PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

பாலகரின் பல்வேறு பரிநாமங்கள்.....


பன்வேல் பாலகன் 
புனே வந்தது ஏன்?

பஞ்சாபகேசன் இல்லம் புகுந்தது ஏன்?
பட்டு படோடபத்துடன் பரிணமளிப்பது ஏன்?

விடைகள் ஒன்றுதான் கேள்விகள் பல உண்டு..

அனுகிரஹ பூஜையிலே
அவன் இன்றி அணுக்ரகம் யார் தருவார்

நீல நிற பட்டுடன்
நேர்த்தியான மலருடன் 

ரோஜாவின் அரவணைப்பு
மல்லிகையின் மணம் மணக்க 

இருபக்கமும் இருமுடி பையுடன் 
இழுக்கும் அவன் அலங்காரம்

சுடரின் ஒளியிலே
சுட்டி இழுக்கும் அவன் அருள் பார்வை 


சுடர் விடும் கணபதி ..சக்தி ..அய்யனின் 
பாதுகாப்பு காவலனாய் 
புஷ்பங்கள் அணிவகுத்து 
அரவணைத்து நிற்பது  


அய்யனின் அலங்காரம்
அவரின் கைவண்ணம் 

அவனின்றி ஓர் அணுவும் அசையாது
அவரின்றி அலங்காரம் அமையாது 

அவரே நம் குருநாதன் 
அவன் அலங்காரத்தின் கருநாதன்

கருவை சுமக்கும் தாய்போல
நம் கருமங்களை கரை சேர்க்கும் தாய் அவர் 

நம் குருநாதன்
புகழ் பாட ஒரு நாவு பத்தாது 

பணிந்திடுவோம் அவர் பாதம்
பாடிடுவோம் பாலகன் புகழ் எந்நாளும்..




































SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM


 GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE DIVINE " PRADOSHAM " TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL PAINS & SINS AND SHOWER YOU WITH BEST HEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. 
' JAI BHOLE NATH ' 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையான இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பதால் பிரதோஷவேளையாகிய மாலை 4.30 - 6.00 மணிவர
ையிலான நேரத்தில் ஆலயம் சென்று 
“ சிவாயநமஹ “ எனச்சொல்லி நம்சிறுமனதை சிதறாமல் கட்டி .. சிவனருளே ! எல்லாமென சிந்தையில்வைத்து .. சிவனே ! உன் அருளுக்காக தவமிருப்போம் ! சிவசிவா ! நம்முள்ளே கலந்தருள்வாயாக ! என மொழிந்து நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு ஊடாக சிவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு தரிசித்தால் தங்களனைவரது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து .. மனநிம்மதி கிட்டும் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று .. பிரதோஷ வழிபாடு சகலசௌபாக்கியங்களையும்
தரவல்லது .. தேவர்களும் .. அசுரர்களும் போட்டிபோட்டு
பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து பொங்கிவந்த ஆலகால விஷத்தை தானுண்டு மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் காத்தவேளையே
பிரதோஷ காலமாகும் .. (மாலை 4.30 - 6.00 மணிவரை ) 

பிரதோஷ புண்ணியவேளையில் சிவபெருமானையும் .. நந்தீஸ்வரரையும் வணங்கி .. வழிபட்டு .. பெரும்பேறு பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

SWAMIYE SARANAM IYYAPPA...BALAGAR VIJAYAM TO POONA....GURUVE SARNAM SARANAM









SWAMI SARANAM...GURUVE SARANAM

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE DIVINE " KAAMIKA EKADASI DAY " AND MAY 
LORD VISHNU REMOVE ALL YOUR SINS & DESTROY ALL NEGATIVE FORCES AND FILLS YOUR HEART WITH DIVINE LIGHT & HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று மஹாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதமும் அனுஷ்டிப்பதால் ஆலயம் சென்று பெருமாளை தரிசிப்பது சாலச்சிறந்தது தாங்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களும் நீங்கி அவரவரது அபிலாஷைகளும் பூர்த்தி அடையப்பெறுவர் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய ஏகாதசியை “ காமிகா ஏகாதசி “ என்றழைப்பர் .. தனி துளசியால மஹாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய ஸ்வர்ணத்தை தானம்செய்தபலன் கிட்டும் .. அத்தோடு நெய்தீபம் ஏற்றுவது .. தீபதானம் செய்வதும் புண்ணியத்தைத் தரவல்லது .. 

பகவான் நாமசங்கீர்த்தனத்துடனும் விரதம் அனுஷ்டிப்போரது மனக்கவலைகள் நீங்கும் .. உயர்ந்த ஆன்மீகநிலையினை அடைவர் .. காமிகா ஏகாதசி தினமானது அனைத்து தினங்களையும்விட மிகவும் பவித்ரமான நாளாகும் .. ஆகையால் இன்று விரதம்மேற்கொள்ளுதல் அனைத்து பாபங்களையும் அழிக்கும் சக்தி கொண்டதாக உள்ளது .. மேலும் எப்படி தாமரை இலையானது தண்ணீருடன் தொடர்பு இல்லாமல் இருக்கின்றதோ அதேபோல் அவர்களது பாபங்கள் தீண்டாமல் வாழ்வர் .. 

மஹாவிஷ்ணுவின் மஹிமையை விளக்கும் புராணங்கள் .. பக்தி இலக்கியங்களை பாராயணம் செய்வோர் அஸ்வமேதயாகம் நடத்திய பலனையும் .. யமதர்மராஜனின் கோபத்துக்கு ஒருபோதும் ஆளாகமாட்டார்கள் .. 

இன்று எவரொருவர் நெய் அல்லது எள் எண்ணையினால்
( நல்லெண்ணை ) விளக்கேற்றி ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து ஆராதிக்கின்றாரோ அவர் தன் பாபங்களிலிருந்தும் விடுதலை பெற்று முடிவில் சூரியனின் வாசஸ்தலமான சூரியமண்டலத்தை அதிபிரகாசமான விளக்குகளுக்கு சமனான பிரகாசமான உடலுடன் அடைவர் .. 

பாவங்களை நீக்கி எண்ணிலடங்காத பலன்களை வழங்கும் “ காமிகா ஏகாதசியில் “ பகவானைப் போற்றி அவர் திவ்யபாதக்கமலங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..