிச்சை எடுத்தும் வாழ்க்கை நடத்தமுடியவில்லை .. உண்ண உணவோ அணிவதற்கு ஆடையும் இருக்கவில்லை .. மற்றும் உறங்குவதற்கும் ஒரு இடமும் இல்லை ..
அப்படியிருந்தும் அவரது மனைவி உறுதியுடன் அவருக்கு சேவை புரிந்தாள் .. தான் பட்டினியாக இருந்தாலும் தன் முகத்தில் சோர்வை காட்டாமலும் இதைப்பற்றி ஒருபொழுதும் குறைகூறாமலும் இருந்தாள் .. ஆனால் தன் மனைவி நாளுக்கு நாள் உடல் மெலிந்து நலிவுருவதைக் கண்ட அந்தணர் தான் வெளியூர் சென்றாவது ஏதாவதொரு தொழில்புரிந்து வருவதாகக் கூறவும் .. மனைவி இதனை மறுத்தாள் ..
நாம் என்னென்ன செய்கிறோமோ .. எதையெல்லாம் அடைகிறோமோ அவையெல்லாம் நம் முற்பிறவியின் கர்மவினைகளே ! ஒருவர் முற்பிறவியில் புண்ணியத்தை சேமித்து வைக்கவில்லையெனில் இவ்வாழ்க்கையில் எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தாலும் எதையும் அடையமுடியாது ..
ஒருவர் முற்பிறவியில் அறிவையோ செல்வத்தையோ தானம் செய்திருந்தால் இந்த வாழ்க்கையில் அதனை அடைவார் .. நாமோ முற்பிறவியில் தகுந்த நபருக்கு எந்தவொரு தானமும் செய்யவில்லை .. ஆகையால் தான் இப்பிறப்பில் இருவரும் சேர்ந்து துன்பப்பட வேண்டியுள்ளது என்று சொல்லும்பொழுதே கடவுள் அருளால் பெருமுனிவரான கவுன்தின்ய முனிவர் அங்கு வந்து சேர்ந்தார் .. அவரின் அறிவுரைப்படி லீப்வருடமாதத்தில் தேய்பிறையில் தோன்றும் ஏகாதசியாகிய “ பரம ஏகாதசியை “ கடைபிடித்தால் எல்லா பாவ விளைவுகளும் நீங்கும் .. ஏழ்மையையும் அது அழித்துவிடும் .. கடைபிடிப்பவரும் செழுமை அடைவர் என்பதனை கேட்டு இருவரும் அதனை அனுஷ்டித்தனர் ..
இந்த புனிதமான ஏகாதசியை முதலில் குபேரன் அனுஷ்டித்து செல்வந்தர் ஆகும் பயனை சிவபெருமான் குபேரனுக்கு அருளினார் .. 
ஹரிஸ்சந்திர மன்னர் தான் இழந்த ராஜ்ஜியத்தையும் மனைவியையும் மீண்டும் பெற்றார் ..
இவ்விரதத்தை நிறைவு செய்யும் தருணம் அந்நாட்டு இளவரசர் பகவான் பிரம்மாவால் ஊக்குவிக்கப்பட்டு அங்கு வந்து அவர்களுக்கு புதிய வீட்டை வழங்கி மேலும் ஒரு பசுவையும் அவர்களுக்கு கொடுத்துச் சென்றார் .. அதன் பயனாக இளவரசர் தன் வாழ்க்கை முடிந்ததும் விஷ்ணுவின் பரமத்தைச் சென்றடைந்தார்

இந்த ஏகாதசியின் பெருமைகளைப் படிப்போரும் பகவானின் அருட்கடாக்ஷத்தைப் பெறுவர் .. 
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: 1 person, standing

SWAMY SARANAM GURUVE SARANAM...Maheswari Somapalan 2 hrs · GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF MAA LAKSHMI .. MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY & YOUR HOME LIGHTEN UP WITH HER DIVINE BLESSINGS .. " JAI MAA LAKSHMI "




” திருவிளக்கை ஏற்றி வைத்தோம் ! 
அலைமகளே வருக ! ஐஸ்வர்யம் தருக 
வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மீகரம் 
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம் 
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் லக்ஷ்மீ மயம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் மங்களங்களை தங்கள் இல்லம்தோறும் வாரிவழங்கும் வெள்ளிக்கிழமையாகிய இன்று .. சகல சௌபாக்கியங்களும் பெற்று நல்லாரோக்கியத்துடனும் .. மகிழ்ச்சியோடும் வாழ அன்னை மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திப்போமாக !
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
திருமகள் எனப்படும் மஹாலக்ஷ்மி எப்போதும் ஓரிடத்தில் இலையாக இருப்பதில்லை .. “இது ஏன் “ என அந்த பரந்தாமனே ஒருமுறை அன்னையிடம் வினவ .. அதற்கு அன்னையும் -
“ தர்மம் செய்யாத கருமிகள் .. மிருகங்களை வதைப்பவர்கள் .. சூதாடிகள் .. குடிகாரர்களைக் கண்டாலே எனக்கு பிடிக்காது .. மற்றும் அதிகமாக கோபப்படுபவர்கள் .. பொய் சொல்பவர்கள் .. பொறாமைக்காரர்கள் .. தற்புகழ்ச்சி செய்து கொள்பவர்கள் .. தன்னிடம் பணம் உள்ளது என கர்வப்படுகிறவர்கள் .. ஏழைகளைக்கண்டும் மனம் இரங்காதவர்கள் போன்றோருக்கு எனது அருள் கிடைக்காது .. ஒருவேளை வினைப்பயனால் அது கிடைத்திருந்தாலும் அதுநிலைக்காது ! என்றாள் “ இதனைக்கேட்டு மகிழ்ந்த பரம்பொருள் .. 
“ இந்த அவநடத்தைகள் இல்லாதவர்களின் வீட்டில் மஹாலக்ஷ்மிகடாக்ஷ்ம் எப்போதுமே இருக்கும் “ என்று வரமளிக்கின்றேன் என்றாராம் !
இதைத்தான் வள்ளுவரும் கூறுகிறார் .. 
” அழக்கொண்ட எல்லாம் அழப்போம் ! 
இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை “ (குறள் 659)
பொருள் - பிறர் அழுமாறு துன்புறுத்திப் பெற்ற பொருட்கள் எல்லாம் .. தான் அழுமாறு தன்னை விட்டுப்போய்விடும் ! நல்வழியில் ஈட்டிய செல்வம் பறிபோனாலும் அது திரும்ப கிடைத்துவிடும் ..
அதேபோல வறியவர்களுக்கு தர்மம் செய்யாது சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனது செல்வம் கள்வர்களால் அபகரிக்கப்படும் இதையே தான் அன்னை ஔவை - 
“ ஈயார் தேட்டை தீயோர் கொள்வர் “ என்று கூறியுள்ளார் ..
ஆக அரும்பாடுபட்டு சேர்த்த செல்வத்தில் ஒரு சிறியபங்காவது தான தர்மங்கள் செய்துவரவேண்டும் அப்போதுதான் இருக்கும் செல்வம் விருத்தியடையும் எந்த சூழ்நிலையிலும் எவராலும் கவர முடியாது !
உங்கள் இல்லங்களில் லக்ஷ்மிகடாக்ஷ்ம் தழைத்து செல்வம் பெருக அன்னையைப் போற்றுவோம் ! 
“ ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மீ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMY SRANAM.. GURUVE SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE ASHTAMI THITHI .. MAY LORD BHAIRAVA SAFEGUARD YOU FROM ALL THE EIGHT DIRECTIONS & BLESS YOU WITH BEST HEALTH .. PEACE & HAPPINESS TOO .. " JAI SHREE BHAIRAV DEV "




 வணங்குவோர்க்கு வாழ்வு தரும் 
வாழ்த்துவோர்க்கு வசதி தரும் 
போற்றுவோர்க்கு புகழ் தரும் 
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும் 
நினைத்தாலே இன்பம் தரும் 
நீடுவாழ் பைரவ சஷ்டி கவசமே ! 
சரணம் சரணம் பைரவா சரணம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் புதன்கிழமையாகிய இன்று நம் வாழ்வை வளமாக்கும் பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமித் திதியும் கூடிவருவது சிறப்பு .. வேண்டிய வரங்களை வேண்டியவாறே தந்தருளும் பைரவப் பெருமானைப் போற்றித் துதித்து .. மனபயம் நீங்கி .. செல்வச் செழிப்பு மேலோங்கவும் .. தடைகள் யாவற்றையும் தகர்த்தி வெற்றிகிட்டிடவும் காலபைரவரைப் பிரார்த்திப்போமாக !
ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! 
ஸூலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!
ஒவ்வொரு சிவாலயங்களிலும் உள்ள ஈசான்ய மூலையில் வடகிழக்கு திசையில் .. நாய்வாகனத்துடன் .. நீலநிற மேனியோடு காட்சி தருபவர் காலபைரவர் .. தினமும் காலையில் ஆலயம் திறக்கும்பொழுதும் பிறகு இரவு நடையை சாத்தும் பொழுதும் காலபைரவருக்கு தனிபூஜை நடத்தவேண்டும் என்பது ஆலயங்களின் நித்ய பூஜாவிதிகளில் ஒன்று ..
நம் கர்மவினைகளைப் போக்கும் காலபைரவருக்கு பிரதிமாதம் பௌர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமி விசேஷமான நாளாகும் .. அன்று அனைத்து சிவாலயங்களிலும் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் ..
எம்பெருமான் சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவ மூர்த்தியாவார் .. காலம் .. தேசம் என்று இரண்டு தத்துவங்களை அடிப்படியாக வைத்து நமது பூலோகம் இயங்குவதால் கால தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே 
“காலபைரவ மூர்த்தியாவார் “ .. பூலோக ஜீவன்களைப் பொறுத்தவரை காலபைரவ வழிபாடும் .. பைரவமூர்த்தியின் வழிபாடும் ஒரேவிதமான பலன்களை அளிக்கக்கூடியதே !
கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகம் உண்டு .. எந்தவொரு மனக்கிலேசமும் .. மனக்குழப்பம் என்றெல்லாம் காலபைரவரை வழிபட்டால் நம் கவலைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் .. வீட்டில் உள்ள தாரித்திர நிலை விலகும் .. கடன் தொல்லையிலிருந்து காலபைரவர் மீளச்செய்வார் .. கவலைகள் பறந்தோடும் என்கின்றனர் பக்தர்கள் ..
தன்னை அண்டியவர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீபைரவரைப் போற்றுவோம் ! தீராத வினைகள் யாவும் தீர்த்து வைப்பார் ! 
“ ஓம் ஸ்ரீபைரவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 1 person

SWAMY SARANAM.. GURUVE SARANAM......Maheswari Somapalan 5 hrs · GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE " THIRUVONA NAKSHATRAM" THE OBSERVANCE OF SRAVANA VRATHAM IS DEDICATED TO LORD VISHNU .. IT IS ALSO ONE OF THE MOST POPULAR FASTING OBSERVED BY THE HINDUS .. IT IS BELIEVED THAT PERFORMING PUJAS FOR THE LORD VISHNU ON THIS DAY IS FRUITFUL .. " DEEPAM " CEREMONY IN THE " OPPILIAPPAN " TEMPLE IS VERY RENOWNED .. ONE WHO OBSERVES THE VIRATHAM IN A RITUALISTIC MANNER WILL BE BESTOWED WITH HAPPINESS & PROSPERITY .. THEY WILL ULTIMATELY SEEK " MOKSHA " & FIND A PLACE IN " VAIKUNTHA " THE HEAVENLY ABODE OF LORD VISHNU .. " OM HARI OM "



 தேவுநீ எனச்சார்ந்தேன் ஒப்பிலியப்பா ! 
தெளிமனம் .. மேவுசீர் ஒளிவிளக்கே ! 
விண்ணகர் விளங்கி யோங்கும் கோவேயென் ஆவிக்கோர் கொழுகொம்பே ! வினைமா சகல பூவேகொண்டேத்திப் புனிதம் பெற அருள்வாய் எந்தையே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பெருமாளுக்கு உகந்த “ திருவோண “ நட்சத்திர நாளாகிய இன்று 
“ ஸ்ரவண விரதம் ” அனுஷ்டிக்கப்படுகின்றது .. இனிய மெய்யன்பர்கள் தங்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி .. அன்பும் .. ஒற்றுமையும் நிறைந்திட ஸ்ரீஒப்பிலியப்பனைப் பிரார்த்திக்கின்றேன் !
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
“ ஸ்ரவண விரதம் “ என்பது மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு மேற்கொள்ளும் ஒரு விரதம் .. இந்த விரதமிருப்பதால் கல்விச் செல்வம் .. கேள்விச்செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகும் ..
திருமகள் நாயகனாம் திருமால் அர்ச்சாவதாரம் கொண்டு விளங்கும் 108 திவ்யதேசங்களில் நெஞ்சை அள்ளும் தஞ்சைமாவட்டத்தில் திருவிண்ணகர் என்று போற்றப்படும் துளஸீவன ஷேத்ரத்தில் எம்பெருமான் ”தன் ஒப்பார் இல் அப்பனாக “ எழுந்தருளியுள்ளார் ..
மார்க்கண்டேய மகரிஷி பூமிதேவித் தாயாரை மகளாக அடையும் பாக்கியம் பெற்றவர் .. உப்பை தியாகம் பண்ணி தன் பெண்ணை மணக்கச்சித்தமான வயோதிகரை புறக்கண்ணைமூடி அகக்கண்ணைத் திறந்து பார்த்தால்தானே தெரிகிறது நிற்பவர் 
“ ஓங்கி உலகளந்த உத்தமன் பொன்னப்பன் .. மணியப்பன் .. முத்தப்பன் .. என்னப்பன் .. 
தன் ஒப்பார் இல் அப்பன் அல்லவா இவன் என்று !மனமகிழ்ந்து தன் பெண்ணை பூமிதேவிப்பிராட்டியை கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார் மார்கண்டேய மகரிஷி ..
ஒவ்வொருமாதமும் ஸ்ரவண திருநாளில் காலை 11.00 மணிக்கு “ ஸ்ரவண தீபதரிசனம்” செய்யலாம் .. திருவோண நட்சத்திரமான இன்று ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசித்து வாழ்வில் நல்ல திருப்பங்களை பெறுவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, indoor